என் மலர்
நீங்கள் தேடியது "Thiruparankundram"
- திருப்பரங்குன்றத்தில் புதிதாக வேறு இடத்தில் தீபம் ஏற்ற முனைவோரின் நோக்கமென்ன?
- திருப்பரங்குன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!
திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றிய பிறகு, புதிதாக வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற முயற்சிப்பவர்களின் நோக்கம் என்ன? இதில் ஆர்.எஸ்.எஸ். மூக்கை நுழைப்பது ஏன்? இதற்கு நீதிபதிகள் துணைப் போகலாமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்மீது தரந்தாழ்ந்து போகலாமா என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தலாமா? மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், "திருப்பரங்குன்றத்தில் 'தீபத்தூண்' என்ற பெயரை அண்மையில் உருவாக்கிக் கொண்ட, ஹிந்துத்துவ – காவிக் கட்சியினர் திருப்பரங்குன்றம் மலைமீது வழமையான இடத்தில் முறைப்படி விளக்கு ஏற்றிய நிகழ்வு நடத்தப்பட்டது – அக்கோயில் நடைமுறைப்படி.
இதை ஏற்காமல், தாங்கள் குறிப்பிடும் தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்றுவது என்று கடந்த பல ஆண்டுகளாக மதக் கலவரத்தை ஏற்படுத்த – ஹிந்து முன்னணியினரும் அவர்களது ''சுற்றுக்கிரகங்களும்'' தமிழ்நாட்டில் மதக் கலவரங்களைத் தொடங்க திட்டமிடுகின்றனர்.
இவர்கள் உண்மையான முருக பக்தர்களோ, கடவுள் பக்தர்களோ அல்ல; தங்களது ஹிந்துத்துவ வெறியைப் பரப்புவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி, கொள்கை உறுதியும், மக்களின் பேராதரவும் பெற்ற ஓர் ஆட்சியாக, அசைக்க முடியாத பாறைபோல் இருப்பதால், வாக்காளர்களிடம் மத உணர்வைத் தூண்டி, 'பக்தி' முகமூடியுடன் அந்தத் திருப்ப ரங்குன்றத்தை வைத்து ''அரசியல்'' செய்ய கிளம்பியுள்ளது.
எதிர்மனுதாரர்களுக்குப் போதிய அவகாசம் தராத நீதிபதிகள்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் என்ற, தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று பகிரங்கப்படுத்திய ஒருவர், இந்த தீப நிகழ்ச்சியில், அரசியலமைப்புச் சட்ட விதிகளைப் புறக்கணித்து, அவசர அவசரமாக – மற்றவர்களுக்குப் போதிய அவகாசம்கூடத் தராமல், குறிப்பிட்ட இடத்தில் மனுதாரருடன், சிலர் சென்று தீபம் ஏற்றுவதற்கு, மத்திய காவல்துறை துணை யுடன் அதை நிறைவேற்றவேண்டும் என்று கொடுத்த அரசியலமைப்புச் சட்ட விரோத அவசரத் தீர்ப்பின்மீது தமிழ்நாடு அரசும், அறநிலையத் துறையும் மேல்முறையீடு (அப்பீல்) செய்து, அவ்வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின்முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
(அந்த இரு நீதிபதிகள் அமர்வு டாக்டர் ஜஸ்டிஸ் ஜி.ஜெயச்சந்திரன், ஜஸ்டிஸ் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆவர்).
அந்த மேல்முறையீட்டில், தமிழ்நாடு அரசு, அறநிலையத் துறை, தர்கா தரப்பு, வக்ஃப் போர்டு, தொல்பொருள் துறை, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தரப்பு, மதுரை மாவட்ட ஆட்சியர் (இவர்களை நீதிமன்றமே இணைத்திருக்கிறது) ஆகியோர் தரப்பில் எடுத்து வைத்த ஆழமான வாதங்களை அப்படியே புறந்தள்ளி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அல்ல,
தனி நீதிபதியின் ஆணையில் கண்ட பல அம்சங்கள்பற்றி மேலே குறிப்பிட்ட பல அமைப்புகளின் வாதங்களுக்கு உரிய முறையில் தாங்கள் ஏற்கவில்லை என்பதற்கான விரிவான விளக்கம் ஏதும் தராமல், மேல் முறையீட்டை ஏற்காமல், தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேவையற்ற கருத்துகளை அரசுமீதும், துறைகள்மீதும் நீதிபதிகள் சுமத்தலாமா?
மேல்முறையீட்டில், நீதிபதிகள் கருத்துப்படி, தீர்ப்பு வழங்க முழு உரிமை உடையவர்கள் என்பது மறுக்க முடியாதது என்றாலும், இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பில்,
1. அப்பீல்தாரர்களின் வாதங்களுக்கு விளக்கம் தராதது மட்டுமல்ல; அதில் தரப்பட்ட தீர்ப்பு தமிழ்நாடு அரசுமீது, காவல்துறை முதலிய பல துறைகளின் – பொறுப்புணர்வு பற்றிய தேவையற்ற கருத்துகளை எடுத்து எழுதியிருக்கிறார்கள். தனி நீதிபதி தீர்ப்பைவிட, மிகவும் மோசமான – அரசியலமைப்புச் சட்ட மதச் சுதந்திர கூறுகள் 25, 26–க்கேகூட முற்றிலும் எதிரானதாகவே உள்ளது என்பதை அவர்களது வாசகங்களில் இருந்து, நடுநிலையாளர் எவரும் புரிந்துகொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக,
It is "ridiculous and hard to believe" the fear of the mighty State that by allowing representatives of the Devasthanam to light the lamp at the stone pillar near top of the hill located within its territory of devasthanam land, on a particular day in a year, will cause disturbance to public peace. Of course, it may happen only if such disturbance is sponsored by the State itself. "We pray no State should stoop to that level to achieve their political agenda,"
இதன் தமிழாக்கம்:
தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள மலையின் உச்சியில் உள்ள கல் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில், தேவஸ்தானத்தின் பிரதி நிதிகளை விளக்கேற்ற அனு மதிப்பதால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்று சக்திவாய்ந்த அரசு அஞ்சுவது, 'கேலிக்குரியதும் நம்ப முடியாததும்' ஆகும். நிச்சயமாக, அத்தகைய குழப்பம் அரசாலேயே தூண்டிவிடப்பட்டால் மட்டுமே அது நிகழக்கூடும். ''தங்கள் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக எந்த அரசும் அந்த அளவிற்குத் தாழ்ந்துவிடக் கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.''
கலவரத்தைத் தூண்டுவது அரசு என்று நீதிபதிகள் கூறலாமா?
பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்ற நிலைபற்றி பொறுப்புள்ள ஓர் அரசு, அதன் அமைப்புகள் கவலைப்படுவதை கேலி செய்வதோடு, மிகவும் கீழிறக்கமான ஒரு கருத்தாக – அரசாங்கம்தான் அத்தகைய கலவரத்தையே தூண்டிவிடக் கூடும் என்று குற்றம் சுமத்தி எழுதலாமா? அதோடு அரசுக்கு ஏதோ ஓர் அரசியல் திட்டம் (Political Agenda) இருக்கிறது என்று எதை வைத்துக் கூறுகின்றனர்? இதுதான் மேல்முறையீடு தீர்ப்பின் லட்சணமா? இது முறையானதா? பொறுப்பான குற்றச்சாற்றா?
அதுமட்டுமா?
மற்றொரு பாராவில்,
"We find that the apprehension expressed by the District Administration regarding probability of disturbance to the public peace is nothing but an imaginary ghost created by them for their convenience sake and to put one community against other community under suspicion and constant mistrust," the bench said.
இதன் தமிழாக்கம்:
''பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக்கூடும் என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தால் வெளிப்ப டுத்தப்பட்ட அச்சம், அவர்களின் வசதிக்காக அவர்களால் உரு வாக்கப்பட்ட ஒரு கற்பனையான 'பூதமே' தவிர வேறில்லை என்றும், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராகச் சந்தேகத்திலும், தொடர்ச்சியான அவநம்பிக்கையின் கீழும் நிறுத்துவதே இதன் நோக்கம் என்றும்'' நீதிபதிகள் அமர்வு கூறியது.
அரசியலமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த உறுதிமொழியை அடித்து நொறுக்கலாமா நீதிபதிகள்?
''தனி நீதிபதியின் ஏற்க முடியாத தீர்ப்பினை, அகலப்படுத்துவதுபோல, ''தீபத்தூண் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது. கார்த்திகைத் தீபத்தை மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கோயில் நிர்வாகம் ஏற்றவேண்டும். அதனை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிடவேண்டும்.
தீபம் ஏற்றும் நிகழ்வின்போது கோயில் நிர்வாகத்துடன் செல்ல, மக்களுக்கு அனுமதி இல்லை.''
இப்படிக் கூறுவது நீதிபதிகள் எடுத்த பதவிப் பிரமாணப்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் உறுதிமொழிக்கு நேர் முரண் அல்லவா! பீடிகை (Preamble) அடிக்கட்டுமானம் கூறிய Secular என்பதை இது அடித்து நொறுக்குவதாகாதா?
கூறு (Article) 25, 26, Subject to Public Order, Morality, Health என்ற பிரிவுகளைத் தூக்கி தூர எறிந்திருப்பது, தமது கடமை உணர்வு தவறியதாகாதா?
முந்தைய பக்கங்களில் பக்தர்கள் வழிபாட்டு உரிமைபற்றி விளக்கம் கூறுவதை ஏற்ற இந்த அமர்வு, அதற்கு நேர்முரணாக சிலர் மட்டுமே தீபம் ஏற்ற மேலே செல்லவேண்டும் – மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் துணையோடு என்றால், மற்ற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றால், கொதிப்பு, கொந்தளிப்பு, கலவரம் ஏற்படாதா?
இது சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்காதா? அந்த அமர்வு நீதிபதிகள்தான் இந்த முரண்பாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டும்!
அதுமட்டுமல்ல!
திருமூலர் பாட்டு ஆகமம் ஆகுமா?
ஆகமப்படி, உச்சிப்பிள்ளையார் கோயிலில் முறைப்படி 'தீபம்' ஏற்றியாகிவிட்டது. மறு முறை செய்ய ஆகமத்தைச் சுட்டிக் காட்டிய அறநிலையத் துறை வாதத்தினை மறுத்து, திருமூலரைத் தேடி, தீர்ப்புச் சொல்கிறார்கள்.
''திருமூலர் பாட்டு ஆகமமாகுமா?'' அர்ச்சகக் கூட்டத்தினர்கூட ஏற்க மாட்டார்களே!
திருமூலர், சித்தர்பாட்டு – அதுமட்டுமல்ல,
''நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ''
என்று சித்தர் சிவவாக்கியர் எழுதியுள்ளதை ஏற்பார்களா என்று கேள்வி கேட்டால், கனம் நீதிபதிகளின் நிலை என்ன?
கலவரம் செய்ய காத்திருக்கும் ''தெரு மூலர்கள்'' தீபம் ஏற்ற தூபம் போடுவோர் யோசிக்காதது ஏன்?
கிராமத்தில் நம் மக்கள் ஒரு பழமொழி கூறுவார்கள்.
''அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம்'' (காயம் என்றால், நிரந்தரம் என்று பொருள்).
மதக்கலவரம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்!
அரசியலமைப்புச் சட்டத்தைப் புறக்கணித்து, இப்படி தீர்ப்பு எழுதுவது, அறத்தை மீறியது மட்டுமல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்காமல் காக்கும் மாநில அரசுமீது வெறுப்பை, வன்மத்தை உமிழ்வது எந்த வகையிலும் நீதியாகாது, நியாயமாகாது!
மக்களின் பொதுப் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுத்துவது மிக கீழிறக்கமான கண்ட னத்திற்குரிய தீர்ப்பு இது!
உச்சநீதிமன்றத்திற்குச் சென்றால், இது மாறிவிடக் கூடும் என்பது வேறு விஷயம்!
ஆனால், எல்லாவற்றிற்கும் மேலானது மக்கள் மன்றம் என்பதை மறந்துவிடக் கூடாது!
Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது?
'Political Agenda' என்றெல்லாம் (தி.மு.க.) மாநில அரசு மீது அவசர குற்றப்பத்திரிகை எழுதும் நீதிபதிகளே,
''திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம்'' என்று, திருப்பரங்குன்ற தீபத்தை சாக்காக வைத்து, அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கக் குர லெழுப்பும் கலவரக் கும்பலுக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளதோடு, திருச்சியில் பேசியபோது,
''திருப்பரங்குன்றம் பிரச்சினையில் ஹிந்து அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடினால், பரிசீலிப்போம்'' என்று கூறியுள்ளது ஏடுகளில், ஊடகங்களில் வந்தன என்பதை அறியமாட்டீர்களா?
Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது? என்பது இதன்மூலமாவது உங்களுக்குப் புரியாதா? எனவே, இந்தத் தீர்ப்பு நியாயவாதிகள் ஏற்கத்தகுந்த தீர்ப்பல்ல; சாய்ந்த தராசுத் தீர்ப்பேயாகும்! மக்கள் மன்றத்தின் கண்டனத்திற்குரிய ஒரு சார்புத் தீர்ப்பேயாகும்! உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!" என்று தெரிவித்துள்ளார்.
- ஒரு தீர்ப்பு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்
- நிர்வாகத் திறமையின்மையுடன் நீதித்துறையின் சோம்பல்-ஆணவம் மற்றும் கள யதார்த்தங்களைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமை ஆகியவை இணைகின்றன.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ஜனவரி 6 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவுக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு அளித்தநிலையில், தமிழ்நாடு அரசு மீண்டும் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், ஒரு தீர்ப்பு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்; உண்மைகளை மதிப்பிடுதல் மற்றும் சட்டத்தை விளக்குதல்.
இதில் ஒன்று தவறினால், அது அபத்தமாகிவிடும்!
இரண்டுமே தவறினால், அது சங்கடமாகிவிடும்!
நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் கூறுவார், "நிர்வாகத் திறமையின்மையுடன் நீதித்துறையின் சோம்பல்-ஆணவம் மற்றும் கள யதார்த்தங்களைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமை ஆகியவை இணைகின்றன. அதன் விளைவு எப்படி இருக்கும்?" முருகனுக்கு அரோகரா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்கிறோம்.
- தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டியது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரின் பொறுப்பு.
திருப்பரங்குன்றம் வழக்கில் நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டை தவிர வேறு எங்கும் உடலை எரிக்க முடியாது. அதைப்போலத்தான் மற்ற பழக்க வழக்கங்களையும் மாற்றமுடியாது என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து சர்ச்சையானது. இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
* திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேய் கதையை அரசு அவிழ்த்துவிடுவதாக நீதிமன்றம் கூறுகிறது.
* பேய் கதை என நீதிபதிகள் கூறியதால் சுடுகாடு என்ற உதாரணத்தை நான் கூறினேன்.
* பேய் இருக்கிறது என்று கதை சொல்லி இருக்கிறார்கள். அதற்கு நான் சுடுகாடு என்று கூறினேன். அதில் தப்பில்லை.
* அரசு பேய் கதைகள் சொல்கிறது என நீதிபதிகள் சொல்லும்போது நான் கூறியதில் தவறில்லை.
* நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எந்த ஒரு கருத்தையும் நான் கூறவில்லை. சட்டத்திற்கு உட்பட்டுதான் பேசினேன்.
* முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் அதனை சுட்டிக்காட்டும் உரிமை வழக்கறிஞராகிய எனக்கும் உண்டு.
* திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்கிறோம்.
* தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டியது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரின் பொறுப்பு என்றார்.
- தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு குறித்து கூறியதாவது:-
* திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.
* உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.
* தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை.
* திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது.
* யாரோ ஒருவர் கேட்டதற்காக தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள்.
* இல்லாத ஒரு வழக்கத்தை நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும்?
* பிரச்சனைக்குரிய அந்த தூண் தீபத்தூண் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
- தி.மு.க. அரசு எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்கிறது.
- 100 நாள் வேலைத்திட்டத்தை தி.மு.க. தவறாக பயன்படுத்தி வருகிறது.
நெல்லை:
நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை வரவேற்கிறேன்.
* தீபத்தூண் வழக்கில் அன்றே உத்தரவை நடைமுறைப்படுத்தி இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது.
* தி.மு.க. அரசு எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்கிறது. பின்னர் நீதிபதிக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றுகிறது.
* 100 நாள் வேலைத்திட்டத்தை தி.மு.க. தவறாக பயன்படுத்தி வருகிறது.
* வேலைக்குச் செல்லாமலேயே தவறான நபர்களுக்கு 100 நாள் வேலையில் ஊதியம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
- மதுரை ஐகோர்ட் வழங்கியுள்ள நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்.
- மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியபோதே தமிழக அரசு தீபம் ஏற்றி இருக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் முருக பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெரு பகுதி மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். மேலும் அங்கிருந்த போலீசார் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் அவர்கள் இனிப்புகள் வழங்கினர். ஐகோர்ட் உத்தரவிற்கு திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முருக பக்தர்கள் வரவேற்பு தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
லீலாவதி: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தற்போது மேல்முறையீட்டு வழக்கில் மதுரை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பில் மகிழ்ச்சியளிக்கிறது. இது நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த நீதிமன்ற தீர்ப்பை உடனே செயல்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து: மதுரை ஐகோர்ட் வழங்கியுள்ள நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். தமிழக அரசும், கோவில் நிர்வாகமும் இந்த தீர்ப்பை மதித்து மலைமேல் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யாமல் தீபம் ஏற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்று மலை அடிவார நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு மூதாட்டி ஒருவர் இனிப்பு வழங்கிய காட்சி.
கிருஷ்ண மூர்த்தி: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மறுப்பதற்கு முக்கிய காரணம் ஓட்டு வங்கி தான். ஏற்கனவே மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியபோதே தமிழக அரசு தீபம் ஏற்றி இருக்க வேண்டும். தற்போது 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் இதனையும் தமிழக அரசு நிறைவேற்றப் போவதில்லை. மீண்டும் மேல்முறையீடு செய்வார்களே தவிர தீபம் ஏற்ற மாட்டார்கள்.
தேன்மொழி: முருகனின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மகாதீபம் மலை மேல் உள்ள தூணில் ஏற்றுவது தொடர்பான ஏற்பட்ட பிரச்சனை மிகுந்து வருத்தமளித்து வந்தது. தற்போது மேல்முறையீட்டு வழக்கில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சாதகமான தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
- அனைத்து இந்துக்களும் பார்க்க வேண்டும் என்றே உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
- திருப்பரங்குன்றம் தீப வழக்கு அரசியல் நோக்கில் பார்க்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.
தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று கூறிய நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
* திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வாதம் ஏற்கத்தக்கதாக இல்லை.
* பொது அமைதி பாதிக்கும் என்ற அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
* மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிற்கு சொந்தமானது என்ற வாதமும் தவறானது.
* அனைத்து இந்துக்களும் பார்க்க வேண்டும் என்றே உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
* பொது அமைதி பாதிக்கப்படும் என அரசு கூறுவது யூகத்தின் அடிப்படையிலானது.
* கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது.
* பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம்.
* திருப்பரங்குன்றம் தீப வழக்கு அரசியல் நோக்கில் பார்க்கப்பட்டுள்ளது.
* தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்த போதே தீபம் ஏற்றி இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.
* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும். சண்டை போடக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
- ஒவ்வொரு கார்த்திகையின்போதும் தீபம் ஏற்ற வேண்டும்
- தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.
தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று கூறிய நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும்.
* மத்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன் மலை உச்சியில் உள்ள தூணில் கோவில் நிர்வாகமே விளக்கு ஏற்ற வேண்டும்.
* ஒவ்வொரு கார்த்திகையின்போதும் தீபம் ஏற்ற வேண்டும்
* தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்.
* தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல் துறை, தொல்லியல் துறை, தேவஸ்தானம் முடிவு செய்யலாம்.
* மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது பொதுமக்கள் யாருக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் தனி நீதிபதி அளித்த உத்தரவை உறுதி செய்தனர்.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.
- சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்து தீபம் ஏற்றப்படவில்லை.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விரிவாக விசாரித்தனர்.
இதில் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் சார்பில் வக்கீல்கள் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. அங்கு ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணிக்கமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை விலங்குகளை பலியிடுவதோ, அசைவ உணவுகளை பரிமாறுவதோ, இறைச்சியை மலைக்கு எடுத்துச் செல்வதோ கூடாது என்று தர்கா நிர்வாகத்திற்கு கடந்த 2-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று தர்கா நிர்வாகம் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர்.
இதைக்கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி, தர்கா மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று கூறிய நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.
- இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், சட்டம். ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்து தீபம் ஏற்றப்படவில்லை.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விரிவாக விசாரித்தனர்.
இதில் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் சார்பில் வக்கீல்கள் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. அங்கு ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணிக்கமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை விலங்குகளை பலியிடுவதோ, அசைவ உணவுகளை பரிமாறுவதோ, இறைச்சியை மலைக்கு எடுத்துச் செல்வதோ கூடாது என்று தர்கா நிர்வாகத்திற்கு கடந்த 2-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை இன்று (அதாவது நேற்று) அவசர வழக்காக எடுத்து விசாரித்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு தர்கா நிர்வாகம் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர்.
இதைக்கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை (அதாவது இன்று) வழங்கப்பட உள்ளது. அந்த தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி, தர்கா மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர்.
எனவே சந்தனக்கூடு திருவிழாவில் அசைவ உணவு பரிமாறுவது கூடாது, கந்தூரி விழா நடத்தக்கூடாது என்று நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.
- உத்தரவை தடை செய்ய வேண்டும் என்று தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விசாரித்தனர். இதில் மலை உச்சியில் உள்ள தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், கோவில் தரப்பு என பல்வேறு தரப்பினரும் தங்களது தரப்பு கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். முடிவில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. அங்கு ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணிக்க மூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை நீதிபதி ஸ்ரீமதி விசாரித்தார். திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை விலங்குகளை பலியிடுவதோ, அசைவ உணவுகளை பரிமாறுவதோ, இறைச்சியை மலைக்கு எடுத்துச் சொல்வதோ கூடாது என்று தர்கா நிர்வாகத்திற்கு கடந்த 2-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தடை செய்ய வேண்டும் என்று தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை இன்று அவசர வழக்காக எடுத்து விசாரித்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு தர்கா நிர்வாகம் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும். அதன் பின்பு உரிய முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர்.
இதன் மூலம் நாளை நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவில் அசைவ உணவு பரிமாறும் கந்தூரி விழா நடத்த கூடாது என்று நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார்
- ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் கூட, புதிய கல்விக் கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரும்
காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு வருகைதந்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையும் ஆற்றினார். இந்நிலையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பை நாங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். நேற்று, ராமேஸ்வரத்தில் இதன் நிறைவு விழாவை வெற்றிகரமாக நடத்தினோம். அதில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் உரையாற்றினார். இந்த காசி தமிழ் சங்கமம் என்பது நம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, குறிப்பாக காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இடையிலான கலாச்சார மற்றும் நாகரீக பிணைப்பின் அடையாளமாகும். தற்போது இதில் ஏராளமான மக்கள் பங்கேற்கின்றனர். வருங்காலத்தில், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' (Ek Bharat, Shreshtha Bharat) திட்டத்தின் கீழ் இன்னும் சிறப்பான கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படும்.
நாட்டின் இரு பகுதிகளுக்கு இடையே இத்தகைய சிறந்த கலாச்சார பாலத்தை உருவாக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இப்போது தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இது தேசிய கல்வி கொள்கையின் பரிந்துரையாகும். மாநில அரசு ஆரம்பக் கல்வியில் தமிழ் மொழியை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் குழந்தைகளைச் சரியாகக் கவனித்துக்கொண்டால், அவர்கள் நமது சமூகத்தின் எதிர்காலத் தலைவர்களாக விளங்குவார்கள். என தெரிவித்தார்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், 'திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழ்நாடு அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது' என தெரிவித்தார்.
முன்னதாக நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் கூட, புதிய கல்விக் கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்திருந்தார்.






