என் மலர்
நீங்கள் தேடியது "mk stalin"
- மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதுபவர்கள் செவிலியர்கள்.
- அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
உலக செவிலியர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் இன்று மாலை காலமானார்.
இவரது மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர், "என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன்.
இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்" என குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்," தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.
- சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
பின்னர், இருநாடுகளும் சண்டையை கைவிடுவதாக அறிவித்தன.
இதற்கிடையே, இந்தியப் படைகளுக்கு ஆதரவாக சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் ஆகியோர் கையில் தேசியக் கொடி ஏந்தி பங்கேற்றனர்.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது.
அமைதி நிலைத்திருக்கட்டும். நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு எங்கள் மனமார்ந்த வணக்கம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
- பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழலில், இந்தியப் படைகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் ஆகியோர் கையில் தேசியக் கொடி ஏந்தி பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பேரணி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
- பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கியது.
இந்த பேரணி தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே வரை நடைபெறுகிறது.
இந்தப் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி பங்கேற்றுள்ளனர்.
பேரணி செல்லும் சாலையில் மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் தொட்டிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
- புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி, புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிய போப்-ஆக தேர்வான 14ம் லியோவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ரோமன் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு புனித போப் 14ம் லியோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அமைதி மற்றும் ஒற்றுமை பற்றிய அவரது செய்தி உலகம் முழுவதும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாட அரசு அறிவித்துள்ளது.
- புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15ம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாட அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,842 புதிய மினி பேருந்துகளை இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
- ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான டைடல் பார்க் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
- திராவிட மாடல் அரசு அமைந்தற்கான வெற்றி பயணம் தொடங்கியது திருச்சியில் இருந்து தான்.
திருச்சி:
திருச்சியில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திருச்சியில் இந்த சிறப்பான மாபெரும் விழாவில் பேசுவதுல் மகிழ்ச்சி அடைகிறேன். விழா அல்ல இது ஒரு மாநாடு... அப்படிப்பட்ட மாநாட்டை ஏற்பாடு செய்திருக்க கூடிய அமைச்சர் நேருவுக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றியை பாராட்டும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நேருவை பாராட்டுவது என்னை நானே பாராட்டுகிற மாதிரி தான்.
அந்த அளவுக்கு என்னுள் கலந்தவர் அமைச்சர் நேரு. திருச்சி தீரர்கள் கோட்டத்தில் தலைமை தீரர் நேரு. பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து, அதை எல்லாம் வென்று இந்த மத்திய மண்டலத்தை வலுவாக வளர்த்தெடுத்திருக்கிறார்.
இந்த பயணத்தில் அவர் சந்தித்த இடர்பாடு, இழப்புகள் ஏராளம். அதெல்லாம் ஈடு செய்ய முடியாத இழப்புகள். அது அத்தனையும் இந்த இயக்கத்திற்காக, எங்களுக்காக, நமக்காக தாங்கிக் கொண்டிருக்கின்றார். இப்போது அதே உறுதியோடு செயல்பட்டு வருகிறார். ஆட்சி அமைந்த பிறகு இந்த அமைச்சரவையில் அவருக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை வழங்கியதும், அந்த நம்பிக்கையை காப்பாற்றி இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா மாநகரங்கள், நகரங்கள், பேரூர்கள் அனைத்தையும் மிகச்சிறந்த வகையில வளர்த்து வருகிறார்.
அதற்கு எடுத்துக்காட்டு தான் பஞ்சப்பூரில் திறந்து வைத்துள்ள முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் அமைந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். அதை பார்த்தவுடன் எனக்குள்ள என்ன தோணுச்சுன்னா, இது பஞ்சப்பூரல்ல... எல்லா ஊரையும் மிஞ்சப் போகும் மிஞ்சப்பூர் .
தமிழ்நாட்டோட இதய பகுதியாக விளங்குகிற இந்த திருச்சிக்கு இப்படி ஒரு பேருந்து நிலையம் நிச்சயம், அவசியம் தேவை தான். அமைச்சர் நேரு திருச்சி மாவட்டத்திற்கு ரொம்ப ஸ்பெஷலா பார்த்து பார்த்து இதை உருவாக்கி இருக்கிறார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர் ஆனதுமே அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று சொன்னார். தற்போது மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டும் அப்படித்தான். கல்வித் தரமும் பெருமளவு உயர்ந்திருக்கு. இடைநிற்றல் கூடாதுன்னு ஸ்கூல் போகாம இருக்கக்கூடிய மாணவர்களின் வீடு வீடாக தேடி தேடி போய் அறிவுரை சொல்லி வேண்டிய உதவிகள் செய்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புறோம்.
நான் டெல்லி சென்றபோது அங்கிருந்த கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அங்குள்ள மாடல் ஸ்கூல் ஒன்றினை நான் பார்த்தேன். இதைவிட சிறப்பாக தமிழ்நாடு முழுக்க மாதிரி பள்ளிகள் உருவாகணும் என்று அப்பவே நான் முடிவு செய்தேன்.
என்னோட அந்த கனவை ரொம்ப சிறப்பாக அன்பில் மகேஷ் எல்லா மாவட்டத்திலும் செயல்படுத்தி காட்டி இருக்கிறார். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலக மாதிரி திருச்சிக்கும் ஒரு அறிவுச் சுரங்கம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து தற்போது பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டு மிகப் பிரமாண்டமாக இந்த நூலகம் உருவாகி வருகிறது.
அமைச்சர்கள் நேருவும், அன்பில் மகேசும் சிறப்பக செயல்பட்டு எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறார்கள். அது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இரண்டு அமைச்சர்களுக்கும் துணையாக இருக்கக்கூடிய அரசுத்துறை செயலர்கள், கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
இங்கு பெரியார், அண்ணா, கலைஞர் கலைஞர் சிலைகளை திறந்து வைத்துவிட்டு தான் இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். திருச்சிக்கும் இதற்கும் நிறைய தொடர்பு உள்ளது. தந்தை பெரியார் பிறந்தது ஈரோடு என்றாலும், அவர் மாளிகை கட்டி வாழ்ந்தது இங்குதான். கல்லக்குடி போராட்டத்தில் கைதான தலைவர் கலைஞர் திருச்சி சிறையில் தான் அடைக்கப்பட்டார். மொழிப்போராட்டத்தில் கலைனரும், பெரியாரும் இணைந்து போராடி உள்ளனர். பல்வேறு புத்தகங்கள் இந்த திருச்சி மண்ணிலிருந்து தான் வெளியானது.
திருச்சிக்கு பல திட்டங்களை கொடுத்துள்ளோம். ஜல்லிக்கட்டு அரங்கம், 4 கோடி 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பச்சைமலை சுற்றுலா திட்டம், மிக முக்கியமான திட்டமான திருச்சி மாவட்டத்தில் தொழில் புரட்சி ஏற்படுத்திட மணப்பாறையில் 1100 ஏக்கர் பரப்பளவுல சிப்காட் என்னால தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான டைடல் பார்க் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படி கடந்த 4 ஆண்டுகளில் 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெகா திட்டங்கள் திருச்சிக்காக மட்டுமே தரப்பட்டிருக்கிறது.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 4000 வீடுகளை கட்டித் தந்திருக்கிறோம். 54,428 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய விழாவில் 527 கோடி மதிப்பிலான 3597 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். அது மட்டும் அல்ல இதுவரைக்கும் நான் கலந்துக்கிட்ட விழாக்களில் மிக அதிகமாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 132 பேருக்கு 856 கோடி ரூபாய் மதிப்பில நலத்திட்டத்தை வழங்கிருக்கிறேன். இந்த 4 ஆண்டுகள் செய்த திட்டங்களை பத்திரிகையாளர்களிடம் கூறியபோது அதை வியந்து கேட்டார்கள். இதைதான் எதிர்க்கட்சிகளால் பொற்த்துக்கொள்ள முடியவில்லை. எனது அடுத்த டார்கெட் செட் பண்ணிக்கிட்டு முன்னோக்கி போறதால எல்லாத்தையும் ஞாபகப்படுத்த முடியவில்லை. ஒரு சாம்பிளுக்கு முக்கிய திட்டங்களை கூறுகிறேன். மதுரையில் ஒத்த செங்கலோடு இருக்கிற எய்ம்ஸ் மாதிரி இல்லாம, சொன்ன தேதிக்கு முன்னாடியே சென்னையில் கட்டி முடித்த 6 லட்சம் மக்களுள் பயனடைக்கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு பூங்கா, கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது.
மதுரைக்கு கலைஞர் நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம், குமரிமனையில் வள்ளுவருக்கு கண்ணாடி பாலம், தொழில் பூங்காக்கள், டைடல் பார்க்குகள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பெருமித அடையாளங்களை உருவாக்கி வருகிறோம்.
திராவிட மாடல் அரசு அமைந்தற்கான வெற்றி பயணம் தொடங்கியது திருச்சியில் இருந்து தான்.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திருச்சியில் நடந்த விடியலுக்கான முழக்க மாநாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான என்னுடைய கொள்கை அறிவித்தேன். தமிழ்நாட்டை துறைவாரியாக எப்படி உயர்த்தும் என்று சொல்லி 7 வாக்குறுதிகளை அப்போது நான் சொன்னேன். முதல் வாக்குறுதி வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு, இரண்டாவது வாக்குறுதி மகசூல் பெருகிடும் விவசாயம், மூன்றாவது வாக்குறுதி குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், நான்காவது வாக்குறுதி அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம் உயர்ந்த வாழ்க்கை தரம் உள்ளிட்ட இந்த ஏழு வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சி 6.9 விழுக்காடு என்பது, இதுவரை தமிழ்நாடு பார்க்காத வளர்ச்சி. இந்தியாவில் நாம் தான் நம்பர் ஒன்.பாசன பரப்பளவையும், விளைச்சலையும் அதிகமாக்கி சாதனைகளை படைத்து இருக்கிறோம். நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் காரணமாக சராசரியைவிட 2 மடங்கு உயர்கல்வியில் வளர்ச்சியை பார்க்கிறோம்.
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் 5 சத்வீதம் திருச்சியில் உள்ளது. இது எல்லாவற்றுக்கும் மேலாக சமூக நீதி அரசை உருவாக்கி இருக்கிறோம். எந்த பிரிவினரும் விட்டுப் போக கூடாது என கவனமாக செயல்பட்டு பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் எல்லாருக்குமான திராவிட மாடல் ஆட்சி நடகிறது. நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு, இன்னும் இதைவிட பெரிய சாதனைகளை படைப்போம் என உறுதியாக சொல்றேன். சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறேன். இதைத்தான் எதிர்க்கட்சிகளால் தாங்கிகொள்ள முடியவில்லை.
இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சராக இருந்தபோது 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தபோது எதையும் கண்டுகொள்லாமல் இருந்தார்.
காவேரி பிரச்சனையில் உரிமையை பெறவும் உச்ச நீதிமன்ற உறுதியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை. அதனால விவசாயிகள் தற்கொலை செய்த துயரம் எல்லாம் நடந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்த ஒரே காரணத்தினால் அது நிறைவேறியது. அதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது. ஜி.எஸ்.டியினால் நம்ம அரசினுடைய உயிர் மூச்சான வரி விதிப்பு உரிமை போச்சு. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அந்த அ.தி.மு.க.வின் இருண்ட ஆட்சியிலிருந்து மீட்டு தி.மு.க. விடியல் ஆட்சி நடத்தி வருகிறது. எப்படிப்பட்ட மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம் என்பதை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். திராவிட மாடலினுடைய விஷன் 2.0 இனிதான் லோடிங். நான்கு ஆண்டு ஆட்சியில் நம்பர் ஒன் மாநிலமாக்கி சாதனை படைத்தோம். இனி நாம போற பாதை சிங்க பாதையாக இருக்கும். அது ராக்கெட் வேகத்தில் இருக்கும். அதை அடுத்து வரும் ஆண்டுகளில் பார்ப்பீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
- 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் மெகா திட்டங்கள் திருச்சி தரப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* திருச்சி பஞ்சப்பூரில் ரூ.236 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினேன்.
* பஞ்சப்பூரில் ரூ.129 கோடியில் கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்துள்ளேன்.
* ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் கல்வி தரம் பெருமளவு உயர்ந்துள்ளது.
* மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க அதிக அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளதற்கு பொதுத்தேர்வில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதே சான்று.
* தி.மு.க. ஆட்சியில் ஏராளமான முத்திரை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
* திராவிட இயக்கத்தின் பல்வேறு போராட்ட வரலாறு திருச்சியில் தான் தொடங்கியது.
* 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் மெகா திட்டங்கள் திருச்சி தரப்பட்டுள்ளது.
* தி.மு.க. ஆட்சியின் 5-ம் ஆண்டு தொடங்கியதும் முதல் பயணம் திருச்சி தான்.
* ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 52 சிறுநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
- உணவக கட்டிடம் ஒரே நேரத்தில் 120 பேர் அமர்ந்து உணவருந்த வசதியாக பிரம்மாண்டமாக அமைத்து உள்ளனர்.
திருச்சி:
திருச்சியில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகாமையில் ரூ.129 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த முனையத்தின் முன்புறம் பேரறிஞர் அண்ணா நிலையையும் அவர் திறந்துவைத்தார். இந்த கனரக வாகன சரக்கு வாகன முனையம் 8 ஏக்கர் பரப்பளவில் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 250 கனரக வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 102 இருசக்கர வாகனங்கள் 46 நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம் இங்குள்ள வணிக வளாகத்தில் தரைதளத்தில் 51 கடைகளும் முதல் தளத்தில் 28 கடைகளும் உள்ளது.
தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 52 சிறுநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. உணவக கட்டிடம் ஒரே நேரத்தில் 120 பேர் அமர்ந்து உணவருந்த வசதியாக பிரம்மாண்டமாக அமைத்து உள்ளனர்.
இதிலும் தனியாக 19 சிறுநீர் கழிப்பிடம் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 27 சதுர மீட்டர் பரப்பளவில் பாதுகாவலர் அறை பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இங்கு பிரம்மாண்ட தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இதில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 14 படுக்கை வசதிகள் இடம் பெற்றுள்ளது 16 குளியல் அறைகள் உள்ளன. மேலும் 13 மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்குமான கழிவறை வசதிகள் கூடுதலாக இந்த கனரக சரக்கு வாகன முனையம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் 107 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கனரக வாகன நிறுத்துமிடங்களை அறிவிப்பு செய்யும் வசதி, பாஸ்ட்டேக் மூலம் வசூல் செய்யும் வசதி, தொழில்நுட்ப காரணிகள் மற்றும் பசுமை புல் வெளி போன்றவை இடம்பெற்றுள்ளது.
- கடந்த 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா்.
- மருத்துவக் குழுவினா் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.
சென்னை:
மூத்த அமைச்சா் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத்துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது. கனிம வளத்துறை பொறுப்பானது சட்டத்துறையை கவனித்து வந்த எஸ்.ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை பல்வேறு தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணி, சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா். 2009-ம் ஆண்டு ஜூலையில் அவரது இலாகா அதிரடியாக மாற்றப்பட்டது.
தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பொதுப்பணித்துறையை தனது வசம் வைத்திருந்த துரைமுருகனிடம் இருந்து அந்தத் துறையை திடீரென பறித்த கருணாநிதி, தனது வசமே அதை வைத்துக் கொண்டாா். அதன்பிறகு, சட்டத்துறை மட்டுமே துரைமுருகன் வசம் இருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியிலும் அதே போன்ற அதிரடி மாற்றத்தை மூத்த அமைச்சரான துரைமுருகன் சந்தித்து உள்ளாா். நீா்வளத்துறையுடன் முக்கியத் துறையான கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை அவா் வசம் இருந்தது. இந்நிலையில், அவரிடம் இருந்து அந்தத் துறை பறிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவா் மீது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஊழல் தடுப்புத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சமீபத்தில் ஐகோர்ட்டு தீா்ப்பு அளித்தது. இந்தத் தீா்ப்பு துரைமுருகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், கனிமம் மற்றும் சுரங்கத்துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளும் அரசுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, குவாரிகளுக்கான குத்தகை காலத்தை அதிகரித்தது, பசுமை வரி செலுத்தி அண்டை மாநிலங்கள் மணல் எடுத்துச் செல்லும் நடைமுறை, இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவாரிகளை மீண்டும் இயக்க அனுமதி அளித்தது போன்ற செயல்பாடுகள் அரசு மீது கடுமையான விமா்சனங்களை முன் வைத்தன. இந்த நிகழ்வுகளின் பின்னணி காரணமாகவே துரைமுருகனிடமிருந்து கனிமம் மற்றும் சுரங்கத்துறை பறிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அமைச்சா் துரைமுருகன் (86) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்நோக்கு மருத்துவத்துறையினா் சிகிச்சை அளித்தனர்.
அவருக்கு நெஞ்சகப் பகுதியில் அசவுகரியம் மற்றும் சளி பிரச்சனை இருப்பதாக தெரிய வந்து உள்ளது. மருத்துவக் குழுவினா் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.
- ஜம்மு காஷ்மீரில் கல்வி பயில சென்றுள்ள தமிழக மாணவர்கள் வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- நிலைமை சீரடைந்தவுடன் மாணவர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்து வரப்படுவார்கள் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்திய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லை பகுதிகளில் இருநாடுகளும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அப்பகுதியில் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கல்வி பயில சென்றுள்ள தமிழக மாணவர்கள் வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நிலைமை சீரடைந்தவுடன் மாணவர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்து வரப்படுவார்கள் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
காஷ்மீரின் பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் மாணவர்கள் 9994433456, 7373026456 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
உதவி தேவைப்படும் தமிழக மாணவர்கள் nrtwb.chairman@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு தொடர்பு கொள்ளலாம்.