search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social Justice"

    • அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய போது அவரை நிற்க வைத்து பிரதமர் மோடி அமர்ந்தபடி உள்ளார்.
    • பழங்குடியின பெண் என்பதால் குடியரசு தலைவருக்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கொடைக்கானலில் நடிகை ரோகினி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக மக்கள் நலனுக்காக தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம் ஆகியவை காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். இது போன்ற திட்டங்கள் தமிழகத்தை கடந்தும் பல்வேறு மாநிலங்களில் போற்றப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கான கல்வி 27 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு சமூக நீதி திட்டங்களால் பெண் கல்வி உயர்ந்து வருகிறது. பழங்குடியின பெண் என்பதால் குடியரசு தலைவருக்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறது. நாடாளுமன்ற திறப்பு விழாவில் அவருக்கு அழைப்பு இல்லை. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய போது அவரை நிற்க வைத்து பிரதமர் மோடி அமர்ந்தபடி உள்ளார். இதுதான் அவர்கள் பெண்களுக்கு அளிக்கும் மரியாதை.

    கோவிலின் கருவறைக்குள் கூட பெண்கள் வரக்கூடாது. கோவிலை நாங்கள்தான் திறப்போம் என்று பா.ஜ.க. கூறுவது எந்த விதத்தில் நியாயம். மல்யுத்த வீரர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் போது நம் நாட்டுக்காக பதக்கம் பெற்றுத் தந்த வீரர், வீராங்கனைகள் நடுரோட்டில் போராட்டம் நடத்தினர்.

    ஆனால் அவர்களது கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை. பா.ஜ.க. அரசின் அடக்குமுறைகளை வெளிக் கொண்டு வருபவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல மருந்து நிறுவனங்கள் மீது புகார் எழுந்த நிலையில் தரச்சான்று வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது பா.ஜ.க. அரசுக்கு ரூ.பல கோடி மதிப்பில் அந்த நிறுவனம் தேர்தல் பத்திரம் வாங்கியதால் அந்த நிறுவனத்துக்கு உடனடியாக தரச்சான்று வழங்கப்பட்டது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை தீவிரவாதிகள் போல் நடத்தியது மத்திய பா.ஜ.க. அரசு. எனவே இது போன்ற அரசை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை தமிழகம் முழுவதும் வெற்றிபெற வைப்பதன் மூலம் நாம் மத்திய அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும்.
    • வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடியிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார்.

    2004-ம் ஆண்டில் சமூகநீதிக் கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த அளவு உறுதியுடன் இருந்ததோ, அதே உறுதியுடன் தான் இப்போதும் உள்ளது. பாராளுமன்றத்தில் அப்போதிருந்த அளவுக்கு வலிமையை இப்போதும் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும்.

    பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

    இது ஒருபுறம் இருக்க, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா? என்பதை நேர்மையுடனும், மனசாட்சியுடனும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறைக் கொண்டவர் போல நடிக்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.

    ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்... சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். அதை தி.மு.க. விரைவில் உணரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சமமான வாய்ப்புகளை உறுதி செய்ய இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது
    • இவ்வருட கருப்பொருள் "இடைவெளிகளை நிரப்புதல், கூட்டணிகளை உருவாக்குதல்" ஆகும்

    1995ல் ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் சமூக வளர்ச்சிக்கான உச்சி மாநாடு (Summit for Social Development) நடைபெற்றது.

    இந்த உச்சி மாநாட்டின் முடிவில் "கோபன்ஹேகன் பிரகடனம்" (Copenhagen Declaration) மற்றும் செயல் திட்டம் (Programme of Action) உருவானது. இது வறுமை, வேலையின்மை மற்றும் பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்தது.

    பிறகு 2007ல், "உலக சமூக நீதிக்கான தினம்" (World Day of Social Justice) முதன்முதலில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அறிவிக்கப்பட்டது. 


    ஆண்டுதோறும் பிப்ரவரி 20 அன்று "உலக சமூக நீதிக்கான தினம்" அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நாள், சமூக நீதியை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் அவர்களின் விருப்பம் போல் லட்சியங்களை அடைய வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    இந்த தினம், சமூக நீதிக்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அலசவும், எஞ்சியிருக்கும் சவால்களை அடையாளம் காணவும், சமூக அமைதியை நிலைநாட்ட தேவைப்படும் கூட்டு முயற்சிகள் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கும் சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைவருக்கும் ஒரு வாய்ப்பாகும்.


    2024 வருடத்திற்கான உலக சமூக நீதி தின கருப்பொருள் (theme) "இடைவெளிகளை நிரப்புதல், கூட்டணிகளை உருவாக்குதல்" (Bridging Gaps, Building Alliances) என்பதாகும்." உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.

    சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும், பாகுபாடுகளையும், சமத்துவமின்மையையும் எதிர்த்து போராடவும் இந்த நாளில் நாம் உறுதியேற்போம்.

    அனைவருக்கும் நியாயமான உலகத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாகும்.

    • நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
    • பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    நாளை(பிப் 20) தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.Tamil Nadu government announcement that big 7 Tamil dreams will be included in the budget

    நாளை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், "சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், நீ அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

    • மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு
    • அரசு குடியரசு தலைவராகி பெருமைப்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த பழங்குடியினர் கவுரவப்படுத்தும் விழாவில் பழங்குடியினரை தரையில் அமர வைத்த விவகாரம் தற்போது பூதாகரமாகி உள்ளது. 

    இந்த நிலையில் புதுவை லாஸ்பேட்டை விவேகா னந்தா பள்ளி வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹாலில் பா.ஜனதா சார்பில் பழங்குடி சமூக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. புதுவை பா.ஜனதா மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி. தலைைம தாங்கினார்.

    நிகழ்ச்சியில், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் அசோக் பாபு எம்.எல்.ஏ, ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பழங்குடியின சுதந்திரப் போராட்ட தியாகி மிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ந்் தேதி பழங்குடியின மக்களின் கவுரவ தினமாக பிரதமர் மோடி கொண்டாடி னார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களுக்காக திட்டங்களை தொடங்கி வைத்தார். யார் யாரெல்லாம் சமூக நீதி பேசும் இங்கு சமூக நீதி காக்கும் ரியல் ஹீரோவாக பிரதமர் மோடி விளங்குகிறார்.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்த உடன் சிறுபான்மை யினர் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் கலாமை குடியரசு தலைவரானது 2014-ல் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவரானது, மீண்டும் 2019 மோடி தலைமையிலான ஆட்சியில் நமக்காக பழங்குடியின மக்களுக்காக பேசக்கூடிய வகையில் பழங்குடியின மக்களில் ஒருவரான திரவுபதி முர்மு ஒருவரை பா.ஜனதா அரசு குடியரசு தலைவராகி பெருமைப்படுத்தி உள்ளது.

    வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது பழங்குடி யினருக்கான தனி ஆணை யம் அமைக்கப்ப ட்டது. பிரதமர் மோடி ஒரு கோடியே 25 லட்சம் பழங்குடியின வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை உருவாக்கித் தந்துள்ளார். 1.5 கோடி பழங்குடியின வீடுகளுக்கு கழிவறையும், 50 லட்சம் பேருக்கு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. 95 லட்சம் பழங்குடி யின மக்கள் விவசாய தொகை பெறுகின்றனர்.

     ரத்த சோகை அதிகம் உள்ள பழங்குடியின மக்களின் 58 லட்சம் பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு மேலும் 7 கோடி பேருக்கு இந்த பரிசோதனை நடக்க உள்ளது. பழங்குடியின மாணவர்கள் கல்வி பெறவும் வெளிநாடுகளில் தங்கி படிக்கவும் 17 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. 111 மாணவர்கள் வெளிநாட்டில் தங்கி படிக்கும் நிலையை மோடி அரசு உருவாக்கி உள்ளது.

    மலைப்பிரதேசங்களில் வாழும் பழங்குடியின மக்கள் படிப்பதற்காக நாடு முழுவதும் 401 பள்ளிகள் ஏகலைவா பள்ளிகள் தொடங்கப்பட்டு 1.5 லட்சம் மாணவ மாணவிகள் அங்கு தங்கிப் படித்து வருகின்றனர்.

    நாடோடிகளாக செல்லும் பழங்குடியின மக்களுகளின் நலனை க் காக்க பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி மிர்சா முண்டா போன்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 10 சுதந்திர போராட்ட வீரர்க ளுக்கு அருங்காட்சியகம் அமைத்துள்ளார்.

    நான் எஸ்.சி. கமிஷனில் பணியாற்றிய போது புதுவை சேர்ந்த பழங்குடி யின கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் என்னிடம் வந்து புதுவையில் உள்ள பழங்குடி யின மக்களின் நலனுக்காக கோரிக்கைகளை வைத்தார். உடனே எஸ்.டி. கமிஷன் அதிகாரிகள் அழைத்து நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக இருந்தேன்.

    புதுவையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு எம்.பி. செல்வகணபதி பல்வேறு வகையில் உதவி களை செய்து வருகிறார்.

    இதேபோல் நம்முடைய சபாநாயகர், அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் பழங்குடியின மக்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

    இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் எல். முருகனி டம் பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியின அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்களது குறைகளை அவர் கேட்டறிந்தார். பின்னர் பழங்குடியின மக்களுடன் மத்திய மந்திரி எல்.முருகன், சபாநாயகர், அமைச்சர்கள், எல்.எல்.ஏ.க்கள் உணவு அருந்தினர்.

    • அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் 2-வது தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது.
    • அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்றார்.

    சென்னை:

    அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது மாநாட்டில் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஏப்ரல் 3-ம் நாள் நடைபெற்ற முதல் மாநாட்டைத் தொடர்ந்து, இப்போது இரண்டாவது மாநாட்டிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

    சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்ற அடிப்படையில் நான் பங்கெடுத்து உரையாற்றுகிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் சமூகநீதியைத்தான் இயக்கத்தின் இலக்கணமாக வைத்துள்ளது. இந்த இயக்கம் உருவாகக் காரணமே சமூகநீதிதான். சமூகநீதி – சமதர்ம சமுதாயத்தை அமைப்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது.

    தமிழ்நாட்டைப் பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூகநீதியை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்கியது மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநில ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அத்தகைய உரிமை கிடைக்க வழிகாட்டியதும் திராவிட இயக்கம்தான்.

    தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களின் காரணமாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதன்முறையாக திருத்தப்பட்டது.

    சமூகநீதியை நிலைநாட்ட நாம் போராடி வந்தாலும் – சமூகநீதிக்கான தடைகளும் விழவே செய்கின்றன. இதில் பா.ஜ.க. பெரிய அளவிலான தடுப்புச் செயல்களை செய்து வருகிறது.

    சமூகநீதியை முறையாக பா.ஜ.க. அமல்படுத்துவது இல்லை. கடந்த 9 ஆண்டுகாலத்தில் ஒன்றிய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை. எனவேதான் அவர்கள் சமூகநீதிக்கு எதிராக இருக்கிறார்கள்.

    இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநிலத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சில மாநிலங்களில் 50 விழுக்காடு உள்ளது. அந்தந்த மாநிலங்களின் மக்கள் விகிதாச்சாரம் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். எனவே, 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு அளவீடு போகக் கூடாது என்று சொல்வதும் சரியல்ல. "இடஒதுக்கீடு" மாநிலங்களின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால்தான், அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்க முடியும்.

    இந்தியாவில் உண்மையான கூட்டாட்சிக் கருத்தியல் மலர்ந்தாக வேண்டும். நாம் மேற்கண்ட "சமூகநீதி" தீர்மானங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க உழைப்போம். இந்திய நாட்டு மக்கள் அனைவரும் சமூகநீதிப் பெருவாழ்வு வாழப் பாடுபடுவோம் என தெரிவித்தார்.

    • தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதி காக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    கமுதி

    முக்குலத்தோர் புலிப்ப டை கட்சியின் நிறுவனரும், நடிகருமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2016 -ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து பலமுறை சட்ட பேரவையில் வலியுறுத்தி வந்துள்ளேன்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என முக்குலத்தார் புலிப்படை கட்சி, முக்குலத்தோர் முன்னேற்ற சங்கம் உள்பட 13 மேற்பட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரனையில் 2021 நவம்பரில் உச்சநீதிமன்றம் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்தது. தமிழகத்தில் ஒரு ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போது இன்னொரு ஜாதியினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோருகின்றனர். ஆனால் அரசிடம் ஜாதி தொடர்பாக எந்த புள்ளி விபரமும் கிடையாது. எனவே நாங்கள் ஜாதிவாரியாக கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

    கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் அனைத்து ஜாதியின ருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் தமிழ கத்தில் ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தி புள்ளி விவரங்களை வெளிக் கொண்டு வந்தால் தான் அனைவருக்குமான சமூக நீதி காக்கப்படும்.

    எனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப் பிற்கான ஆணையம் அமைத்து புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டை தலைநிமிரச்செய்யும் சமூகநீதிக்கான பட்ஜெட் என பசும்பொன் பாண்டியன் பாராட்டு தெரிவித்தார்.
    • மதுரை மெட்ரோ ெரயில் திட்டம் ரூ. 8,500 கோடியில் செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்க றிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது-

    தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை கடந்தாண்டு ரூ.62ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு ரூ.30கோடியாக குறைக்கப்பட்டிருப்பதும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 8,500 கோடியில் செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

    குறிப்பாக குடும்பத்தலை விகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றிப்பதோடு பெண்கள் மகிழ்ச்சி கடலில் உள்ளார்கள். மேலும் ஏரி, குளங்கள் சீரமைப்பு, பன்னோக்கு மருத்துவ மனைகள், 16.500மெகாவாட் புதிய மின்திட்டங்கள் என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கான திட்டங்க ளை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்,

    பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்படும் வகையில் ரூ. 500கோடி மதிப்பில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப் படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    வருங்காலங்களில் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு போன்றவைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது என்பதை தி.மு.க. அரசு எதிர்காலத்தில் சரி செய்யும் என்று நம்புகிறேன்.

    இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடுவதை நிதிநிலை அறிக்கை உறுதி செய்திருக்கிறது. இது தமிழ்நாட்டை தலை நிமிரச்செய்யும் சமூக நீதிக்கான பட்ஜெட்டாகும்.

    தி.மு.க.வின் திராவிட முன்மாதிரி அரசு உருவாக்கியுள்ள இந்த நிதிநிலை அறிக்கையை தயாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜ னுக்கும் எனது சார்பாகவும், அ.தி.ம.மு.க. சார்பாகவும் பாராட்டுக் களையும், வாழ்த்துக்க ளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை செல்லும் என 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை தலைமை நீதிபதி உட்பட இருவரும் வழங்கியுள்ளனர்.
    • தீர்ப்பில் அகில இந்திய காங்கிரஸ் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் சமூகநீதியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக புதுவை மாநிலத்தில் நாங்கள் தீர்ப்பை எதிர்க்கிறோம்.

    புதுச்சேரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை செல்லும் என 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை தலைமை நீதிபதி உட்பட இருவரும் வழங்கியுள்ளனர்.

    தீர்ப்பில் அகில இந்திய காங்கிரஸ் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் சமூகநீதியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக புதுவை மாநிலத்தில் நாங்கள் தீர்ப்பை எதிர்க்கிறோம்.

    பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் எதிர்க்கி ன்றன.9 நீதிபதிகள் அமர்வில் இடஒதுக்கீடு சமூகத்தின் அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் தரவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளனர். வருமானத்தை மட்டும் கணக்கில் எடுக்கக்கூடாது என இந்திய அரசியலமைப்பு அமர்வு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    மேல்சாதியினரின் வருமான வரம்பு வருடம் ரூ. 8 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 2½ லட்சமும், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ. 3 லட்சம் என வித்தியாசம் உள்ளதால் எதிர்க்கிறோம்.

    5 சதவீதம் உள்ள மேல்சாதியினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடும், 95 சதவீத உள்ள இதர சமுதாயத்தினருக்கு 90 சதவீதம் இடஒதுக்கீடாகிறது.

    ரூ.8 லட்சம் வருமான உள்ள மேல்சாதியினர் அவர்களின் 5 சதவீதத்தில் 2 சதவீதம்தான். இது சமூக நீதிக்கு ஏற்றதல்ல. சமூக நீதியை காக்கவே முழுமையாக புதுவை மாநிலத்தில் இதை எதிர்க்கி றோம். எங்கள் மாநிலத்துக்கு இது பொருந்தாது என்பதை கட்சித் தலைமையிடம் சொல்லிதான் எதிர்க்கி றோம்.

    ராஜீவ் படுகொலை வழக்கில் தெளிவாக எதிர்ப்பை தெரிவித்து ள்ளேன். மத்திய அரசின் நிலை இதில் பாரபட்சமாக உள்ளது. மத்திய அரசு வக்கீல் அந்த தேதியில் சுப்ரீம்கோர்ட்டில் கலந்து கொள்ளவில்லை. ஆயுள்காலம் வரை சிறையில் இருப்பதுதான் ஆயுள்தண்டனை.

    மத்திய மோடி அரசின் மெத்தன போக்கின் கணக்கில் கொண்டு தீர்ப்பு தரப்பட்டுள்ளது. அதனால் பேரரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ததற்கு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்வோம்.

    மறுசீராய்வு மனுவை 90 நாட்களுக்குள் போட வேண்டும். மத்திய அரசு செய்யாவிட்டால் நாங்கள் மனு தாக்கல் செய்வோம்.

    ராஜீவ் கொலையாளி களை சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மன்னிப்பதாக கூறுவது பெருந்தன்மை. கட்சித் தொண்டர்களாகிய நாங்கள் ஏற்கமாட்டோம். எங்கள் உணர்வை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். மறு சீராய்வு மனுவை நாங்கள் தாக்கல் செய்தால் கட்சித்தலைமை ஏன் கேட்கிறார்கள்?

    கனமழையால் மக்கள் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வெள்ள நிவாரணமும், குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணமும் தரவேண்டும். தெலுங்கானாவில் கவர்னர் மாளிகையில் குறை கேட்கும் நிகழ்வை நடத்துவதை பார்க்க வேண்டும் என்று நான் எழுப்பிய கேள்விக்கு தமிழிசை பதில் தரவில்லை.

    அதேபோல் தேர்தல் வாக்குறுதியில் என்.ஆர்.காங்கிரஸ் அளித்தவை ஏதும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றாத வாக்குறு திகளும்- செயல்படாத முதல்- அமைச்சருமாகதான் ரங்கசாமி உள்ளார்

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    பெரம்பலூர்

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் வகையில் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' பெறுபவருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர்கள் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், தங்களது விண்ணப்பம், தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில்

    கரூர்:

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் "சமூக நீதி நாள் உறுதிமொழி" சமூக இடைவெளியை கடைபிடித்து எடுக்கப்பட்டது.

    பெரியார் பிறந்த நாளையொட்டி கடந்த வாரம் சனிக்கிழமை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தின் அருகில் உறுதிமொழி ஏற்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதுசமயம், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் மற்றும் சமூக நீதியை அடித்தளமாளகக் கொண்டு சமுதாயம் அமைக்கும் நமது பயனாம் தொடர உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில், பொது மேலாளர் சுரேஷ் (மனிதவளம்), துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், முதுநிலைமேலாளர் சிவக்குமார் (மனிதவளம்) மற்றும் மேலாளர்- மனிதவளம் மணிகண்டன்

    (சட்டம்) ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநார ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு, பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், ஆவணங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிரம், முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×