என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை"
- தமிழக உள்கட்டமைப்பிற்கு வழங்கப்படும் நிதி 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 9 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி வணக்கம் எனக்கூறி தனது உரையை தொடங்கினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திற்கு 9 வந்தே பாரத் ரெயில் வழங்கப்பட்டது, புதிதாக 77 ரெயில் நிலையங்கள் சீரமைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி பேசினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 9 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.880 கோடி, பாஜக ஆட்சியில் ரூ7600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதால் 1,300 கி.மீக்கு அதிகமாக ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக உள்கட்டமைப்பிற்கு வழங்கப்படும் நிதி 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புனரமைக்கப்பட்ட 8 ரெயில் நிலையங்களை திறந்து வைத்துள்ளேன். பெங்களூரு- சென்னை, ஐதராபாத்-சென்னை இடையில் புல்லட் ரெயில் திட்டங்கள் வர உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முன்னதாக வரைவு வாக்களர் பட்டியல் டிச.19 அன்று வெளியிடப்பட்டது.
- சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி பெரம்பூர் ஆகும்.
தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு தீவிரத் திருத்தத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னை வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டனர். முன்னதாக வரைவு வாக்களர் பட்டியல் டிச.19 அன்று வெளியிடப்பட்டது. சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து விடுப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது.
அதன்படி தற்போது சென்னையின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28,30,936. இதில் ஆண்கள் 13,65,763, பெண்கள் 14,64,344 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 829 பேர். சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி பெரம்பூர் ஆகும். பெரம்பூரில் 2,22,792 வாக்காளர்கள் உள்ளனர். துறைமுகத்தில் 1,16,896 வாக்களர் உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் சேவை இணையதளம் (voters.eci.gov.in) அல்லது தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் (elections.tn.gov.in) சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் இந்தப் பட்டியலைப் பார்வையிடலாம்
- எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. தலைவர் எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து, நேரில் வந்து நலம் விசாரித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து எச்.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் T.R.பாலு MP அவர்களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் H.ராஜா ஜி அவர்களை இன்று இரவு 7.50 மணிக்கு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
தான் விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் திரு.T.R.பாலு MP அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 'திணிப்பும் இருக்கக்கூடாது, அதேசமயம் எதிர்ப்பும் இருக்கக்கூடாது'
- தமிழ், மிகவும் சிறந்த, அழகான மொழி. உங்கள் வீட்டில், பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் அண்டை வீட்டாருடன் தாய்மொழியில் பேசுங்கள்
இந்தியை யார்மீதும் திணிக்கக்கூடாது, அதேசமயம் கண்மூடித்தனமாக அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும் தவிர்க்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் பட்டமளிப்பு விழா ஒன்றில் மாணவர்களிடையே பேசிய அவர்,
"இந்தியை எதிர்க்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான எண்ணம் கொள்ளாதீர்கள், அதே சமயம், இந்தித் திணிப்பு இருக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்; திணிப்பை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் நீங்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற விரும்பினால் அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள விரும்பினால், இந்தி மொழியைக் கற்றுக்கொள்வது அவசியமாகும்.
அதேபோல், ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி என்றாலும், அது ஒரு சர்வதேச இணைப்பு மொழியாக இருப்பதால், மாணவர்கள் அதையும் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் தாய்மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள், அதில் புலமை பெறுங்கள். ஆனால் அதே சமயம் இந்தி மற்றும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்வது எதிர்காலத்திற்கு உதவும்.
முதலில் உங்கள் தாய்மொழியில் பேசுங்கள், அதன் பிறகு மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் தாத்தா பாட்டியுடனும், அண்டை வீட்டாருடனும் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலும் தாய்மொழியில் பேசுவதில் பெருமிதம் கொள்ளுங்கள். அதுவே மொழியைப் பாதுகாப்பதற்கான வழி.
நீங்கள் ஆச்சர்யப்படலாம். நான் பொறியியல் கல்லூரிக்கு வந்துள்ளேன், பட்டமளிப்பு விழாவிற்கு வந்துள்ளேன், ஆனால் தாய்மொழி குறித்துப் பேசுகிறேன் என்று. ஆம், ஒருவர் தனது தாய்மொழியில் பேசுவதில் பெருமிதம் கொள்ள வேண்டும். முதலில் தாய்மொழி அதன் பிறகு சகோதர மொழி (அண்டை மாநில மொழிகள்), அதன்பின் பிற மொழிகள். இதுவே உங்கள் அனைவருக்கும் நான் வழங்கும் அறிவுரை. உங்களால் முடிந்தவரை அதிகமான மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
தமிழ், மிகவும் சிறந்த, அழகான மொழி. உங்கள் வீட்டில், பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் அண்டை வீட்டாருடன் பேசும்போது உங்கள் மொழியைப் பற்றி நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். கோவில் அல்லது வழிபாட்டுத் தலங்கள் என நீங்கள் எங்கு சென்றாலும், அவர்களிடம் உங்கள் தாய்மொழியில் பேசுங்கள். தாய்மொழியை மதிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அதுவே ஒரு வழி.
இரண்டாவது உங்களால் முடிந்தவரை பல மொழிகளைக் கற்க முயற்சி செய்யுங்கள். நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் அல்ல. ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், ஆங்கிலத்தைக் கற்பதற்கு முன்பாக மற்ற மொழிகளை, அதாவது இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, அசாமி, பஞ்சாபி, சந்தாலி என நம்மிடம் அழகான மொழிகள் உள்ளன. நம் நாட்டில் அழகான மொழிகள் பல உள்ளன. நம்மிடம் இந்தியும் உள்ளது.
இந்தியை நாம் எதிர்க்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான எண்ணத்தில் நீங்கள் இருக்க வேண்டாம். இந்தியைத் திணிக்கக் கூடாது என்பதில் நானும் உடன்படுகிறேன். 'திணிப்பு வேண்டாம்' என்று நான் எப்போதும் கூறுவேன். நான் அப்படிச் சொல்லும்போது சில நேரங்களில் குழந்தைகள் கைதட்டுகிறார்கள். பிறகு நான் சொல்கிறேன், 'திணிப்பும் இருக்கக்கூடாது, அதேசமயம் எதிர்ப்பும் இருக்கக்கூடாது'. இதுதான் என்னுடைய கருத்து. அதுதான் உங்களுடைய நிலைப்பாடாகவும் இருக்க வேண்டும்.
உங்களுக்கு அண்டை மாவட்டமான நெல்லூரிலிருந்து நான் வருகிறேன். தொடக்கத்தில், நான் இந்தி கற்கவில்லை. பின்னர், நான் டெல்லிக்குச் சென்றபோதுதான் இந்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஏனெனில், நீங்கள் ஒரு தேசிய அளவிலான தலைவராக மாற விரும்பினால், பிற மாநிலங்களில் பணியாற்ற விரும்பினால் அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உங்கள் எதிர்கால வாழ்க்கையைத் தொடர விரும்பினால், நீங்கள் இந்தியையும் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பிறகு, மனிதர்கள் மற்றும் உலக விஷயங்களைப் பற்றிய உங்கள் பொது அறிவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். இது எனது இரண்டாவது அறிவுரை. முதலாவது - தாய், தாய்நாடு, ஆசிரியர் மற்றும் நீங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தை மதியுங்கள்" எனப் பேசினார்.
- சென்னையில் இன்று அதிகாலை மிதமான முதல் அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது.
- சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இன்று அதிகாலையில் திடீர் பனிமூட்டம் ஏற்பட்டது ஏன்? என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் விளக்கி இருக்கிறது.
இது தொடர்பாக வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கை வருமாறு:-
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று அதிகாலை மிதமான முதல் அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது. காலை 5.30 மணியளவில் 1500 மீட்டராக இருந்த பார்வைத்திறன், 6.30 மணியளவில் 350 மீட்டராகவும், 7.30 மணியளவில் 150 மீட்டராகவும் குறைந்தது.
இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிக ஈரப்பதம், மிதமான முதல் அமைதியான காற்று நிலை, இரவு நேர குறைந்த வெப்பநிலை ஆகியவை பனி உருவாவதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
பிப்ரவரி மாத இறுதிவரை தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் குறைந்த முதல் மிதமான பனி மூட்டம் காணப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர் உள்ளிட்ட 5 வருகை விமானங்கள் பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
- திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 11-ந்தேதி வரை நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.
சென்னையில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர் உள்ளிட்ட 5 வருகை விமானங்கள் பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து செல்லும் சுமார் 10 விமானங்களின் புறப்பாடும் தாமதம் ஆகி உள்ளதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
அதேபோல, திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
- பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
- கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னை வரும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 11-ந்தேதி வரை நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் புறநகர் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னை வரும் ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
- செத்துக் கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பறவைகள் இறந்த பகுதிகளில் முழுமையான கிருமிநாசினி தெளிக்க வேண்டும்
சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இறந்து போன காகங்களின் வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கால்நடைத் துறை தெரிவித்துள்ளது. செத்துக் கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே பறவைகள் இறந்த பகுதிகளில் முழுமையான கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும் இறந்த பறவைகளை கையால் தொட வேண்டாம் எனவும் கால்நடைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 7மணிமுதல் மழை பெய்து வருகிறது.
- நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 7மணிமுதல் மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மற்றும் வடசென்னை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த சில மணிநேரங்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த திடீர் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளையும் உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அதாவது சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து, அதாவது சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலைக்குறைவை தொடர்ந்து தற்போது வெள்ளிவிலையும் குறைந்துள்ளது. அதன்படி காலையில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்திருந்த நிலையில், தற்போது வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் குறைந்து ரூ.3,45000க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.345க்கு விற்பனை ஆகிறது.
- தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை கடந்து இப்போது ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
- வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்தை கடக்குமா? என பலர் கேட்டு வருகின்றனர்.
தங்கம், வெள்ளி விலை கடந்த ஓராண்டுக்கு மேலாக புதிய பாதையில் பயணிக்கிறது. ஏற்றம்-இறக்கம் என்ற நிலை நீடித்தாலும், பெருமளவில் ஏறுமுகத்திலேயே இரண்டும் இருந்து புதிய உச்சத்தை தாண்டுகிறது.
தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டுமா? என பேசி வந்த நிலையில், அதனையும் கடந்து இப்போது ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்தை கடக்குமா? என பலர் கேட்டு வந்த சூழலில், ரூ.1 லட்சம் மட்டுமல்ல, ரூ.2 லட்சம் ஏன் ரூ.3 லட்சத்தையும் தாண்டி, அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இவ்வளவு நிலைகளை கடந்தும், மேலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து கொண்டே வருவதைதான் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் நேற்றும் விலை உயர்ந்து இருந்தது.
நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், பவுனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே இன்று மதியமும் தங்கள் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று காலை சவரனுக்கு ரூ.2,800 கூடிய நிலையில், தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ. 1,320 கூடியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்து ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.515 உயர்ந்து ரூ.14,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.340-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200
19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600
18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-1-2026- ஒரு கிராம் ரூ.340
19-1-2026- ஒரு கிராம் ரூ.318
18-1-2026- ஒரு கிராம் ரூ.310
17-1-2026- ஒரு கிராம் ரூ.310
16-1-2026- ஒரு கிராம் ரூ.306
- கிராமுக்கு ரூ. 290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனை
- கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 330 ரூபாய்க்கு விற்பனை
கடந்த சிலநாட்களாகவே தங்கத்தின்விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துவருகிறது. 50 ஆயிரம், 60 ஆயிரம் என உயர்ந்து தற்போது 1 லட்சத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒருநாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது. இன்று காலை கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,610-க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் தற்போது கிராமுக்கு ரூ. 290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கும், சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200க்கும் விற்பனையாகிறது.
தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 330 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






