என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heavy fog"

    • நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பெய்துள்ளது.
    • ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கோவை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 3 தினங்களாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அத்துடன் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. வழக்கமாக காலை 7 மணிக்கெல்லாம் தெளிவான வானம் காணப்படும். ஆனால் 3 தினங்களாக காலை 10 மணி வரை பனிமூட்டமாகவே இருக்கிறது. 10 மணிக்கு பிறகு தான் தெளிவான வானம் தெரிகிறது. மேலும் மாலை 4 மணிக்கெல்லாம் இருள் சூழ தொடங்கி விடுகிறது.

    மாநகர பகுதிகளான ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம், அவினாசி சாலை, பீளமேடு, சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. வானமும் மேகமூட்டமாகவே உள்ளது

    பனிமூட்டத்தால் அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

    அதிகாலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. பகல் நேரத்திலும் குளிர் காணப்படுகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் ஸ்வெட்டர் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.

    வால்பாறை பகுதி முழுவதும் அதிகாலை முதல் கடும் பனிமூட்டத்துடன் குளிரும் வாட்டி வதைத்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் கம்பளி ஆடைகளை அணிந்தபடி சென்றனர். கடும் குளிரால் மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கினர்.

    நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பெய்துள்ளது. இதனால் நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. கடந்த 3 தினங்களாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. பனிமூட்டத்தால் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது.

    கடும் குளிர், பனிமூட்டம் காணப்படுவதால் அதிகாலையில் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கம்பளி போர்த்திய ஆடைகள் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வழக்கமாக 8 மணிக்கு வேலைக்கு செல்வர். தற்போது நிலவும் பனிமூட்டத்தால் 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு தான் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் விவசாயமும் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் மக்கள் வெளியில் வருவதில்லை. வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் காலை, மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டமும் குறைந்து விட்டது.

    ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் குளிர் காணப்படுகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் தங்கள் வீடுகளில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றன. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இன்றும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் காலை நேரங்களில் ஏற்காடு காபி தோட்டத்திற்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்காடு மலைப் பாதையிலும் கடும் பனி மூட்டம் நிலவுவதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து செல்கின்றன. ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று வரை கடும் பனிமூட்டம் இருந்தது. இன்று காலை முதல் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையுடன் குளிரும் சேர்ந்து வாட்டி வதைக்கிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக மழை குறைந்து காணப்பட்டாலும், கடும் குளிர் நிலவுகிறது. அதிகாலை நேரத்தில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    • வாகன ஓட்டிகள் மதிய வேளையிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர்.
    • அடர்ந்த பனி மூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, அப்சர்வேட்டரி, உகார்த்தேநகர், ஆனந்தகிரி, சீனிவாசபுரம், கவிதியாகராஜர் சாலை, பஸ் நிலையம், லாஸ்காட் சாலை, கல்லுக்குழி உள்ளிட்ட பகுதிகள், வத்தலக்குண்டு-பழனி பிரதான மலைச்சாலைகளில் அடர்ந்த பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் பகலா, இரவா என்று தெரியாத அளவுக்கு சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் மதிய வேளையிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர்.

    பல இடங்களில் எதிரே வருபவர்கள்கூட தெரியாத நிலை காணப்படுவதால் கடைகளில் பகல் நேரத்திலும் மின் விளக்குகளை எரியவிட்டு வருகின்றனர். அடர்ந்த பனி மூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தீபாவளி பண்டிகை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே உள்ளது. இதனால் வியாபாரமின்றி கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் இன்றும் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் மாணவ-மாணவிகள் சென்றனர்.

    தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலை கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுவதும், மின் கம்பங்கள், வயர்கள் சாய்ந்து விழுவதும் நடந்து வருகிறது. இதனால் வாகன தடை ஏற்பட்டுள்ளதுடன் மின் வினியோகமும் பாதிக்கப்படுகிறது. அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள், நெடுஞ்சாலைத்து றையினர் பார்வையிட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் முறிந்து விழுந்த மரங்களை பொதுமக்களே அகற்றி வருகின்றனர். மழை இன்னும் தீவிரமடையாத நிலையில் தற்போதே கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

    • எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்
    • வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது கடந்த இரு தினங்களாக மழை இல்லாமல் லேசான பனிபொழிவு காணப்படுகிறது.

    வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது சுமார் 10 மீட்டர் தொலைவில் உள்ள வாகனங்கள் கூட சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி இயக்கி செல்கின்றனர்.

    இதனால் நெடுஞ்சாலையில் அதிக அளவில் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    • வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி கோத்தகிரியில் மூடுபனியுடன் சாரல் மழை பெய்ததால் குளிா்ந்த காலநிலை நிலவி வருகிறது. சாலைகளில் அடா்ந்த பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.ஊட்டி மற்றும் கோத்தகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மாலை முதல் மூடு பனியும், சாரல் மழையும் காணப்பட்டது. ஊட்டி நகரம், கோத்தகிரி போன்ற பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடா்ந்த மூடுபனி காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனா். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    • டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு 15-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 20 விமானங்கள் தாமதமாக சென்றன.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் குளிர் காலங்களில் வழக்கமாக அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இமாச்சல பிரதேசம், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. சாலைகளில் பனிமூட்டம் காரணமாக சில விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு 15-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை முடிந்து 9-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் தற்போது குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு வரும் 15-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

    டெல்லியில் வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்தபட்ச அளவில் பதிவாகி உள்ள நிலையில், டெல்லி அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 20 விமானங்கள் தாமதமாக சென்றன.

    • வாகன ஓட்டிகள் சிரமம்
    • சாலைகளை சீரமைத்து தர பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூரில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இரவு முதல் குளிர்ந்த காற்று வீசியது. இன்று அதிகாலை முதல் வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான பனிபொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதேபோல் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி சென்றன.

    சேரும் சகதியுமான சாலைகள்

    காட்பாடி பாரதி நகர், வி.ஜி.ராவ் நகர், வேலூர் வேலப்பாடி உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் சாலைகள் சீரமைக்கப்பட வில்லை. இதனால் தற்போது மழையின் காரணமாக சாலைகள் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.

    பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கிக் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்த கூட செல்ல முடியாத அளவு சாலைகள் மோசமான நிலையில் உள்ளது.

    பணிகள் முடிவடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலைப்பாதைகளில் காலை முதல் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
    • தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இருப்பினும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் நீர்ப்பனி காணப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன்படி சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    அந்த வகையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்று காலை முதல் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேக மூட்டத்துடன் மழை பெய்கிறது.

    இதனால் ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலை மற்றும் ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா செல்லும் மலைப்பாதைகளில் காலை முதல் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.

    இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் மலைப்பாதையில் செல்லும் சுற்றுலா வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலும் தங்களின் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்வதை பார்க்க முடிந்தது.

    ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் காலைமுதலே சாரல் மழை மற்றும் மேகமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. இதனால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்களின் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கொலக்கம்பை ஆகிய பகுதிகளில் காலை முதலே பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் கடும் குளிரும் நிலவிதால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிர்கால ஆடைகள் அணிந்து வெளியிடங்களுக்கு சென்று வந்தனர்.

    அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் குளிர் அதிகளவில் இருந்ததால் தொழிலாளர்கள் மாலை 4 மணிக்கே அந்த பகுதியில் தீமூட்டி உடலை கதகதப்பாக வைத்துக்கொண்டனர்.

    மேலும் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்வதால்மலை மாவட்டத்திலும் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

    • விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன.
    • பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் விமான பயணிகள் மற்றும் ரெயில் பயணிகள் கடந்த சில நாட்களாகவே கடும் கவதி அடைந்து வருகிறார்கள்.

    அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 564 விமானங்கள் தாமதமாக வந்து தரையிறங்கின. மேலும் 95 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    இந்த நிலையில் டெல்லி யில் இன்றும் கடும் பனி மூட்டம் நீடித்தது. இதன் காரணமாக இன்றும் விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக் கப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணிவரை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக டெல்லிக்கு வந்தன.

    • சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
    • சாரல் மழை பெய்த நேரங்களில் மட்டும் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலில் தினந்தோறும் சீதோஷ்ண நிலை மாறி வரக்கூடிய நிலையில் டிசம்பர் 2-வது வாரத்தில் இருந்து பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் இரவு நேரங்களில் உறை பனியுடன் கூடிய கடுங்குளிரும் நிலவும். ஆனால் இந்த ஆண்டில் சீதோஷ்ண நிலை முற்றிலுமாக மாறுபட்டுள்ளது.

    இந்நிலையில் பகல் நேரங்களில் கடுங்குளிர் நிலவிவரக்கூடிய நிலையில் அவ்வப்போது சாரல் மழையும், கடும் பனிமூட்டமும் காணப்படுகிறது. நேற்று இரவு முதல் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக நகர் பகுதிகளான ஏரிச்சாலை, அண்ணா சாலை, மூஞ்சிக்கல் மற்றும் அனைத்து மலைச்சாலைகளிலும் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

    மேலும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். அவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

    ஏரி சாலையில் இன்றும் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பனிமூட்டத்திற்கிடையே படகு சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்த நேரங்களில் மட்டும் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை தொடங்கிய மிதமான மழை இன்று பலத்த மழையாக பெய்து வருகிறது.

    விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் அதிகமாக விடுதிகளில் நிரம்பி வழிந்த நிலையிலும் விடாது கொட்டும் மழையினால் சுற்றுலா இடங்களை காண முடியாமல் தங்கள் அறையிலேயே முடங்கினர்.

    பழனியிலும் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் காணப்பட்டது. அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. இந்நிலையில் நேற்று மாலை சாரல் மழையாக பெய்து பின்னர் கன மழையாக கொட்டித் தீர்த்தது.

    பழனியை நோக்கி தற்போது பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் நடந்து வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் இரவு நேரங்களில் தங்கள் பயணத்தை ஒதுக்கி வைத்து விட்டு ஆங்காங்கு உள்ள மண்டபங்களில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர்.

    நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பெய்த மழையினால் பல்வேறு இடங்களில் பாதயாத்திரை பக்தர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். ஒரு சில இடங்களில் ஒதுங்க இடமில்லாமல் ஆங்காங்கு கடைகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

    இன்று காலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. சிறுமலை, அடியனூத்து மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. 

    • எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.
    • சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் குறைந்து காணப்பட்டது. மதிய நேரத்தில் குளிர் குறைந்து வெயில் காணப்பட்டது. ஆனால் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    பனிமூட்டத்தால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில் சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக வழக்கமான நேர அட்டவணையைக் காட்டிலும் 15 நிமிடம் வரை தாமதமாக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    தருமபுரியில் இன்று காலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
    தருமபுரி:

    தருமபுரியில் இன்று காலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது. குளிரும் வாட்டி எடுத்தது. காலை 7.30 மணி வரை 4 ரோடு, டவுன் பஸ் நிலையம், பென்னாகரம் மேம்பாலம், அதியமான் பை-பாஸ் ரோடு, நல்லம்பள்ளி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பனி பெய்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

    ஓசூர் - தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையிலும் பனி அதிக அளவில் கொட்டியது. இதனால் லாரி, பஸ்கள், உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. 10 அடி தூரத்தில் உள்ள வாகனங்கள் கூட தெரியவில்லை. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்கினர். 

    வழக்கமாக சேலத்தில் இருந்து தருமபுரிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணிக்குள் வந்து சேரும். இன்று காலை பனி அதிகமாக கொட்டியதால் அந்த பஸ்கள் காலதாமதமாக வந்தன.

    மேலும் தொப்பூர் மலைப்பாதையில் ரோட்டின் இருபுறமும் உள்ள மரங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி அதிகமாக கொட்டியது.
    போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று கடும் பனியால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர்.
    போச்சம்பள்ளி:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பனி நிலவிவரும் நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கடும் பனி நிலவி வருகிறது.

    போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று காலை நேரங்களில் பனியின் காரணமாக வழக்கத்தைவிட கடும் குளிர் ஏற்பட்டது. பனியின் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவில் உள்ளதால் குறைவான வேகத்திலே இன்று வாகனங்கள் இயக்கப்பட்டது. மேலும், வாகன ஓட்டிகள் பனியின் காரணமாக முகப்பு விளக்கு எரிய விட்டவாறு செல்கின்றனர்.

    டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வழக்கமாக பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். தற்போது போச்சம்பள்ளி பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் தாவரங்கள், புல்வெளிகள் எங்கும் பனி படர்ந்துள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோயால் பாதிப்படைந்து அவதி அடைந்து வருகின்றனர்.
    சளி, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளனர். அதேபோல் இரவில் உறைப்பனி கொட்டுவதால் பூக்கள், காய்கறி, பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
    ×