என் மலர்
நீங்கள் தேடியது "ராமதாஸ்"
- சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோரது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
- தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று தேதி நீட்டிப்பு.
விருப்ப மனுக்களைப் பெற மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோரது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் விருப்பமனுவை பெறுவதற்கான தேதியை 13.1.2026 செவ்வாய்கிழமை மற்றும் 14.1.2026 புதன்கிழமை ஆகிய இருநாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும்.
- தி.மு.க.வுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது.
சென்னை:
டாக்டர் அன்புமணி தரப்பு பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது. எனவே டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது.
தி.மு.க.வுடனும், த.வெ.க.வுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அணியில் இணைப்பதற்கான முயற்சியும் நடைபெறுகிறது என்ற பேச்சு அடிபடுகிறது.
இது பற்றி சென்னையில் முகாமிட்டு உள்ள டாக்டர் ராமதாசிடம் இன்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? என்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும். இதில் உண்மையும் இருக்கும். பொய்யும் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று இன்னும் நான் முடிவு எடுக்கவில்லை.
விரைவில் முடிவு எடுப்போம். நாட்களும் போய்க்கொண்டுதான் இருக்கிறது. புதிய கூட்டணிக்கு செல்வோமா என்பதை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். புதிய கூட்டணி ஏற்படுமா என்பதற்கு பொறுத்து இருந்து பதில் சொல்கிறேன்.
தி.மு.க.வுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது என்றார்.
டாக்டர் ராமதாஸ் சென்னையில் முகாமிட்டு உள்ளார். அவரை கூட்டணியில் இழுப்பதற்கு பல கட்சிகளை சேர்ந்தவர்களும் ரகசியமாக பேசி வருவதாக கூறப்படுகிறது.
- கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
- நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
சென்னை:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.
கடந்த மாதம் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.வாகவும், பா.ம.க. செயல் தலைவராகவும் இருக்கும் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக டாக்டர் அன்புமணி அறிவித்தார். ஆனால் தன்னை நீக்க டாக்டர் ராமதாசை தவிர யாருக்கும் அதிகாரமில்லை என்று அவர் அதிரடியாக அறிவித்தார்.
பா.ம.க.வுக்கு மொத்தம் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஜி.கே.மணி, அருள் ஆகிய இருவரும் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் அன்புமணி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.
ஜி.கே.மணி மீது அன்புமணி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீதும் டாக்டர் ராமதாஸ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.
ஏற்கனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதற்கு 3 பேரும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் தரப்பு பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 20.7.2025-ல் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாசிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
அவர்கள் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் 3 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் இந்த 3 பேரிடமும் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு உரிமை இல்லை
- அன்புமணி தனது தலைவர் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள மோசடி செய்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், கட்சி மற்றும் அதன் தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார.
அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதும், கூட்டணி அமைத்ததும் சட்டவிரோதமானது மற்றும் அங்கீகரிக்கப்படாதது என தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவெடுக்கவும் தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், அன்புமணிக்கு அந்த உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி தனது தலைவர் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள மோசடி செய்துள்ளதாகவும், தற்போது பாமகவின் தலைவர் பதவியை தானே (ராமதாஸ்) ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பாமகவின் பெயர், கொடி அல்லது 'மாம்பழம்' சின்னத்தைப் பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
- அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க இணைந்துள்ளது.
- த.வெ.க. நிர்வாகிகள் ஜி.கே.மணி மகன் மூலம் ராமதாஸ் தரப்பிடம் பேச்சு
தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இதனால் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் தற்போது அன்புமணி தலைமையிலான பா.ம.க.வும் இணைந்துள்ளது.
ஆனால் ராமதாஸ், அந்த கூட்டணி செல்லாது. சட்டரீதியாகவும் இந்த கூட்டணி செல்லாது. என்னுடன் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என சமீபத்தில் நிரூபர்களிடம் கூறி இருந்தார். மேலும் பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. தைலாபுரத்திலிருந்து தைலமும் சென்றுவிட்டது என சூசகமாக தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது போல் தெரிவித்திருந்தார். அதேபோல தமிழக வெற்றிக் கழக முக்கிய நிர்வாகிகளும் ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் மூலமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இருந்து இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னைக்கு புறப்படுகிறார். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை முடித்த பிறகு நாளை காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- பா.ம.க. என்பது என் தலைமையிலான ஒரே அணிதான்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது.
திண்டிவனம்:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று விருப்ப வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆட்சியில் பங்கு வேண்டாம் என நிபந்தனை அற்ற ஆதரவை கருணாநிதிக்கு கொடுத்தோம். காங்கிரஸ்காரர்கள் ஆட்சியில் பங்கு கேட்டனர். ஆனால் ஆட்சியில் பங்கு இல்லாமல் 5 ஆண்டுகள் முழுமையாக கருணாநிதி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தோம். நான் சொன்னால் ஏன், எதற்கு என்று தட்டாமல் இருக்கும் தலைவரை நான் உடன் வைத்திருக்கிறேன். பா.ம.க. என்பது என் தலைமையிலான ஒரே அணிதான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது.
கட்சியை கைப்பற்றுவது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லாவிதமான முயற்சிகளும் எடுத்து வருகிறோம். வெற்றியும் பெறுவோம்.
கேள்வி:- நீங்கள் தான் பா.ம.க.வின் முகம் என்கிறீர்கள். ஆனால் உங்களை மீறி எடப்பாடி பழனிசாமி அன்புமணிக்கு ஆதரவளித்தது ஏன் ?
ப:- எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். இரண்டில் ஒன்றை தொடுங்கள். நான் சொல்கிறேன்.
கே:- திருமாவளவன் இருக்கக்கூடிய கூட்டணியில் நீங்கள் இணைவீர்களா?
ப:- அரசியலில் எதுவும், எப்போதும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதுவும் எப்போதும் நடக்காது என கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 27 பேர் விருப்ப மனு தாக்கல் அளித்துள்ளனர். அதே போல் டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீகாந்திமதி போட்டியிட 100-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
- கூட்டணி பற்றி பேச கட்சி நிறுவனரிடம் அனுமதி பெற வேண்டும் என கட்சி விதி உள்ளது.
- நல்ல கட்சியெல்லாம் சேர்ந்து கூட்டணி அமைப்போம்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணி பற்றி பேச கட்சி நிறுவனரிடம் அனுமதி பெற வேண்டும் என கட்சி விதி உள்ளது. எடப்பாடி பழனிசாமி-அன்புமணி சந்திப்பு தெருக்கூத்து. அன்புமணி ஒரு மோசடி பேர்வழி. அன்புமணி யாருடன் கூட்டணி பேசினாலும் செல்லத்தக்கது அல்ல. கூட்டணிக்கு தலைமை தாங்கும் வலிமை தற்போது எங்களுக்கு இல்லை. தலைவர்களை அழைத்து பேசி அவர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுப்போம். இதனால் 2 நாள் வரை நீங்கள் பொறுத்திருங்கள். போக.. போக.. தெரியும்.. என நான் கூறியது போல் இன்னும் 2 நாட்களில் தெரியும்.
அன்புமணி கூட்டணி குறித்து பேச போயிருப்பார். அங்கு அவர் பொய்யை சொல்லி புழுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுருப்பார். அ.தி.மு.க.வினர் இக்கூட்டணியை அங்கீகாரம் செய்ததாக எனக்கு தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி என்னிடம் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை.
நல்ல கட்சியெல்லாம் சேர்ந்து கூட்டணி அமைப்போம். நான் தான் கூட்டணி குறித்து பேச முடியும். நான் இருக்கும் அணிதான் வெற்றி பெறும். பா.ம.க. கூட்டணி குறித்து அன்புமணி பேச்சு வார்த்தை நடத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும். கூட்டணி குறித்து அன்புமணி பேசுவது சட்ட விரோதம். பா.ம.க. என்னுடையது. நான் தான் முடிவு எடுக்க முடியும். தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கா வாக்களிக்க வேண்டும் என மக்கள் புறக்கணிப்பார்கள். அன்புமணி செய்த துரோகங்களை கணித்த பிறகு தான் அவரை கட்சியில் இருந்து நீக்கினேன். கட்சியில் இல்லாத அன்புமணி கூட்டணி என்ற நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.
அன்புமணி வேண்டுமென்றால் சிவில் நீதிமன்றத்திற்கு செல்லலாம். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நாம் யாரோடு செல்கிறோமோ அக்கட்சிதான் ஆட்சி அமைக்கும். என் தலைமையில் கூட்டணி அமையும் என்று சொல்லமுடியாது.
அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி நியாயமற்றது. பா.ம.க. வில் கூட்டணி குறித்து பேச அன்புமணிக்கு அருகதை இல்லை. மாம்பழம் சின்னம் என் கையில் தான் உள்ளது. அன்புமணி செய்தது அடாவடித்தனம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் எந்த கூட்டணியில் இணைவீர்கள் என நிருபர்கள் கேட்டபோது, தேசிய, திராவிட, தமிழக கட்சியுடன் கூட்டணி இருக்கும் என்றார்.
- அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கும்.
- அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 2 நாட்களில் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும்.
* அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கும்.
* அ.தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீ காந்தி கூறியதாவது:
* அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது.
* ராமதாஸ் அறிவிக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பா.ம.க.வை விட்டு நீக்கினேன்.
- அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க.வுடன் அன்புமணி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பா.ம.க.வை பொறுத்தவரை தனிமனிதன் ஆரம்பித்த கட்சி, இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
* அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பா.ம.க.வை விட்டு நீக்கினேன்.
* கட்சியில் இருந்து நீக்கிய பின்னர் ஒரு கோஷ்டியை வைத்துக்கொண்டு இருக்கிறான். தமிழக அரசியலில் இதுபோன்று நடந்ததில்லை.
* கொஞ்சம்கூட தலைமைப்பண்பு இல்லாதவர் அன்புமணி, பா.ம.க. தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்.
* அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
* அன்புமணி செய்த துரோகத்தை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் பொதுமக்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
* அன்புமணி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்னதாகவே தெரியாமல் போய்விட்டது.
* தந்தைக்கு துரோகம் செய்த கும்பலுக்காக வாக்களிக்க வேண்டும் என நினைத்து அன்புமணி தரப்புக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
* நான் அமைப்பதே பா.ம.க. கூட்டணி, அந்த கூட்டணியே சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.
- கட்சி விதிப்படி ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.
இதையடுத்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
பா.ம.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் ஒன்றையும் கொடுக்க அ.தி.மு.க தலைமை சம்மதம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பாமகவுக்கு ராமதாஸ் மட்டுமே தலைவர் என்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சட்ட விரோதம் என பாமக தலைவர் ராமதாஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு ராமதாஸ் மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்.
17.12.2025 முதல் ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.
ராமதாஸ் மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர்.
இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- நான் செய்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறேன்.
- தைலாபுரத்தில் தினந்தோறும் என்னை வந்து சந்திக்கும் பா.ம.க.வினரை நினைத்தால் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது.
சேலம்:
பா.ம.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் தொடர்ந்து பேசியதாவது:-
* 30 ஆண்டாக மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்த ஜி.கே.மணியை அவமானப்படுத்தினால் என்னால் பொறுக்க முடியாது.
* இந்த தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன், நல்ல முடிவை அது கொடுக்கும்.
* என்னைப்போன்ற ஒரு தகப்பன் உலகில் வேறு யாருக்காவது உண்டா? அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்?
* அன்புமணி ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என செல்லும் இடங்களில் எல்லாம் கேட்கிறார்கள்.
* நான் செய்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறேன்.
* அன்புமணியின் பின்னால் 5 சதவீதம் பேர் வட இல்லை. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
* நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை.
* பதவிக்கு வரமாட்டேன் என்ற எனது சத்தியத்தால் தான் நீ 36 வயதில் மத்திய அமைச்சராக ஆனாய்.
* கூட்டணிக்கான காலம் இன்னும் கனியவில்லை, நான் நினைப்பது போன்ற வெற்றி தேர்தலில் கிடைக்கும்.
* அன்புமணி நினைப்பு வந்துவிட்டால், தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை.
* தைலாபுரத்தில் தினந்தோறும் என்னை வந்து சந்திக்கும் பா.ம.க.வினரை நினைத்தால் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது என்றார்.
- வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்.
- சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு என்னை தினமும் காயப்படுத்துகிறார்கள்.
சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடந்து நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்ணீர் மல்க தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
* செயற்குழுவும், பொதுக்குழுவும் நேற்று முதலே களைகட்டத் தொடங்கி விட்டது.
* பொதுக்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
* என்னிடத்தில் உள்ள ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க ஒரு மணி நேரம் தேவை.
* நான் வளர்த்த பிள்ளைகள் தான் என்னை தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
* 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி, நல்ல முடிவு எடுப்பேன்.
* வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்.
* தனது கனவில் தாய் வந்ததை நினைத்து மனம் உடைந்து கண்ணீர் சிந்தினார். அப்போது தொண்டர்கள் அழக் கூடாது ஐயா என கூறினர்.
* பிள்ளையை நான் சரியாக வளர்க்கவில்லை என கனவில் தாயிடம் அழுதேன்.
* என்னை 20- 30 துண்டுகளாக கூட வெட்டி வீசி இருக்கலாம், போய் சேர்ந்திருப்பேன்.
* சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு என்னை தினமும் காயப்படுத்துகிறார்கள்.
* 100-க்கு 95 சதவீத பாட்டாளி மக்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள்.
* அன்புமணி தன்னை நெஞ்சிலும், முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டதாக பேசினார்.






