என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • திருப்பரங்குன்றம் பிரச்சனையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது.
    • அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் டி.டி.வி.தினகரனையோ, ஓ.பி.எஸ்.சையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா? இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ்கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ் நாட்டின் அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால் நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது.

    சாக்கு போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இருமுனைப் போட்டி என்பதை முன் வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும்.

    மு.க.ஸ்டாலினை 2-வது முறையாக முதலமைச்சர் ஆக்குவது தான் எனது கடமை, என்னுடைய பணி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். இதிலிருந்து முதலமைச்சருக்கான போட்டியில் உதயநிதி இல்லை. எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.5 ஆயிரம் கொடுத்து இருக்கலாம், கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத்தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் பிரச்சனையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது. முதல்முறையாக தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக எதைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்பதற்காக பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். உடன் சேர்ந்து போட்ட திட்டம். அது இன்று தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள் அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பது தெரியும்.

    செவிலியர் போராட்டம் உள்ளிட்டவைகளால் எந்த நெருக்கடியும் வராது. எல்லா நெருக்கடியும் சுலபமாக தீர்க்கப்படும். நிச்சயமாக அனைவரின் ஆதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி பார்ட்-2 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடரும். அ.தி.மு.க.வால் மெகா கூட்டணி அமைக்க முடியாது. தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது.

    அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியினுடைய கருத்துக்கு எதிரானவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோமே தவிர, யாரையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை. அனைவரும் தி.மு.க.வை நோக்கி வந்தால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். தி.மு.க.வை சொல்லித்தான் பேச முடியும். தி.மு.க.தான் எதிரி என்று சொன்னால் தான் திரும்பி பார்ப்பார்கள். அதனால்தான் தி.மு.க.வை சொல்லி வருகின்றனர். இதிலிருந்தே தி.மு.க. என்பது தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    நயினார் நாகேந்திரனுக்கு நாடக கம்பெனி எல்லாம் பழைய காலத்தில்தான் இருந்தது. தற்போது வள்ளி திருமணம் நாடகம் எல்லாம் போட்டால் யாரும் போய் பார்ப்பதில்லை. அதனால் அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து தற்போது தான் விழித்துள்ளார். நல்ல அறிக்கைகளையும், நல்ல திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தருகின்ற தேர்தல் அறிக்கைக்குழுதான் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு என்றார்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை,

    கந்தா்வகோட்டை:

    கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான் ஊரணி, வாராப்பூா், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்க நாதப்பட்டி, மாந்தான்குடி, கந்தா்வகோட்டை, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, மட்டாங்கால், சிவன்தான்பட்டி, வீரடிபட்டி,

    புதுப்பட்டி, பல்லவராயன்பட்டி. பழைய கந்தா்வகோட்டை, அரவம்பட்டி, மங்கனூா், வடுகப்பட்டி, பிசானத்தூா், துருசுபட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கந்தா்வகோட்டை மின்வாரிய உதவிச் செயற் பொறியாளா் கே. ராஜ்குமாா் தெரிவித்து உள்ளாா்.

    • தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.
    • புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது.

    புதுக்கோட்டை:

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு நடந்து முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    அத்துடன் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மனுக்கள் பெற்று, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி தொடர பாடுபடவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்

    அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்களை தயார்படுத்தும் வகையில் தற்போதைய தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் அவர் அ.தி.மு.க. ஆட்சி சாதனைகளையும் பட்டியலிட்டு வருகிறார்.

    தே.மு.தி.க. சார்பில் பொதுச்செயலாளர் பிரேமலதா இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய கோணத்தில் மாடுகள் மாநாடு, தண்ணீர் மாநாடு, கடலம்மா மாநாடு போன்றவற்றை நடத்தி இயற்கை ஆர்வலர்களை ஈர்த்து வருகிறார். த.வெ.க. தலைவர் விஜய்யும் மாவட்டந்தோறும் பிரசார கூட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    இதற்கிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும் சட்டமன்ற தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரும் கடந்த அக்டோபர் 12-ந்தேதி தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணத்தை மதுரையில் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் அவர், தனது பயணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவு செய்கிறார்.

    தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்தவும், அதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் பலத்தை நிரூபிக்கவும் திட்டமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், அதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு சாந்தமாக பதிலடி கொடுத்து வரும் அவர், தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.

    குறிப்பாக தென் தமிழகத்தை குறிவைத்து சட்டமன்ற தேர்தலுக்கு காய் நகர்த்தும் நயினார் நாகேந்திரன், தேசிய தலைவர்களை அழைத்து வருவதன் மூலம் கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தை பயன்படுத்த தயாராகி வரும் நயினார் நாகேந்திரன் ஏற்பாடுகளை தற்போதே தொடங்கிவிட்டார்.

    நேற்று டெல்லி சென்று திரும்பிய அவர், நிருபர்களிடம் கூறுகையில், எனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் நேரில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், இருவரில் ஒருவர் வருவார் என்றும் தெரிவித்தார். ராமேசுவரத்தில் காசி தமிழ்ச்சங்கமம் விழா, ராமேசுவரம்-தாம்பரம் புதிய வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா, புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழா ஆகியவற்றில் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது. தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தை பா.ஜ.க.வினர் மற்றும் போலீசார் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாலன் நகர் அருகே பள்ளத்தி வயலில் தனியாருக்கு சொந்தமான 59 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடம் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.

    மேலும் தற்போது இந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் அங்கு 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் போலீசார், உளவுத்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவும் ஆய்வு செய்தார். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் உள்ளிட்ட கருவிகளை வைத்தும், டிரோன்களை பறக்கவிட்டு அந்த இடத்தின் பாதுகாப்பு தன்மையும் உறுதி செய்யப்பட்டது.

    அதேபோல் விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் பெயர்கள், பின்புலங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கான ஹெலிபேடு தளம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ஜ.க. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளையும் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி வருகை குறித்த தகவல் தமிழக பா.ஜ.க.வினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும்.
    • பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடலால் ஆட்சி மிக சிறப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது.

    முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால் நானும் கட்சியில் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள என்னை 'பி' டீம் என்று கூறியுள்ளார்.

    நாங்கள் எது பி டீம், எது 'சி' டீம், எது சிலீப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்து விட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மாடல் ஆட்சிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் துணை நிற்பவர்கள். அதில் என்றும் மாற்றமும் கிடையாது.

    ஆதவ் அர்ஜூனாவின் ஜோசியத்திற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியதற்கெல்லாம் பதில் இல்லை.

    நான் தி.மு.க.விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.

    எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர், மாவட்டச் செயலாளர்தான். ஆனால் நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால் எடப்பாடி பழனிசாமியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது என்றார்.

    • தற்போது புயலின் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    அறந்தாங்கி:

    தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே உருவான் டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழில் முற்றிலும் முடங்கியது. கடலில் எழுந்த ராட்சத அலைகள் மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்திருந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் குறைந்த தூரத்தில் சென்று மீன்பிடித்து திரும்பினர்.

    இந்தநிலையில் தற்போது புயலின் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை யடுத்து 14 நாட்களுக்கு பிறகு இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர்.

    முன்னதாக நேற்று முதலே கடலுக்கு செல்வ தற்கான முன்னேற்பாடு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டனர். குறிப்பாக விசைப்படகு மீனவர்கள் வலைகளை தயார் செய்தல், ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், டீசல் கேன்களை படகுகளில் சேமித்தல் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருந்தனர். இன்று காலை அவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், கட்டு மாவடி முதல் அரசங்கரை வரையிலான 32 மீனவ கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் இன்று காலை கடலுக்கு சென்றனர்.

    கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதால் மீனவர்கள், அதனை சார்ந்த தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இயற்கை சீற்றங்கள், இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு சம்பவங்களால் தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 2 வாரங்களுக்கு பிறகு அதிக மீன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்று கடலுக்கு சென்றுள்ளனர்.

    • த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு அசைன்மென்ட்.
    • தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறுகிறது.

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல் தான் செங்கோட்டையன்.

    * த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு அசைன்மென்ட்.

    * அமித் ஷா அழைத்தால் ஓடுவார். இன்றைக்கும் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கிக்கொண்டிருப்பவர்.

    * செங்கோட்டையனை பா.ஜ.க. ஏமாற்றி இருந்தால் அவர் ஏன் த.வெ.க.வுக்கு செல்ல வேண்டும்?

    * செங்கோட்டையன் ராஜினாமா செய்யும் முடிவிற்கு வந்த பிறகு நட்பு ரீதியில் வாருங்கள் என்று சேகர்பாபு அழைத்து இருக்கலாம்.

    * தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எங்களுக்கு தெரியாது. தி.மு.க.வுக்கு தேர்தல் தான் குறி.
    • களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம்.

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * த.வெ.க. தலைவர் விஜய் தரக்குறைவாக விமர்சித்து தரம் தாழ்த்திக்கொள்கிறார்.

    * மக்கள் மத்தியில் தனது தரத்தை விஜயே தாழ்த்திக் கொள்ளும் நிலையில் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை.

    * விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எங்களுக்கு தெரியாது. தி.மு.க.வுக்கு தேர்தல் தான் குறி.

    * எங்களுக்கு தனிப்பட்ட முறையில் யாரும் எதிரி இல்லை.

    * தி.மு.க.வுக்கு விஜய் போட்டியே இல்லை.

    * விஜய் உள்ளிட்ட யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு இல்லை.

    * எங்களுக்கு போட்டி என்று யாரும் இல்லை.

    * பா.ஜ.க.வின் 'C' டீம்தான் விஜய். முன்பு ஸ்லீப்பர்செல்களாக இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்.

    * களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம்.

    * திராவிட இயக்க வரலாற்றை இளைய தலைமுறை அறியச் செய்யும் திருவிழா.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டி.ஜி.பி. என்று அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க. தான்.
    • கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரெயில் கொண்டுவரப்பட வேண்டும்.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறுப்பு டி.ஜி.பி. விவகாரத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். யூடியூபில் வருகின்ற செய்திகள் பேசுவதை எல்லாம் செய்திகள் என்று எடுத்துக்கொண்டு ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார் அவர்.

    எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக தான் பா.ஜ.க. அரசின் சிறந்த சேவகர் என்று நிரூபித்துக் கொண்டு வருகிறார். மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது எல்லாம் குறுக்கே விழுந்து தமிழ்நாடு அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒன்றிய பா.ஜ.க. அரசை காப்பாற்றி வருகிறார்.

    அது டி.ஜி.பி. விவகாரத்திலும் நடந்துள்ளது. ஆளுநர் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று எண்ணிய மத்திய பா.ஜ.க. அரசு அது டி.ஜி.பி. மூலம் நடந்து விடாதா என்று எண்ணினார்கள். ஆனால் டி.ஜி.பி. மூலம் நடக்க முடியவில்லை.

    தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டி.ஜி.பி. என்று அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க. தான். 2011-ம் ஆண்டு ராமானுஜத்தை உளவுத்துறை டி.ஜி.பி. ஆகவும், சட்ட-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. ஆகவும் அ.தி.மு.க. அரசுதான் கொண்டு வந்தது.

    ராஜேந்திரன் என்பவரையும் பொறுப்பு டி.ஜி.பி.யாக கொண்டு வந்ததும் அ.தி.மு.க. தான். தற்போது இதை பற்றி பேசி பா.ஜ.க. அரசின் விசுவாசி என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக் கொண்டு வருகிறார். பொறுப்பு டி.ஜி.பி. பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது.

    அ.தி.மு.க. ஆட்சியில் அலங்கோலமாக கடந்த சட்ட ஒழுங்கை திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக கொண்டு வந்துள்ளது.

    கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரெயில் கொண்டுவரப்பட வேண்டும். சென்னையில் சிறப்பாக மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சென்னையில் சிறப்பாக நடைபெறுகிறது. எங்களுக்கு எந்த அளவு போட வேண்டும் என்பது சரியாக தெரியும். யார் எங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம். போலியான தருணங்களை சொல்லி நிராகரித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.வை சேர்ந்த சேகர்பாபு பா.ஜ.க.வை பற்றி பேச வேண்டியதில்லை.
    • அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

    புதுக்கோட்டையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை NDA-வில் இணைப்பது பற்றி காலம் தான் முடிவு செய்யும்.

    * அமைச்சர் சேகர்பாபு சொல்வது உண்மைதான். பா.ஜ.க.வில் 3 ஆண்டுகள் தான் பதவி.

    * 3 ஆண்டுகளுக்கு பின் ஒரு வேளை பதவி நீட்டிக்கப்படலாம்.

    * தி.மு.க.வை சேர்ந்த சேகர்பாபு பா.ஜ.க.வை பற்றி பேச வேண்டியதில்லை.

    * அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

    * நடிகர் விஜயின் த.வெ.க.வை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

    * த.வெ.க. இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இ.பி.எஸ். விமர்சனம் குறித்து கவலையில்லை. மீண்டும் தி.முக. தான் ஆட்சியை கைப்பற்றும்.
    • எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026 தேர்தலில் வென்று 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைப்போம்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இ.பி.எஸ். விமர்சனம் குறித்து கவலையில்லை. மீண்டும் தி.முக. தான் ஆட்சியை கைப்பற்றும்.

    * எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லாததால் தி.மு.க.வை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.

    * வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    * எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026 தேர்தலில் வென்று 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைப்போம்.

    * எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. எங்க வேலையை நாங்கள் பார்க்கிறோம்.

    * எப்போதும் எங்களுக்கு மனசு நல்லா இருக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதுவரை மகளிர் உரிமைத்தொகையாக ரூ.27,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க. திட்டங்கள் குறித்து மக்கள் பேசும்போது பெருமையாக இருக்கிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    * தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கப்படும்.

    * மகளிருக்கு ரூ.1000 கொடுப்பது சாத்தியமில்லை என அ.தி.மு.க.வினர் கூறினர்.

    * மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை பாதியில் நிறுத்தி விடுவார்கள் என வதந்தி பரப்பினர்.

    * பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.

    * நமது திட்டங்களை பிற மாநிலங்கள் முன்மாதியாக எடுத்துக்கொண்டுள்ளன.

    * இதுவரை மகளிர் உரிமைத்தொகையாக ரூ.27,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    * எங்கள் அண்ணன் மாதந்தோறும் கொடுக்கும் சீர் மகளிர் உதவித்தொகை என மகளிர் கூறுகின்றனர்.

    * வதந்திகளை நம்பாதீர்கள். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்போதும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடரும்.

    * நியூயார்க் தேர்தலில் கட்டணமில்லா பேருந்து பயணம் வாக்குறுதியை தந்ததால் வெற்றி பெற்றுள்ளனர்.

    * கனடாவிலும் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    * பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தி.மு.க.வின் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    * போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும், நம் பணி மக்களுக்கு பணி செய்வதே.

    * தி.மு.க. திட்டங்கள் குறித்து மக்கள் பேசும்போது பெருமையாக இருக்கிறது.

    * தி.மு.க. ஆட்சி 2.o உறுதியாகி விட்டது

    * தி.மு.க.வுக்கு தான் வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

    * வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    * திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் எதிரிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

    * உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா? என்று ஆராயுங்கள்.

    * எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.
    • கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.

    * புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.

    * கீரமங்கலம் பகுதியில் விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன கிடங்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    * இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் டைடல் பார்க் அமைக்கப்படும்.

    * ஆவுடையார்கோவில் ஊராட்சி, வடகாடு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்.

    * கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    * கிரமங்கலத்தில் காய்கறிகளை பாதுகாக்க ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

    ×