என் மலர்
நீங்கள் தேடியது "Narayanasamy"
- நாராயணசாமி வலியுறுத்தல்
- போக்குவரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. போக்குவரத்து போலீசார் எந்த சிக்னலிலும் சீரமைப்பு பணியில் ஈடுபடவில்லை.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-
புதுவையில் 2½ ஆண்டாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சிக்கு வந்தபின் பேனர் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள்,
எம்.எல்.ஏ.க்கள் பிறந்தநாள் விழாக்களில் புதுவையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசின் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுகிறது.
புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. இதை அமல்படுத்த வேண்டிய கலெக்டர், காவல்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். ஐகோர்ட்டில் ஏற்கனவே பேனர் தடை சட்டத்தை அமல்படுத்த தீர்ப்புள்ளது. மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு புதுவையில் காற்றில் பறக்கிறது.
முதல்-அமைச்சரே பேனர் தடை சட்டத்தை மதிப்பதில்லை. காவல்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழாவுக்காக புதுவை முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்தியும் எடுக்கவில்லை. பேனர்களால் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த 2 உயிர் பலிக்கு முதல்-அமைச்சர், அமைச்சர் நமச்சிவாயம் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர், அமைச்சர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். நைனார்மண்டபத்தில் பேனரை கிழித்தார்கள் என 2 சிறுவர்கள் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.
பேனரை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. அமைச்சர் பிறந்தநாள் விழா முடிந்த வுடன் கலெக்டர் பேனர்களை அகற்ற அறிவிப்பு வெளியிடுகிறார்.
கலெக்டர் என்ன ஜப்பானில் இருந்தாரா? அவர் புதுவையில் பேனர்களை பார்க்க வில்லையா? எந்த அரசிய ல்கட்சியாக இருந்தாலும் பேனர் வைப்பது தவறு. பேனர் வைத்தால் நடவடி க்கை எடுக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதியளித்த இடங்களை தவிர மற்ற இடங்களில் யார் பேனர் வைத்தாலும் அகற்றப்பட வேண்டும்.
மாவட்ட கலெக்டர், நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மீது உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சட்டத்தை மதிக்கும் ஆட்சியாக இருந்தால் பதவியிலிருந்து வெளியேற வேண்டும். புதுவை மக்கள் குமுறி வருகின்றனர்.
புதுவையில் தற்போதுள்ள அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த எந்த முக்கியத்துவமும் அளிப்பதி ல்லை. எதிர்கட்சிகள் கேள்விகேட்டால் பதில் சொல்வதில்லை. சுய விளம்பரம் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் விருப்பமாக உள்ளனர். துன்புறுத்தாமல் இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.
புதுவையில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. போக்குவரத்து போலீசார் எந்த சிக்னலிலும் சீரமைப்பு பணியில் ஈடுபடவில்லை. போலீசார் கட்ட பஞ்சாயத்து செய்யும் வேலையில் உள்ளனர்.
காவல்துறையில் எந்த புகாரையும் பதிவு செய்வதில்லை. புதுவை மாநில காவல்துறை தரம்கெட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும்.
- நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும்.
புதுச்சேரி:
ராகுல்காந்தி எம்.பி. பாதயாத்திரை மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது.
புதுவை பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.
இந்த ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக வந்து ஆம்பூர் சாலை அருகே நிறைவடைந்தது.
ஊர்வலத்தின் முடிவில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும். அப்போது ராகுல்காந்தி பிரதமராவார்.
இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்து விட்டது. சோனியாகாந்தி 17 கேள்விகள் கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பினால், அதற்கு பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலத் ஜோஷி பதில் சொல்லுகிறார்.
புதுவையில் கவர்னரும், முதலமைச்சரும் சேர்ந்து கியாஸ் சிலிண்டர் மானிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். ஆனால் மானியம் இன்னும் வரவில்லை. ஏனெனில் அந்த திட்டத்துக்கு ரூ.120 கோடி தேவை. ஆனால் அதற்கு நிதி ஒதுக்கவில்லை. நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
- யாரும் நான் சொன்னால் கேட்பதில்லை என்று முதலமைச்சர் அழுது புலம்புகிறார்.
- ஆளத்தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே?
புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி என்னால் எதுவும் செய்ய முடியாமல் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்று விரக்தியாக பேசினார்.
இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில அரசின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்து வருகிறது. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாய்மூடி மவுனமாக இருக்கிறார்.
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. யாரும் நான் சொன்னால் கேட்பதில்லை என்று முதலமைச்சர் அழுது புலம்புகிறார். 1963 யூனியன் பிரதேச சட்டப்படி மாநில முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது.
மாநில அரசின் அதிகாரங்களை எல்லாம் கவர்னரிடம் சரண்டர் செய்து விட்டு தற்போது என்னால் முடியவில்லை என ரங்கசாமி கூறுகிறார். ஆளத்தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே?
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால் அதிக நிதி கிடைக்கும். மாநில அந்தஸ்து பெறுவோம் என்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டு தற்போது என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று முதலமைச்சர் கூறுவது கபட நாடகம்.
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜனதா ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கலால்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. குப்பை வாகனம் டெண்ட ரில் ஊழல் என்றதும் அதனை தடுத்து நிறுத்திவிட்டனர்.
போலீஸ் துறையில் ஆட்கள் தேர்வுக்கு ரூ.7 லட்சம் லஞ்சம் பெறப்படுகிறது என்று கூறியவுடன் அதனையும் சரி செய்துவிட்டனர் என்றார்.
- பா.ஜனதாவிற்கு பிற கட்சிகளை விட சாதகமாக இருப்பது அமலாக்கம், வருமான வரி, சி.பி.ஐ. ஆகிய துறைகள் தான்.
- அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
நாட்டின் ஒற்றுமைக்காகவும், மக்களை காக்கவும் தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். புதுவையில் நான் முதலமைச்சராக இருந்த போது மோடி, அமித்ஷா ஆகியோர் கிரண்பேடியை கவர்னராக நியமித்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுத்தனர்.
பொய் குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் மீதும், முதல்வர் மீதும் சி.பி.ஐ.க்கு அனுப்பும் பணிகளை செய்து வந்தார். இதேநிலை தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது
பா.ஜனதாவிற்கு பிற கட்சிகளை விட சாதகமாக இருப்பது அமலாக்கம், வருமான வரி, சி.பி.ஐ. ஆகிய துறைகள் தான். பொய் குற்றச் சாட்டுகளை கூறி எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி, அமித்ஷா செய்து வருகின்றனர்.
எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும். ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்படும் மோடி, அமித்ஷாவை தூக்கி எறியும் வகையில், பல மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்கள் குழுவாக வருகிற 23-ந் தேதி சந்திக்கும் கூட்டம் நடக்கிறது.
புதுவை மாநிலத்தில் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் இருக்க வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். ராகுல் பிரதமராக வர வேண்டும். நாகபாம்பை விட கொடியவர்கள் பா.ஜனதாவினர். பா.ஜனதாவை அழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவை காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலை சமாளிக்க சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.
- ஹோமத்தில் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அவரது உதவியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக ஏ.வி. சுப்பிரமணியன் இருந்து வந்தார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைமை, அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. தொடர்ந்து ஏ.வி. சுப்பிரமணியன் காங்கிரஸ் தலைவராக நீடித்து வந்தார்.
இந்நிலையில் புதுவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் மாநிலத் தலைவர் பதவிகேட்டு, அகில இந்திய தலைமையிடம் அணுகி வந்தனர். அதில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
பதவிக்காக காங்கிரஸ் தலைமைக்கு ஒருவர் மீது ஒருவர் பல்வேறு புகார்களை அனுப்பி வந்தனர். இதனால் மாநிலத் தலைவர் நியமனம் நீண்டுக் கொண்டே சென்றது. இறுதியில் 3 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் தயாரித்தது.
பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் மட்டும் இடம் பெற்றனர். இவர்களில் வைத்திலிங்கம் எம்.பி.யை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்தது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், ஒருங்கி ணைப்பாளர் தேவதாசும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து புதுவை காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி.யை நியமித்து கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியானது.
காங்கிரஸ் தலைவராக இன்று மாலை பொறுப்பு ஏற்க உள்ள வைத்திலிங்கம் எம்.பி.க்கு, கூட்டணிக் கட்சி, எதிர்க் கட்சிகளை சமாளிப்பதை விட காங்கிரஸின் உட்கட்சி பூசலை சமாளிப்பதே பிரம்ம பிரயட்தனமாக இருக்கும் என கருதப்படு கிறது.
இதனிடையே புதுவை காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலை சமாளிக்க வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.
ஹோமத்தில் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அவரது உதவியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
- புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான்.
- பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையை சேர்ந்த ரவுடிகள் தமிழக பகுதிகளில் சென்று கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி கண்மூடி உள்ளார்.
என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சொத்து குவிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கோவில் சொத்துக்களை எம்.எல்.ஏ.க்கள் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா 40 சதவீதம் ஊழலில் கமிஷன் பெற்றனர். புதுவையில் பா.ஜனதா கூட்டணி 20 சதவீத கமிஷன் பெறுகின்றனர். இது வரும்காலத்தில் 40 சதவீதமாக உயரும்.
கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் மற்றும் புதுவை விவசாயிகள் பாதிக்கப்படுவர். இதை புதுவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடிதான் நிதி அளிக்கப்பட்டது என்றும், தற்போது ரூ.2½ லட்சம் கோடி பா.ஜனதா ஆட்சியில் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்திலிருந்து பெறப்படும் நிதியை திருப்பித்தந்துவிட்டு மந்திரி அமித்ஷா மார்தட்டியுள்ளார். குஜராத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற நிதி வழங்குவதாக கூறி வருகின்றனர்.
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என முதுகெலும்பு உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள கைகட்டி சேவகம் செய்கிறார்.
புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான். பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். புதுவை மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். தமிழகத்திலும், புதுவையிலும் பா.ஜனதாவுக்கு முடிவு கட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல்காந்தி தேசிய பேரவை வழங்கியது
- ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.
புதுச்சேரி:
ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவரும் ஊடகப்பிரிவு சேர்மனமான ஆர்.இ சேகர் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் திருவேங்கடம் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஐயப்பன்,ஜெகவீரபாண்டியன்,தயாளன்,பிரபு,ரமேஷ், கோதண்டபாணி, செல்வம், ஹரிகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத், ஐஎன்டியூசி மாநில செயலாளர் ஜான் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் தனியார் ஓட்டலில் நடந்தது.
- எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சந்தித்தால், பா.ஜனதாவை வீழ்த்தலாம்.
புதுச்சேரி:
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் தனியார் ஓட்டலில் நடந்தது.
இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் இல்லாமல் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது. எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சந்தித்தால், பா.ஜனதாவை வீழ்த்தலாம். லோக்சபா தேர்தலில் புதுவையில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது உண்மையான தொண்டர்கள்தான் காங்கிரசில் உள்ளனர். 2 ஆண்டாக மத்திய பா.ஜனதா அரசு, ஊழல் நிறைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாம் நடத்தி வரும் போராட்டங்களை மக்கள் பார்க்கின்றனர்.
காங்கிரஸ் ஆட்சி வந்தால் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது.
- புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் அமைச்சர் முதலமைச்சர் ரங்கசாமிதான். அவர் உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து மாணவர் சேர்க்கை நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது. அதில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை, ரூ.200 கோடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வழங்கப்பட்டது. உண்மையில் நமக்கு கிடைத்தது ரூ.350 கோடிதான்.
புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. அதேபோல் தமிழ் கட்டாயம் என்று அறிவிக்கப்படவிலை. தமிழ் மண்ணில் தமிழ் புறக்கணிக்கப்படுவது வேதனையாக உள்ளது.
புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள். கலால்துறை முறைகேடு தொடர்பாக நிதித்துறை செயலாளர் ராஜூ, கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர் என நினைக்கிறோம்.
ஆனால் உண்மையில் நகரப்பகுதியில் அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் கண்ட்ரோல் ரூம் ரூ.170 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை மத்திய அரசு நிறுவனமான ரெயில்டெல்லுக்கு அல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் அவர்கள் இருவரும் சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு செயலாளராக இருந்த அருண் தலைமை செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால் அதனை தலைமை செயலாளர் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். உள்துறைதான் அவர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் தான் இருவரும் மாற்றப்பட்டு உள்ளனர். தலைமை செயலாளர் இதில் நடவடிக்கை எடுக்காதிருந்தால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கும்.
முதலமைச்சரின் உத்தரவு இல்லாமல் அவர்கள் இவ்வாறு நடந்திருக்க மாட்டார்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. எனக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் பதில் சொல்கிறார். விரைவில் கவர்னர் மீதான ஊழல் புகாரையும் வெளியிடுவேன்.
இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து எதுவும் பேசவில்லை.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
- ரங்கசாமி நிர்வாகத்தை நடத்துவதில் ஞானசூனியமாக செயல்படுவதால், அதிகாரிகள் நீட்டும் கோப்புகளில் ஏன் என்று கேட்காமல் கையெழுத்திட்டு வருகிறார்.
- விஷ சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் புதுவையிலிருந்து சென்றுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
யூனியன் பிரதேசங்களின் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் வேலை. அதிகாரிகளை நிர்வகிக்கும் அதிகாரம் இல்லை என்றால் துணை நிலை ஆளுநர்களை மதிக்கமாட்டார்கள் என்பதால் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார்.
முதலமைச்சர் ரங்கசாமி நிர்வாகத்தை நடத்துவதில் ஞானசூனியமாக செயல்படுவதால், அதிகாரிகள் நீட்டும் கோப்புகளில் ஏன் என்று கேட்காமல் கையெழுத்திட்டு வருகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் என டெல்லி சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பு புதுவை உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
இதை செயல்படுத்த கவர்னர் தமிழிசை மறுக்கிறார். அவரின் பகல் கனவு பலிக்காது.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராய உயிரிழப்புக்கு பொறுப்பேற்று 2 தமிழக அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்துள்ளார்.
விஷ சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் புதுவையிலிருந்து சென்றுள்ளது. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறிய புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை பதவிநீக்கம் செய்ய முடியுமா? பா.ஜனதாவினர் ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.