என் மலர்

    நீங்கள் தேடியது "MK Stalin"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
    • 1000 கலைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் கலைமாமணி விருது பெற்றவர்களில் சிலர் ஏழ்மை நிலையில் உள்ளதாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவ அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

    அதன் அடிப்படையில், கலைமாமணி விருது பெற்ற 10 பேர்களுக்கு தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கினார். மேலும் 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

    இதற்கான காசோலையை 6 பேர் நேரில் வந்து பெற்றுக்கொண்டனர்.

    தலா ரூ.1லட்சம் வாங்கியோர்கள் பெயர் வருமாறு:-

    கே.கல்யாணசுந்தரம், ச.சமுத்திரம், என்.பார்வதி உதயம், கே.குமரவேல், பா.முத்துசந்திரன், கோ.முத்துலட்சுமி, பி.ஆர்.துரை, ரா.கல்யாணசுந்தரம், எம்.எஸ்.முகமது மஸ்தான், டி.என்.வரலட்சுமி ஆகியோருக்கு பொற்கிழித்தொகையாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

    மேலும் நலிந்த நிலையில் உள்ள வயோதிகக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 1000 கலைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

    இதை வழங்கிடும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு நிதி உதவிக்கான ஆணைகளையும் அவர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 56 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 புதிய மீன் இறங்கு தளங்கள், 2 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியில் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் 15 கோடியாக இருந்த பனை மரங்களின் எண்ணிக்கை, ஐந்து கோடியாக குறைந்துள்ளது.
    • அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில், 22 லட்சம் பனை விதைகள் நடப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர் நலவாரியம், 'கிரீன் நீடா' சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித் திட்டம் எனும் என்.எஸ்.எஸ். தமிழ்நாடு பசுமை இயக்கம் ஆகியவை இணைந்து, வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 14 கடலோர மாவட்டங்களில், ஒரு கோடி பனை விதைகளை நட உள்ளன.

    நாளை காலை 10.30 மணிக்கு, 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்வை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

    இதுதொடர்பாக, பனை மர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறியதாவது:-

    தமிழகத்தில், 15 கோடியாக இருந்த பனை மரங்களின் எண்ணிக்கை, ஐந்து கோடியாக குறைந்துள்ளது. இதனால், கடல் அரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு என, சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.

    எனவே, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 கடலோர மாவட்டங்களில், 1,076 கி.மீ., பரப்பளவில், ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை, வருகிற 1-ந் தேதி துவங்குகிறோம்.

    அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில், 22 லட்சம் பனை விதைகள் நடப்படும். இப்பணியில், ஒரு லட்சம் என்.எஸ்.எஸ்., மாணவர்களும், கிரீன் நீடா போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் தன்னார்வலர்களும் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்.
    • எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி.

    பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார்.

    நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் திரு. சுவாமிநாதன் அவர்கள் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார்.

    சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை திரு. சுவாமிநாதன் அவர்கள் பெற்றுள்ளார். உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் - வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய திரு. சுவாமிநாதன் அவர்களை கௌரவிக்கும் விதமாக, அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தலைவர் கலைஞர் உடனும், என்னுடனும் எம்.எஸ்.சுவாமிநாதன் எப்போதும் நல்ல நட்பைப் பேணி வந்தார்.
    • எம்.எஸ்.சுவாமிநாதன் இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.

    சென்னை:

    இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையான எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நவீன பாரதத்தை கட்டமைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் நம் இதயங்களிலும் மனதிலும் வாழ்வார் என்று தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

    நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் அவர்கள் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார். ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த அவர் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

    சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்ற சுவாமிநாதன் அவர்கள், இருபதாம் நூற்றாண்டில் மிகப் பெரும் தாக்கம் செலுத்திய ஆசிய ஆளுமைகள் என உலகப் புகழ் பெற்ற "டைம்" இதழ் வெளியிட்ட பட்டியலில் மகாத்மா காந்தி, இரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் இடம்பெற்ற இந்தியர் ஆவார்.

    நாடு போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் - வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதன் அவர்கள் 1989-91, 1996-2000 ஆகிய ஆண்டுகளில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மாநிலத் திட்டக் குழுவிலும் இடம்பெற்று சீரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    தலைவர் கலைஞர் உடனும், என்னுடனும் எப்போதும் நல்ல நட்பைப் பேணி வந்தார். 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் சுவாமிநாதன் அவர்கள் கோரிக்கை வைத்ததும், தரமணியில் அவர் நிலம் வழங்கிய இடத்தில்தான் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்நிறுவனத்தின் 32-ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றி, 96-ஆவது பிறந்தநாள் காணவிருக்கும் சுவாமிநாதன் அவர்கள் நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது தற்போது என் நெஞ்சில் நிழலாடுகிறது.

    அவரது இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
    • தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததைவிட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு அமைந்த பிறகு கடந்த இரு ஆண்டுகளில் 12,576 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,205 பேருக்கு நேற்று பணி ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

    தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் கடந்த இரு ஆண்டுகளில் வழங்கப்பட்டதாக கூறப்படும் அரசு வேலைகளின் எண்ணிக்கையும், அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படும் தமிழக அரசு வேலைகளின் எண்ணிக்கையும் போதுமானவை அல்ல.

    தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததைவிட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.

    தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையிலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறை வேற்றும் வகையிலும் நடப்பு நிதியாண்டில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா 2 லட்சம் வீதம் 4 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உண்மையிலேயே பிரிந்துவிட்டார்களா? அல்லது நாடகமா? என்பது காலப்போக்கில் தான் தெரியும்.
    • சுப்ரீம் கோர்ட்டும் தண்ணீர் கொடுக்க தீர்ப்பு சொல்லிவிட்டது. ஒழுங்காற்று குழுவும் சொல்லி விட்டது. அவங்களுக்கு வேறு வழியில்லை.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

    சுமார் 20 நிமிட நேர சந்திப்புக்கு பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கே: தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொடருகிறதா?

    ப: தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறேன்.

    கே: அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியில் சிறு சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறதே?

    ப: இங்கு எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. அமைதியாக எந்த சலசலப்பும் இல்லாமல், நீரோடை போகிற மாதிரி செல்கிறது.

    கே: அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ப: அவர்கள் உண்மையிலேயே பிரிந்துவிட்டார்களா? அல்லது நாடகமா? என்பது காலப்போக்கில் தான் தெரியும்.

    கே: வர இருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் துரை வைகோ போட்டியிட வாய்ப்புள்ளதா?

    ப: அதுபற்றி நாங்கள் இன்னும் பேசவே இல்லை.

    கே: தொகுதி மறுவரையறை செய்யும்போது தமிழ் நாட்டின் எம்.பி. தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதா?

    ப: மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் நமக்கு 8 எம்.பி. குறையலாம். ம.பி., உ.பி. மாநிலங்களில் அதிகமாகக் கூடும்.

    அப்படி வரும்போது, இந்தியாவின் மொத்த வரைபடத்தில் நம்முடைய எண்ணிக்கை குறையும்போது, அதனுடைய விளைவுகள் இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் விரோதமாக இருக்கும்.

    இந்தியா என்கிற ஒரு அமைப்பு ஒரு நாடு இன்றைக்கு இருக்கக்கூடிய நினைப்பு போய்விடும். அதனுடைய விளைவுகள் எல்லா மாநிலங்களிலும் எதிர்விளைவுகள் ஏற்படும். மிகப்பெரிய சோதனையில் போய் முடியும்.

    கே: காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் உள்பட எல்லாருமே ஒன்று சேர்ந்து தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களே?

    ப: சுப்ரீம் கோர்ட்டும் தண்ணீர் கொடுக்க தீர்ப்பு சொல்லிவிட்டது. ஒழுங்காற்று குழுவும் சொல்லி விட்டது. அவங்களுக்கு வேறு வழியில்லை. அதனால் ரோட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    கே: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை அங்கு அவமரியாதை செய்கிறார்களே?

    ப: நாம் அமைதியாக இருக்கிறோம். நம் பக்கம் நியாயம் இருக்கிறது. நம் பக்கம் சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. அதனால் அமைதியாக இருக்கிறோம்.

    கே: 'இந்தியா' கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் தமிழ்நாட்டில் தொடருதா?

    ப: ஆமாம். கூட்டணியில் தொடருகிறோம்.

    கே: திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக கூட்டணியில் இருக்கிறார்களா?

    ப: எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

    கே: திருமாவளவனுக்கு அ.தி.மு.க. தரப்பில் தூது விடுவதாக சொல்கிறார்களே?

    ப: அதுமாதிரி இல்லை. தமிழ்நாட்டை பொருத்தவரை இந்த கூட்டணியில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்ற
    • அரசு பணிக்கு தமிழ் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

    இதில் 5,278 இளநிலை உதவியாளர்கள், 5339 தட்டச்சர்கள், 1077 சுருக்கெழுத்தர்கள், 425 வி.ஏ.ஓ (கிராம நிர்வாக அலுவலர்கள்) 67 வரித் தண்டலர்கள், 19 கள உதவியாளர்கள் அடங்குவார்கள்.

    இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கினார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அரசு பணி நியமன ஆணையை வழங்கிடும் விதமாக 10 பேருக்கு ஆணைகளை வழங்கினார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மக்கள் சேவையை மனதில் வைத்து நீங்கள் பணியாற்ற வேண்டும். அரசு பணிக்கு தமிழ் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 2 ஆண்டுகளில் அரசு பணிக்கு 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா கூட்டணியில் தி.மு.க. முக்கிய கட்சியாக விளங்குகிறது.
    • கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணியும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.

    இந்தியா கூட்டணியில் தி.மு.க. முக்கிய கட்சியாக விளங்குகிறது. தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

    அதுமட்டுமின்றி பிரதமர் மோடி ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.

    இப்போது முழுக்க முழுக்க தேர்தல் பணிகளில் அதில் கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அண்மையில் கூட்டி பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

    அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.2) கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மண்டல அளவில் இந்த கூட்டத்தை கூட்டி தேர்தல் வியூகம் குறித்து பேசி வருகிறார்.

    தேர்தலுக்கு இன்னும் 5, 6 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவும் தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டன. தமிழகத்தில் தி.மு.க.வும் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் காதர் மொய்தீன் தலைமையில் அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. கூட்டணியில் இருப்பதை உறுதி செய்துவிட்டு வந்துள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது ராமநாதபுரத்தில் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ்கனி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

    இந்த முறையும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வந்து உள்ளனர்.

    ஆனாலும் தி.மு.க.வில் தொகுதி உடன்பாடு வரும் போது பேசி கொள்ளலாம் என்று கூறிவிட்டனர்.

    இதே போல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதே போல் ஒவ்வொரு கட்சியிலும் அறிவாலயம் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குழு அமைத்து அறிவிப்பு வெளியிடுவார். இதே போல் ஒவ்வொரு கட்சியிலும் குழு அமைப்பார்கள். அதன் பிறகே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.

    தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2019-ம் பாராளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றிருந்தது.

    இந்த தேர்தலில் ஐ.ஜே.கே. கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி விட்டது. அதற்கு பதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே வரும் வாரங்களில் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியை உறுதிப்படுத்த அண்ணா அறிவாலயம் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனுமதியின்றி தன்னிச்சையாக அரசிதழில் தேடுதல் குழு அமைக்கப்பட்டதாக ஆளுநர் குற்றச்சாட்டு.
    • தேடுதல் குழுவை நியமிக்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அதிகாரம் இல்லை.

    சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேர்வுக் குழுவை அமைக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் இந்த உத்தரவு கடந்த 13-ம் தேதி தமிழ் நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் தனது அனுமதியின்றி தன்னிச்சையாக அரசிதழில் தேடுதல் குழு அமைக்கப்பட்டதாக ஆளுநர் குற்றம்சாட்டி உள்ளார்.

    உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தனி தேடுதல் குழு அமைத்து இருக்கிறது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை நியமிக்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அதிகாரம் இல்லை. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழை திரும்ப பெற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி இருக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமாவளவனுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • நின்றுகொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்தார் திருமாவளவன்.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்த திருமாவளவன் முதுகு எரிச்சல் காரணமாக அவதிப்பட்டார். வடபழனி கட்சி அலுவலகத்தில் அவர் மணிக்கணக்கில் நின்றுகொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்ததில் மிகவும் சோர்வடைந்து விட்டார்.

    உடல் வலி அதிகமாகி காய்ச்சலும் அவருக்கு வந்துவிட்டது. இதனால் அவர் வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் திருமாவளவனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin