என் மலர்
நீங்கள் தேடியது "பெரியார்"
- தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும்.
- இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள்.
பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மறைமலைநகர் பெரியார் திடலில் நடக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நான் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். கருஞ்சட்டைக்காரர்கள் தமிழ்நாட்டின் காவலுக்கு கெட்டிக்காரர்கள்.
தமிழ் சமுதாயத்திற்காக 92 வயதிலும் இளைஞர் போல் ஓய்வின்றி ஊழைத்து வருகிறார். கி.வீரமணி. கலைஞர், பேராசிரியருக்கு பிறகு தன்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. இந்த வயதிலும் தினமும் எழுதுகிறார், பிரசாரம் செல்கிறார்.
பெரியாரின் சிந்தனைகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் போற்றப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போற்றுவது பெரியாரின் கொள்கை, திராவிட சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி.
திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.
எனது ஒரு மாத ஊதியம், 126 எம், எம்எல்ஏக்கள் ஊதியத்தை சேர்த்து ரூ.1.5 கோடியை பெரியார் உலகத்திற்கு வழங்குவதில் மகிகழ்ச்சி.
பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும். சாதி பெயரில் உள்ள 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்ற பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும். நன் இனத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாவது சிலருக்கு பிடிக்கவில்லை.
இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்துவது திராவிட மாடல் அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டின் அத்தனை சுயமரியாதைக் குடும்பங்கள் சங்கமமாகும் மாநாடாகட்டும் – மறைமலைநகர் மாநாடு.
- ஒளிரட்டும் – ''பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்'' என்பதை நம் எதிரிகளுக்கு– அவர்களுடன் உதிரிகளுக்கும் உணர்த்திட வாருங்கள்! வாருங்கள்!!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை மறுநாள் (4.10.2025) மறைமலைநகரில் (செங்கற்பட்டு) மிகப் பெரும் திரள் மாநாடாக நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – நமக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, மனுதர்மம் ஒழித்த சமதர்ம சிந்தனை பரவிடவும், சீர்மிகு பிற மாநிலங்களும், உலகமும் வியந்து பாராட்டும் – சமூகநீதித்துறையில் சரித்திரம் காணா சாதனை புரியும் 'திராவிட மாடல்' ஆட்சி மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்தால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வதிந்த ஒடுக்கப்பட்ட மக்களான நமது மக்கள் சரியாசனம் பெற முடியும் என்பதற்குமான விழிப்புணர்வை வற்புறுத்த மாநாடு!
நம் விழி திறந்த வித்தகர், புதிய வழிகாட்டி, மானத்தையும், அறிவையும் நம்முள் விதைத்து, மனுதர்மத் தாழ்ந்த தமிழ்நாட்டை மட்டும் அல்ல; வீழ்ந்த மக்கள் உலகின் எம்மூலையில் இருப்பினும் அவர்களுக்கான எழுச்சியைப் பெற வைக்கும் ஒரு சமூகப் புரட்சியாளர் அறிவாசான் தந்தை பெரியார் – ஒரு நூற்றாண்டுக்கு முன் தொடங்கி, ஒப்பிட முடியாத சாதனை புரிந்து – தொடர்ந்த எதிர் நீச்சல்களிலும் அடித்தளம் எழுப்பிய மகத்தான மாளிகைக் கட்டுமானமே சுயமரியாதை இயக்கம்!
1929இல் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடந்த அதே மண்ணில்.... சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணுரிமை மலர்ந்து, ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தைப் படைத்திட, அதே மண்ணில் (செங்கற்பட்டு) – சென்னை மாகாண சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டினை 1929இல் நடத்திய தந்தை பெரியார் புதியதோர் புரட்சியுகத்தின் பிரகடனங்களை வெளியிட்டார்.
நீதிக்கட்சித் தொடங்கிய 1920இல் இருந்து – 2025இல் அது 'திராவிட மாடலாக', அய்யா பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆட்சியாக, மானமிகு சுயமரி யாதைக்காரரான கலைஞர் தம் ஆட்சியில் நடத்திக் காட்டி வென்ற சமத்துவக் கொள்கைப் பயணத்தோடு தொடர்கின்றது.
திக்கெட்டும் பாராட்டும் திராவிட நாயகன் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 'திராவிட மாடல்' ஆட்சி – அது ஒரு முழு உருபெருக் கொள்வதை மக்கள் மகிழ்ந்து – உலகம் பாராட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாத திராவிடக் கொள்கை எதிரிகள் இவ்வாட்சியை எதிர்க்க, அழிக்க வரும் 2026ஆம் ஆண்டுத் தேர்தலையொட்டி கூலிப்படைகளை, 'குத்தகைப் படைகளையும்', சினிமா கவர்ச்சியாளர்களையும் மட்டுமே நம்பி, பல ஏமாற்று உத்திகளோடு வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு எச்சரித்து, நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கும் மாநாடே – மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு!
ஒப்பற்ற நம் முதலமைச்சர், பழிக் குற்றச்சாட்டுகளை தூசிகள் எனத் தட்டி விட்டு கம்பீர நடையுடன் நம்முடன் வரவிருக்கின்றார்! நன்றியுள்ள அனைவரும் அவரை வரவேற்க வர வேண்டாமா?
நமது முதலமைச்சர் கோடானு கோடி மக்களது, இதயச் சிம்மாசனத்தில் அவர் அன்பு, அறம், ஆளுமைகளில் நிலைத்திருப்பவர். வெற்று விளம்பரச் சரக்கல்ல; மாறாக நாளும் சரித்திரம் படைக்கும் தன்மானப் பெருந் தலைவர்.
''தலைகுனிய விட மாட்டோம் தமிழ்நாட்டை'' என்று சூளுரைத்து – சூடு போட்டு வரும் செயல் வடிவ திராவிடச் சிற்பி அல்லவா?
பழிதூற்றல், தகுதியற்றவர்கள் தலை கொழுத்துக் கூறுகின்ற அவதூறு தூசுகளைத் தட்டி – இடையறாத் தொண்டாற்றும் தொண்டறத்தை வரவேற்க வர வேண்டாமா?
வாருங்கள் தோழர்காள் அனைவரும்! கைகோர்த்து நின்று – போராதரவு தந்து – பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவோம்!
''அடாது மழை என்றாலும் விடாது நடக்கும் எம் நிகழ்ச்சி'' என்பதற்கேற்ப சரியான ஏற்பாடுகள் தயார்!
பருவம் பார்த்து உழைப்பதற்கு என்றும் தயங்காதவர்களல்லவா நாம்! உலகம் பெரியார் மயம், பெரியார் உலகமயம்!
தமிழ்நாட்டின் அத்தனை சுயமரியாதைக் குடும்பங்கள் சங்கமமாகும் மாநாடாகட்டும் – மறைமலைநகர் மாநாடு.
ஒளிரட்டும் – ''பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்'' என்பதை நம் எதிரிகளுக்கு– அவர்களுடன் உதிரிகளுக்கும் உணர்த்திட வாருங்கள்! வாருங்கள்!!" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில்,
"தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!
தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!
தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!"
என்று தெரிவித்துள்ளார்.
- லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
- பெரியார் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை இந்தியாவில் ஒளிபரப்பு.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப்படம் திறப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
அந்த பதிவில், " உலகெங்கிலும் உள்ள மக்களின் தன்மானத்தை சுயமரியாதையையும் காத்தவர் தந்தை பெரியார்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை இந்தியாவில் ஒளிபரப்பப்படுகிறது" என்றார்.
- ஆணை முத்து அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு காரணம் இந்த சமூகத்தில் பிறந்ததால்தான்.
- பட்டியலின மக்களுக்கு 2 விழுக்காடு கூடுதலாக ஒதுக்க வேண்டும்.
பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பெரியளவில் சாதனை செய்த ஆனைமுத்து அய்யாவிற்கு தமிழக அரசும், மத்திய அரசும் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு காரணம் இந்த சமூகத்தில் பிறந்ததால்தான்.
ஆணை முத்து அய்யாவிற்கு நாம் சிலையை நிறுவுவோம். சமீபத்தில் நடந்த மாநாடு வன்னியர் மாநாடு அல்ல சமூக நீதிக்கான மாநாடு. அந்த மாநாட்டில் தீர்மானங்கள் சமூக நீதி அடிப்படையிலேயே போடப்பட்ட தீர்மானங்கள்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு போன்ற மற்ற சமூதாயத்திற்கும் பின்தங்கிய நிலையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
பட்டியலின மக்களுக்கு 2 விழுக்காடு கூடுதலாக ஒதுக்க வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும், போதையை அழிக்க வேண்டும் என்றெல்லாம் போடப்பட்ட தீர்மானம்தான் வன்னியர் சங்க மாநாடு.
சமூகநீதியின் மும்மூர்த்திகள் என்றால் தந்தை பெரியார், பேரறிஞர் ஆனை முத்து, மருத்துவ ஐயா ராமதாஸ் அவர்கள். இதை யாரும் மறுக்க முடியாது. இது வரலாறு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சாதி, மதத்தை ஒதுக்கி வையுங்கள்.
- விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சாதி, மத பாகுபாடு காட்டுவதில்லை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது.
முதல் கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பங்கேற்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சாதி, மத பிரிவினை சிந்தனை உங்களை பிரிவுபடுத்த விடாதீர்கள்.
* போதைப்பொருளை போன்று சாதி, மதத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும்.
* மாணவர்களிடம் சாதி, மத சிந்தனை இருக்கக்கூடாது.
* ஒன்றிய அரசின் யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் பெரியாருக்கு சாதிச்சாயம்.
* பெரியாருக்கே சாதிச்சாயம் பூச முயற்சிக்கிறார்கள்.
* இயற்கையின் அம்சங்களான வெயிலும் மழையும் சாதி, மதம் பார்த்தா வருகிறது.
* விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சாதி, மத பாகுபாடு காட்டுவதில்லை.
* நேர்மறை சிந்தனையுடன் மாணவர்கள் பயணிக்க வேண்டும்.
* எதுவாக இருந்தாலும் அறிவியல்பூர்வமாக மாணவர்கள் அணுக வேண்டும்.
* நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள்.
- தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு இந்த ஆண்டு 979 பேரை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
சென்னையில் 69 மையங்களில் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக பட்டதாரி வாலிபர்கள், டாக்டர் படிப்பை முடித்தவர்கள், என்ஜினீயர்கள் என பலர் தேர்வு மையங்களில் திரண்டனர்.
சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.
சென்னையில் தேர்வு நடைபெறும் 69 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மண்ணடியில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இந்தியில் மட்டுமே வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய தகவல்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதை பார்த்து தேர்வு எழுத சென்றவர்கள் குழப்பம் அடைந்தனர்.
தேர்வு முடிவடைந்த நிலையில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
யுபிஎஸ்சி தேர்வில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார் என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதிலால் சர்ச்சை எழுந்துள்ளது.
சுயமரியாதை இயக்கம் தொடங்கியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கேள்வித்தாளில் 4 விடைகளில் ஒன்றில் பெரியார் பெயருடன் அவரது சாதி பெயரையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு பெரியாரிய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- தமிழக அரசியலை வேறொரு திசையை நோக்கி மடைமாற்றம் செய்ய அவர் விரும்புகிறார்.
- மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்கும் என்று நம்புகிறேன்.
விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் மாணவர் முற்போக்கு அமைப்பாளர், பழங்குடி செயல்பாட்டாளர் வக்கீல் அகத்தியன் இல்ல காதணி விழா மற்றும் வி.சி.க. பிரமுகர்களின் நிகழ்ச்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய அவர் கூறியதாவது:-
மதச்சார்பின்மைக்கு எதிராக வி.சி.க. சார்பில் நடைபெறும் பேரணி அவசியமாகிறது. இந்த பேரணியில் மதச்சார்பின்மையை சார்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும். நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. முதலமைச்சரும் நிதி தரவேண்டுமென வலியுறுத்திருக்கிறார். இனிமேல் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்கும் என்று நம்புகிறேன்.
பெரியார் பற்றி தொடர்ந்து குதர்க்கமாக சீமான் பேசி வருகிறார். இது தேவையற்ற சர்ச்சை. தமிழக அரசியலை வேறொரு திசையை நோக்கி மடைமாற்றம் செய்ய அவர் விரும்புகிறார். அது தமிழகத்திற்கு நல்லது இல்லை.
நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வரையறைகள் வெகுவான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ரிசர்வ் வங்கி அதனை திரும்ப பெற வேண்டும். நகை கடன் வழங்குவதில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இன்னும் உறுதிபடுத்தாமல் உள்ளது என்று தான் கூற காரணம் உடைய வேண்டும் என்பதற்காக அல்ல. அவர்கள் ஒட்டாமல் உள்ளார்கள் என்பதற்காக தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சவுக்கு சங்கர் வீட்டில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
- எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அ.தி.மு.க. சிதைந்து கொண்டு இருக்கிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி வருகை தந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
நாட்டில் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். பிரிவினைவாதம் அல்ல. இந்திய எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவரும் இந்தியர் என மகாத்மா காந்தி கூறினார். அவர்களை மத ரீதியாக பிரிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இந்தியா வலிமை மிக்க நாடாக இருப்பதற்கு காரணம் வேற்றுமையில் ஒற்றுமை மட்டும்தான். ஆனால் இன்று துணை ஜனாதிபதியோ உச்சநீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறார்.
ஜனநாயகத்தில் குடியரசு தலைவர் உள்பட யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். கவர்னருக்கு எதிரான வழக்கை கொண்டு சென்று இந்தியாவுக்கான தீர்ப்பை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார்.
தமிழகத்தின் பல்கலைக்கழக வேந்தராகவும் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை சட்டத்தின் வாயிலாக பெற்றுள்ளார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி என்பது எழுச்சி இல்லாத கூட்டணியாக உள்ளது. ஒரு கூட்டணி அமைந்தால் அது 2 தரப்பைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அ.தி.மு.க. சிதைந்து கொண்டு இருக்கிறது. அந்த கட்சி தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் அது போன்ற பிரச்சினை இல்லை.
வருகிற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியே மகத்தான வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கேட்போம்.
அமைச்சர் பொன்முடி பேசியது தவறானது. அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். கட்சி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. ஒரு தவறுக்கு ஒரு தண்டனைதான். பெரியார் பேசியதை விடவா பொன்முடி பேசி விட்டார். இதை எதிர்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றனர்.
சவுக்கு சங்கர் வீட்டில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்கும் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?
- மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?
நேற்று மாநிலங்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், "திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்து த.வெ.க. தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?
முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?
குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?! பெரியார் போற்றுதும் பெரியார் சிந்தனை போற்றுதும்" என்று பதிவிட்டுள்ளார்.
- தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்திற்கு மாலை போடுகிறீர்கள் என நிர்மலா சீதாராமன் பேச்சு
- நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நேற்று முன்தினம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், "யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பின்தங்கியுள்ளது. 3 ஆம் வகுப்பு மாணவர்களால் 1 ஆம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை.
திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று கொளத்தூர் மணி அவர்கள் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், "தந்தை தன் மகனையோ, மகளையோ பார்த்து, தறுதலை என்று பேசுவது அவன் தறுதலையாகப் போகவேண்டும் என்ற விருப்பத்தில் அல்ல. உன்னை மாற்றிக் கொள் என்பதற்காக. பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதுகூட, தமிழ் அறிவியல் இல்லாத வெறும் மதமும் காதலும் மட்டுமே கொண்ட மொழியாக இருக்கிறது, அறிவியல் இல்லை என்ற கோபத்தால் வந்ததாக புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் பெரியார் கூட சொன்னார்... 'யாராவது அறிவியல் சார்ந்த, மக்கள் முன்னேற்றம் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து வந்தால் என் செலவில் அச்சிட்டு உங்களுக்கு சன்மானமும் கொடுக்க தயாராக இருக்கின்றேன்' என்று அறிவித்தவர் பெரியார்" என்று தெரிவித்துள்ளார்.
- திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- சேதுசமுத்திர திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று திண்டுக்கல் வந்தார். பின்னர் திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
தந்தைபெரியார் ஒரு பேராயுதம். மதவெறி, சாதிவெறி, பதவிவெறி போன்றவற்றையெல்லாம் தீர்க்ககூடிய பேராயுதமாக இளைஞர்களின் கையில் இருந்து வருகிறார். அதன் விளைவாக உடலால் வாழ்ந்த காலத்தைவிட உணர்வால் நிறைந்த காலமாக இந்த காலம் உள்ளது. எதிரிகள் கூட பெரியாரை கண்டு இன்னும் பயப்படுகிறார்கள். பெரியாரின் சிலையை கண்டு அஞ்சக்கூடிய நிலையில் உள்ளனர். தென்மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய மாபெரும் திட்டம் சேதுசமுத்திர கால்வாய்திட்டம்.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தென்தமிழகம் மிகப்பெரிய அளவிற்கு பயன்பெற்றிருக்கும். மதுரையில் இத்திட்டத்திற்கான தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ரூ.2000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது.
வேண்டுமென்றே ஒருசிலர் ராமர்பாலம் இருப்பதாக கூறி இத்திட்டத்தை நிறுத்தினர். இதனால் வேறுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என பா.ஜ.க மத்தியமந்திரிநிதின் கட்கரி தெரிவித்தார். ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இத்துறைக்கான அமைச்சர் பேசுகையில், ராமர்பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது என கூறியுள்ளார். இதன் மூலம் பொய்யான காரணத்தை கூறி இத்திட்டத்தை பா.ஜ.க அரசு முடக்கியுள்ளது.
தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு பிறகாவது சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்தியஅரசு முன்வரவேண்டும். இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






