என் மலர்

    நீங்கள் தேடியது "young man"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டை விட்டு வெளியே சென்ற வாலிபர் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தார்.
    • போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்ட மலை பட்டியை சேர்ந்த வர் ராமன் (வயது 25). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 9-ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் உடலுடன் கல்லை க்கட்டி வைத்திருந்த தால் தானாக கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்தாரா? அல்லது யாரேனும் கல்லை க்கட்டி கிண ற்றில் தூக்கி எறிந்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இறந்து போன ராமனுக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 5 ஆண்டுகளாக வெள்ளகோவிலில் தங்கி செல்போன் கடை நடத்தி வருகின்றார்.
    • ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது.

     வெள்ளகோவில்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பயாஸ் அகமது (வயது 38) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வெள்ளகோவிலில் தங்கி செல்போன் கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுக்க ப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது வெள்ளகோவில் பகுதியில் ஹோட்டலில் வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் திருமுருகன் என்பவர் செல்போன் கடையில் திருடியது தெரியவந்தது.

    தஞ்சாவூரில் பதுங்கி இருந்த திருமுருகனை வெள்ளகோவில் போலீசார் பிடித்து அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை கைப்பற்றி, திருமுருகனை காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விளாத்திகுளம் கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்த நாகரெட்டி என்பவரது மகன் நாகராஜன் என்ற வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
    • டாக்டர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த வாலிபருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகில் திட்டங்குளம், கழுகாசலபுரம் சாலையில் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விளாத்திகுளம் கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகரெட்டி என்பவரது மகன் நாகராஜன் என்ற வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற மார்கண்டேயன் எம்.எல்.ஏ., உடனடியாக அந்த வாலிபரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் டாக்டர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த வாலிபருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபர் போலீஸ் எனக்கூறி மூதாட்டி துணிப்பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போன், ரேசன் கார்டை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
    • கண்காணிப்பு காமிரா பதிவுகளை சோதனையிட்டனர். அப்போது ஒரு வாலிபர் மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்றது பதிவாகி இருந்தது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா. மூதாட்டியான இவர் தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக போலீஸ் குடியிருப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போதுஅங்கு வந்த வாலிபர் தான் போலீஸ் என்றும் உங்கள் பையில் உள்ளதை சோதனையிட வேண்டும் என கூறினார். மேலும் மூதாட்டி துணிப்பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போன், ரேசன் கார்டை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார்அளிக்கப்ப ட்டது.

    அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை சோதனையிட்டனர். அப்போது ஒரு வாலிபர் மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்றது பதிவாகி இருந்தது.

    அதனை வைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கைவரிசை காட்டிய வாலிபர் சிக்கினார். போலீசார் விசாரணையில் அவர் கோட்டூர் மண்டுகருப்பணசாமி கோவில் தெருவை சேர்ந்த விஷ்ணு என தெரிய வந்தது.

    தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து போலீசார் விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அரசனார்குளத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் என்பவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்த ஜெயசுதா (வயது 39) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
    • ஜெயசுதாவுக்கு 15 பவுன் தங்க நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் அவரது பெற்றோர் வழங்கினர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கினர்.

    களக்காடு:

    நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அரசனார்குளத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவருக்கும், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்த ஜெயசுதா(வயது 39) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது ஜெயசுதாவுக்கு 15 பவுன் தங்க நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் அவரது பெற்றோர் வழங்கினர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கினர்.

    திருமணத்திற்கு பின் லெட்சுமணன் தொழில் செய்ய வேண்டும் என்று கூறி ஜெய சுதாவின் 10 பவுன் நகைகளை பெற்று அடமானம் வைத்துள்ளார். அதுபோல அவரது சகோதரர் அய்யப்ப னுக்கு, ஜெயசுதாவின் 5 பவுன் நகைகளை கொடுத்துள்ளார்.

    இதுபற்றி ஜெயசுதா தட்டிக்கேட்டதால் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன் பின் லெட்சுமணன், அவரது சகோதரர்கள் ராமர், பஞ்சவர்ணம், அய்யப்பன் ஆகியோர் சேர்ந்து ரூ.1.50 லட்சம் தந்துவிடுவதாகவும், விவாகரத்து மனுவில் கையெழுத்து போடும்படியும் மிரட்டி கையெழுத்தை பெற்று நாங்குநேரி கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதனிடையே விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயசுதாவிற்கு தெரியாமல் லெட்சுமணன் தெற்கு வாகைகுளத்தை சேர்ந்த தங்கசெல்வம் என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனை அறிந்த ஜெயசுதா நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து லெட்சுமணன், அவரது சகோதரர்கள் ராமர், பஞ்சவர்ணம், அய்யப்பன், உறவினர் தங்க செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர்கள் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வரி கொடுக்காமல் பணம் முழுவதையும் சந்தனகுமார் மது குடித்து காலி செய்துவிட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    கடையத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் சந்தனகுமார்(வயது 22). இவருக்கு சமீபத்தில் மீனா(20) என்பவருடன் திருமணமானது.

    சந்தனகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கடையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையத்தில் நடைபெற உள்ள ஒரு கோவில் கொடை விழாவிற்கு வரி செலுத்துமாறு ரூ.5 ஆயிரத்தை மீனா தனது கணவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வரி கொடுக்காமல் பணம் முழுவதையும் சந்தனகுமார் மது குடித்து காலி செய்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி, சந்தன குமாரை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இரவு 9.30 மணியளவில் தக்கம்மாள்புரம் விலக்கு பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. 

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த பரத்குமார் என்ற வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தருவைகுளம் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் விசாரணை நடத்தி வருகிறார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாளை சீவலப்பேரி அருகே வாலிபர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    பாளை சீவலப்பேரி உலகம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சொள்ளமுத்து. ஆட்டோ டிரைவர். இவரது மகன் முண்டசாமி(வயது 29).

    இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.  இவர் நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.   

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். முண்டசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  

    நேற்றும் அவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த முண்டசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளத்தை சேர்ந்தவர் வசந்த்ராஜா (வயது 23). இவர் நேற்று இரவு தனது மோட்டார்  சைக்கிளில் சவளைக்காரன்குளம் செங்கல்சூளை அருகே சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக தோப்பூரை சேர்ந்த முத்துக்குட்டி என்பவர் ஓட்டி வந்த சைக்கிளும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதின. இந்த விபத்தில் வசந்த்ராஜா, முத்துக்குட்டி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்க த்தினர் அவர்களை மீட்டனர். 

    பின்னர் வசந்த்ராஜாவை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

    முத்துக்குட்டி நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். 

    இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பஸ்சை நிறுத்தி ரகளை செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆர்.எஸ்.மங்கலம்

    முதுகுளத்தூரில் இருந்து ஒரு அரசு பஸ் ராமநாதபுரம், தொண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சிதம்பரம் சென்றது. அந்த பஸ் அ.மணக்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது குடி போதையில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ரோட்டின் குறுக்கே நின்று பஸ் டிரைவரிடம் ரகளையில் ஈடுபட்டார்.

    அதனை தட்டிக்கேட்ட பஸ் டிரைவர் ஜான்போஸ்கோ (வயது 40) என்பவரை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அ.மணக்குடியைச் சேர்ந்த கிராமத்தினர் பஸ் நிறுத்தம் அருகே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து பஸ் டிரைவர் ஜான் போஸ்கோ கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட நபரை தேடி வருகிறார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo