என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக"

    • பா.ம.க.வுக்கு ஏற்கனவே 17 தொகுதிகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
    • தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில் அ.தி.மு.க. 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடயே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது.

    மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டனர். பிரதமர் மோடி கடந்த மாதம் சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    நேற்று 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம், மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஷ் கோயல், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. தமிழக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர், ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோரும் பங்கேற்றனர்.

    இந்த ஆலோசனையின்போது அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக தெரிகிறது. மேலும் பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாகவும் தெரிகிறது. அதில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக தொகுதிகள் இடம் பெற்றிருந்ததாகவும், அதில் பல தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க பா.ஜ.க. சார்பில் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் பா.ம.க., அ.ம.மு.க. உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக கூட்டணி கட்சி தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிகிறது. இந்த கூட்டம் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது.

    இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் ஓரளவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பா.ஜ.க. 50 தொகுதிகளை கேட்டுள்ளது. ஆனால் பா.ஜ.க.வுக்கு 35 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளது. அதில் இருந்து டி.டி.வி. தினகரனுக்கு 5 அல்லது 6 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. மீதமுள்ள தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடும்.

    அதேபோல் பா.ம.க.வுக்கு ஏற்கனவே 17 தொகுதிகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இல்லாததால் பா.ம.க.வுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனேகமாக 25 தொகுதிகள் வரை அக்கட்சிக்கு கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் ஜி.கே.வாசனுக்கு 3 தொகுதிகளும், ஐ.ஜே.கே.வுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இவர்களில் சில கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலும், சில கட்சிகள் தாமரை சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்து உள்ளன.

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில் அ.தி.மு.க. 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளது. மீதமுள்ள 64 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

    பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக காலை 9.50 மணிக்கு தனபால் எம்.பி. விமானம் மூலம் டெல்லி சென்றார்.

    எடப்பாடி பழனிசாமி கடந்த முறை, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அவருடன், தனபால் எம்.பி. சென்றிருந்தார். எனவே இப்போதும் அவர் சென்றுள்ளார்.

    டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி இன்று இரவு அல்லது நாளை காலை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களும் பங்கேற்கிறார்கள். அப்போது கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாடு கையெழுத்தானதும் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார். அதன்பிறகு பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு கையெழுத்தாக உள்ளது.

    பிரதமர் மோடி வருகிற 7-ந்தேதி மீண்டும் தமிழகம் வந்து வேலூரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார். வருகிற 11-ந்தேதி அவர் திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். எனவே 7-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பு தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. தவறும் பட்சத்தில் 11-ந்தேதிக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கவும் திட்டமிடப்பட்டு எடப்பாடி பழனிசாமி வேகமாக செயல்பட்டு வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேல்சபை எம்.பி. பதவியை பொறுத்தவரை பா.ம.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இன்னொரு இடத்தில் அ.தி.மு.க.வே போட்டியிடலாம் என்றும் தெரிகிறது.

    • பேச்சுவார்த்தையின்போது பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாக தெரிகிறது.
    • திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க பா.ஜ.க. சார்பில் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மதுரையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரியும், தமிழக தேர்தல் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரு தனியார் ஓட்ட லில் சந்தித்து பேசினர்.

    அப்போது அவர்கள் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாக தெரிகிறது. அதில் தென்மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக தொகுதிகள் இடம் பிடித்துள்ளதாகவும், அதில் பல அ.தி.மு.க. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது.

    மேலும், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க பா.ஜ.க. சார்பில் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு பா.ஜ.க. தலைமையிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    • காற்றில் கூட ஊழல்செய்யும் கட்சி திமுக.
    • கூட்டணி கட்சியினரின் துணையோடு எதிரிகளை வீழ்த்தி வலிமையான இந்தியாவை, வளமான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்

    மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 

    "தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும், யார் ஆளக் கூடாது என்பதற்கு நடைபெறும் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி தான் தேசிய ஜனநாயக கூட்டணி . தேர்தல் நேரத்தில் ஒன்றாக இணைந்து 234 தொகுதிகளிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய அனைவரும் உழைக்க வேண்டும்.

    நமது கூட்டணி 210 இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். தென்மாவட்டத்தை பொறுத்தவரைக்கும், இரு தலைவர்களுக்கும் பக்கபலமாக இருந்த மக்கள் தென்மாவட்ட மக்கள். எம்ஜிஆர் முதல் தேர்தலை சந்தித்து தென்மாவட்டத்தில்தான். அதுபோல இந்தத் தேர்தலிலும் தென்மாவட்ட மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு துணைநிற்பார்கள்.

    அதிமுகவை பொறுத்தவரைக்கும் சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி. பல்வேறு சோதனைகளை கண்ட இயக்கம் அதிமுக. பிரதமர் பொறுப்பேற்றவுடன் இந்திய நாடே வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்திய நாட்டைக் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு மோடி வளர்ச்சியை கொடுத்துள்ளார். மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சியும் இல்லை என்று ஸ்டாலின் தவறான அவதூறுகளை பரப்புகிறார். ஆனால் இன்று பிரதமர் மோடி ரூ.4,400 கோடி திட்டத்தை தொடங்கி வைத்து விட்டு தான்  வந்திருக்கிறார்.

    காற்றில் கூட ஊழல்செய்யும் கட்சி திமுக. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கின்றன. ஆனால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுகதான். ஊழல் நிறைந்த கட்சி, ஊழல் நிறைந்த அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். ஒரே இடத்தில் ஒரே ஆண்டில் 13 அரசு மருத்துவக் கல்லூரி பெற்றோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளும் நடந்து கொண்டு வருகிறது. அதையும் திமுக முடக்க நினைக்கிறது. மதுரை விமான நிலையம் விரிவாக்கத்துக்கு அதிமுக முயற்சி எடுத்தது. அந்த திட்டத்தையும் முடக்கியது திமுக. காவேரி-குண்டாறு திட்டத்தை திமுக முடக்கியது.

    அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளோம். மோடி வந்தவுடன் பல்லாயிரக்கணக்கான கோடி திட்டங்களை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகை செய்துள்ளார். நம் ஆட்சி மலரவேண்டும். குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும். மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். கூட்டணி கட்சியினரின் துணையோடு எதிரிகளை வீழ்த்தி வலிமையான இந்தியாவை, வளமான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்" என்றுப் பேசினார். 

    • வரும் 4ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
    • அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

    வரும் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 4ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • கடந்த 50 வருடங்களாக அவரது காரில் இருந்த ஜெயலலிதா படம் அகற்றப்பட்டு தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது.
    • அ.தி.மு.க. தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட உள்ளது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது 2 முறை முதலமைச்சராக அவரால் அமர்த்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மீண்டும் முதலமைச்சரானார்.

    பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.

    கடந்த சில நாட்களாகவே ஓ.பி.எஸ். நடவடிக்கையில் அதிருப்தியடைந்த அ.தி.மு.க.வினர் அவர் தி.மு.க.வில் இணைந்ததை கொண்டாடினர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடியில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    தி.மு.க.வில் இணைந்த பின்னர் கடந்த 50 வருடங்களாக அவரது காரில் இருந்த ஜெயலலிதா படம் அகற்றப்பட்டு தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் அ.தி.மு.க. வண்ணமான கருப்பு, வெள்ளை, சிவப்பு வரையப்பட்டிருந்தது. ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைந்ததை தொடர்ந்து காட்சிகள் மாறியுள்ளன. அந்த வண்ணம் தி.மு.க. கட்சி கொடியான கருப்பு, சிவப்பு வண்ணமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அவரது நுழைவு வாயில் கிரில் கேட்டில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை அறுத்து எடுக்கப்பட்டது. மேலும் அங்கு உதயசூரியன் சின்னம் பொருத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட உள்ளது.

    தி.மு.க.வில் அவர் இணைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வின் சுவடே இல்லாமல் ஓ.பி.எஸ். இல்லம் மாறியுள்ளது. அவர் தி.மு.க.வில் இணைந்தது கடைகோடி அ.தி.மு.க. தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை எந்திரம் மூலம் அகற்றப்படுவதை பார்த்த தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். தன்னை 3 முறை முதலமைச்சராக்கிய அ.தி.மு.க.விற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்து விட்டதாக தொண்டர்கள் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் ஆன்மா அவரை மன்னிக்காது என வேதனையுடன் புலம்பினர். 

    • வான் எல்லை மூடப்பட்டதன் காரணமாக ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • இந்தியர்களுக்கான உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

    இதனால் ஈரான், துபாய், அபுதாபி, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் கடும் அவதி அடைந்துள்ளனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வான் எல்லை மூடப்பட்டதன் காரணமாக ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் தமிழர்களும் இந்தியாவுக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள்.

    இதையடுத்து சவூதி அரேபியா, குவைத் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 

    • மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை NDA பொதுக்கூட்டம் நடைபெறுகிறது
    • NDA பொதுக்கூட்டத்தில் பெரியார், அண்ணா படம் இடம்பெற்றது.

    மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள். இதற்காக 120 ஏக்கர் இடத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் பெரியார், அண்ணா படம் இடம்பெற்றது. பெரியாரை தொடர்ந்து விமர்சித்து வரும் பாஜகவின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பெரியார் படம் இருந்தது இணையத்தில் பேசுபொருளானது

    இந்நிலையில், NDA கூட்ட அரங்கின் முகப்பில் இருந்த பெரியாரின் புகைப்படத்தை அதிமுக அகற்றியுள்ளது. பெரியாரை கொள்கை தலைவர்களில் ஒருவராக கொண்டுள்ள அதிமுகவின் இந்த நடவடிக்கை இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சென்னை வரும் அவர் கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார்.
    • கூட்டணி கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி இன்று இரவு வருகிறார். சென்னை வரும் அவர் கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார்.

    இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

    இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இதே போன்று பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • 2-வது கட்டமாக நாளை புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது.
    • பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக நாளை புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது.

    மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள்.

    இந்நிலையில் மதுரையில் இன்று இரவு அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயலுடன் அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனவும் தெரிய வந்துள்ளது. இன்றைய பேச்சின் தொடர்ச்சியாக நாளை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. அறிவிப்பதற்கு முன்பாக தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • உட்கட்சி மோதலில் ஓபிஎஸ் பக்கம் நின்றதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்
    • ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட என்னால் திமுகவில் பயணிக்க முடியாது

    அதிமுக முன்னாள் அமைச்சரான வெல்லமண்டி நடராஜன் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார். ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்த நிலையில், அவரது தீவிர ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார்.

    "ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட என்னால் திமுகவில் பயணிக்க முடியாது" எனக் கூறி, அவர் திமுகவில் இணைய மறுப்புத் தெரிவித்திருந்தார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் என தெரிவித்திருந்த நிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

    2016-2021 காலகட்டத்தில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பணியாற்றி வரும் இவர், திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவராகவும் இருந்துள்ளார். 2022-ல் நிலவிய உட்கட்சி மோதலில் ஓபிஎஸ் பக்கம் நின்றதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார், தற்போது மீண்டும் இணைந்துள்ளார். 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
    • வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர்.

    போடி:

    தமிழகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தினுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு இன்று நிறைவுக்கு வந்தது.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை போடியில் கொண்டாடிய ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர் சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரம் தனது அரசியல் களம்குறித்து மனம் திறந்து பேட்டியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து அவர் தி.மு.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில நாட்கள் இதுகுறித்து எதுவும் தகவல் தெரிவிக்காத நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    கடந்த சில நாட்களாகவே ஓ.பி.எஸ். நடவடிக்கையில் அதிருப்தியடைந்த அ.தி.மு.க.வினர் தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை கொண்டாடி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடி பஸ் நிலையம் தேவர் சிலை அருகில் அவர் கட்சியை விட்டு விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இதுவரை அ.தி.மு.க.வை பிடித்திருந்த தீய சக்தி ஒழிந்தது. துரோகி பன்னீர்செல்வம் ஒழிக, போய்க்கோ போய்க்கோ என்று கோசமிட்டபடி பட்டாசு வெடித்து அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில் சாதாரண தொண்டனாக இருந்த ஓ.பி.எஸ்.சை 3 முறை முதலமைச்சராக அமரவைத்து அழகு பார்த்தது அ.தி.மு.க. ஆனால் அவர் அதற்கு விசுவாசமாக இல்லாமல் தி.மு.க.விற்கு சென்று விட்டார். அவர் எந்த இடத்திலும் விசுவாசமாக இருக்க மாட்டார். எனவே அ.தி.மு.க.வை பிடித்த தீயசக்தி ஒழிந்து விட்டது. இதனால் வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர். 

    • ஓ.பி.எஸ். உள்ளிட்ட நபர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த தேர்தலில் நூலிழையில் தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம்.

    மதுரை:

    தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை கூட்டம் வருகின்ற 1-ந்தேதி மண்டேலா நகரில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதலை காட்டும் வகையில் அம்மா பேரவை சார்பில் சீருடை அணிந்த 2,500 தூதுவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான பயிற்சி முகாம் மண்டேலா நகரில் உள்ள திடலில் நடைபெற்றது. இந்த பயிற்சியை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், எஸ்.எஸ். சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

    இந்த பரப்பரை ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை முடிவு கட்டும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும். ஓ.பி.எஸ். உள்ளிட்ட நபர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் வேறு முகாம்களுக்கு செல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. பிரதமர் மோடி எடப்பாடியாரை முன்னிறுத்தி பரப்புரை செய்ய வரும் நேரத்தில், இதை திசை திருப்பவும், மடைமாற்றம் செய்யவும், இதுபோன்ற செயல்களை சிலர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் மாற்று முகாமுக்கு செல்வதால் அ.தி.மு.க.விற்கு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. கடந்த தேர்தலில் நூலிழையில் தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம். எடப்பாடியார் அறிவித்து உள்ள தேர்தல் வாக்குறுதிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை காட்டி அரசியல் செய்தார்கள். இனி 100 செங்கலை காட்டினாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடியார் செங்கோலை அவரது கையால் பிடிப்பார். நடிகர் விஜய் பரீட்சை எழுதினால் தான் அவர் பாசா அல்லது பெயிலா என தெரியவரும் என்றார். 

    ×