என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை"
- சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்.
- 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 2வது நாளாக வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த முகாம் இன்றும் நடைபெறுகிறது.
அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- இந்த முயற்சி, நெரிசலைக் குறைக்கவும், பயண வசதியை மேம்படுத்தவும், அதிக தேவை உள்ள நேரங்களில் நம்பகமான மற்றும் திறமையான மெட்ரோ சேவைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது
- இந்த ஏற்பாடு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
சென்னை விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, மற்றும் விம்கோ நகர் வழித்தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
'நீல வழித்தடத்தில் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்கி வருகிறது. இந்தச் சேவைகள், காலை நெரிசல் நேரங்களிலும் (காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை) மற்றும் மாலை நெரிசல் நேரங்களிலும் (மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை) ரயில் நிலையங்களில் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து, விரைவான பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஏற்பாடு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இந்த முயற்சி, நெரிசலைக் குறைக்கவும், பயண வசதியை மேம்படுத்தவும், அதிக தேவை உள்ள நேரங்களில் நம்பகமான மற்றும் திறமையான மெட்ரோ சேவைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னை மக்களுக்கு பாதுகாப்பான, குறித்த நேரத்திலும், பயணிகளுக்கு உகந்த நகர்ப்புறப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உறுதியாக உள்ளது.' என தெரிவித்துள்ளது.
இந்த கூடுதல் ரயில்சேவை மூலம் இனி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை, நெரிசல் மிகுந்த நேரங்களில் (காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு மணி வரை) 6 நிமிட இடைவெளி மற்றும் 3 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள் இதன் பிறகு முற்றிலுமாக 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் நாய்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
- சென்னையில் மொத்தம் 66 ஆயிரத்து 81 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
மக்கள் அதிகம் விரும்பி வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளில் நாய்களுக்கு எப்போதுமே முதல் இடம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமானதாகவும் இருப்பதால் உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு நாய் இனங்களையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வளர்த்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் நாய்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, சென்னையில் உள்ள மக்கள் அதிக விலை கொடுத்தும் இதுபோன்ற வெளிநாட்டு நாய் இனங்களை வாங்கி வளர்த்து வருகிறார்கள். இதற்கிடையே, பொதுமக்களை வளர்ப்பு நாய்கள் கடிப்பது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தது. இதனால், வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அந்த வகையில், சென்னையில் மொத்தம் 66 ஆயிரத்து 81 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உரிமம் பெறப்பட்டவைகளில் எந்த வகையான நாய் இனங்களை பொதுமக்கள் அதிகம் வாங்கி வளர்க்கிறார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லாப்ரடோர் ரெட்ரீவர்' என்ற வகையான நாய் இனம் முதல் இடத்தில் உள்ளது. இவை கனடாவை பூர்வீகமாக கொண்டது. அந்நாட்டு மீனவர்கள் இவ்வகை நாய்களை தங்களுக்கு உதவியாக வளர்த்து வந்தனர். இதனுடைய புத்திசாலி தனம், விசுவாசம், விளையாட்டுத் தன்மையால் பல்வேறு நாட்டவர்களும் விரும்பி வாங்கி வளர்த்து வருகிறார்கள்.
இதற்கு அடுத்தபடியாக, திபெத்தை பூர்வீகமாக கொண்ட 'ஷிஷ் சூ' என்ற வகை நாய் இனம் உள்ளது. இதனுடைய நீண்ட முடி பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும். அமைதியான குணம் என்பதால் இதை விரும்பி வாங்குகிறார்கள். அனைவராலும் அறியப்படும் 'பொமேரியன்' வகை நாய்கள் 3-வது இடத்திலும், ஸ்காட்லாந்தை பூர்வீகமாக கொண்ட 'கோல்டன் ரெட்ரீவர்' 4-வது இடத்திலும் உள்ளது.
'ஜெர்மன் ஷெப்பர்டு' 5-வது இடத்திலும், பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட 'பீகில்' வகை நாய் 6-வது இடத்திலும், சீனாவை பூர்வீகமாக கொண்ட 'பக்' வகை நாய் இனம் 7-வது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 'இந்தியன் ஸ்பிட்ஸ்' 8-வது இடத்திலும், சைபீரியாவை சேர்ந்ததாக கருதப்படும் 'ஸ்பிட்ஸ்' வகை நாய்கள் 9-வது இடத்திலும், திபெத்தை சேர்ந்த 'லாசா ஆப்சோ' 10-வது இடத்திலும் இருக்கிறது. இதேபோல, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட 'சிப்பிப்பாறை' 11-வது இடத்தில் இருக்கிறது. தேனியின் 'கோம்பை' 15-வது இடத்திலும், ராஜபாளையம் நாய் 18-வது இடத்திலும் உள்ளது.
- காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10/-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
- இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்
சென்னையில் நாளை (ஜன.06) முதல் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக்கில் திரும்பப் பெறும் திட்டம் அமலாகிறது. காலி மதுபாட்டில்களை திருப்பி ஒப்படைக்கும்போது ரூ.10 திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், "டாஸ்மாக் லிட், சென்னை (வடக்கு, தெற்கு, மத்தியம்) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படத்தப்பட உள்ளது.
வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10/- கூடுதலாகப் பெற்று மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10/-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் 6-வதுநாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை எழும்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
மெரினா காமராஜர் சாலையிலும் முற்றுகையிட திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் 6-வதுநாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் 7-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தினார்கள்.
சென்னை எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் பாலத்தில் காலை 11.30 மணி அளவில் திரண்ட ஆசிரியர் ஆசிரியைகள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது.
அதனை மையப்படுத்தி தான் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஒரே வேலையை செய்து வரும் உங்களோடு பணிபுரியும் சக ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியமும் எங்களுக்கு குறைவான ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், தினமும் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களின் இந்த தொடர் போராட்டம் காரணமாக சென்னை மாநகர போலீசார் தினமும் எங்கு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.
- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
சென்னை:
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போனது. இந்தநிலையில் முதல் முறையாக நாளை அவர் சென்னை வருகிறார்.
அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.
மாலை 5 மணி அளவில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஹண்டே தலைமை தாங்குகிறார். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகிக்கிறார்.
மத்திய மந்திரி எல்.முருகன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பாராட்டு உரை வழங்குகிறார்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஜோதிமணி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர், ஐசரி கணேஷ், இயக்குனர் பாக்கியராஜ், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், டாக்டர் சுதா சேஷையன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். முடிவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
முன்னதாக நாளை காலை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிக்கும் விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
- நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தை கையிலெடுத்தனர்.
- இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து, அன்று மாலையே விடுவிப்பது வழக்கம்.
சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மண்டலம் 5 மற்றும் 6 ஆகியவற்றில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.
இந்த இரண்டு மண்டலத்தையும் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தை கையிலெடுத்தனர். அதில் அண்ணா சாலையில் அறிவாலயம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆலந்தூர், நந்தம்பாக்கம், புளியந்தோப்பு, சைதாப் பேட்டை, கீழ்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் உள்ள சமுதாய கூடங்கள், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பொதுவாக இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து, அன்று மாலையே விடுவிப்பது வழக்கம். ஆனால் தூய்மை பணியாளர்களை பொறுத்த வரையில் இன்று காலை வரையில் விடுவிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுவிக்கப்படாத நிலையில், தாங்கள் தங்கி இருக்கின்ற சமுதாயக்கூடம் மற்றும் கல்யாண மண்டபங்களிலேயே போராட்டத்தை தொடர்கின்றனர். தொடர் மற்றும் போலீசார் இல்லாத இடங்களை பார்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்வதால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சியின் அனைத்து நுழைவு வாசல்களும் அடைக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்து விடாமல் இருப்பதற்காக அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- இன்றுகாலை அண்ணா அறிவாலயம் முன் போராட்டம் நடத்தினர்.
- போலீசார் இல்லாத இடங்களை பார்த்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றுகாலை அண்ணா அறிவாலயம் முன் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனிடையே மற்றொரு தரப்பினர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் கருணாநிதி சிலை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் போலீசார் இல்லாத இடங்களை பார்த்து போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து வருகின்றனர். இதனால் காவல்துறையினர் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போராட்டத்தை எங்கு கையிலெடுக்கிறார்கள் என்பது தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரெயில்கள் 15 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.
- கர்நாடகாவில் இருந்து சென்னை சென்டரல் வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரெயில்கள் 15 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.
அரக்கோணம்-சென்னை கடற்கரை, திருவள்ளூர்-பொன்னேரி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் தாமதம் ஏற்பட்டது.
திருத்தணி, திருவள்ளூர், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் மின்சார ரெயில்கள் 15 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.
இதேபோல் கர்நாடகாவில் இருந்து சென்னை சென்டரல் வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தது. மங்களூர் விரைவு ரெயில், அசோகபுரம் காவிரி விரைவு ரெயில் காலதாமதமாக சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது.
- வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
- சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தின் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் நேற்று், இன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று விண்ணப்பித்து சென்றனர்.
சென்னையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர வேண்டியவர்கள் படிவம் 6-ஐயும், ஒருவரின் பெயர் தவறாக சேர்க்கப்பட்டிருந்தால் படிவம் 7-ஐயும், முகவரி, பெயர் மாற்றத்திற்கு படிவம் 8-ஐயும் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
- சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் தடை
- சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாளாகும்.
சென்னையில் வெறிநாய் கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அருள் என்ற இளைஞரை கடந்த 5ஆம் தேதி தெருநாய் கடித்துள்ளது. கொடுங்கையூர் என்.எஸ்.கே சாலையில் நடந்து சென்றபோது அருளை நாய் கடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உடல்நலம் குன்றியுள்ளது. இதனையடுத்து ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 2025-ல் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாளாகும். சென்னை மாநகராட்சியில், 98,523 செல்லப்பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், தற்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் (டிச. 20) தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
- சென்னையில் மட்டும் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- எஸ்ஐஆர் பணிக்கு முன் சென்னையில் வாக்காளர் எண்ணிக்கை 40.04 லட்சமாக இருந்தது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர், இடம் பெயர்ந்தவர், இரட்டை பதிவு என மொத்தமாக சென்னையில் 14.25 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்த நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் பணிக்கு முன் சென்னையில் வாக்காளர் எண்ணிக்கை 40.04 லட்சமாக இருந்தது.
இது, எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.79 லட்சமாக இருந்தது.
இந்நிலையில், எஸ்ஐஆர்-க்கு பிறகு சென்னை மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை
ஆர்.கே.நகர் - 56,916
பெரம்பூர் - 97,345
கொளத்தூர் - 1,03,812
வில்லிவாக்கம் - 97,960
திரு.வி.க. நகர் - 59,043
எழும்பூர் - 74,858
ராயபுரம் - 51,711
துறைமுகம் - 69,824
சேப்பாக்கம் - 89,241
ஆயிரம் விளக்கு - 96,981
அண்ணாநகர் - 1,18,287
விருகம்பாக்கம் - 1,10,824
சைதாப்பேட்டை - 87,228
தியாகராயநகர் - 95,999
மயிலாப்பூர் - 87,668
வேளச்சேரி - 1,27,521






