என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக"

    • மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.
    • எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்தார்

    தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

    தமிழக பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.

    இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த மத்தியமந்திரி பியூஸ்கோயலை சந்தித்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனு சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்.ஆகிய இருவரையும் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கும் இடங்களில் இருந்து டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    அதாவது அதிமுகவுக்கு 170 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மீதமுள்ளவற்றில் பாஜகவுக்கு 23 தொகுதிகளும் பாமகவுக்கு 23 தொகுதிகளும் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளும் அமமுகவுக்கு 6 தொகுதிகளும் ஒபிஎஸ்க்கு 3 தொகுதிகளும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்படவுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

    • மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.
    • எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்தார்.

    தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

    தமிழக பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.

    இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த மத்தியமந்திரி பியூஸ்கோயலை சந்தித்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனு சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், சென்னை தனியார் ஹோட்டலில் நடந்த பியூஷ் கோயல் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. அதிமுக - பாஜக இடையே நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    ஏற்கனவே பா.ஜ.க. 80 தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக அடையாளம் கண்டு வைத்து உள்ளது. இதில் இருந்துதான் கூட்டணியில் தொகுதிகளை கேட்கும் என்று கூறப்படுகிறது.

    • லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தார்.
    • மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகை சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    கூட்டணிகளை உறுதிப்படுத்துவது, தொகுதிகளை அடையாளம் கண்டு கூட்டணி கட்சிகளுடன் பேசுவது போன்ற பணிகள் திரை மறைவில் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

    பீகார் தேர்தல் முடிவு, கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த வகையில் "மிஷன் தமிழ்நாடு" என்ற திட்டத்துடன் தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளது.

    ஏற்கனவே தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரை மாற்றி விட்டு மத்திய மந்திரி பியூஸ்கோயல் தலைமையில் 3 மத்திய மந்திரிகள் அடங்கிய குழுவை பா.ஜ.க. மேலிடம் அமைத்து உள்ளது.

    பியூஸ்கோயல், அமித்ஷாவின் வலதுகரமாக இருப்பவர். தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். பல மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிக்கு இவரது வியூகம் காரணமாக அமைந்தது.

    ஏற்கனவே பல தேர்தல்களில் தமிழ்நாட்டில் கூட்டணிகளை உருவாக்கியது, கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது போன்ற அனுபவங்கள் அவருக்கு உண்டு.

    எனவே தமிழகத்திலும் தேர்தலில் சாதிக்க பியூஸ் கோயல் வியூகம் கை கொடுக்கும் என்று பா.ஜ.க. உறுதியாக கருதுகிறது.

    தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.

    அவரை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, சக்கரவர்த்தி, பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

    பின்னர் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் சென்றார். அங்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள கூட்ட அரங்கில் உயர்மட்ட குழுவினருடன் பியூஸ்கோயல் கலந்து பேசினார். இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா, வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காலை 10.40 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது. தற்போதைய அரசியல் சூழல், தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி அவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

    அதன் பிறகு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தார்.

    இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த மத்தியமந்திரி பியூஸ்கோயலை சந்தித்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனு சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது, கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி உள்ளிட்ட கட்சிகளை இணைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பது குறித்து பியூஸ்கோயல் முடிவு செய்வார்.

    அதே நேரம் சில சிறு கட்சிகளின் தலைவர்கள் இன்று பியூஸ்கோயலை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

    மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகை சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார். மாலை 6 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஏற்கனவே பா.ஜ.க. 80 தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக அடையாளம் கண்டு வைத்து உள்ளது. இதில் இருந்துதான் கூட்டணியில் தொகுதிகளை கேட்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த தொகுதிகளின் நிலவரங்களை பற்றியும் மூத்த நிர்வாகிகளிடம் பியூஸ்கோயல் ஆலோசனை நடத்தினார். மாலையில் கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளுடன் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பியூஸ்கோயலின் இன்றைய நிகழ்வுகள் பற்றி பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-

    பியூஸ்கோயல் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று சென்னை வந்து முதற்கட்ட ஆலோசனை செய்துள்ளார்.

    அடுத்தடுத்து கூட்டணி தொடர்பான நகர்வுகள் சூடுபிடிக்கும். தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் இடம் பெறும். முக்கியமாக கூட்டணியை பலப்படுத்தும் பணிகளில் பியூஸ்கோயல் ஈடுபடுவார் என்றார்கள்.

    • கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது போன்ற அனுபவங்கள் அவருக்கு உண்டு.
    • தமிழகத்திலும் தேர்தலில் சாதிக்க பியூஸ் கோயல் வியூகம் கை கொடுக்கும் என்று பா.ஜ.க. உறுதியாக கருதுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    கூட்டணிகளை உறுதிப்படுத்துவது, தொகுதிகளை அடையாளம் கண்டு கூட்டணி கட்சிகளுடன் பேசுவது போன்ற பணிகள் திரை மறைவில் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

    பீகார் தேர்தல் முடிவு, கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த வகையில் "மிஷன் தமிழ்நாடு" என்ற திட்டத்துடன் தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளது.

    ஏற்கனவே தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரை மாற்றி விட்டு மத்திய மந்திரி பியூஸ்கோயல் தலைமையில் 3 மத்திய மந்திரிகள் அடங்கிய குழுவை பா.ஜ.க. மேலிடம் அமைத்து உள்ளது.

    பியூஸ்கோயல், அமித்ஷாவின் வலது கரமாக இருப்பவர். தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். பல மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிக்கு இவரது வியூகம் காரணமாக அமைந்தது.

    ஏற்கனவே பல தேர்தல்களில் தமிழ்நாட்டில் கூட்டணிகளை உருவாக்கியது, கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது போன்ற அனுபவங்கள் அவருக்கு உண்டு.

    எனவே தமிழகத்திலும் தேர்தலில் சாதிக்க பியூஸ் கோயல் வியூகம் கை கொடுக்கும் என்று பா.ஜ.க. உறுதியாக கருதுகிறது.

    தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, சக்கரவர்த்தி, பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.



    • திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் முழங்கினார்.
    • தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக்கவில்லை

    ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று பேசிய விஜய், "எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.

    இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி... தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே" என்று ஆக்ரோஷமாக முழங்கினார்.

    இதுகுறித்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக்கவில்லை. அதிமுகவின் இடத்தை கைப்பற்றவே முயற்சி செய்து வருகிறார். அவரைப் பார்த்து அதிமுகதான் பயப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 150 நாட்கள் வேலை கொடுத்ததா?
    • இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று வந்து தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.

    சேலம் மாவட்டம் எடப்பாடியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம்.

    * பொங்கலுக்கு ரேசன் அட்டைக்கு ரூ.5000 வழங்க வேண்டும்.

    * எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. வைத்த கோரிக்கையை தான் அ.தி.மு.க. தற்போது வைக்கிறது.

    * தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 150 நாட்கள் வேலை கொடுத்ததா?

    * காவிரி விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தி.மு.க. பேசி இருக்க வேண்டும்.

    * 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் தொடர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

    * ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கடன் அதிகரித்து கொண்டிருக்கிறது.

    * தமிழக அரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பின்னர் தான் கடன் அதிகரித்துள்ளது.

    * த.வெ.க. நயினார் நாகேந்திரன் கூட்டணிக்கு அழைத்தது பா.ஜ.க.வின் நிலைப்பாடு.

    * கொரோனா காலத்திலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.

    * இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது.

    * ரெயில் கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * த.வெ.க. தூய சக்தியா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    * கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

    * த.வெ.க. தூய சக்தி என்ற விஜயின் பேச்சிற்கு கே.பி.முனுசாமி பதில் அளித்து விட்டார்.

    * இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று வந்து தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.

    * அ.தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாக கூறி 4 பேர் நீக்கம்.
    • ஐ.டி.பிரிவு இணைச்செயலாளர் ஹமீது நக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாக கூறி 4 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    மண்டபம் பேரூராட்சி அதிமுக செயலாளர் சீமான் மரைக்காயர், மண்டபம் பேரூராட்சி ஐ.டி.பிரிவு இணைச்செயலாளர் ஹமீது நக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மாவட்ட மீனவர் பிரிவு இணைச்செயலாளர் காதர் மொய்தீன், மாவட்ட மீனவர் பிரிவு இணைச்செயலாளர் பக்கர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    • அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே இருந்து வந்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே இருந்து வந்த அவர் தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குடும்பத்தினர் உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.

    • திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்.
    • நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாண்புமிகு அம்மாவின் அரசால் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போதைய விடியா திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று (18.12.2025) தமிழ்நாடு செவிலியிர்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று இரவு 7.30 மணிக்கு காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை கைது செய்து அவர்களை பேருந்துகள் மூலமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.

    இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் கலையமாட்டோம் எனக்கூறி விடியா திமுக அரசுக்கு எதிரான கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, விடியா திமுக அரசின் காவல்துறை அவர்களை மீண்டும் கைதுசெய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

    2021 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிப்பதுடன், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடியா திமுக, Failure மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்.

    • கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
    • சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது என இபிஎஸ் பேசினார்.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கிறிஸ்தவ மக்களை பெருமைப்படுத்தும் விதமாக அ.தி.மு.க. சார்பில் கடந்த 20 ஆண்டாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.

    ஓட்டுக்காக மட்டுமே சிறுபான்மை நலனைப் பற்றி பேசும் தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பாவிக்கும் கட்சி.

    தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்.

    ஏசு பிரான் தீய சக்திகளை அழிக்க உலகத்துக்கு ஒலியாக வந்தார். தீயசக்திகளாக இருப்பவர்களை ஒலியின் வேஷம் தரித்தவர்கள் என்றும் அவர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில், கட்சிகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்கின்ற ஒப்பந்தம் மட்டுமே. அது சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. கொள்கை என்பது எங்களது கட்சியின் உயிர் மூச்சு போன்றது.

    அ.தி.மு.க. தனது கொள்கையில் உறுதியாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற அடிப்படையில்தான் கூட்டணி வைத்து உள்ளோம்.

    ஜெயலலிதா. தி.மு.க. எனும் தீய சக்தியை எதிர்த்து ஜெயலலிதா போராடினார்.

    தீயசக்திகளிடம் ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே இருக்காது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பாடுபடும் இயக்கம் என தெரிவித்தார்.

    • நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.
    • இபிஎஸ் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி!

    #VBGRAMG திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே!

    100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது.

    தற்போது, ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.

    திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, #GST வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை!

    கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த #MGNREGA திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி அவர்கள் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.




     


    • தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.
    • துணிச்சலாக, வெளிப்படையாக #VBGRAMG-யைப் பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்...

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்!

    நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, #MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் 'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்' தனது ஸ்டைலில் 'அழுத்தம்' கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி!

    அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்?

    மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, தொகுதி நிர்ணயம் மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.

    ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய #MGNREGS திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் #VBGRAMG கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும்.

    தனது 'Owner' பா.ஜ.க. செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக #VBGRAMG-யைப் பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்... என பதிவிட்டுள்ளார். 

    ×