என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ்"

    • இதுதான் கருணாநிதி குடும்பத்தினர் சந்திக்கும் கடைசித் தேர்தல்
    • அதிமுக ஆட்சிக்கு வந்தால் நடந்தாய்வாழி காவிரி திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.

    திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 

    "இதே திருச்சியில் நேற்று முன்தினம் திமுக மாநாடு நடைபெற்றது. அப்போது தே.ஜ.கூட்டணி குறித்து முதலமைச்சர் விமர்சனம் செய்தார். இது வெற்றிக் கூட்டணி, அருமையான கூட்டணி. பல்வேறு வார்த்தைப் போருக்கு இடையில்தான் காங்கிரஸும், திமுகவும் கூட்டணி வைத்துள்ளன. கெஞ்சி, அடிமையாகி காங்கிரஸுடம் திமுக கூட்டணி வைத்துள்ளது. ஆனால் பரஸ்பர உணர்வோடு தே.ஜ. கூட்டணி இணைந்துள்ளது. நாங்கள் இணைந்து மீண்டும் அற்புதமான ஆட்சியை அமைப்போம். நான்கில் ஒருபங்கு அறிவிப்புகள் கூட தற்போதுவரை திமுகவால் நிறைவேற்றப்படவில்லை.

    தமிழ்நாட்டில் அதிமுக செய்தது பொற்கால ஆட்சி. ஒரே கொள்கையின்கீழ் கூட்டணியில் இணைந்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். காங்கிரஸின் கொள்கையும், திமுகவின் கொள்கையும் ஒன்றா? திமுகவும், கம்யூனிஸ்ட் கொள்கையும் ஒன்றா? திமுக என்றால் குடும்பக் கட்சி என்று பொருள். தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது இயல்பு. திமுகவை விரட்டத்தான் இந்த தேசிய ஜனநாயக கூட்டணி. 

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. மூதாட்டிகள் முதல் சிறுமிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. மோசமான, கையாலாகத அரசு திமுக அரசு. அந்த அரசை அகற்றுவதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். திமுக ஒரு குடும்ப கட்சி. இதுதான் கருணாநிதி குடும்பத்தின் கடைசித் தேர்தல்.

    விவசாய நிலங்களை அபகரிக்கும் விதமாக மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்தது மு.க. ஸ்டாலின் அரசு. அந்த விளைநிலங்களை பாதுகாக்கும் நோக்கத்தில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டுவந்தது எங்கள் ஆட்சி. காவிரி குண்டாறு திட்டத்தை கொண்டு வந்தோம். அதனை முடக்கியது விடியா திமுக அரசு. அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும், நடந்தாய்வாழி காவிரி திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.

    நடைபெற உள்ள தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி பேசினார். 

    • பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து உடனடியாக கார்த்தி சிதம்பரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் தெற்கு முதல் வீதியில் முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி மற்றும் சிவகங்கை தொகுதி எம்.பி.யும்., ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் உள்ளது.

    இங்கு ஆண்டியப்பன் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவர் நேற்று இரவு 12 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். பின்னர் அவர் ஓய்வெடுத்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் திடீரென 2 பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசினார்கள்.

    இதில் ஒரு பெட்ரோல் குண்டு தரையில் பட்டு வெடித்து சிதறியது. இன்னொரு பெட்ரோல் குண்டு புல்வெளியில் விழுந்து உள்ளது. இதனால் அது வெடிக்கவில்லை. இன்று காலையில் காவலாளி வந்து பார்த்த போது, அலுவலக வளாகத்தில் பாட்டில்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து உடனடியாக கார்த்தி சிதம்பரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆலோசனையின் பேரில் எம்.பி. அலுவலக உதவியாளர் செந்தில் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். ப. சிதம்பரத்தின் அலுவலகம் அமைந்திருக்கும் தெரு பகுதியில் ப.சிதம்பரத்தின் அலுவலகத்தை நோக்கி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கேமராவையும் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் உடைத்து உள்ளனர்.

    இருப்பினும் அப்பகுதியில் உள்ள மற்ற சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் எதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை.

    இருப்பினும் ஈரான் அதிபர் பற்றி கார்த்தி சிதம்பரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கார்த்தி சிதம்பரம் ஈரான் பற்றி பேட்டி அளித்த போது ஈரானில் நடைபெற்றது கொடுங்கோல் அரசு என்று தெரிவித்து இருந்தார்.

    இதற்கு சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்து வெளியிடப்பட்டதுடன், காரைக்குடியில் கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் அரசியல் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க., காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ப.சிதம்பரம் தலையிட்டு சுமூகமாக சமீபத்தில் தீர்த்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

    காரைக்குடி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வருகிறார்கள்.

    • புதுச்சேரி மாநில மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.
    • கவர்னர் மாளிகையில் அந்த நபர் அத்துமீறி நுழைந்த காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் மாளிகையில் காவல்துறை பணியாளர்கள் கண்காணிப்பில் இருந்தும், காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தும் மர்மமான முறையில் ஒருவர் நுழைந்து அங்கே ஒரு அறையில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரை கவர்னர் மகன் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்கும் கவர்னர் அலுவலகத்தில் ஒரு மனிதர் எப்படி உள்ளே நுழைய முடிந்தது?

    காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? அவர்கள் சரியான பாதுகாப்பு கொடுத்தார்களா? அவரின் குடும்பத்தினருக்கு சரியான பாதுகாப்பு கொடுத்தார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. கவர்னருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, புதுச்சேரி மாநிலத்தில் உருவாகி இருப்பதால் சாதாரண மக்களுடைய நிலை என்ன?

    சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் வீட்டிற்கு பக்கத்திலே பேக்கரியில் அத்துமீறி நுழைந்து அங்கு பணிபுரிந்தவர்களை எல்லாம் தாக்கிய சம்பவம் வீடியோவில் வெளியானது. நில அபகரிப்பு, வீடு அபகரிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது, கஞ்சா தாராளமாக கிடைப்பது, ரெஸ்டோபார்களில் குடித்துவிட்டு வந்து தெருவிலே கும்மாளம் போடுவது எல்லாம் புதுச்சேரியில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.

    புதுச்சேரி மாநில மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. கவர்னர் மாளிகையில் அந்த நபர் அத்துமீறி நுழைந்த காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும். கவர்னர் பாதுகாப்பை இந்த ஆட்சியில் கேள்விக்குறியாக்கியுள்ளனர். சட்டம் ஒழுங்கு புதுச்சேரி மாநிலத்தில் கெட்டுப்போய் உள்ளது.

    உள்துறை அமைச்சர் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள், சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது, நாங்கள் உரிய பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று எல்லாம் பேசுகிறார்.

    ஆனால் இன்று அவையெல்லாம் உண்மைக்கு புறம்பானவை என்று நிரூபணம் ஆகியுள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் தான் காரணம். இதற்கு முழு பொறுப்பையும் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர், அமைச்சர்கள் ஏற்க வேண்டும்.

    கவர்னருக்கே பாதுகாப்பு தர முடியாத அரசு குறிப்பாக உள்துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அங்கே பணிபுரிகின்ற காவல் துறை பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
    • 28 தொகுதிகளிலும் வெற்றி பெற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. காங்கிரஸ் அதிகப்படியான தொகுதிகளை கேட்டது. ஆனால், திமுக 28 தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

    இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக இருப்பதாக செய்திகள் வெளியானது. உடனடியாக காங்கிரஸ் மேலிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்த ப. சிதம்பரத்தை அனுப்பி வைத்தது. அவர் மு.க. ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர்கள் கூறியது உள்ளிட்டவைகளை விவரமாக மேலிடத்திற்கு கூறினார்.

    பின்னர் 28 சட்டமன்ற தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படும் என திமுக தெரிவித்தது. அதன்பின் இரு கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில் "கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும். 28 தொகுதிகளில் வெற்றி பெற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.

    கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 25 இடங்கள் வழங்கப்பட்டன. அதில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    • 4 பேர் கொண்ட தேர்வு குழுவினர் நாளை மறுநாள் சென்னை வருகிறார்கள்.
    • ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் பெயரை இந்த குழுவினர் தேர்வு செய்வார்கள்.

    சென்னை:

    வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அகில இந்திய தலைமை நியமித்துள்ள சிங்தியோ தலைமையிலான 4 பேர் கொண்ட தேர்வு குழுவினர் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை வருகிறார்கள்.

    சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்கள்.

    அப்போது காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் அந்த தொகுதியில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பற்றி முடிவு செய்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் பெயரை இந்த குழுவினர் தேர்வு செய்வார்கள்.

    இந்த குழுவினரின் தேர்வு பட்டியலின் அடிப்படையில் எந்தெந்த தொகுதிகள் என்று தி.மு.க.வுடன் பேசி முடிவு செய்ததும் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான 3 நபர்களை தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்புவார்கள். அதன் பிறகு டெல்லி ஒப்புதல் அளித்ததும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால் இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
    • கட்சி தொடங்கியதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று விஜய் அறிவித்த பிறகும் எந்த கட்சியும் அவருடன் கைகோர்க்கவில்லை.

    சென்னை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் வரப்போகும் 2026 தேர்தல் களம் வித்தியாசமாக அமைந்து உள்ளது.

    வழக்கமாக தேர்தல் காலங்களில் 3 முதல் 4 முனை போட்டிகள் கூட ஏற்படும். ஆனால் கடைசியில் இருமுனை போட்டியே பலமாக இருக்கும். அந்த வகையில் இறுதியில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் மல்லுகட்டும். கடைசியில் இரண்டில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    ஆனால் இந்த முறை நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் அந்த சூழ்நிலைக்கு சவால் விடும் சூழலை உருவாக்கி விட்டு உள்ளது. அதற்கு காரணம் அவருக்கு திரளும் ரசிகர்கள் கூட்டம்தான்.

    அது வெறும் ரசிகர்கள் கூட்டம் தான், தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்று முன்னணி கட்சிகளை உதட்டளவில் பேச வைத்தாலும் விஜய்க்கு திரளும் ரசிகர்கள் எண்ணிக்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி விடுமோ என்று மற்ற கட்சிகளை உள்ளூர யோசிக்க வைத்துள்ளது.

    ஆரம்ப கட்டத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்படி ஒரு கூட்டணி அமைந்திருந்தால் அதுவும் வலிமையான கூட்டணியாகவே இருந்து இருக்கும்.

    இதை உணர்ந்த தி.மு.க.வும் காங்கிரசை வெளியேற விடாமல் 3 தொகுதிகளை கூடுதலாக கொடுத்து தக்க வைத்துக் கொண்டது. இப்போதைய நிலையில் தி.மு.க. அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட 26 கட்சிகள் இடம்பெற்று மெகா கூட்டணி தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று உள்ளன. வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால் இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

    கட்சி தொடங்கியதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று விஜய் அறிவித்த பிறகும் எந்த கட்சியும் அவருடன் கைகோர்க்கவில்லை.

    தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே லட்சியம் என்று விஜய் கூறிவந்தாலும் அதற்கான வியூகத்தை அவர் பலமாக வகுக்கவில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். காங்கிரசை இழுக்க த.வெ.க. முயற்சித்ததைபோல் அ.தி.மு.க.-பா.ஜ.க. அணியில் த.வெ.க.வை இணைக்க நடத்தப்பட்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம் முதல்வர் பதவியை விஜய் தரப்பில் விட்டுக்கொடுக்க முன்வராதது தான்.

    ஆனால் இப்போது கள நிலவரம் மாறிவிட்டது. தி.மு.க. காங்கிரசை தக்க வைத்ததோடு தே.மு.தி.க.வையும் தங்கள் பக்கம் இழுத்து கூட்டணியை வலுப்படுத்தி வைத்துள்ளது.

    இப்போதைய சூழ்நிலையில் தி.மு.க. அணியை எதிர்த்து தேர்தல் போட்டியில் வெற்றி பெற எதிரணியும் பலமாக இருக்க வேண்டும்.

    எனவே, அ.தி.மு.க. அணியில் த.வெ.க.வும் இணைய வேண்டும் என்ற கருத்து அந்த கட்சி தொண்டர்களிடமும் எழுந்துள்ளது. ஏற்கனவே த.வெ.க.வுக்கு 24 முதல் 25 சதவீத வாக்குவங்கி இருப்பதாக அந்த கட்சி மதிப்பிட்டுள்ளது. அதே அளவுக்கு அ.தி.மு.க.வுக்கும் வாக்கு வங்கி உள்ளது. எனவே தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நமது நோக்கம் நிறைவேற அ.தி.மு.க.வுடன் கை கோர்க்க வேண்டும் என்று த.வெ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இதை விஜய் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளதாகவும் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே த.வெ.க.வை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் சேர்க்க பல தரப்பிலும் ரகசிய முயற்சிகள் நடந்து வருவதாக கடந்த சில நாட்களாகவே தக வல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், த.வெ.க.கட்சிக்குள்ளும் அந்த உணர்வை ஏற்படுத்தி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. வெளிப்படையாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஒன்றிய அரசின் தன்னிச்சையான இந்த முடிவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தும் நடவடிக்கையாகும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாடு முழுவதும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் ஒன்றாகும். ஒன்றிய அரசு சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதின் மூலம் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. ஒன்றிய அரசின் தன்னிச்சையான இந்த முடிவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மார்ச்7 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை உயர்வின் மூலம் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை ரூ.868.50 இலிருந்து ரூ.928.50 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.853 இருந்து ரூ.913 ஆகவும், மும்பையில் ரூ.852.50 இருந்து ரூ.912.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.879 இருந்து ரூ.930 ஆகவும் உயர்ந்துள்ளது.

    அதேபோல்19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் விலை ரூ.1929 இருந்து ரூ.2043.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உணவகங்கள், சிறிய உணவு கடைகள் மற்றும் தேநீர் கடைகள் போன்ற தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக உணவுப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.

    ஒன்றிய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், தேவையான அளவு கையிருப்பு இருப்பதாகவும் கூறிவரும் நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள போர் சூழ்நிலையை காரணம் காட்டி சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தும் நடவடிக்கையாகும்.

    ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்த சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

    • பாராளுமன்ற மக்களவையில் முதல் நாளிலேயே சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் பட்டியலிடப்பட்டுள்ளது.
    • அவை நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்குமாறு எம்.பி.க்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந்தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவு பெற்றது.

    மக்களவையில் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அமளியை தொடங்கிய எதிா்க்கட்சிகள், முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் என பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தன.

    கடந்த 3-ந்தேதி மக்களவையில் காகிதங்களை கிழித்து அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

    சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு வருகிற 9-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்த அமர்வு நடைபெறுகிறது.

    பாராளுமன்ற மக்களவையில் முதல் நாளிலேயே சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் அன்றே சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான பதவி நீக்கம் தீர்மான விவாதம் கொண்டு வரப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி அவை நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்குமாறு எம்.பி.க்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    அரசமைப்பு சட்டத்தின் 94சி பிரிவின் கீழ் பெரும்பான்மையான வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேற்றி சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய முடியும். தற்போது பா.ஜ.க. கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள் உள்ளனர்.

    கடந்த காலங்களில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர்களாக இருந்த ஜி.வி. மாவலங்கர் (1954), ஹூக்கம் சிங் (1966), பல் ராம் ஜாக்கர் (1987) ஆகியோர் இதேபோல் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டனர். ஆனால் எந்த தீர்மானமும் வெற்றி பெறவில்லை.

    தற்போது எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் ஓம்பிர்லாவுக்கு எதிரான தீர்மானமும் தோல்வியை சந்திக்கும்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும். மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும், இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முன்னாள் பிரதமர்களை பற்றி கூறப்பட்ட அவமதிப்பான கருத்துகளுக்கு நடவடிக்கை இல்லாதது.
    • சபாநாயகர் பதவிக்கு அவசியமான நடுநிலைத் தன்மை குறித்து எழும் கவலைகள்.

    சென்னை:

    பாராளுமன்ற காங்கிரஸ் துணை கொறடா மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பல எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு கையெழுத்திட்டு உள்ளனர்.

    அதில் குறிப்பிடப்பட்டு உள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:-

    * எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பேச வாய்ப்பு மறுக்கப்படுவது

    * எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.

    * பொதுமக்களின் பிரச்சனைகளை எழுப்பியதற்காக எதிர்க்கட்சியினரை முழு அமர்வுக்கும் இடைநீக்கம் செய்தல்.

    * முன்னாள் பிரதமர்களை பற்றி கூறப்பட்ட அவமதிப்பான கருத்துகளுக்கு நடவடிக்கை இல்லாதது.

    * சபாநாயகர் பதவிக்கு அவசியமான நடுநிலைத் தன்மை குறித்து எழும் கவலைகள்.

    இவை வெறும் அரசியல் கருத்து வேறுபாடுகள் அல்ல. பாராளுமன்றத்தின் நம்பகத்தன்மையையும், மரியாதையையும் நேரடியாக தொடும் விஷயங்கள்.

    ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட, சபாநாயகர் நடத்தை குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் உரிமை ஜனநாயக மரபாக கடந்த காலங்களில் மதிக்கப்பட்டது.

    அதுவே இந்திய ஜனநாயகத்தின் பலம், ஜனநாயக அமைப்புகள் கட்சி எல்லைகளைத் தாண்டி நடுநிலையாக இருக்க வேண்டும்.

    இந்த மார்ச் 9-ந்தேதி பாராளுமன்ற வரலாற்றில் மீண்டும் ஒரு முக்கிய நாளாக அமையக்கூடும்.

    அன்று, எம்.பி.க்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கை முழு சபைக்கும் சொந்தமானது — அது ஒரு அரசியல் கட்சிக்கானது அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

    எனவே அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எல்லா எம்.பி.க்களும், பாராளுமன்றத்தின் மரியாதை, நடுநிலைத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளை காக்க, இந்த விவாதத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழகத்தில் தி.மு.க.வும், புதுச்சேரியில் காங்கிரசும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்.
    • கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கட்சி தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி காங்கிரசாருடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரசில் மாநிலத்தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் முன்னாள் எம்.எல்.எ. அனந்தராமன், மூத்த துறை தலைவர் தேவதாஸ் ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம்.

    தமிழகத்தில் தி.மு.க.வும், புதுச்சேரியில் காங்கிரசும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு தி.மு.க.வுடன் பேசி யாருக்கு எத்தனை தொகுதிகள் என முடிவு எடுப்பார்கள். தமிழக பார்முலாதான் புதுச்சேரியில் பின்பற்றப்படும்.

    கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம். இது கூட்டணியிலுள்ள அனைத்துக்கட்சிக்கும் பொருந்தும். தியாகம் இல்லாவிட்டால் கூட்டணி இல்லை. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்பார்கள். அதனை பேசி தீர்வு காண்போம். கூட்டணி பேச்சுவார்த்தையில் தமிழக வழிமுறையையே புதுச்சேரியில் கையாள்வோம்.

    புதுச்சேரி, தமிழகமும் வெவ்வேறு மாநிலங்கள், பேச்சுவார்த்தை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் புதுச்சேரியில் நடைபெறும். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்.

    இவ்வாறு கிரீஷ் சோடங்கர் கூறினார்.

    தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, 2 ராஜ்யசபா சீட், 41 தொகுதிகள் என கேட்ட காங்கிரசுக்கு 28 தொகுதி, ஒரு ராஜ்யசபா மட்டுமே தி.மு.க. அளித்துள்ளது. ஆட்சியில் பங்கு இல்லை என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை சுட்டி காட்டியயே காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரீஷ் சோடங்கர் கூறியுள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் ஆட்சியில் தி.மு.க.வுக்கு பங்கு இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

    புதுச்சேரியில் 6 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ள தி.மு.க. கடந்த தேர்தலில் 13 தொகுதியில் போட்டியிட்டது. கால் நூற்றாண்டுகளாக புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலோ, தி.மு.க. பங்கேற்ற ஆட்சியோ இல்லை.

    இதனால் இந்த முறை தனது தலைமையில் கூட்டணி ஆட்சி என புதுச்சேரி தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு முட்டுகட்டை போடும் வகையிலேயே கிரீஷ் சோடங்கர் கூறியுள்ளார். எனவே, கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுமா என்பது கேள்வி குறியாகி உள்ளது.

    • கூட்டணி கட்சியை பா.ஜ.க. கபளீகரம் செய்து பதவிக்கு வருகிறது.
    • தமிழகத்திலும் அ.தி.மு.க. என்ற கட்சிக்கு கடைசி தேர்தலாக இது இருக்கும்.

    கரூரில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. தமிழகத்தில் வெற்றி பெறாது என்று முடிவு செய்துவிட்டார்கள். இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இந்த தேர்தலில் 3-வது இடத்திற்கு செல்லும், நிதிஷ்குமாரை பதவி விலக செய்துள்ளனர். அந்த மாநிலத்தில் கூட்டணி கட் சியை பா.ஜ.க. கபளீகரம் செய்து பதவிக்கு வருகிறது.

    அதேபோல் தமிழகத்திலும் அ.தி.மு.க. என்ற கட்சிக்கு கடைசி தேர்தலாக இது இருக்கும். இளைஞர்கள் ஆதரவு அதிகமாக இருக்கக்கூடிய விஜய் நிச்சயமாக 2-வது இடத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றார்.

    • அவரின் தமிழர் விரோத பேச்சும், நடவடிக்கையும் தமிழக மக்கள் விரும்பத்தகாத செயலாக இருந்தது.
    • ஆளுநர் மாளிகையை பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமாக செயல்பட வைத்தார்.

    கரூரில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டது எங்களுக்கு வருத்தம் தருகிறது. இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர் மாற்றப்பட்டு உள்ளார். அவரின் தமிழர் விரோத பேச்சும், நடவடிக்கையும் தமிழக மக்கள் விரும்பத்தகாத செயலாக இருந்தது.

    ஆளுநர் மாளிகையை பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமாக செயல்பட வைத்தார். கவர்னரை அறிவிப்பு இல்லாமல் திடீரென்று மாற்றம் செய்து விட்டார்கள் என்று மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கவலைப்பட தேவையில்லை. மேற்குவங்கத்திலும் மம்தா பானர்ஜிக்கு நட்சத்திர பேச்சாளராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவார் என்றார். 

    ×