சென்னையில் கடும் பனிமூட்டம் - புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கம்

பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னை வரும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
சென்னையில் கடும் பனிமூட்டம் - புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கம்
Published on

தமிழகத்தில் இன்று முதல் வரும் 11-ந்தேதி வரை நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் புறநகர் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னை வரும் ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com