என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கி.வீரமணி"

    • தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும்.
    • இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள்.

    பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    செங்கல்பட்டு மறைமலைநகர் பெரியார் திடலில் நடக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். கருஞ்சட்டைக்காரர்கள் தமிழ்நாட்டின் காவலுக்கு கெட்டிக்காரர்கள்.

    தமிழ் சமுதாயத்திற்காக 92 வயதிலும் இளைஞர் போல் ஓய்வின்றி ஊழைத்து வருகிறார். கி.வீரமணி. கலைஞர், பேராசிரியருக்கு பிறகு தன்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. இந்த வயதிலும் தினமும் எழுதுகிறார், பிரசாரம் செல்கிறார்.

    பெரியாரின் சிந்தனைகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் போற்றப்படுகிறது.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போற்றுவது பெரியாரின் கொள்கை, திராவிட சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி.

    திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    எனது ஒரு மாத ஊதியம், 126 எம், எம்எல்ஏக்கள் ஊதியத்தை சேர்த்து ரூ.1.5 கோடியை பெரியார் உலகத்திற்கு வழங்குவதில் மகிகழ்ச்சி.

    பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும். சாதி பெயரில் உள்ள 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்ற பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும். நன் இனத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாவது சிலருக்கு பிடிக்கவில்லை.

    இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்துவது திராவிட மாடல் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டின் அத்தனை சுயமரியாதைக் குடும்பங்கள் சங்கமமாகும் மாநாடாகட்டும் – மறைமலைநகர் மாநாடு.
    • ஒளிரட்டும் – ''பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்'' என்பதை நம் எதிரிகளுக்கு– அவர்களுடன் உதிரிகளுக்கும் உணர்த்திட வாருங்கள்! வாருங்கள்!!

    சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

    இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

     நாளை மறுநாள் (4.10.2025) மறைமலைநகரில் (செங்கற்பட்டு) மிகப் பெரும் திரள் மாநாடாக நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – நமக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, மனுதர்மம் ஒழித்த சமதர்ம சிந்தனை பரவிடவும், சீர்மிகு பிற மாநிலங்களும், உலகமும் வியந்து பாராட்டும் – சமூகநீதித்துறையில் சரித்திரம் காணா சாதனை புரியும் 'திராவிட மாடல்' ஆட்சி மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்தால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வதிந்த ஒடுக்கப்பட்ட மக்களான நமது மக்கள் சரியாசனம் பெற முடியும் என்பதற்குமான விழிப்புணர்வை வற்புறுத்த மாநாடு!

    நம் விழி திறந்த வித்தகர், புதிய வழிகாட்டி, மானத்தையும், அறிவையும் நம்முள் விதைத்து, மனுதர்மத் தாழ்ந்த தமிழ்நாட்டை மட்டும் அல்ல; வீழ்ந்த மக்கள் உலகின் எம்மூலையில் இருப்பினும் அவர்களுக்கான எழுச்சியைப் பெற வைக்கும் ஒரு சமூகப் புரட்சியாளர் அறிவாசான் தந்தை பெரியார் – ஒரு நூற்றாண்டுக்கு முன் தொடங்கி, ஒப்பிட முடியாத சாதனை புரிந்து – தொடர்ந்த எதிர் நீச்சல்களிலும் அடித்தளம் எழுப்பிய மகத்தான மாளிகைக் கட்டுமானமே சுயமரியாதை இயக்கம்!

    1929இல் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடந்த அதே மண்ணில்.... சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணுரிமை மலர்ந்து, ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தைப் படைத்திட, அதே மண்ணில் (செங்கற்பட்டு) – சென்னை மாகாண சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டினை 1929இல் நடத்திய தந்தை பெரியார் புதியதோர் புரட்சியுகத்தின் பிரகடனங்களை வெளியிட்டார்.

    நீதிக்கட்சித் தொடங்கிய 1920இல் இருந்து – 2025இல் அது 'திராவிட மாடலாக', அய்யா பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆட்சியாக, மானமிகு சுயமரி யாதைக்காரரான கலைஞர் தம் ஆட்சியில் நடத்திக் காட்டி வென்ற சமத்துவக் கொள்கைப் பயணத்தோடு தொடர்கின்றது.

    திக்கெட்டும் பாராட்டும் திராவிட நாயகன் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 'திராவிட மாடல்' ஆட்சி – அது ஒரு முழு உருபெருக் கொள்வதை மக்கள் மகிழ்ந்து – உலகம் பாராட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாத திராவிடக் கொள்கை எதிரிகள் இவ்வாட்சியை எதிர்க்க, அழிக்க வரும் 2026ஆம் ஆண்டுத் தேர்தலையொட்டி கூலிப்படைகளை, 'குத்தகைப் படைகளையும்', சினிமா கவர்ச்சியாளர்களையும் மட்டுமே நம்பி, பல ஏமாற்று உத்திகளோடு வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு எச்சரித்து, நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கும் மாநாடே – மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு!

    ஒப்பற்ற நம் முதலமைச்சர், பழிக் குற்றச்சாட்டுகளை தூசிகள் எனத் தட்டி விட்டு கம்பீர நடையுடன் நம்முடன் வரவிருக்கின்றார்! நன்றியுள்ள அனைவரும் அவரை வரவேற்க வர வேண்டாமா?

    நமது முதலமைச்சர் கோடானு கோடி மக்களது, இதயச் சிம்மாசனத்தில் அவர் அன்பு, அறம், ஆளுமைகளில் நிலைத்திருப்பவர். வெற்று விளம்பரச் சரக்கல்ல; மாறாக நாளும் சரித்திரம் படைக்கும் தன்மானப் பெருந் தலைவர்.

    ''தலைகுனிய விட மாட்டோம் தமிழ்நாட்டை'' என்று சூளுரைத்து – சூடு போட்டு வரும் செயல் வடிவ திராவிடச் சிற்பி அல்லவா?

    பழிதூற்றல், தகுதியற்றவர்கள் தலை கொழுத்துக் கூறுகின்ற அவதூறு தூசுகளைத் தட்டி – இடையறாத் தொண்டாற்றும் தொண்டறத்தை வரவேற்க வர வேண்டாமா?

    வாருங்கள் தோழர்காள் அனைவரும்! கைகோர்த்து நின்று – போராதரவு தந்து – பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவோம்! 

    ''அடாது மழை என்றாலும் விடாது நடக்கும் எம் நிகழ்ச்சி'' என்பதற்கேற்ப சரியான ஏற்பாடுகள் தயார்!

    பருவம் பார்த்து உழைப்பதற்கு என்றும் தயங்காதவர்களல்லவா நாம்! உலகம் பெரியார் மயம், பெரியார் உலகமயம்!

    தமிழ்நாட்டின் அத்தனை சுயமரியாதைக் குடும்பங்கள் சங்கமமாகும் மாநாடாகட்டும் – மறைமலைநகர் மாநாடு.

    ஒளிரட்டும் – ''பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்'' என்பதை நம் எதிரிகளுக்கு– அவர்களுடன் உதிரிகளுக்கும் உணர்த்திட வாருங்கள்! வாருங்கள்!!" என்று அழைப்பு விடுத்துள்ளார். 

    • ஜாதி கடந்து பழகியதற்காகக் கொலை நிகழ்வது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றல்லவா?
    • ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்

    பாளையங்கோட்டையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவ கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கவினின் காதலியின் சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைதான சுர்ஜித்தின் பெற்றோரும், சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி கவினின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கவினும், அந்த பெண்ணும் இருக்கும் புகைப்படத்தை அவரது உறவினர்கள் வெளியிட்டு, இதை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

    இந்நிலையில், ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட விச்வகர்ம குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "சனாதனத்தின் கோர முகமான ஜாதியின் கொடிய விளைவுகளில் ஒரு துளி தான் ஆணவப் படுகொலைகள். ஜாதியின் பெயரால் நாட்டில் நடக்கும் அநீதிகளைப் பார்த்த பின்னும், சட்ட ரீதியாக இன்னும் ஜாதி ஏற்கப்படுகிறதே, அது மதம் என்னும் பாதுகாப்புக்குள் இன்னமும் பதுங்கிக் கொண்டிருக்கிறதே, இது அறிவார்ந்த ஜனநாயக சமூகத்தால் ஏற்கத்தக்கதா?

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13 (2), 25 (1), 26, 29 (1), (2), 368 ஆகிய பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கின்ற வகையில் இருக்கின்றன என்று எடுத்துக்காட்டி, அதனைக் கொளுத்தும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்ததன் அடிப்படையில், 10000 பேர் கொளுத்திச் சிறை சென்றார்களே, அது ஜாதி ஒழிப்புக்காகத் தானே!

    "ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? என்று 68 ஆண்டுகளுக்கு முன் 1957-இல் கேட்ட தந்தை பெரியாரின் கேள்விக்கு இன்னமும் பதில் இல்லையே!

    இந்த நவீன யுகத்திலும், ஜாதி கடந்து பழகியதற்காகக் கொலை நிகழ்வது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றல்லவா? பொறியாளர் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். படித்து, காவல்துறை பணியில் இருக்கும் குடும்பம் இத்தகைய கொலைக்குப் பின்னால் இருக்கிறது; இளைஞர் ஒருவர் ஆணவக் கொலையைச் செய்திருக்கிறார் என்றால் ஜாதிய நஞ்சு எப்படி மூளையில் ஏறியிருக்கிறது, சிந்தனையை எப்படி மழுங்கடித்திருக்கிறது என்பது ஆழ்ந்த கவலையோடும், கவனத்தோடும், தீவிரத்தோடும் அணுக வேண்டிய ஒன்றாகும்.

    ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியா முழுக்க இந்தச் சட்டம் அவசியமாகிறது. சட்டம் வந்தாலும், அதனை முழுமையாக, சரியாகப் பயன்படுத்த வேண்டும். கொடுமைகள் நடந்தபின் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மட்டுமல்ல; வரும் முன் காப்பதற்கான ஏற்பாடுகளுக்கும் சட்டத்தில் இடம் வேண்டும். ஜாதி உணர்வுகளைத் தூண்டும் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    நெல்லையில் ஜாதி ஆணவத்தால் கொல்லப்பட்ட பொறியாளர் கவின் செல்வகணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய கொடூரங்கள் நிகழாமல் தடுக்கும் பணியில் இன்னும் முனைப்புடன் ஈடுபடுவதே நாம் ஏற்க வேண்டிய உறுதியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம்.
    • தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பேரறிஞர் அண்ணா நினைவு நாளான இன்று ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி, மாநில உரிமை, சேது சமுத்திர கால்வாய் திட்டம் இதையெல்லாம் மையப்படுத்தி பிரச்சாரத்தை ஈரோட்டில் தொடங்க இருக்கின்றோம்.

    அதற்கு முன்பாக வெற்றி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இல்லத்தில் திருமகன் ஈவெரா படத்திற்கு மாலை அணிவித்தேன். ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம். ஆகவே இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி இருக்கும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும். திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும்.

    மிகப்பெரிய அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி இன்று அடமான பொருளாக மாறி இருக்கிறது. அதை பந்தாடிக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. அதற்கு விடை இந்த தேர்தலில் கிடைக்கும்.

    அண்ணாமலை, எடப்பாடி சந்திப்பு குறித்த கேள்விக்கு, எதுவாக இருந்தாலும் நட்ட கணக்கில் இருந்தவர்கள் மீள முடியாது. அடமான பொருள் எப்போது திரும்பி மீட்கிறார்களோ அப்போது தான் அவர்கள் எதிர்க்கட்சி என்ற தகுதியை கூட பெற முடியும். இல்லையென்றால் அதையும் இழக்க கூடிய சூழ்நிலையை இந்த தேர்தல் ஏற்படுத்தும். நாளை நடப்பதை யார் அறிவார் என்ற பாட்டு பாடக்கூடிய பரிதாப நிலையில் அ.தி.மு.க. இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொண்டர்கள் சித்தாந்தங்களை பின்பற்றி மாற்று சித்தாந்தம் கொண்டவர்களோடும் கலந்துரையாட வேண்டும்.
    • யார் யாருடனெல்லாம் பழகி பேச வேண்டும் என்று மிகப் பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன்.

    சென்னை:

    அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி திட்டமான தலைவா திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தொண்டர்கள் சித்தாந்தங்களை பின்பற்றி மாற்று சித்தாந்தம் கொண்டவர்களோடும் கலந்துரையாட வேண்டும். நான் எதிர்மறை சித்தாந்தம் கொண்ட தலைவர்களுடன் பழக ஆசைப்படுகிறேன். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த ஆசைப்படுகிறேன்.

    எதிர்தரப்பு கொள்கை உடையவர்களுடன் பழகும் போது நமது மனம் திறக்கும். நான் அத்தகையோருடன் பழகினேன். அந்த தருணங்களில் எனக்குள் ஒரு கண் திறந்தது. யார் யாருடனெல்லாம் பழகி பேச வேண்டும் என்று மிகப் பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். அதில் ஒருவர் தான் கி.வீரமணி.

    நான் பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்திக்க விரும்புவதாக கட்சிக்காரர்களிடம் கூறினேன்.

    அதை கேட்டதும் கட்சிக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பா.ஜனதா தலைவர் கம்யூனிஸ்டு தலைவரை சந்திக்கலாமா என்று தயங்கினார்கள். ஆனால் நான் நல்ல கண்ணுவை நேரில் சந்தித்து அவரது ஆசியையும் பெற்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில அரசுகளின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டால் அது மக்களை அவமதிப்பதற்கு உரிய செயல்.
    • தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மத்திய அரசு கவர்னர்களை வைத்து போட்டி அரசியல் செய்கிறது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூக நீதி. எல்லோருக்கும், எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி. தமிழகத்தில் நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியில் ஒரு வீட்டில் 4 பெண் குழந்தைகள் இருந்தாலும் அனைவருக்கும் ரூ.1000 நிதி உதவி அளித்தது சமூக நீதி. பெண்கள் படித்தால் ஒரு குடும்பம் முன்னேறும் என சொன்னது திராவிட தத்துவம்.

    மேலும் ஆன்லைன் சூதாட்டம் குறித்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே திராவிடர் கழகம் தொடர்ந்து அறிவுறுத்தியதன் விளைவாக அ.தி.மு.க.வினர் சில, பல ஓட்டைகளுடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினர்.

    இதனால் அந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க முடியாமல் போனது. தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஓட்டை இல்லாமல் போடப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திடாமல் தமிழ்நாடு கவர்னர் காலம் தாழ்த்து வருகிறார்.

    இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் ஒன்றிய அரசு தடுக்கிறது. மாநில அரசுகளின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டால் அது மக்களை அவமதிப்பதற்கு உரிய செயல்.

    தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மத்திய அரசு கவர்னர்களை வைத்து போட்டி அரசியல் செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திராவிடர் கழக மாநில பொதுக்குழுக்கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் எதிரில் உள்ள மல்லிகை அரங்கில் இன்று காலை தொடங்கியது.
    • ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

    ஈரோடு:

    திராவிடர் கழக மாநில பொதுக்குழுக்கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் எதிரில் உள்ள மல்லிகை அரங்கில் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்திற்கு செயலவை தலைவர் அறிவுக்கரசு தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

    கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர் சு.முத்துசாமி, எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மேயர் நாகரத்தினம் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    • எந்த கவர்னரும் செய்யாத ஒரு செயலை அவர் செய்து வருகிறார்.
    • முதல்வர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாம்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் மணி மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார், அறக்கட்டளை நிறுவனர் கணேசன் ஆகியோர் சிலை திறப்பு விழா மற்றும் பள்ளியின் 40 ஆம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி தலைமை அறங்காவலர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிர்வாக அறங்காவல சிவானந்தம், நிதி அரங்கம் கர்ணன், அறங்காவலர்கள் சண்முகம், பொம்மி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் பள்ளி தாளாளர் கலியமூர்த்தி வரவேற்று பேசினார்.

    பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் சிலையை கல்யாணசுந்தரம் எம்.பி. திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்க ப்பட்டுள்ள அறக்கட்டளை யின் நிறுவனர் கணேசன் சிலையை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முருகானந்தம் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு தேர்வில் முதல் மூன்று நிலை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் அமலா தங்கத்தாய் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அணைக்கரை கோகிலாம்பாள் கல்வி நிறுவனங்கள் தலைவர் அன்பழகன், பாபநாசம் பெனிபிட்பண்ட் தலைவர் ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் மோகன், அறங்கா வலர்கள் ஜெயராமன், குணசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பள்ளி துணை முதல்வர் காளிதாசன் நன்றி கூறினார்.

    முன்னதாக தி.க. தலைவர் வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-

    திராவிட மாடல் அரசுக்கு போட்டி அரசாங்கத்தை கவர்னர் செய்து வருவதாக தெரிகிறது. அதன் காரணமாக தான் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். எந்த கவர்னரும் செய்யாத ஒரு செயலை அவர் செய்து வருகிறார். முதல்வரின் அதிகாரத்தில் கவர்னர் தலையிட எந்த உரிமையும் இல்லை. முதல்வர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாம். அந்த உரிமையில் தலையிட கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொருளாதார கல்வி நிலையை அறியவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
    • யாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் முடிவு.

    திருச்சி:

    திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சமூக நீதியை நிலைநாட்டவும், மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை அறியவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 3-ந் தேதி வரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மேற்கொள்ளும் பரப்புரையை வெற்றிகரமாக நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனைதொடர்ந்து கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பாடுபட்ட தொழிலாளர் தலைவர் சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. கவர்னருக்கு இல்லாத அதிகாரத்தையெல்லாம் அவர் செய்து கொண்டு இருக்கிறார். யாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் முடிவு. அதில் கவர்னர் தலையிட முடியாது.

    தற்போது கவர்னர் அவருக்கான பணியை செய்யாமல் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நிச்சயமாக கவர்னர் என்ற பதவி இருக்க வேண்டுமா? என்ற கேள்வி மறுபரிசீலனைக்கு உள்ளாகும். உடல் உறுப்பு தானம் கொடுத்தவர்களுக்குகூட அரசு மரியாதை வழங்குகிற மகத்தான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே பங்காரு அடிகளாரின் மனிதநேயத்தை போற்றுவது அரசின் கடமை. ஆகவே அவருக்கு அரசு மரியாதை வழங்குவதில் தவறில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.
    • தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா 3-வது முறையும் ஆட்சி அமைத்தால், இதுதான் கடைசி தேர்தல் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதை காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, வருகிற தேர்தல் மூலம் இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் மக்கள் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.

    வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு தேர்தலில் நிற்பதற்கு கூட வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. அதனால் பிரதமர் அசாமுடன் திரும்பி வந்து விட்டார். இச்சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் மிகவும் அமைதியாக பெரிய அளவில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.


    எனது பிரசாரம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி தொடங்கி 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும். இதன் அடிப்படையில் எங்களது பிரசாரம் அமையும்.

    தமிழகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் வந்து பேசுகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது. எனவே, தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×