என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமதாஸ்"

    • கடந்த சில நாட்களுக்கு முன் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார்.
    • பிப்ரவரி 28-ந்தேதி கூட்டணி அறிவிப்பு இருக்கும் என்றும் கூறி இருந்தார்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவி வருகிறது.

    இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அன்புமணி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார்.

    ஆனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என அக்கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி விட்டது.

    அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம்பெற்று உள்ளதால் அக்கூட்டணிக்கும் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அதில் நமது இலக்கை அடைவதற்கான வாகனம் அருகே வந்து விட்டது என கூறி இருந்தார்.

    மேலும் பிப்ரவரி 28-ந்தேதி கூட்டணி அறிவிப்பு இருக்கும் என்றும் கூறி இருந்தார். ஆனால் நேற்று ராமதாஸ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று தைலாபுரம் வந்த பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறும் போது, கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. யாருடன் கூட்டணி என முடிவெடுக்கவில்லை என்றார்.

    இதனால் தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராமதாஸ் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை மறுநாள் காலை 10 மணிக்கு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், மாணவர் சங்கம், பாட்டாளி சமூக ஊடக பேரவை, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, பகுதி நிர்வாகிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அன்று கூட்டணி அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.திமு.க. கூட்டணியில் இணைந்து விட்டது.
    • திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும்.

    திண்டிவனம்:

    தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையில் தனித்தனி கூட்டணி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். விஜய் தலைமையிலான த.வெ.க. தனித்து போட்டியிடுமா அல்லது அந்த கட்சியுடன் வேறு கட்சி கூட்டணியில் இணையுமா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது மகன் அன்புமணி மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.திமு.க. கூட்டணியில் இணைந்து விட்டது. ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வினர் தி.மு.க. கூட்டணிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் ராமதாஸ் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

    நேற்று முன்தினம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும். 28-ந் தேதிக்குள் (இன்று) கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். அப்போது தான் எந்த வாகனத்தில் பயணிப்போம் என்பதை தெரிவிப்போம் என்றார்.

    இதனால் அவர் இன்று கூட்டணி குறித்து அறிவிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ராமதாஸ் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அவர் எப்போது கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் உள்ளனர்.

    • சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
    • ஐகோர்ட்டு, இந்த மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம், அன்புமணி தரப்புக்கு உத்தரவிட்டது.

    சென்னை:

    பா.ம.க.வுக்கு உரிமை கொண்டாடுவது தொடர்பாக டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில், பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் தொடர்பாக அன்புமணியின் தி.நகர் முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு கடிதம் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், பா.ம.க., தலைவராக நான் தான் உள்ளேன். எனவே, என்னுடைய முகவரிக்குதான் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்ப உத்தரவிட வேண்டும். அன்புமணி முகவரிக்கு அனுப்பக்கூடாது என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம், அன்புமணி தரப்புக்கு உத்தரவிட்டது.

    இந்த நிலையில், அன்புமணி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

    ஏற்கனவே சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • சொல்ல வேண்டிய தகவல் இருந்தால் டாக்டர் ராமதாஸ் உங்களிடம் சொல்வார் என்றார்.
    • திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பிய போது, இருக்கும் என தெரிவித்தார்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    இதில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் தொடர்ந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் எந்த கூட்டணியில் சேருவோம் என அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். கடந்த சில தினங்களாக பா.ஜ.க. மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் டாக்டர் ராமதாசிடம் பேசி வருவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிர்வாக குழு கூட்டத்தை நடத்தி கூட்டணி சம்பந்தமாக கருத்து கேட்டார். அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்துடன் செல்லலாம் என கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் ஒரு சில உறுப்பினர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், நாம் பயணிக்க வேண்டிய தூரம் நீண்டது. ஆனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்து விட்டது. அதில் தான் நாம் பயணிக்க போகிறோம். நாம் இலக்கை அடைந்து, லட்சியத்தை வெல்வோம் என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று கூட்டணி குறித்து முடிவெடுப்பது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள் மொழி, எம்.எம்.ஏ.க்கள் ஜி.கே .மணி, அருள் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்த பிறகு டாக்டர் ராமதாஸ் நாளை கூட்டணி சம்பந்தமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு வந்த பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறும் போது, சொல்ல வேண்டிய தகவல் இருந்தால் டாக்டர் ராமதாஸ் உங்களிடம் சொல்வார் என்றார். அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போது பதில் அளிக்காமல் சென்றார்.

    இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற வந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, வருகிற 28-ந்தேதிக்குள் கூட்டணி சம்பந்தமாக அறிவிக்கப்படும் என்றார்.

    அவரிடம் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பிய போது, இருக்கும் என தெரிவித்தார்.

    பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

    • கட்சி நிர்வாகிகளும் 2 அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
    • மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் எதிரும் புதிருமாக உள்ளனர்.

    கட்சி நிர்வாகிகளும் 2 அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பா.ம.க.வின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரியும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் ராமதாஸ் தரப்பில், "கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸ்தான் உள்ளார். அவர் அனுமதியின்றி கட்சியின் பெயர் உள்ளிட்டவைகளை பிறர் பயன்படுத்த முடியாது. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் டாக்டர் அன்புமணி இதை பயன்படுத்த முடியாது. " என்று வாதிடப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.தர்மபிரபு, டாக்டர் ராமதாஸ் மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கை மார்ச் 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை.
    • உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…?

    எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள்.

    நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இடஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இடஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.

    இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி,நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பணவீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.

    நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை.

    உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம்.

    எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன் என்று கூறியுள்ளார்.  

    • ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது.
    • பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவி வருகிறது.

    இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அன்புமணி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார்.

    ஆனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என அக்கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி விட்டது.

    அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம் பெற்று உள்ளதால் அக்கூட்டணிக்கும் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் நாளை ஆலோசனை நடத்தி முடிவு செய்ய டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.

    இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ம.க., வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் என் தலைமையில் நடைபெறுகிறது.

    அதில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    எனவே நாளை நடைபெறும் கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
    • 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சி தங்களுக்கே சொந்தம் என இருவரும் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து உள்ளது. டாக்டர் ராமதாஸ் தி.மு.க. பக்கம் செல்வதா அல்லது அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்வதா என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. அவசர நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

    அவர்களுடன் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக இன்று இறுதி கட்ட ஆலோசனையில் ராமதாஸ் ஈடுபட்டு வருகிறார். யாருடன் கூட்டணி என்பது தொடர்பான முடிவை ராமதாஸ் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த 2 வழக்குகளும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று உத்தரவு.

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் கட்சி யாருக்கு என்று மோதல் நடந்து வருகிறது. இந்தநிலையில், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியது.

    இதை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், டாக்டர் ராமதாஸ் புதிதாக மேலும் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் ஒரு வழக்கில், "பா.ம.க.. தலைவராக நான்தான் உள்ளேன். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவராக தேர்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்தால், அதை பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.

    அதன்படி, தலைவராக பதிவு செய்யும்படி நான் அனுப்பிய கடிதத்தை இதுவரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் உள்ளது. தற்போது தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நெருங்குவதால் எந்நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம் என்ற நிலை உள்ளது.

    அதனால், என்னை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து பதிவு செய்யும்வரை, தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது. தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    மற்றொரு மனுவில்,"பா.ம.க.வின் தேர்தல் சின்னமாக மாம்பழம் உள்ளது. ஆனால், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத சிலர் இந்த சின்னத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், இந்த மாம்பழம் சின்னம் எனக்கும். நான் தலைவராக இருக்கும் பா.ம.க.விற்கு மட்டுமே சொந்தம் என்றும் அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    இந்த 2 வழக்குகளும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக்கொள்ள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அறிவித்த நிலையில் மாம்பழ சின்னம் அவருக்குதான் என்பது உறுதியாகி உள்ளது.
    • நாளை மனு விசாரணைக்கு வரவுள்ளது

    பாட்டாளி மக்கள் கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக கருத்துவேறுபாடு நிலவிவருகிறது. இதனால் கட்சி நிர்வாகிகள் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

    தற்போது கட்சியின் பெரும்பான்மையான ஆதரவு அன்புமணி வசம் இருப்பதால், அக்கட்சியும் அதன் சின்னமான மாம்பழமும் அவரது கட்டுப்பாட்டிலேயே உள்ளன. மேலும் தேர்தல் ஆணையமும் அன்புமணியை தலைவராக அறிவித்த நிலையில் மாம்பழ சின்னம் அவருக்குதான் என்பது உறுதியாகி உள்ளது. இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்காக அன்புமணி ராமதாஸ் தரப்பு தன்னிச்சையாக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

    இந்நிலையில் பா.ம.க.வின் தலைவராக தன்னை தேர்தல் ஆணையம் பதிவு செய்யும் வரை தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நாளை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

    • தி.மு.க., அ.தி.மு.க.விடம் பா.ம.க. தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
    • தனது ஆதரவாளவர்களுடன் அ.தி.மு.க. தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி இணைந்தார்.

    சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டாலும், மேலும் சில கட்சிகளை உள்ளே இழுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

    ராமதாஸ் தரப்பு பா.ம.க., தே.மு.தி.க. இரண்டு கட்சிகளும் இன்னமும் தங்களுடைய கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இருக்கின்றனர்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இருவருக்கும் இடையில் சில மாதங்களாகவே மோதல் இருந்து வருகிறது. மோதலையடுத்து கட்சியில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கினார். ஆனாலும் பா.ம.க. தலைவர் நான்தான். என்னை கட்சியை விட்டு நீக்க முடியாது அன்புமணி என்று கூறி வந்தார்.

    இதனையடுத்து தனது ஆதரவாளவர்களுடன் அ.தி.மு.க. தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி இணைந்தார். அதே நேரம் ராமதாஸ் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தார்.

    தி.மு.க., அ.தி.மு.க.விடம் அவரது தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

    பா.ம.க. ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ. அருள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கூட்டணி தொடர்பாக ராமதாஸ் இன்னமும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், தற்போது அவரது தரப்பு எம்.எல்.ஏ. அருள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் ராமதாசின் பா.ம.க. தரப்பை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ. அருள் தன்னை சந்தித்த போதும் கூட்டணி குறித்து பேச இ.பி.எஸ். மறுப்பு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அன்புமணி தரப்பு ஏற்கனவே கூட்டணியில் இணைந்து விட்டதாலும், ராமதாஸ் தரப்பை கூட்டணியில் இணைத்தால் அன்புமணி தரப்பை சமாதானப்படுத்த வேண்டிய நிலை வரும். அன்புமணி தரப்பு ஒருவேளை சமாதானமடைந்தாலும், தொகுதி பங்கீட்டில் குழப்பம் ஏற்படும் என்று இ.பி.எஸ். தரப்பு மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • நாட்டை தாய்நாடு என்றும், நதிக்கும், நெல்லும் பெண்களின் பெயரை வைப்பது மட்டும் பெருமையல்ல.
    • தமிழக பெண் தெய்வங்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும்.

    தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரனுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர்," திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு குஷ்பு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னெடுப்பாக சேலத்தில் தவெக தலைவர் விஜய், சீலநாயக்கன்பட்டி அருகே தாளமுத்து பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பேசிய விஜய், "என்னை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள்; என் வீடு எது தெரியுமா? தமிழ்நாடுதான் என் வீடு. 8 கோடி தமிழக மக்களும் தான் என் குடும்பம். அவர்களுடன் முதல் படை வீரனாக நிற்பதே எனது குறிக்கோள். நான் வாக்கு கேட்க வரவில்லை. மக்களுக்காக நீதி கேட்க வந்துள்ளேன். மற்ற கட்சிகளுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகின்ற நிலையில் எனக்கு தடைகள் விதிக்கப்படுகிறது. கூட்டணிகளை மட்டும் நம்பி இருக்கக் கூடிய 50, 70 வருட கட்சினு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை மீறி, இன்றைக்கு களத்தில் தமிழகத்தில் 30 சதவீத வாக்கு வங்கியுடன் முதன்மை சக்தியாக தவெக உள்ளது" என்றார்.

    விஜய்யின் இக்கருத்திற்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது, "அரசியலில் பாவம் அவருக்கு அனுபவம் இல்லை. முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும். வெளியே வந்தால் தான் என்ன நடக்கிறது என்பது தெரியும்" என்றார்.

    கடந்த 2023-ம் ஆண்டு குஷ்பூ குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதற்கு, தற்போது பாஜகவில் உள்ள குஷ்பு கொதித்தெழுந்து பெண்களை பற்றி தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது வந்தால் அடிப்போம் என்றார்.

    ஆனால் இது குறித்து அவர் கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. அதே நேரம் கனிமொழி எம்பி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    பெண்களுக்கு உரிய மரியாதையையும், அவர்களுக்கான சமூக அந்தஸ்தையும் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    நாட்டை தாய்நாடு என்றும், நதிக்கும், நெல்லும் பெண்களின் பெயரை வைப்பது மட்டும் பெருமையல்ல. மூத்த அரசியல்வாதியாகவும், தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவாராக உள்ள நயினார் நாகேந்திரன் தன் பேச்சுக்கு தமிழக பெண் தெய்வங்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும்.

    நான் எப்போதும் பெண் குழந்தைகளை பிறந்தது முதல் 19 வயது வரை பெண் தெய்வங்கள் என்றும் 19 வயதிற்கு மேல் தேவதைகள் என்றும் சொல்லி வருகிறேன். பெண்களே இந்நாட்டின் ஆணிவேர். அவர்களை மதித்திடுங்கள். அதன் பின் "பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்க வேண்டும் இதுதான் பாஜகவின் கனவு என்று சொல்லுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×