என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "​​Chennai"

    • வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
    • சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தின் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர்.

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் நேற்று், இன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று விண்ணப்பித்து சென்றனர்.

    சென்னையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர வேண்டியவர்கள் படிவம் 6-ஐயும், ஒருவரின் பெயர் தவறாக சேர்க்கப்பட்டிருந்தால் படிவம் 7-ஐயும், முகவரி, பெயர் மாற்றத்திற்கு படிவம் 8-ஐயும் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    • சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் தடை
    • சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாளாகும்.

    சென்னையில் வெறிநாய் கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அருள் என்ற இளைஞரை கடந்த 5ஆம் தேதி தெருநாய் கடித்துள்ளது. கொடுங்கையூர் என்.எஸ்.கே சாலையில் நடந்து சென்றபோது அருளை நாய் கடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உடல்நலம் குன்றியுள்ளது. இதனையடுத்து ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    தமிழ்நாட்டில் 2025-ல் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாளாகும். சென்னை மாநகராட்சியில், 98,523 செல்லப்பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், தற்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் (டிச. 20) தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    • மற்ற சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இந்த இரண்டு நேரங்களில் மட்டும் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான சேவைகள் இயக்கப்படுகிறது.
    • விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதிக இருக்கைகளை கொண்ட ஏர்பஸ் விமானமாக இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்டவைகளுக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன.

    அதேபோல் உள்நாட்டு விமான சேவைகளாக டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை இண்டிகோ நிறுவனம் அளித்து வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் சேவைகள் ஏ.டி.ஆர். விமானங்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.

    அதில் குறிப்பாக திருச்சியில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 6 சேவைகளாக திருச்சி விமான நிலையத்திலிருந்து காலை 7.35, 10.35, மதியம் 12.40, 2.55, இரவு 7.45, 10.15 உள்ளிட்ட நேரங்களில் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. இந்த நிலையில் காலை 10.35 மற்றும் மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் இரண்டு சேவைகளை மட்டும் நாளை (16-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் விமானங்களை கொண்டு இயக்க உள்ளது.

    மற்ற சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இந்த இரண்டு நேரங்களில் மட்டும் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான சேவைகள் இயக்கப்படுகிறது. இந்த சேவையானது விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதிக இருக்கைகளை கொண்ட ஏர்பஸ் விமானமாக இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவைகள் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார் சேகர்.
    • கடந்த சில ஆண்டுகளாகவே இப்பிரச்னையால் நிறைய விஷயங்களை இழந்துவிட்டதாகக் அவர் தெரிவித்தார்.

    சென்னையின் 'பறவை மனிதர்' என்று அறியப்படும் ஜோசப் சேகர் (73) புற்றுநோய் பாதிப்பால் நேற்று இரவு காலமானார்.

    தினமும் பல்லாயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வந்தவர் ஜோசஃப் சேகர்.

    ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சேகர், தனது அலுவலக மாடியில் தங்கியிருந்தபோது சில கிளிகளுக்கு உணவளிப்பதன் மூலம் இந்த சேவையைத் தொடங்கினார்.

    காலப்போக்கில், கடந்த 20 ஆண்டுகளாக தினமும் பல்லாயிரக்கணக்கான கிளிகள் அவரது இல்லத்துக்கு வந்து உணவு உண்டன.

    ஆரம்ப காலத்தில் 'கேமரா ஹவுஸ் சேகர்' என்று அழைக்கப்பட்ட அவர் அவரின் அசாதாரண சேவையால் பின்நாட்களில் 'பறவை மனிதர்' என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

    வாடகை வீட்டில் வசித்து வந்ததால் உரிமையாளர் ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்ய சொல்லவே கிளிகளுக்கு உணவளிக்க முடியாது என்பதால் தன் கேமரா சேமிப்புகளை மொத்தமாக விற்பனை செய்து அதனால் வரும் பணத்தில் கட்டடத்தை வாங்கலாம் என்கிற சேகர் நினைத்தார். ஆனால், அது கைகூடவில்லை.

    வீட்டை காலி செய்தபின் கடந்த 2 ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவளிக்க முடியாத வருத்ததையும் அவர் பதிவு செய்தார்.

    கடந்த சில ஆண்டுகளாகவே இப்பிரச்னையால் நிறைய விஷயங்களை இழந்துவிட்டதாகக் அவர் தெரிவித்தார். இந்த சூழலில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது
    • இந்த தொடரில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    சென்னை காசிமேட்டை சேர்ந்த முன்னாள் சாம்பியன் காசிமா கேரம் உலக கோப்பை ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், காசிமா இரட்டையர் பிரிவில் வெள்ளியும், அணியாக தங்கமும் வென்றார்.

    அதே சமயம் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது.
    • இந்த தொடரில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    7 ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    கேரம் உலக கோப்பை தொடரில் மகளிர் ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவுகளிலும் கீர்த்தனா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்

    • மழை காரணமாக 2ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய பள்ளி இயக்கம்.
    • புதன்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி பள்ளிகள் இயக்கம்.

    சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக 2ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதன்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி சென்னையில் நாளை பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
    • பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 04) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு தெற்கே கரையை கடந்தது.

    இதனால் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.

    இதனையடுத்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
    • முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது.

    டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையில் நிலைக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கான விடுமுறை உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

    • சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட்.
    • ஒரு மணி நேரமாக இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

    சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சென்னையில் எழும்பூர், புதுப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களிலும் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

    சென்னையில் காலை முதல் பெய்து வந்த கனமழை சுமார் ஒரு மணி நேரமாக இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    • டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன
    • இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறுகிறது.

    10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. .

    தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதுகின்றன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியிலும், கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்திலும் மோதுகிறது.

    இந்நிலையில், 2026 டி20 உலக கோப்பை லீக் போட்டிகள் உட்பட மொத்தம் 7 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளன. எனினும் இந்தியா விளையாடும் போட்டி சென்னையில் கிடையாது. அதனால் தமிழக ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

    சென்னையில் நடக்கும் போட்டிகள்:

    பிப்ரவரி 8: நியூசிலாந்து VS ஆப்கானிஸ்தான்

    பிப்ரவரி 10: நியூசிலாந்து VS ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)

    பிப்ரவரி 13: அமெரிக்கா (USA) vs நெதர்லாந்து

    பிப்ரவரி 15: அமெரிக்கா (USA) vs நமீபியா

    பிப்ரவரி 17: நியூசிலாந்து Vs கனடா

    பிப்ரவரி 19: ஆப்கானிஸ்தான் vs கனடா

    பிப்ரவரி 26: X1 vs X2 (சூப்பர் 8)

    • கே.கே.நகரில் சேட் என்கிற தங்க நகை வியாபாரி இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது.
    • தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, சைதாப்பேட்டை, கே.கே.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கே.கே.நகரில் சேட் என்கிற தங்க நகை வியாபாரி இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது. கோடம்பாக்கத்தில் சுகாலி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    ×