என் மலர்
நீங்கள் தேடியது "young man"
- சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் தடை
- சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாளாகும்.
சென்னையில் வெறிநாய் கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அருள் என்ற இளைஞரை கடந்த 5ஆம் தேதி தெருநாய் கடித்துள்ளது. கொடுங்கையூர் என்.எஸ்.கே சாலையில் நடந்து சென்றபோது அருளை நாய் கடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உடல்நலம் குன்றியுள்ளது. இதனையடுத்து ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 2025-ல் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாளாகும். சென்னை மாநகராட்சியில், 98,523 செல்லப்பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், தற்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் (டிச. 20) தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
- இந்த வீடியோவில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார்.
- அவருடன் இருந்த அம்மாவின் கழுத்திலும் நகைகள் இல்லாமல் இருந்தது இணையத்தில் பேசுபொருளானது.
புதிதாக பைக் வாங்கி அதனை ரீல்ஸ் விடியோவாக பதிவிட்ட அரியலூர் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோவில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார். அவருடன் அவரின் அம்மா, அப்பா தோற்றத்தில் 2 பேர் நிற்கின்றனர். குறிப்பாக அவருடன் இருந்த அம்மாவின் காதிலும் கழுத்திலும் நகைகள் இல்லாமல் இருந்தது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
அம்மாவின் கழுத்தில் ஒரு நகை கூட இல்லாமல் இருக்கும் நிலையில், பையனுக்கு பைக் கேட்கிறதா? என்று பலரும் இணையத்தில் விமர்சனம் முன்வைத்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞர் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் என்னுடன் இருந்தவர் என் அத்தை என்றும் நான் சேமித்த பணம் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த பணத்தில் தான் பைக் வாங்கினேன். எங்கள் பணத்தில் நாங்கள் பைக் வாங்கியதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய இளைஞரின் தாயார், "பையன் ஆசைப்பட்டான் வண்டி வாங்கி கொடுத்தேன். அதுல என்ன பிரச்சினை.நான் சம்பாரிக்கிறேன். அவன் சம்பாரிக்கிறான்.`பொறுமையா போ' அப்படினு அட்வைஸ் பண்ணுங்க. வேண்டாம்னு சொல்லல... அத விட்டுட்டு தேவையில்லாம கமெண்ட் பண்ணாதீங்க. ஏழைங்கன்னா இந்த வண்டி வாங்கி ஓட்ட கூடாதுனு ரூல்ஸ் இருக்கா?'' ஏன்னு தெரிவித்தார்.
- பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார்.
- அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பாலக்காடு:
உடல் சோர்வு, தூக்க கலக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஒருவருக்கு கொட்டாவி வருவது இயல்புதான். ஆனால் அந்த கொட்டாவியே ஒருவருக்கு, தான் அனுபவிக்கும் கஷ்டத்தை வாயால் சொல்ல முடியாத அளவுக்கு திறந்த வாயை மூடமுடியாத திடீர் சோகத்தை தந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். ஆனால் கொட்டாவி விட்ட கண்ணிமைக்கும் நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டார். மேலும் தான் அனுபவிக்கும் கஷ்டத்தை கூட அவரால் வாயால் பேசி சொல்ல முடியவில்லை. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாலக்காடு ரெயில்வே மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பி.எஸ்.ஜிதன் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட வாலிபருக்கு உடனடி சிகிச்சை அளித்தார். இதையடுத்து அந்த வாலிபர் வாய் மூடி பேசிய நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து அதேரெயிலில் அந்த வாலிபர் பயணம் செய்து தனது ஊருக்கு திரும்பினார்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி கூறுகையில்,
'வாலிபருக்கு கொட்டாவி விடும்போது வாய் மீண்டும் மூட முடியாமல் போன நிலைக்கு ''டெம்பரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்லொகேஷன் எனப்படுவது ஆகும். அதாவது தாடை எலும்பு சுழற்சி சிக்கல் என்று பெயர். கீழ்தாடை எலும்பின் பந்துபூட்டு இயல்பான இடத்தில் இருந்து நகர்ந்து விடும் நிலையே இது. இதனால் கொட்டாவி விடும்போது வாய் திறந்த நிலையிலேயே முடங்கி விடும். இதன்காரணமாக வலி, பேசவும், வாய் மூடவும் சிரமம் ஏற்படும். அதிகமாக கொட்டாவி விட்டாலும், விபத்துகள் அல்லது சில நோய்களாலும் இது ஏற்படலாம். டாக்டரிடம் சிகிச்சை பெற்றால் மீண்டும் இயல்பான நிலைக்கு மாற்ற முடியும். ஆனால் சில நேரங்களில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்' என்றார்.
- பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்து உள்ளனர்.
- அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 25). கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது இரண்டு பூனைகள் சண்டையிட்டு கொண்டிருந்ததை கண்டு அதை விரட்டியுள்ளார். அப்போது ஒரு பூனை பாலமுருகனை கடித்துள்ளது.
இதற்கு சிகிச்சை பெறாமல் பாலமுருகன் அலட்சியமாக விட்டுவிட்ட நிலையில், புண் பெரிதானது. பின்னர் இதற்காக அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் அங்கிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
பின்னர் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்து உள்ளனர். அங்கு இருக்க பிடிக்காமல் திடீரென்று தப்பி ஓட முயன்றவரை, மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து சிகிச்சைக்காக ரேபிஸ் சிகிச்சை பிரிவில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடுமையான வலி மற்றும் மன உளைச்சல் காரணமாக பாலமுருகன், அதிகாலை அவருக்கு வழங்கப்பட்டிருந்த போர்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூனைக்கடித்து அலட்சியமாக விட்டதால் மூன்று மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய உடல் நலக்குறைவு ஏற்பட்டு இளைஞர் தனியாக சிகிச்சைக்காக அடைக்கப்பட்ட நிலையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வருகிறார்.
அவரது 17 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்று வாலிபரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதையடுத்து 17 வயது சிறுமி, அந்த வாலிபரிடம் நாம் இருவரும் நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சந்தோஷ் மீது சிறுமியின் தாயார் பரமக்குடி போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் இருதரப்பினையும் அழைத்து விசாரணை நடத்தி எழுதி வாங்கி வழக்கை முடித்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகும், சந்தோசினால் பிரச்சனை வந்ததால் சிறுமியை அவரது தாயார் எட்டையபுரம் அருகே கீழ நம்பிபுரத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.
17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில் கடந்த 23-ந்தேதி சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தீ பற்றி எரிந்த நிலையில் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எட்டையபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் வந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சந்தோஷ் தன்னை காதலிக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையா என்பவரும் சேர்ந்து தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்ததாக கூறினார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
- போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்களில் ஈடுபட்டார்.
- தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பால்துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.
வாலிபர் கைது
அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றிதிரிந்த ஒரு வாலிபரை சோதனை செய்த போது அவர் கைத்துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டினார்.
மேலும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்களில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மேலப்பாளையம் குறிச்சி நாகம்மாள்புரத்தை சேர்ந்த பால்துரை (வயது 24) என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளது.
குண்டர் சட்டம்
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பால்துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
அதை ஏற்று மாநகர போலீஸ் கமிஷனர் அபினாஷ்குமார் உத்தரவின்படி பால்துரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- பணகுடி பகுதியில் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் தலைமை காவலர் லட்சுமி நாராயணன், காவலர் சரவணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- தண்டையார்குளத்தை சேர்ந்த கவுதம் (24), வசந்தகுமார் (20) ஆகியோர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.
பணகுடி:
பணகுடி பகுதியில் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் தலைமை காவலர் லட்சுமி நாராயணன், காவலர் சரவணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தண்டையார்குளத்தை சேர்ந்த கவுதம் (24), வசந்தகுமார் (20) ஆகியோர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர்கள்
பணகுடியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரது லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து லேப்டாப்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கொடுத்து 24 மணி நேரத்திற்குள் ேலப்டாப்பை கண்டுபிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- போதையில் டிரான்ஸ்பார்மரில் ஏரி வயரை பிடித்து இழுத்ததால் தீப்பிடித்து தூக்கிவீசப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- படுகாயமடைந்த வாலிபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர் சிலை அருகே இன்று காலை 3 மணியளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் குடிபோதையில் சத்தம் போட்டபடி இருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை விசாரித்தபோது சரிவர பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் தமிழகத்தில் வடமாநில வாலிபர்கள் யாரும் இருக்ககூடாது. தமிழருக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே அவர்களை வெளியேற்றவேண்டும் என கூறினார். மேலும் அங்கிருந்த பேரிகார்டுகளை கீழே தள்ளி சாலையில் அமர்ந்து சத்தம்போட்டார். இதனால் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறிய பஸ்களும் செல்ல முடியாமல் நின்றன.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து அவரிடம் விசாரித்தனர். அப்போதும் அவர் சத்தம்போட்டபடி அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறி கூச்சலிட்டார். உடனடியாக அவரை இறங்குமாறு போலீசார் எச்சரித்தனர். மேலும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மின்இணைப்பை துண்டிக்குமாறு கூறினர்.
ஆனால் அதற்குள் அங்கிருந்த வயரை பிடித்து இழுத்ததால் தீப்பிடித்து தூக்கிவீசப்பட்டார். மேலும் பஸ்நிலைய சுற்றுவட்டார பகுதி முழுவதும் மின்வினியோகமும் தடைபட்டது.
பின்னர் படுகாயமடைந்த அந்த வாலிபரை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் அவர் தருமத்துப்பட்டி கோம்பை பகுதியை சேர்ந்த சடையாண்டி மகன் வேல்முருகன்(20) என தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. படுகாயமடைந்த வேல்முருகன் மீது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார்.
- செந்தில் தூக்குப்போட்ட நிலையில் தோட்டத்தில் பிணமாக தொங்கினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 40). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
மனைவி பிரிந்து சென்றார்
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் கிருபாகரன் (40). இவர்கள் 2 பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகினர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக செந்திலை பிரிந்து அவரது மனைவி குமரி மாவட்டம் பால் குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
அரிவாள்வெட்டு
இதற்கு கிருபாகரன் தான் காரணம் என்று நினைத்து செந்தில் ஆத்திரத்தில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அவரை ஓட ஓட அரிவாளால் வெட்டினர். இந்த அரிவாள் வெட்டு தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வைரலாக பரவின.
இதில் படுகாயம் அடைந்த கிருபாகரன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலை
இந்நிலையில் நேற்று இரவு செந்திலை திடீரென காணவில்லை. அவரது உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தபோது அங்குள்ள தோட்டத்தில் செந்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.
சம்பவ இடத்திற்கு கூடங்குளம் போலீசார் விரைந்து சென்று செந்தில் உடலை மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் செந்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- நாங்குநேரி ெரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று காலை வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
- அந்த வழியாக வந்த ெரயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
களக்காடு:
நாங்குநேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று காலை வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த பயணிகள் நாகர்கோவில் ரெயில்வே போலீசில் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அந்த வழியாக வந்த ரெயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- நந்தகுமாரின் நடத்தை சரியில்லாததால் அவரது காதலை ஏற்பதற்கு இளம்பெண் மறுத்து விட்டார்.
- இளம்பெண் ஆர்.எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கல்லூரி முடித்து விட்டு எல்.ஐ.சி காலனியில் தையல் கடை யுன் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது கடைக்கு எதிரே உள்ள ஓட்டலில் கோவை காந்தி பார்க்கை சேர்ந்த நந்தகுமார் (வயது 24) என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் எதிரே உள்ள தையல் கடைக்கு சென்று இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசி வந்தார். இதையடுத்து நந்தகுமார், இளம்பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் நந்தகுமாரின் நடத்தை சரியில்லாததால் அவரது காதலை ஏற்பதற்கு இளம்பெண் மறுத்து விட்டார். சம்பவத்தன்று, இளம்பெண் ஆர்.எஸ் புரத்தில் உள்ள வங்கி பயிற்சி வகுப்பிலிருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த நந்தகுமார் இளம் பெண்ணை வழிமறித்து மீண்டும் தனது காதலை கூறினார். இதில் கோபமடைந்த இளம்பெண் அவரது காதலை ஏற்பதற்கு மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் இளம்பெண்ணை கழுத்தை பிடித்து நெரித்து, கன்னத்தில் அறைந்தார். மேலும் அவரிடம் தகராறு செய்து செல்போனையும் பறித்தார். அப்போது, அங்கு வந்த இளம்பெண்ணின் தாயார் தனது மகளை வாலிபரிடம் இருந்து காப்பாற்ற முயன்றார்.
அப்போது இருவரையும் நந்தகுமார், தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து இளம்பெண் ஆர்.எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வாலிபர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார்.
- சிறிது நேரத்தில் வாலிபர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது.
வேலூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.
வேலூரை அடுத்த காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் விருதம்பட்டை சேர்ந்த அப்துல் பயாஸ் (வயது 27) என்ற வாலிபர் தேர்வு எழுத சென்றார். அவர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார். அறையின் மேற்பார்வையாளர் கேட்டதற்கு வலது காதில் அடிபட்டதால் கட்டு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அவரை தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது. உடனே அறை மேற்பார்வையாளர் அவரது காதில் இருந்த கட்டைப் பிரித்து பார்த்தபோது காதில் புளூடூத் ஏர்பட்ஸ் இருந்தது தெரியவந்தது. அதன் வழியாக அவர் யாரிடமோ கேட்டு தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






