search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pondicherry"

    • பந்த் குறித்து மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.
    • போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்து பந்த் அறிவிப்பு.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.

    இதைதொடர்ந்து, சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுகவும், இந்தியா கூட்டணியும் நாளை பந்த் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை (8ம் தேதி) பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

    மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    • உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்தது.
    • வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குப்பட்ட உப்பனாரு வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்குமாடி வீடு சரிந்து துண்டாக விழுந்து விபத்துக்குள்ளானது.

    உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு சரிந்து விழுந்துள்ளது.

    இந்த வீடு புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் சரிந்து விழுந்தது. வரும் பிப்ரவரி 1ம் தேதி வீட்டின் கிரக பிரவேசம் நடைபெற இருந்தது.

    வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியக் கூட்டணியின் வலிமையான தலைவர்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருவர்.
    • தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை திமுக அறிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் அஜோய்குமார் தெரிவித்துள்ளார்.

    வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

    இதுகுறித்து அஜோய் குமார் மேலும் கூறியதாவது:-

    காங்கிரசுடன் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இந்தியக் கூட்டணியின் வலிமையான தலைவர்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருவர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திய கூட்டணியை அவர் வழிநடத்துவார். 

    பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை திமுக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு இன்னும இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்.

    ராமர் கோயில் கட்டவும், பல திட்டங்களைத் தொடங்கவும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கும் மத்திய அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிதி வழங்க மறுக்கிறார்கள். திருநெல்வேலி, சென்னை வெள்ளத்திற்கு தமிழக அரசு பலமுறை நிவாரண நிதி கேட்டு வருகிறது. ஆனால் பாஜக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இந்தியாவின் ஒரு சதவீத பணக்காரர்கள் நாட்டின் சொத்துக்களில் 76 சதவீதத்தை வைத்துள்ளனர். ஆனால் 50 சதவீத மக்கள் தொகை இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா உடனடியாக நீக்கம்.
    • ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டினார்.

    புதுச்சேரி மாநில அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கக் கோரி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கிய அறிவுரையை ஏற்றுக் கொள்வதாக குடியரசு தலைவர் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி அரசுக்கு அனுப்பி வைத்து இருக்கிறது.

    அந்த அறிக்கையில், "புதுச்சேரி முதல்வரின் அறிவுரையை தொடர்ந்து புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து, அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா உடனடியாக நீக்கம் செய்யப்படுகிறார்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதே அறிக்கையை குடியரசு தலைவரின் செயலாளர் ராஜீவ் வர்மா வெளியிட்டு உள்ளார். முன்னதாக புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் அக்டோபர் 8-ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தார்.

    இதைத் தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக சந்திர பிரியங்கா அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    புதுவையில் 10 வாக்குச்சாவடிகளில் எந்திரங்களில் ஏற்பட்ட பழுதால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. #Loksabhaelections2019

    புதுச்சேரி, ஏப். 18-

    புதுவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஒருசில வாககுச்சாவடிகளில் கட்சி களின் பூத் ஏஜெண்டுகள் கால தாமதமாக வந்ததால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்க கால தாமதமானது.

    அதுபோல் சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்க தாமதம் ஏற்பட்டது.

    புதுவை மி‌ஷன் வீதியில் உள்ள எக்கோலாங்கிளாஸ் பள்ளி வாக்குச்சாவடி, திரு.வி.க. பள்ளி வாக்குச் சாவடி, முத்தியால் பேட்டை ராஜா பள்ளி வாக்குச்சாவடி, பாகூர் அரசு பள்ளி வாக்குச்சாவடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் இந்த நிலை உருவானது.

    வாக்குச்சாவடி அதிகாரிகள் எந்திர கோளாறை சரிசெய்ய முயன்றும் இயலாததால் மாற்று எந்திரங்கள் வர வழைக்கப்பட்டு அதன் பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இதனால் இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்க சுமார் 45 நிமிடம் கால தாமதமானது. *** புதுச்சேரி, ஏப். 18-

    புதுவையில் இன்று காலை 7.15 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ் நிவாசில் இருந்து வாக்களிப்பதற்காக புதுவை சுகாதாரத்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.

    அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக் களித்தார். அவருடன் கவர்னர் மாளிகை ஊழியர் களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இதனை வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்த னர். வாக்களித்த பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வாக்களிப்பது நமது கடைமை. இந்திய ஜன நாயகம் மிகவும் வலிமை யானது. தேர்தல் ஆணையம் பலகோடி ரூபாய் செலவு செய்து தேர்தலை நடத்து கிறது. இதனை நாம் வீணாக்க கூடாது.

    பொதுமக்கள் அனை வரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களித்ததோடு நின்றுவிடாமல், ஆட்சி யாளர்கள் என்ன செய் கிறார்கள்? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முன்னதாக கவர்னர் கிரண்பேடி வரிசையில் நிற்கையில், நிருபர்கள் அவரை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர். அப்போது கிரண்பேடி தான் மூத்த குடிமகனாக இருந்தாலும் வரிசையில் நின்று வாக்களிப்பதையே விரும்புகிறேன். புதுவையில் முதல் முறையாக வாக்

    பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவையில் இன்று மாலை முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Puducherry
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



    நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் அரசியல் கட்சியினர் பணம் வினியோகம் செய்வதை கட்டுப்படுத்தவும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5-க்கும் மேற்பட்டோர் பொதுஇடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பதாகைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Puducherry


    புதுவை புதிய பஸ் நிலையத்தில் மதுபாட்டில்கள் கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை போலீசாருக்கு பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் மதுபாட்டில்கள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பஸ் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த பையை பார்த்த போது 51 மதுபாட்டில்கள் இருந்தன.

    இதனை தொடர்ந்து அந்த வாலிபரை உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் மேலுரை சேர்ந்த அழகர் (வயது39) என்பது தெரியவந்தது. இவர் புதுவையில் உள்ள தனியார் பாரில் வேலைபார்த்து வந்து உள்ளார். இவர் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அழகரை கைது செய்து அவரிடமிருந்த 51 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது பாட்டில் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு ராமலிங்கம் மற்றும் போலீசார் நேற்று மாலையில் தம்புநாயக்கன் வீதியில் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் ஒரு வாலிபர் 2 கட்டை பைகளை கீழே போட்டு விட்டு ஓடினார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பைகளை திறந்து பார்த்தபோது அதில் 50 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இன்று காலை பெரியகடை போலீசார் நீடராஜப்பர் வீதி- பாரதி வீதி சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் பையுடன் நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து பையை திறந்து பார்த்தனர். அதில், 43 மது பாட்டில்கள் இருந்தன. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திண்டிவனம் அருகே உள்ள ஆலகிராமத்தை சேர்ந்த தேவராஜ் (வயது 45) என்றும், இவர் புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் தேவராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாளை பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #Vaiko
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாளை பிரசாரம் செய்கிறார்.

    நாளை மாலை 4 மணிக்கு தட்டாஞ்சாவடியில் 2 வேட்பாளர்களுக்கும் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு பேசுகிறார். இதைத் தொடர்ந்து 4.30 மணிக்கு முதலியார்பேட்டை வானொலி திடலில் பாராளுமன்ற வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    5 மணிக்கு கிருமாம்பாக்கத்தில் பேசிவிட்டு புதுவை சுற்றுப்பயணத்தை வைகோ நிறைவு செய்கிறார். வைகோ பிரசாரத்தின்போது காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

    இந்த தகவலை ம.தி.மு.க. புதுவை மாநில பொறுப்பாளர் கபிரியேல் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Vaiko

    புதுவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் வினியோகம் உள்ளிட்டவற்றை தடுக்க புதுவை மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் நேற்று மதியம் 2 மணியளவில் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் மடக்கி தீவிர சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீசார் அதை கைப்பற்றி தேர்தல் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் புதுவை பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், முருகன் ஆகியோர் மி‌ஷன் வீதி-ரங்கபிள்ளை வீதி சந்திப்பில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக பணத்துடன் வந்த வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர். அதில் ரூ.1 கோடியே 86 லட்சம் இருப்பது தெரிய வந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் எதுவுமில்லாததையடுத்து வாகனத்துடன் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் நேரில் வந்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது புதுவையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து நேற்று மாலை ரூ.1 கோடியே 86 லட்சத்தை பெற்றுக்கொண்டு வங்கி ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் தகவல் தெரிவித்ததன்பேரில் வருமானத்துறையினர் பெரியகடை போலீஸ் நிலையம் வந்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். வங்கி அதிகாரிகள் ரூ.1 கோடியே 86 லட்சத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த பணத்தை அரசு கருவூலத்தில் வைத்தனர்.

    நேற்று ஒரு நாளில் புதுவையில் ரூ.1 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.  #LokSabhaElections2019


    புதுவை பாராளுமன்ற தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். #Parliamentelection

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

    இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் முறைப்படி அறிவிக்கா விட்டாலும் வைத்திலிங்கம் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார்.

    அவர் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.

    என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கேசவனின் மகன் டாக்டர் நாராயணசாமி போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது, ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று காலை ஓட்டல் அண்ணாமலையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், புதுவை முன்னாள் முதல்- அமைச்சருமான ரங்கசாமி அறிமுகப்படுத்தினார். அவருக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து டாக்டர் நாராயணசாமி புதுவை வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி அருணிடம் டாக்டர் நாராயணசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #Parliamentelection

    பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது என்று ஆம்ஸ்ட்ராங் கூறியுள்ளார். #BSP

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தலைமையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார்.

    அவரிடம் தமிழகம்- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகவும். 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துமாறும் மாயாவதி கேட்டுக் கொண்டார்.

     


    மேலும் தமிழகத்தில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி தமிழகத்ல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் ஆம்ஸ்ட்ராங்கிடம் உறுதி அளித்தார்.

    இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பும் பகுஜன் சமாஜ் கட்சியினர் பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், துணை தலைவர் மணிவண்ணன், பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். #BSP

    ×