என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nitin Nabin"

    • சோம்நாத் பற்றி நாம் பேசும்போதும், சுவாபிமான் பர்வாவைக் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது.
    • இந்திய அரசியலில் இது போன்ற சக்திகளுக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

    பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் இன்று பதவியேற்றுக் கொண்டார். 45 வயதான நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார். பாஜக தலைமையகத்தில் முறையான செயல்முறைகள் முடிந்த பிறகு பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய நிதின் நபின், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை உறுதிசெய்ய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் முழு முயற்சி எடுக்க வேண்டும் எனக்கூறினார். 

    மேலும் திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 

    சமீபத்தில், எதிர்க்கட்சிகளால் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுக்கவும், நீதிபதியை பதவி நீக்கம் செய்யவும் எப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நாம் பார்த்தோம். சோம்நாத் பற்றி நாம் பேசும்போதும், சுவாபிமான் பர்வாவைக் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது.

    நமது பாரம்பரியங்களைத் தடுக்கவும், ராமர் சேதுவின் இருப்பை மறுக்கவும், கார்த்திகை தீபத்தை எதிர்க்கவும் முயலும் இத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய அரசியலில் இது போன்ற சக்திகளுக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். 

    • பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பேசியதாவது:

    உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.க.வின் தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கட்சியை வலுப்படுத்த பங்களித்த பா.ஜ.க.வின் அனைத்து முன்னாள் தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன்.

    கட்சி என்று வரும்போது நிதின் நவீன்தான் தலைவர். நான் ஒரு கட்சித் தொண்டன்.

    நிதின் நபின் இப்போது நமது தலைவராக இருக்கிறார். அவரது பொறுப்பு பா.ஜ.க.வுக்கு மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதாகும்.

    நிதின் நபின் தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் முழு பொறுப்புடன் வெற்றிகரமாக முடித்து தன்னை நிரூபித்துள்ளார். அவரிடம் இளமைத்துடிப்புடன் கூடிய ஆற்றலும், நிறுவனங்களில் பணியாற்றிய நீண்ட அனுபவமும் உள்ளது. இது ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    பா.ஜ.க.வில் தலைவர்கள் மாறுகிறார்கள். ஆனால் கொள்கைகள் மாறுவதில்லை. தலைமை மாறுகிறது. ஆனால் திசை மாறுவதில்லை.

    பா.ஜ.க. ஒரு தனித்துவமான கட்சியாக உருவெடுத்தது. இப்போது அது ஒரு ஆளும் கட்சி என்பதை நிரூபித்துள்ளது.

    மக்களுக்கு சேவை செய்வதே எப்போதும் எங்களது முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. அதிகாரத்தை நாங்கள் சேவைக்காக மாற்றியுள்ளோம். அதனால் தான் பா.ஜ.க. மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகிறது.

    கடந்த 11 ஆண்டுகளில் அரியானா, அசாம், திரிபுரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. தனது சொந்த பலத்தால் முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மேற்கு வங்கம், தெலுங்கானாவில் பா.ஜ.க. மக்களின் ஒரு முக்கிய குரலாக உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.

    • நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார்.
    • அமித் ஷா தனது 49 வயதில் தேசிய தலைவர் பதவியை ஏற்றார்.

    பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்றார். 45 வயதான நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார். பாஜக தலைமையகத்தில் முறையான செயல்முறைகள் முடிந்த பிறகு, இன்று பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இதன்மூலம் பாஜகவில் குறைந்த வயதில் தேசிய தலைவர் பொறுப்பை வகிப்பவராக நிதின் நபின் மாறியுள்ளார். முன்னதாக, அமித் ஷா தனது 49 வயதில் தேசிய தலைவர் பதவியை ஏற்றார்.  ஜே.பி. நட்டா 2020 முதல் கட்சியின் தேசியத் தலைவராக இருந்தநிலையில், அவரது பதவிக்காலம் 2024 இல் முடிவடைந்தது. ஆனால் தேர்தல் போன்ற காரணங்களால் பதவி நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று (ஜன, 19 )  நடைபெற்றது. இத்தேர்தலுக்கு வேறு எந்த வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அவருக்கு இசட்-பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. இன்று காலை அவர் பதவியேற்பதற்கு முன்பு இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, ஜே.பி. நட்டாவும் இதே போன்ற பாதுகாப்பைப் பெற்றார். 


    • பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், அந்தந்த மாநில முக்கிய நிர்வாகிகளும் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
    • 2006 இடைத்தேர்தலில் முதல்முறையாக பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று டெல்லியில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவின் செயல்தலைவராக உள்ள நிதின் நபின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், தலைவர் பதவிக்கு போட்டியின்றி அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    பாஜக தேசிய தலைவராக தற்போது ஜே.பி.நட்டா இருந்து வருகிறார். அவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், தேர்தல் உள்ளிட்ட சில காரணங்களால் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தேசிய தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நிதின் அக்கட்சியின் தேசிய செயல்தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். அந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டதே, தேசியத் தலைவர் பதவிக்கு பாஜக மேலிடத்தின் தேர்வாக அவர் இருக்கிறார் என்பதை மறைமுகமாக கூறத்தான்.

    இன்று மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் நிறைவுற்றது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 37 வேட்புமனுக்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் கையெழுத்துகளும் இடம் பெற்றிருந்தன.

    மேலும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், அந்தந்த மாநில முக்கிய நிர்வாகிகளும் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.  

    பாஜகவின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறைக்கான தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கே. லக்ஷ்மன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் அனைத்து மனுக்களும் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இப்போட்டியில் நிதின் மட்டுமே வேட்பாளராக இருந்ததால், அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20, 2026) அன்று முறைப்படி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என குறிப்பிட்டுள்ளார். 

    மேலும் நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதின் நபின் பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. தொடர்ந்து பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டம் விரைவில் கூட்டப்பட வாய்ப்புள்ளது. 

    யார் இந்த நிதின் நபின்?

    பீகாரைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின். தந்தை மறைவால் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக 2006-ல் பாஜக எம்எல்ஏ ஆனார். அன்றுமுதல் தற்போதுவரை பாஜக எம்எல்ஏவாக தொடர்கிறார். மேலும் பீகார் அமைச்சரவையில் 2021 முதல் 2022 வரை சாலைப் போக்குவரத்து அமைச்சராகவும், 2024 முதல் 2025 வரை நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

    • பாஜக புதிய தலைவரை தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.
    • போட்டி இல்லாதபட்சத்தில் மனுதாக்கல் செய்தவர் புதிய தலைவராக அறிவிக்கப்படுவார்.

    அகில இந்திய பா.ஜ.க தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க-வை பொறுத்தவரை அகில இந்திய தலைவர் பதவி என்பது 2 ஆண்டுகள் ஆகும். தற்போதைய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 2020-ம் ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 2 முறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    ஆனாலும் புதிய தலைவரை தேர்வு செய்வதில் காலதாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சமீபத்தில் புதிய செயல் தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டார்.

    பா.ஜ.க-வை பொறுத்த வரை செயல் தலைவராக இருப்பவர்கள் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவது வழக்கம். அப்படித்தான் ஜே.பி.நட்டாவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைய செயல் தலைவர் நிதின் நபின் புதிய தலைவர் தேர்வுக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். புதிய தலைவரை தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.

    போட்டி இல்லாதபட்சத்தில் மனுதாக்கல் செய்தவர் புதிய தலைவராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. நாளை அவர் புதிய தலைவராக பதவி ஏற்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • நாளை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது.
    • புதிய தலைவரை தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.

    அகில இந்திய பா.ஜ.க தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. பா.ஜ.க-வை பொறுத்தவரை அகில இந்திய தலைவர் பதவி என்பது 2 ஆண்டுகள் ஆகும். தற்போதைய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 2020-ம் ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 2 முறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    ஆனாலும் புதிய தலைவரை தேர்வு செய்வதில் காலதாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சமீபத்தில் புதிய செயல் தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டார்.

    பா.ஜ.க-வை பொறுத்த வரை செயல் தலைவராக இருப்பவர்கள் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவது வழக்கம். அப்படித்தான் ஜே.பி.நட்டாவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது.

    தற்போதைய செயல் தலைவர் நிதின் நபின் மதியம் 12 மணியளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். புதிய தலைவரை தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.

    போட்டி இல்லாதபட்சத்தில் மனுதாக்கல் செய்தவர் புதிய தலைவராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. நாளை மறுநாள் அவர் புதிய தலைவராக பதவி ஏற்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். அவர்கள் இன்று டெல்லி செல்கிறார்கள்.

    • உள்ளூர் பிரச்சனையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்
    • சனாதன தர்மம், காசி தமிழ் சங்கம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும்

    பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று 2-வது நாளாக அவர் கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று காலை நிதின்நபின், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டார்.

    பொதுமக்களுடன் சேர்ந்து அவர் உற்சாகமாக பொங்கலிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவையொட்டி அங்கு ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் நடந்தது. ஆட்டம்- பாட்டத்துடன் பொங்கல் விழா நடந்தது. முன்னதாக கோவை முதலிபாளையத்தில் கோவை கோட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நிதின் நபின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    'பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் பணியால் பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளோம். இங்கு கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 39 சட்டசபை தொகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. இங்கு 80 சதவீதம் பூத் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. இது நமக்கான வெற்றியை அளிக்கும்.

    ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து உள்ளோம். இந்த தேர்தலில் உங்களின் பணியால் தி.மு.க.வை தோற்கடிப்போம். வெற்றியை நினைத்து அலட்சியமாக இருக்கக் கூடாது. விவேகானந்தர் கூறியது போல இலக்கை அடையும் வரை பணியாற்ற வேண்டும். சனாதன தர்மம், காசி தமிழ் சங்கம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்.

    பிரதமர் மோடி தலைமையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டம் கொண்டு வந்து இருக்கிறோம். தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றம், மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தி.மு.க. அரசின் பிரதான தோல்வியை கையில் எடுத்து பிரசாரம் செய்ய வேண்டும். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும். நாம் உள்ளூர் பிரச்சனையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்." இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

    'பா.ஜ.க. கூட்டணி வலுவிழந்து இருப்பதாகவும், பலர் வெளியேறுவதாகவும் தொடர்ந்து என்னிடம் நிருபர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில், கூட்டணியில் தற்போது பா.ம.க. இணைந்து அவர்களுக்கான பதிலை அளித்துள்ளது. பொங்கல் முடிந்த பிறகு மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருக்கிறது. தி.மு.க.வில் உள்ள கூட்டணிகள் வெளியேறும். அடுத்த 80 நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    பா.ஜ.க. கட்சியின் ஆணி வேராக பூத் கமிட்டி உள்ளது. இன்று முதல் தேர்தல் முடியும் வரை ஒவ்வொரு பூத் கமிட்டி பொறுப்பாளர்களும், சிறப்பாக வேலை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் பூத் கமிட்டி நிறைவாக உள்ளது. இது மிக முக்கியமான தேர்தல். கடந்த 2021 தேர்தலில் சரிவு வந்தது. அதுபோல வரும் தேர்தலில் நடந்துவிடக் கூடாது. கொங்கு மண்டலம் பா.ஜ.க.வின் எக்கு கோட்டை என்பதை நிருபிக்க வேண்டும்.'

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார்.
    • புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    பா.ஜனதாவின் புதிய தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார். அவருக்கு புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அவர் பாரதியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அக்கார்டு ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க-வினர் கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக ஓயாமல் உழைத்து வருவது மிகப்பெரிய பலம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் பா.ஜ.க வலிமையான வளர்ச்சியடைந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து உற்சாகத்துடன் செயல்பட்டு தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அதற்காக சக்தி கேந்திர நிர்வாகிகள், பூத் தலைவர்கள் களத்தில் இறங்கி வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    நாடு முழுவதும் ஒரு லட்சம் புதிய இளைஞர்களை அடையாளம் கண்டு, நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி வரை தேர்தல்களில் போட்டியிடும் வகையில் பிரதமர் அறிவித் துள்ள திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி.மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து முதலியார் பேட்டை 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜ.க வல்லுனர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் பா. ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின்நபின் கலந்து கொண்டு பேசினார்.

    நேற்று இரவு புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் தங்கிய பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்தார். அதனை தொடர்ந்து பா.ஜ.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் மணவெளி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து கணபதி செட்டிகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிகழ்ச்சிகளில் அவருடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட வியாவும் பங்கேற்றார்.

    • பா.ஜ.க. தேசியத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார்.
    • பாராளுமன்றத் தேர்தலால் அவரது 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்தும் நீட்டிக்கப்பட்டு வந்தது.

    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல்இன்று வெளியிடப்பட்டது. இதனால் அனைத்து கட்சி அலுவலகங்களும் பிசியாக இருந்தன.

    தனது கட்சி அலுவலகத்துக்குச் சென்ற முனுசாமி, என்னப்பா, நம்ம தொகுதியில எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்காங்க என கேட்டார்.

    அதற்கு பதிலளித்த சிவகுரு, சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டு இருக்காங்க என தெரிவித்தார்.

    பரவாயில்லையே, நான் கூட இன்னும் நிறைய இருக்குமோனு நினைச்சேன். இனி வரும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்ய முடியும். அதனால நமக்கும் நல்ல ஆட்சி கிடைக்கும் இல்லையா என கேள்வி எழுப்பினார் முனுசாமி.

    ஆமாம்பா, ரொம்ப கரெக்டா சொன்னே, தேர்தல் ஆணையம் எதை செய்தாலும் நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அதன் பயனே இருக்கு என்றார் சிவகுரு.

    ஆமா, சமீபத்தில பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தலைவரை தேர்வு செய்தார்களாமே, யாரு அவரு? என கேட்டார் முனுசாமி.

    அவர் நிதின் நபின். பீகாரைச் சேர்ந்தவர் என பதிலளித்த சிவகுரு, நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக செய்யப்பட்டதன் சாராம்சத்தை விவரித்தார். அது பின்வருமாறு:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டார்.

    அவரது 3 ஆண்டு பதவிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. எனினும், பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே, பா.ஜ.க.வுக்கு புதிய தேசியத் தலைவரை நியமனம் செய்ய அக்கட்சியில் தொடர்ந்து ஆலோசனை நடந்தன.

    இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் பா.ஜ.க. தேசியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


    நிதின் நபின் பீகார் மாநில அரசின் சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரியாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.

    பாட்னாவில் பிறந்த நிதின் நபின், பா.ஜ.க.வின் முதுபெரும் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நபின் கிஷோர் பிரசாத் ஷின்காவின் மகன்.

    பங்கிபூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு பீகாரில் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன இவர், அதன்பின் 2010, 2015, 2020 மற்றும் 2025 ஆகிய சட்டசபைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்கவைக்க நிதின் நபின் முக்கிய பங்காற்றினார்.

    இவர் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய பொதுசெயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

    தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபினுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர் என தெரிவித்தார்.


    பரவாயில்லையே, அந்தக் கட்சி மேல எவ்வளவோ சர்ச்சைகள் இருந்தாலும் ஒரு தலைவரை தேர்வு செய்யும்போது பிரபலம் இல்லாத ஆளையே நியமனம் செய்வது வரவேற்கத்தக்கது எனக்கூறியபடி வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டார் முனுசாமி.

    • நிதின் நபின் தற்போது பீகார் சட்டசபையில் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
    • மூத்த பாஜக தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின்

    பாஜகவின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய செயல் தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், மக்களவை தேர்தல் போன்ற முக்கிய காரணங்களால் அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்  நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் உத்தரவின்பேரில், இந்த நியமனத்தை கட்சியின் நாடாளுமன்ற வாரியம் அங்கீகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகத் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபினை பாஜக நாடாளுமன்ற வாரியம் நியமித்துள்ளது" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இன்றுமுதல் அவர் தேசிய செயல் தலைவராக செயல்படுவார்.

    மூத்த பாஜக தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு நிதின் நபின் தீவிர தேர்தல் அரசியலில் நுழைந்தார். தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசில், சாலை கட்டுமானத் துறை அமைச்சராக பதவியாற்றி வருகிறார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தொடர்ச்சியாக நான்கு முறை - 2010, 2015, 2020 மற்றும் 2025 பங்கிபூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

    நிதின் நபினின் நியமனம் பீகாரிலும், தேசிய அரசியலிலும் பாஜகவிற்கு ஒரு மூலோபாய ஊக்கமாக பார்க்கப்படுகிறது. அவரது நிர்வாக திறன், அனுபவம் போன்றவற்றை காரணம் காட்டி கட்சித் தலைமை இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இவர் சத்தீஸ்கர் மாநில பாஜக இணைப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.


    ×