என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சமூகநீதியின் மும்மூர்த்திகள் பெரியார், ஆனை முத்து, ராமதாஸ் தான்..!- அன்புமணி ராமதாஸ்
    X

    சமூகநீதியின் மும்மூர்த்திகள் பெரியார், ஆனை முத்து, ராமதாஸ் தான்..!- அன்புமணி ராமதாஸ்

    • ஆணை முத்து அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு காரணம் இந்த சமூகத்தில் பிறந்ததால்தான்.
    • பட்டியலின மக்களுக்கு 2 விழுக்காடு கூடுதலாக ஒதுக்க வேண்டும்.

    பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பெரியளவில் சாதனை செய்த ஆனைமுத்து அய்யாவிற்கு தமிழக அரசும், மத்திய அரசும் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு காரணம் இந்த சமூகத்தில் பிறந்ததால்தான்.

    ஆணை முத்து அய்யாவிற்கு நாம் சிலையை நிறுவுவோம். சமீபத்தில் நடந்த மாநாடு வன்னியர் மாநாடு அல்ல சமூக நீதிக்கான மாநாடு. அந்த மாநாட்டில் தீர்மானங்கள் சமூக நீதி அடிப்படையிலேயே போடப்பட்ட தீர்மானங்கள்.

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு போன்ற மற்ற சமூதாயத்திற்கும் பின்தங்கிய நிலையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

    பட்டியலின மக்களுக்கு 2 விழுக்காடு கூடுதலாக ஒதுக்க வேண்டும்.

    பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும், போதையை அழிக்க வேண்டும் என்றெல்லாம் போடப்பட்ட தீர்மானம்தான் வன்னியர் சங்க மாநாடு.

    சமூகநீதியின் மும்மூர்த்திகள் என்றால் தந்தை பெரியார், பேரறிஞர் ஆனை முத்து, மருத்துவ ஐயா ராமதாஸ் அவர்கள். இதை யாரும் மறுக்க முடியாது. இது வரலாறு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×