என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narayanasamy"

    • பெஸ்ட் புதுவை தோல்வியடைந்துவிட்டது.
    • மத்திய நிதி கமிஷனில் புதுவையை சேர்க்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே மோதல் எற்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    கவர்னர், முதலமைச்சரிடையே எந்த மோதலும் இல்லை என்றும் அரசியல் காழ்புணர்ச்சியால் நாராயணசாமி உள்நோக்கத்தோடு பேசுகிறார் என அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்தார்.

    இந்த நிலையில் மது ஆலைகளுக்கு அனுமதி அளிக்காததால் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் மீது அதிருப்தியில் இருப்பதாக மீண்டும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. எங்கு பார்த்தாலும் ரெஸ்டோ பார் திறக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு கும்மாளம் போடுவதுதான் ஆன்மிகமா? ஒரு புதிய தொழிற்சாலை இல்லை, தரமான சுற்றுலா இல்லை. கலாச்சார சீரழிவுதான் நடக்கிறது.

    பெஸ்ட் புதுவை தோல்வியடைந்துவிட்டது. மத்திய நிதி கமிஷனில் புதுவையை சேர்க்கவில்லை. அனைத்து திட்டங்களும் படிப்படியாக கொண்டு வரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறுகிறார். ரேஷன்கடைகளை திறக்க முடியவில்லை குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000ம் கிடைக்கவில்லை. மக்களை ஏமாற்ற அவர் நினைக்கிறார்.

    உள் கட்டமைப்புகள் மேம்படுத்தவில்லை. முதலமைச்சர், அமைச்சர்கள், ஊழல் செய்வது குறையவில்லை. அமைச்சர்கள் பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர்.

    மதுபான தொழிற்சாலைகளுக்கு, அனுமதி மற்றும் தனக்கு வேண்டிய அதிகாரிகள் இடமாறுதலுக்கு அனுமதியளிக்காததால் கவர்னர் மீது முதலமைச்சர் அதிருப்தியில் உள்ளார். புதுவையில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. இந்த அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்பட்டது.
    • பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஐ.நா வுடன் பேசி முறியடித்துள்ளோம்.

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று நெல்லை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய துயர சம்பவம்.

    இந்திய பிரதமர் உத்தரவின்படி பாகிஸ்தானில் போர் தொடுத்து பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கட்சி பாகுபாடு இல்லாமல் காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்பட்டது.

    காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்திய நாட்டிற்கு உறுதுணையாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. பல ஆண்டுகாலமாக நடத்தப்படும் தொடர் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவுப்படி காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுடன் ஒன்றிணைந்து ராணுவத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் பேரணி உள்ளிட்டவைகளை நடத்த அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்தியாவில் நடத்திய பயங்கரவாத சம்பவத்தில் பங்கு பெற்றவர்கள், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பதை அந்த நாட்டை சேர்ந்த அமைச்சரே உறுதி செய்துள்ளார். திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்பதையும் அவர் தெளிவாக சொல்லி உள்ளார்.

    இந்தியாவில் குழப்பங்கள் ஏற்படுத்தி அமைதி இருக்கக் கூடாது என பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. பயங்கரவாதம் எங்கும் இருக்கக் கூடாது. அதனை வேரறுக்க வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பாகிஸ்தான் செயல்பாடுகள், பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஐ.நா வுடன் பேசி முறியடித்துள்ளோம்.

    மும்பை தாக்குதல் நடந்த போது குஜராத் முதல்வராக இருந்த தற்போது உள்ள பிரதமர் மோடி சம்பவ இடத்தை பார்வையிட்டு பிரதமர் என்பவர் 56 இன்ச் மார்பு கொண்டவராக இருக்க வேண்டும் என அப்போதைய பிரதமரை விமர்சனம் செய்ததை மறக்கமுடியாது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது சம்பவ இடத்தில் காவல் துறை, ராணுவம் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருந்தது. உளவுத்துறை ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துள்ளதை இது காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம்.
    • மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும்.

    தமிழகம், புதுவைக்கான சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் யார்? என்ற ஆலோசனையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.

    அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் புதிய வேட்பாளர்கள் மக்களை சந்திக்க தொடங்கி விட்டனர். கட்சி தாவல் படலங்களும் அரங்கேற தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை பெற்று புதுவை காங்கிரசின் கோட்டை என்பதை நிலை நாட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

    இதனால் மற்ற கட்சிகளை விட ஒரு படி மேலே சென்று தேர்தல் பிரசாரத்தையே தொடங்கியுள்ளனர். புதுவை நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய அரசியலமைப்பை காப்போம் பிரசார பொதுகூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். அவர் மேலும் பேசியதாவது:-

    ரங்கசாமி ஆட்சியில் என்ன செய்துள்ளார்? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? தேர்தல் தினத்தில் கொடுக்கும் பணத்தை வைத்து முடிவெடுத்தால் உங்கள் வாழ்க்கை இருண்டு விடும். யாருக்கு ஓட்டு போட்டால் தொகுதி வளர்ச்சியடையும் என சிந்திக்க வேண்டும்.

    தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம். வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும். உங்களுக்கு வேண்டியதை செய்து தருவோம்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து யானை லட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
    • ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து யானை லட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    யானை லட்சுமி முறையாக பராமரிக்கப்பட்டது. இருப்பினும் பீட்டா அமைப்பினர் யானையை காட்டில் விட வேண்டும் என்று கூறிய போது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து யானையை முறையாக பராமரிப்பதை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தெரிவித்தோம். யானையை கோவிலில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தோம்.

    தற்பொழுது உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென்று இறந்துள்ளது. யானை லட்சுமி நம்மை விட்டு பிரிந்துள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வதிக்கின்ற இந்த யானை இப்போது நம்மிடம் இல்லாது மிக பெரிய அதிர்ச்சியும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    அந்த அளவிற்கு மக்கள் யானையை நேசித்துள்ளனர். இது புதுவைக்கு மிகப்பெரிய இழப்பு. யானை இறந்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணயில் யார் தவறு செய்தார்கள் என தெரியவரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த கால ஆட்சியில் புதுவையை சேர்ந்த 95 சதவீதம் பேர் அரசு வக்கீல்களாக சென்னை மற்றும் புதுவை கோர்ட்டுகளில் நிரப்பப்பட்டுள்ளது.
    • கோவில், குடியிருப்பு, பள்ளி அருகில் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளில் அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி அனுமதி அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ்தான் தான் புதுவையில் முதன்மையான கட்சி என்றும் மதசார்பற்ற கூட்டணி நடத்தும் போராட்டங்களுக்கு காங்கிரஸ் தான் தலைமை தாங்கும் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    இதற்கு புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. கூறும்போது, நாங்கள் கொள்கையை கூறியே கட்சியை வளர்க்கிறோம். தி.மு.க.வுக்கு காங்கிரஸ் தலைமை தாங்க முடியாது என்றார். இது கூட்டணி கட்சிகளுக்கிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குப்பை டெண்டரில் இமாலய ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு வைத்தேன். பெங்களூரு ஒப்பந்ததாரருக்கு 2 ஆண்டு காலம் உள்ள நிலையில் அவசர அவசரமாக டெண்டர் வைக்க காரணம் என்ன? குப்பை அள்ளும் டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சர் அலுவலகம் தலையிடவில்லை என்றால் நீதி விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

    நிறுத்தப்பட்ட டெண்டருக்கு மேல் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்துக்கு அரசு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

    கடந்த கால ஆட்சியில் புதுவையை சேர்ந்த 95 சதவீதம் பேர் அரசு வக்கீல்களாக சென்னை மற்றும் புதுவை கோர்ட்டுகளில் நிரப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 35 பேரில் 15 பேர் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளிமாநிலத்தை சார்ந்தவர்கள். கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    முதலமைச்சரின் பரிந்துரை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த நியமனத்தில் கவர்னர் தனக்கு பங்கு இல்லை என கூறுவது உண்மைக்கு புறம்பானது. இதற்கு கவர்னர் பதில் சொல்ல வேண்டும்.

    கோவில், குடியிருப்பு, பள்ளி அருகில் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி அனுமதி அளித்துள்ளார். மனு கொடுக்க வந்த மக்களிடம் கூடுதலாக 100 மதுபான கடைகள் வைக்கப்போகிறது என பேசியிருக்கிறார்.

    பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வரும் நிலையில் முதலமைச்சர் எதற்கும் வாய் திறப்பதில்லை. மணக்குள விநாயகர் கோவில் யானைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம். யானை உயிரிருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

    பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தபோது கடந்த கால ஆட்சியில் தகுந்த பாதுகாப்பு கொடுத்தோம். மக்கள் அனைவரின் எண்ணம் கோவிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என்பதுதான்.

    தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்கு தி.மு.க. தான் தலைமை. ஆனால் புதுவையில் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை. 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடைபெற்றது. எந்த கட்சியும் பெரியது, சிறியது இல்லை. எல்லா கட்சிகளுக்கும் பலம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி.
    • அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன் ரகசியங்களை வெளியிடும் வகையில் தோலை உரிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து புதுவை மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் தோலை உரிப்பேன் என பேசியது நாகரீகமற்ற செயல். அவர் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அவர் என்ன செய்தார்? என்பதை வெளியிட ரொம்பகாலம் ஆகாது. மாநில அந்தஸ்து தொடர்பாக ஏனாம் மக்களுக்கு நாராயணசாமி கடிதமே எழுதி கொடுத்துள்ளார். என் வாழ்நாள் உள்ள வரையில் மாநில அந்தஸ்தை ஆதரிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அவரின் தோல்தான் உரிந்துபோயுள்ளது. முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி. அவர் தோலை மக்கள்தான் உரித்து காட்டியுள்ளனர். நாங்கள் மக்களோடு மக்களாக அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம்.

    எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடக்கும். அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டாலும் தமிழ் பாடம் நிச்சயம் இருக்கும். தேவைப்படுவோர் தமிழை தேர்வு செய்து படிக்கலாம்.

    புதுவை, காரைக்காலில் உள்ளவர்கள் தமிழை தேர்வு செய்வார்கள். மாகியில் உள்ளவர்கள் மலையாளம், ஏனாமை சேர்ந்தவர்கள் தெலுங்கு பாடத்தை தேர்வு செய்யலாம். பெற்றோர்கள் சி.பி.எஸ்.இ பாடத்தில் சேர அதிகம் விரும்புகின்றனர். நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள இந்த பாடத் திட்டத்தை அதிகளவு தேர்வு செய்கின்றனர். எனவே புதுவை மாநில மக்களின் தேவைகளை அறிந்தே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் மக்கள் சந்திப்பு யாத்திரை வருகிற 26-ந் தேதி முதல் மார்ச் 25-ந் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுவையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யாத்திரைக்கான புதுவை பொறுப்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான அனுமந்தராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நம்முடைய கூட்டணிக்கு வர தயக்கம் காட்டியவர்கள் எல்லாம் ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தால் எங்களுடைய கட்சி ஆதரவு கொடுக்கும் என்று இன்று தானாக வருகின்ற சூழ்நிலையை அவரது பாதயாத்திரை உருவாக்கியுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. புதுவை முதலமைச்சர் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்று தேர்தல் நேரத்தில் சொன்னார்.

    வாக்குறுதி கொடுத்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.

    கோப்புகள் தூங்குகின்றன. அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ரங்கசாமி புலம்புகிறார். சூப்பர் முதலமைச்சர் கவர்னர் தமிழிசை. டம்மி முதலமைச்சர் ரங்கசாமி. இதுதான் புதுவையின் நிலை சபாநாயகர், உள்துறை அமைச்சர், குடிமைபொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.ஜனதா தலைவர்கள் உள்பட பல முதலமைச்சர்கள் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அலங்கோலமான ஆட்சி புதுவையில் நடக்கிறது. இந்த ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

    புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.

    இந்த அவலத்தையும் மோடி அரசின் அவலங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் புதுவையில் போட்டியிட வேண்டும் அவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மக்கள் சந்திப்பு நடைபயணத்தை காங்கிரசார் நடத்த உள்ளனர்.
    • ரங்கசாமி பா.ஜனதா வுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் மாநில அந்தஸ்து பெறுவதுதான் என, தேர்தல் சமயத்தில் கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மக்கள் சந்திப்பு நடைபயணத்தை காங்கிரசார் நடத்த உள்ளனர்.

    இதற்கான ஆலோச னைக்கூட்டம் வள்ளலார் சாலையில் உள்ள தனியார் மகாலில் நடந்தது. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம்

    எம்.பி. முன்னிலை வகித்த னர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் அனுமந்த்ராவ் சிறப்புரையாற்றினார்.

    வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கள் கமலகண்ணன், கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், எம்.என்.ஆர். பாலன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    ரங்கசாமி பா.ஜனதா வுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் மாநில அந்தஸ்து பெறுவதுதான் என, தேர்தல் சமயத்தில் கூறினார். உண்மையில் மாநில அந்தஸ்து பெற ரங்கசாமி நினைத்திருந்தால் ஆட்சியில் அமர்ந்த 6 மாதங்களில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கட்சியினரை சந்தித்து பேசியிருக்க வேண்டும். டெல்லிக்கு சென்று புதுவைக்கு மாநில

    அந்தஸ்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி யிருக்க வேண்டும்.

    இதில் எதையாவது செய்தாரா? இல்லை. ஆனால் அவருக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ, கவர்னர் எப்போது கோப்புகளில் கையெழுத்து போடவில்லையோ, அப்போது மாநில அந்தஸ்து பற்றி பேசுகிறார். உண்மையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் பா.ஜனதாவை எதிர்த்து தெருவில் இறங்கி போராட ரங்கசாமிக்கு தைரியம் இருக்கிறதா?

    பள்ளிகள், கோவில்கள், குடியிருப்புகள் மத்தியில் ரெஸ்டோ பப், மதுபார்க ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளனர். அரசு சொத்துக்கள் தனியார் மயமாக்கும் வேலைகள் நடக்கிறது. இந்த அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் புதுவையில் போட்டி யிடவேண்டும். அவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றிபெற செய்ய வேண்டும். புதுவை மாநிலத்தில் அனைத்து கிராமங்களிலும் இந்த பாதையாத்திரையை 2 மாதம் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக கவர்னர் ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். தற்போது சட்டப்பேரவையில் அரசை அவமதித்துள்ளார்.
    • அப்போது மாநில அரசுகள் சுதந்திரமாக செயல்படுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மதசார்பற்ற அணிகள் ஒருங்கிணைக்கும் பணியை ராகுல் செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாரா யணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னர் ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். தற்போது சட்டப்பேரவையில் அரசை அவமதித்துள்ளார். சொந்த கருத்தை திணிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை. அத்துடன் தேசியகீதம் இசைக்கும் முன் வெளியேறி அவமதிப்பு செய்துள்ளார். அரசியலமைப்பை அவமதிப்பு செய்துள்ளதால் பதவியிலிருந்து ரவி விலகவேண்டும்.

    இல்லாவிட்டால் குடியரசுத்தலைவர் இதில் தலையிட்டு அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும். ஒரு நிமிடம் கூட கவர்னர் பதவியில் இருக்க ரவி தகுதியற்றவர். மோடி அரசு தூக்கி எறியப்படும். அப்போது மாநில அரசுகள் சுதந்திரமாக செயல்படுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மதசார்பற்ற அணிகள் ஒருங்கிணைக்கும் பணியை ராகுல் செய்து வருகிறார். அதுபோல் நிதிஷ்குமார், சரத்பவார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    கவர்னர் ரவியின் சட்டப்பேரவை செயல்பாடு தமிழகத்தின் கறுப்பு நாள். புதுவையில் சாராய ஆறு ஓடுகிறது. ரெஸ்டோபார், நடனநிகழ்வு போன்றவற்றால் கலாச்சாரம் சீரழிந்து மக்கள் அவதியறுகின்றனர். தொடர்ந்து போராடுவோம். நீதிமன்றமும் செல்வோம்.

    கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. தடை செய்யப்பட்ட போதைப் பொருள், பள்ளி, பஸ்நிலையம், கல்லூரி அருகே கிடைக்கிறது. இதில் ஒன்றை சாப்பிட்டால் 2 மணி நேரம் போதையாக இருக்கும் சூழலால் இளம் சிறார்கள் அடிமையாகின்றனர்.

    போதைப்பொருளை ஒழிப்போம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மாநாடு நடத்துகிறார். புதுவையில் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸில் போதைப்பொருள் கலாச்சாரத்தை அமித்ஷாவால் தடுக்க முடியவில்லை. செயல்படாத ஊழல் அரசாக புதுவை அரசு உள்ளது.

    பா.ஜனதாவுக்கு சென்றவர்கள் நடுரோட்டில் நிற்கின்றனர். அதில் ஓர் உதாரணம் ஏனாம் எம்.எல்.ஏ. அசோக். ஆளுங்கட்சிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போராட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் நடத்துகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி உள்ளது. முதல்-அமைச்சரை விமர்சித்திருந்தால், போலீஸ் துறையை வைத்திருக்கும் பா.ஜனதா அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்காமல் போலியாக வேஷம் போடுகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாடு முழுவதும் மாநில காங்கிரசார் பாதயாத்திரை நடத்த ராகுல்காந்தி எம்.பி. அறிவுறுத்தியுள்ளார். இதன்படி பாதயாத்திரை நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சார்பில் நடந்தது.
    • பாதயாத்திரை வாயிலாக மக்கள் குறைகளை ராகுல்காந்தி கேட்டு வருகிறார். வடமாநில ங்களில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே கலவரத்தை உருவாக்கி நாட்டை பிரிக்கும் வேலை நடந்து வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் மாநில காங்கிரசார் பாதயாத்திரை நடத்த ராகுல்காந்தி எம்.பி. அறிவுறுத்தியுள்ளார்.

    இதன்படி பாதயாத்திரை நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சார்பில் நடந்தது.கூட்டத்திற்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், நிர்வாகிகள் அய்யப்பன், நந்தா கலைவாணன், ராஜா, கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    பாதயாத்திரை வாயிலாக மக்கள் குறைகளை ராகுல்காந்தி கேட்டு வருகிறார். வடமாநில ங்களில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே கலவரத்தை உருவாக்கி நாட்டை பிரிக்கும் வேலை நடந்து வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கும்போது சகோதரத்துவம், தனிமனித சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தினார். இவை தவிடுபொடியாகி வருகிறது.

    மத்திய பா.ஜனதா அரசு தங்களுக்கென தனி சட்டத்தை வகுத்துள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு அரசியல்தலைவர்களை பழிவாங்குகிறது. நாமும் பாதயாத்திரை சென்று மக்களை சந்திக்க வேண்டும். மாநில அந்தஸ்து வேண்டும் என முதல்-அமைச்சர் கூறுகிறார், பா.ஜனதா மாநில தலைவர் வேண்டாம் என்கிறார்.

    மத்திய அமைச்சர் நிர்மலாசீத்தாராமன், சிறப்பு மாநில அந்தஸ்து போதும் என்கிறார்.

    ஆளும் கூட்டணி கட்சிகளிடையே முரண்பாடு உள்ளது. ஊழல் நிறைந்த ரங்கசாமி ஆட்சியை இப்போதுதான் பார்க்கிறோம். அனைத்து முக்கிய சாலைகளிலும் மதுக்கடைகளை திறக்கின்றனர். புதுவை கலாச்சாரத்தையே ரங்கசாமி அழித்து வருகிறார்.

    காவல்துறை வேலைவாய்ப்பில் லஞ்சம், பத்திரப்பதிவில் லஞ்சம் என எல்லா இடத்திலும் லஞ்சம் தாண்ட வமாடுகிறது.

    ரேஷன்கடைகளை திறக்கவில்லை. பஞ்சாலைகள், கூட்டுறவு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. மக்களை பற்றி கவலைப்படாத முதல்-அமைச்சராக ரங்கசாமி உள்ளார். லாஸ்பேட்டை தொகுதியில் 2 நாட்கள் பாதயாத்திரையை சிறப்பாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
    • மத்திய பட்ஜெட் லோக்சபா தேர்தலை முன்வைத்து தயாரித்ததாக தெரிகிறது. பிரதமர் அறிவித்த விவசாய விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராய ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய பட்ஜெட் லோக்சபா தேர்தலை முன்வைத்து தயாரித்ததாக தெரிகிறது. பிரதமர் அறிவித்த விவசாய விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு விதை, உர மானியம், இலவச மின் திட்டம் இல்லை. நெல், வாழை, கரும்பு விலையில் எந்த மாற்றமும் இல்லாத விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட். இதில் ரூ.13 லட்சம் கோடி வெளிசந்தையில் கடன் வாங்குவதாக உள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும்.

    நிதி பற்றாக்குறை 5.9 சவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது பணவீக்கத்தை உருவாக்கி விலைவாசியை உயர்த்தும். நெடுஞ்சாலை துறைக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். ரூ.4 லட்சம் கோடியில் நெடுஞ்சாலை துறை பணிகள் தொடங்கி கிடப்பில் உள்ளது.

    பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான எந்த முகாந்தரமும் இல்லை. பல எதிர் பார்ப்புகளோடு இருந்த அரசு ஊழியர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த பட்ஜெட் பணம் படைத்தோருக்கும், நாட்டில் உள்ள ஒரு சதவீத மிகப்பெரிய முதலாளிக்கும் தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நாட்டு மக்களை மத்திய அமைச்சர் ஏமாற்றியுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

    • புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் புரோக்கர்கள் மூலம் ஊழல் நடக்கிறது.
    • கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள் முடக்கப்ப ட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் மவுன ஆட்சி நடக்கிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் காங்கிரஸ் சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு நடைபயணத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் புரோக்கர்கள் மூலம் ஊழல் நடக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பணியில் உள்ள பலர் வேலையிழக்கும் நிலையில் உள்ளனர். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் சுற்றுலா வளர்ச்சியடையும் என அரசு கூறியது.

    ஆனால் மாநிலத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி நடக்கிறது. புதுவையில் ரங்கசாமி கட்சி மக்களுக்கு விபூதி கொடுத்து ஏமாற்றும் கட்சியாக உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை. காரைக்காலிலும் எந்த வளர்ச்சியும் இல்லை.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள் முடக்கப்ப ட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் மவுன ஆட்சி நடக்கிறது. புதுவை மக்களை வஞ்சிக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×