search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UPSC exam"

    • வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.
    • சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.

    அரசு தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பலரும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படிப்பதை காணமுடியும். அந்த வகையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நேரத்திலும் ஜோமோட்டோ ஊழியர் ஒருவர் தேர்வுக்கு படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'எக்ஸ்' தளத்தில் ஆயுஸ் சங்கி என்ற பயனர் பகிர்ந்த அந்த வீடியோவில், பரபரப்பான சாலையில் போக்குவரத்து நெரிசலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நிற்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. அப்போது அந்த வாலிபர் தனது செல்போனில் யூனைடெட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( யு.பி.எஸ்.சி.) விரிவுரைகளை பார்க்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு, கடினமாக படிக்க உங்களுக்கு வேறு உந்துதல் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று ஆயுஸ் சங்கி பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் ஜோமோட்டோ ஊழியரின் ஆர்வத்தை பாராட்டி பதிவிட்டனர். சிலர், இந்த வீடியோ மிகவும் ஊக்கமளிக்கிறது. இது முன்பை விட கடினமாக உழைக்க வேண்டும் என்ற உந்துதலை தருகிறது என பதிவிட்டுள்ளனர். அதேநேரம் சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.

    • தேர்வு மையங்களில் கைப்பேசி ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று எடுத்து வர வேண்டும்

    கோவை,

    யுபிஎஸ்சி தேர்வு கோவை மாவட்டத்தில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) நடைபெறவுள்ளது.

    இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியுள்ளதாவது:-

    கோவை மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வை 7,815 பேர் எழுதவுள்ளனர். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 8 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 171 அறைக்கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், மேலும் 163 அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் என மொத்தம் 334 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை செயலர் நிலையில் அலுவலர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    தேர்வு மையங்களில் கைப்பேசி ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எளிதில் செல்லும் வகையில், உக்கடம், சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம் பஸ் நிலையங்களில் இருந்து பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    தேர்வர்கள் தேர்வு தொடர்பான அறிவுரைகளை பெறும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வர வேண்டும்.

    யுபிஎஸ்சி இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இருவரும் சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளதாக யுபிஎஸ்சி கூறி உள்ளது
    • யுபிஎஸ்சி-யின் கட்டமைப்பு வலுவானது மற்றும் முறைகேடாக பயன்படுத்த முடியாது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா மக்ரானி, பீகாரைச் சேர்ந்த துஷார் ஆகியோர் தேர்வானதாக கூறியிருந்தனர். உண்மையிலேயே தேர்ச்சி பெற்ற இரண்டு நபர்களின் பெயர்களைப்போன்றே அவர்களின் பெயர்களும் இருந்ததால் அந்த பெயர்களை காட்டி அது தாங்கள்தான் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. யுபிஎஸ்சி தேர்வு முறையில் குளறுபடி நடந்திருக்கலாம் என்ற சர்ச்சையும் எழுந்தது.

    ஆனால் யுபிஎஸ்சி நிர்வாகம், ஆவணங்களை சரிபார்த்ததில் ஆயிஷா மக்ரானி,  துஷார் இருவரும் தேர்வாகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, தேர்வானதாகக் கூறப்படும் இரண்டு நபர்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது.

    இதுதொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேர்வானதாக இருவரும் கூறியது உண்மையல்ல. அவர்கள் தங்களுக்கு சாதகமாக போலியான ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம், ஆயிஷா மக்ரானி மற்றும் துஷார் இருவரும் சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளனர்.

    எனவே, தேர்வு விதிகளின் விதிகளின்படி, அவர்களின் மோசடி செயல்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்குமுறை சட்ட நடவடிக்கை ஆகிய இரண்டையும் மேற்கொள்ள யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது. யுபிஎஸ்சி-யின் கட்டமைப்பு வலுவானது மற்றும் முறைகேடாக பயன்படுத்த முடியாது. எனவே அத்தகைய தவறுகள் நடக்க சாத்தியமில்லை.

    பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் இதுபோன்ற உரிமைகோரல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன், யுபிஎஸ்சி-யிடமிருந்து உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாத்திமாவின் கார்டில் க்யூஆர் குறியீட்டுடன் யுபிஎஸ்சியின் வாட்டர் மார்க் இருந்துள்ளது.
    • மக்ராணியின் அட்டையில் எந்த க்யூஆர் குறியீடும் இல்லாமல் சாதாரண காகிதத்தில் பிரிண்ட் அவுட் போன்று ஒட்டிருந்தது.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஆயஷா பாத்திமா (23) மற்றும் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆயஷா மக்ராணி (26). இருவரும் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில், இதில் ஆயஷா பாத்திமாவும், ஆயஷா மக்ராணியும் ஒரே பதிவு எண்ணுடன் ஒரே ரேங்க்கில் (184வது ரேங்க்) தேர்ச்சி பெற்றுள்ளதாக முடிவு வெளியாகி இருந்தது. இரண்டு பெண்களுக்கும் ஒரே எண், ஒரே முன் பெயர், ஒரே ரேங்க் இருக்கும்பட்சத்தில் அந்த 184வது ரேங்க் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வியும் எழுந்தது.

    இதையடுத்து, சுமார் 200 கி.மீ இடைவெளியில் வசிக்கும் இரண்டு பெண்களும் தங்களின் அட்மிட் கார்டுடன் உள்ளூர் காவல்துறையில் யுபிஎஸ்சி மோசடி செய்துள்ளதாகக் கூறி விளக்கம் கேட்டு புகார் அளித்தனர்.

    இருவரும் தங்களது அட்மிட் கார்டுகளை சமர்ப்பித்தனர். அதில், இருவருக்கும் ஒரே பதிவு எண் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், மக்ரானியின் அட்மிட் கார்டில், ஆளுமைத் தேர்வின் தேதி ஏப்ரல் 25 (வியாழன்) என்றும், பாத்திமாவின் தேதியில் ஏப்ரல் 25 (செவ்வாய்கிழமை) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும், பாத்திமாவின் கார்டில் க்யூஆர் குறியீட்டுடன் யுபிஎஸ்சியின் வாட்டர் மார்க் இருந்துள்ளது. அதே சமயம் மக்ரானியின் அட்டையில் எந்த க்யூஆர் குறியீடும் இல்லாமல் சாதாரண காகிதத்தில் பிரிண்ட் அவுட் போன்று ஒட்டிருந்தது.

    இந்நிலையில், தீவிர ஆவண சரிபார்ப்புக்கு பிறகு 184வது ரேங்க் ஆயஷா பாத்திமாவுக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது. இது போன்ற தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று யுபிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார்.
    • யுபிஎஸ்சி தேர்வில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடமும் பிடித்தனர்.

    தேர்ச்சி பெற்றவர்களில் 345 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள், 99 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள், 263 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 154 பேர் எஸ்சி பிரிவையும், 72 பேர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள். 

    யுபிஎஸ்சி தேர்வை முன்னிட்டு சென்னை புறநகர் ரெயில்கள் அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை புறநகர் ரெயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    தேர்வுகளுக்குச் செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யாவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya
    திருவனந்தபுரம்:

    2018-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா(வயது 22) 410-வது இடம் பிடித்து வெற்றி பெற்று உள்ளார். கேரள மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.



    இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

    “ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவருடைய கனவை இன்று நினைவாக்கி உள்ளது. ஸ்ரீதன்யாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். அவர் தேர்வு செய்யும் பதவியில் மிகப்பெரும் வெற்றியை பெற வாழ்த்துகிறேன்” என்று கூறி உள்ளார்.

    இதேபோல் கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனும், ஸ்ரீதன்யாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், “சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் ஸ்ரீதன்யா பெற்ற வெற்றியை மன மகிழ்ந்து பாராட்டுகிறேன். அவருடைய வெற்றி, மற்ற மாணவர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்” என்றும் அவர் தனது முகநூலில் பதிவிட்டு உள்ளார்.   #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya
    ஐஏஎஸ் தேர்வில் புளூ டூத் வைத்து காப்பியடித்து கைது செய்யப்பட்ட தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். #SafeersKarim
    சென்னை:

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐபிஎஸ், ஐஏஎஸ் பதவிகளுக்காக நடந்த தேர்வில் புளூ டூத் வைத்து காப்பி அடித்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் கையும் களவுமாக பிடிபட்டார். சபீர் கரீம் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்தார். கேரளாவில் அவரது பெயரில் அவருடைய மனைவி ஐஏஎஸ் பயிற்சி அகாடமி நடத்துகிறார்.



    காப்பி அடிக்க உதவிய அவரது மனைவி ஜாய்சி, அவரது நண்பரும் தனியார் ஐஏஎஸ் அகாடமி இயக்குனருமான ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சபீர் கரீமிடமிருந்து தேர்வு அறைக்குள் மறைத்துக் கொண்டுசென்ற 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சபீர் கபீர் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சபீர்கரீம் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், யுபிஎஸ்சி தேர்வாணைய  விசாரணைக்கு பின், சபீர்கரீம் ஐபிஎஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் வரலாற்றில் பதவிநீக்கம் செய்யப்படுவது இது முதல் முறை ஆகும். #SafeersKarim
    ×