என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Secretaries meeting"

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் என அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

    • சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனம்
    • தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் சரிபார்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளது.

    தீர்மானம் : 1

    சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள "வாக்குத்திருட்டு" மற்றும் "SIR" (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனம்

    தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில் - அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த நிலையிலும், உச்சநீதிமன்றமே "Mass deletion" இருந்தால் தலையிடுவோம் என்று எச்சரித்த பிறகும் அம்மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை, சொத்தை காரணங்களை மேற்கோள்காட்டி தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது தேர்தல் களத்தின் சம நிலையை அடியோடு அசைத்துப் பார்க்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.

    குடிமக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) எதிர்த்தும், அகில இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு தேர்தல் களத்தில் பா.ஜ.க.வின் "வாக்குத் திருட்டை" எதிர்த்தும் தேர்தல் ஆணையம் வரை பேரணி சென்ற காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களைத் தடுத்து நிறுத்திய - அவர்கள் மீது FIR பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு ஆணவப் போக்கை கடைப்பிடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமும் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு சார்பான நடவடிக்கைகளை எதிர்த்து இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

    தீர்மானம் : 2

    திராவிட முன்னேற்றக் கழகம் வைத்துள்ள கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.

    தேர்தலை நடத்துவது மட்டுமல்ல - அதற்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதும் தன்னாட்சிபெற்ற அமைப்பிடம் இருக்க வேண்டும் என அரசியல் சட்டத்திலேயே தேர்தல் ஆணையத்திற்கு முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் - தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்ட பிறகு - தேர்தல் நடத்துவதில் மட்டுமல்ல, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதிலும் தேர்தல் ஆணையம் அரசியல் சாயம் பூசிக் கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசுடன் கைகோத்து நிற்பதும் - பா.ஜ.க.வின் தில்லுமுல்லுகளுக்குத் துணை போவதும் ஜனநாயகத்தைக் கேள்விக்குரியதாக ஆக்குவதோடு கேலிக்குரியதாகவும் மாற்றி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுத்து ஜனநாயகத்தின் பாதுகாவலராகத் திகழும் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 17.7.2025 அன்றே இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து "இறந்த வாக்காளர்களை நீக்குதல்" "BLO-க்கள் மற்றும் BLA-க்களுடன் ஒருங்கிணைப்பு" "பிராந்திய மற்றும் உள்ளூர் மொழிகளில் தொகுப்புக் கையேடுகளை வழங்குதல்" "அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் குழப்பங்களை அகற்றுதல்", "ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வசிப்பிட இடம் மற்றும் பிறந்த தேதியை நிரூபிக்கும் ஆவணங்களாக ஆக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட மிக முக்கியமான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து விரிவான மனு ஒன்றை அளித்துள்ளதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பதிவு செய்யும் வேளையில் - தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகளைத் தொடங்கும் முன்பே சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்தும் பணியைத் தேர்தல் ஆணையம் நிறைவேற்றிட வேண்டும் என இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

    தீர்மானம் : 3

    கழகத் தலைவர் திராவிட நாயகர் கட்டளைப்படி ஓரணியில் தமிழ்நாடு' முழக்கத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்க வைத்து - உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றி வாகை சூடிய கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி!

    இந்தியத் தேர்தல் களத்தில் அசாதாரண மற்றும் ஆபத்தான சூழல்கள் உருவாகி வரும் நிலையில், கழகத் தலைவர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்தப்பட்ட கழக உறுப்பினர் சேர்க்கையான "ஓரணியில் தமிழ்நாடு" என்ற இயக்கம் - மக்கள் இயக்கமாக மாறி- இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்கும் முழக்கமாக மாறியிருப்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மன மகிழ்ச்சியுடன் பதிவு செய்ய விரும்புகிறது. முற்போக்குத் திட்டங்களால் - ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் திராவிட மாடல் அரசை நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமைக்கு பள்ளி மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஒரு புறமும், பள்ளி மாணவிகள் முதல் இல்லத்தரசிகள் வரை இன்னொரு புறமும் முழுமையான ஆதரவுக் கரம் நீட்டுவதால் - மாணவர், இளைஞர், பெண்கள், முதியோர் என அத்தனை தரப்பு மக்களின் அன்பையும் பெற்றுத் திகழ்கிறார் நமது கழகத் தலைவர் என்பதை ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது மக்களிடம் கிடைத்த வரவேற்பின் மூலமாக உணர முடிந்தது.

    திராவிட முன்னேற்றக் கழகத்தில் குவிந்துள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை - இப்போது மட்டுமல்ல - வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் - ஏன் தமிழ்நாட்டில் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகமே முதன்மை சக்தி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதோடு மட்டுமல்ல - மதவெறி சக்திகளுக்கும் - அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வோருக்கும் இங்கே மார்க்கெட் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியுள்ளது. இத்தகைய சாதனைக்குத் திட்டமிட்டதுடன், ஒவ்வொரு நாளும் கழக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் நிலவரத்தைக் கேட்டறிந்து ஊக்கப்படுத்தி, ஆலோசனை வழங்கும் நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்பான ஆணைக்கிணங்க 'ஓரணியில் தமிழ்நாடு' திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து - உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், 'ஓரணியில் தமிழ்நாடு' தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், பாக முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள், வீடுவீடாகச் சென்ற கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது நன்றியையும் - பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

    • கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25,26 தேதிகளில் நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 24.6.2025, 25.6.2025 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கீழ்கண்ட கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

    24.6.2025 - செவ்வாய் கிழமை காலை 9.30 மணிக்கு

    கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:

    1. சிவகங்கை

    2. திண்டுக்கல் கிழக்கு

    3. திண்டுக்கல் மேற்கு

    4. அரியலூர்

    5. பெரம்பலூர்

    6. கரூர்

    7. நாமக்கல்

    8. தருமபுரி

    9. கிருஷ்ணகிரி கிழக்கு

    10. கிருஷ்ணகிரி மேற்கு

    11. விழுப்புரம்

    12. கடலூர் கிழக்கு

    13. கடலூர் வடக்கு

    14. கடலூர் தெற்கு

    15. கடலூர் மேற்கு

    16. திருவண்ணாமலை வடக்கு

    17. திருவண்ணாமலை தெற்கு

    18. திருவண்ணாமலை கிழக்கு

    19. திருவண்ணாமலை மத்தியம்

    20. ராணிப்பேட்டை கிழக்கு

    21. ராணிப்பேட்டை மேற்கு

    24.6.2025 - செவ்வாய் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு

    கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:

    1. கன்னியாகுமரி கிழக்கு

    2. கன்னியாகுமரி மேற்கு

    3. தூத்துக்குடி வடக்கு

    4. தூத்துக்குடி தெற்கு

    5. தென்காசி வடக்கு

    6. தென்காசி தெற்கு

    7. திருநெல்வேலி மாநகர்

    8. திருநெல்வேலி புறநகர்

    9. ராமநாதபுரம்

    10. விருதுநகர் கிழக்கு

    11. விருதுநகர் மேற்கு

    12. தேனி கிழக்கு

    13. தேனி மேற்கு

    14. மதுரை மாநகர்

    15. மதுரை புறநகர் கிழக்கு

    16. மதுரை புறநகர் மேற்கு

    17. புதுக்கோட்டை வடக்கு

    18. புதுக்கோட்டை தெற்கு

    19. ஈரோடு மாநகர்

    20. ஈரோடு புறநகர் கிழக்கு

    21. ஈரோடு புறநகர் மேற்கு

    25.6.2025 - புதன் கிழமை காலை 9.30 மணிக்கு

    கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:

    1. திருவாரூர்

    2. மயிலாடுதுறை

    3. நாகப்பட்டினம்

    4. தஞ்சாவூர் கிழக்கு

    5. தஞ்சாவூர் மேற்கு

    6. தஞ்சாவூர் மத்தியம்

    7. தஞ்சாவூர் தெற்கு

    8. கள்ளக்குறிச்சி

    9. சேலம் மாநகர்

    10. சேலம் புறநகர்

    11. திருச்சி மாநகர்

    12. திருச்சி புறநகர் வடக்கு

    13. திருச்சி புறநகர் தெற்கு

    14. நீலகிரி

    15. கோவை மாநகர்

    16. கோவை புறநகர் வடக்கு

    17. கோவை புறநகர் தெற்கு

    18. திருப்பூர் மாநகர்

    19. திருப்பூர் புறநகர் கிழக்கு

    20. திருப்பூர் புறநகர் மேற்கு

    25.6.2025 - புதன் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு

    கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:

    1. திருப்பத்தூர்

    2. வேலூர் மாநகர்

    3. வேலூர் புறநகர்

    4. திருவள்ளூர் வடக்கு

    5. திருவள்ளூர் மத்தியம்

    6. திருவள்ளூர் தெற்கு

    7. திருவள்ளூர் கிழக்கு

    8. திருவள்ளூர் மேற்கு

    9. செங்கல்பட்டு கிழக்கு

    10. செங்கல்பட்டு மேற்கு

    11. காஞ்சிபுரம்

    12. சென்னை புறநகர்

    13. வட சென்னை வடக்கு (கிழக்கு)

    14. வட சென்னை வடக்கு (மேற்கு)

    15. வட சென்னை தெற்கு (கிழக்கு)

    16. வட சென்னை தெற்கு (மேற்கு)

    17. தென் சென்னை வடக்கு (கிழக்கு)

    18. தென் சென்னை வடக்கு (மேற்கு)

    19. தென் சென்னை தெற்கு (கிழக்கு)

    20. தென் சென்னை தெற்கு (மேற்கு)

    மேற்கண்ட ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களும்; மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

    • சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
    • மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்படி உத்தரவு.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் மே 3ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச் செலயாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    மேலும், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

    • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை என பிரேமலதா தெரிவித்தார்.

    சென்னை:

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்க்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மாவட்ட செயலாளர்கள் சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

    பெரும்பாலானோர் தனித்துப் போட்டியிடுவோம் என கருத்து பகிர்ந்தனர்.

    இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. இனிமேல் கூட்டணி அமைத்துப் பேசுவோம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 14 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும்.

    விஜய பிரபாகரனை ஒரு தொகுதியில் நிற்கவைக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

    • வெற்றி சாதாரண வெற்றி இல்லை, சாதாரண மாகவும் கிடைத்து விடவில்லை.
    • 2026 தேர்தலுக்கு களப்பணிகளை தொடங்க வேண்டும்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை), காலை, சென்னை, கலைஞர் அரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர் கூட்டம் என்பதால், நாற்பதுக்கு நாற்பது வெற்றியை ஈட்டித் தந்த, ஆற்றல்மிகு மாவட்டச் செயலாளர்களுக்கும்-தலைமைக் கழக நிர்வாகி களுக்கும் எனது பாராட்டுகளையும்-வாழ்த்துகளையும்-மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்த நன்றியை உங்கள் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டரின் இதயத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த வெற்றி சாதாரண வெற்றி இல்லை; சாதாரண மாகவும் இது கிடைத்து விடவில்லை. 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாற்பதுக்கு 39 பெற்றோம். 2024 தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது பெற்றோம். இரண்டு தேர்த லில் முழுமையான வெற்றியை இதுவரை யாரும் பெற்றது இல்லை; நாமும் இதுக்கு முன்பு பெற்றது இல்லை.

    இந்த வெற்றிக்கு உங்களது உழைப்பு, உங்களது செயல்பாடு மிக மிக அடிப்படையாக அமைந்திருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை ஆவணப்படுத்தி, 'தென் திசையின் தீர்ப்பு' என்ற நூலை உருவாக்கி வழங்கியிருக்கிறேன். அதை பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டு உள்ளார். பொதுச்செய லாளருக்கும், பொருளாளருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நமது உழைப்பையும் வெற்றியையும் பதிவு செய்யும் ஆவணங்கள் அதிகம் இல்லை. அதனால்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய எல்லா செயல்பாடுகளையும் இந்த நூலில் முழுமையாக தொகுத்து வழங்கி இருக்கிறேன்.

    உங்கள் மாவட்டங்களில் இயங்கும் கழகம் சார்ந்த நூலகங்களிலும் பொது நூலகங்களிலும் இந்த புத்தகத்தை நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, நடந்த முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் வென்றிருக்கிறோம்.

    சுணக்கமில்லாமல் செயல்பட்டால், அடுத்த முறையும் நம்முடைய கழக ஆட்சி என்பதில் சந்தேகமில்லை. அதற்கு தயாராகும் வகையில், நாம் களப்பணிகளை தொடங்க வேண்டும்.

    அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும். விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் அதேவேளையில் நம்முடைய சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று நான் சும்மா ஏதோ மேடைப் பேச்சுக்காக குறிப்பிடவில்லை. அந்த அளவுக்கு நலத்திட்டப் பணிகளை செய்திருக்கி றோம்.

    மக்களிடம் நற்பெயரை வாங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டின் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டா லும் அந்த வீட்டில் ஒருவ ராவது பயனடையும் வகை யில்தான் திட்டங்கள் தீட்டப் பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மக்களை சென்று சேர்ந்திருக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் வாக்குகளாக மாற வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய களப்பணி மிக மிக அவசியம். அதற்கு இப்போதே நாம் உழைக்க வேண்டும்.

    நான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ந் தேதி இரவு அமெரிக்கா விற்குப் புறப்பட இருக்கி றேன். தீர்மானத்தில் சொன்னபடி, முப்பெரும் விழாவிற்கான பணிகளை செய்து முடிப்பதோடு நான் இப்போது சொல்லியிருக்கும் பணிகளையும் செய்யத் தொடங்கியிருக்க வேண்டும்.

    நான் அமெரிக்காவில் இருந்தாலும் தலைமைக் கழகம் மூலமாக இதை யெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்.

    நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பிலும், கழகத்தின் சார்பிலும் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தி ருக்கிறோம். நாளை மறுநாள் தலைவர் கலைஞர் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்பட இருக்கிறது.

    அதில் நீங்கள் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன். உலகத்தில் எந்த தலைவருக்கும் இப்படி சிறப்புகள் செய்யப்பட்டது இல்லை என்ற அளவிற்கு கொண்டாடி இருக்கிறோம்.

    இதன் தொடர்ச்சியாக, வரும் முப்பெரும் விழாவில் கழகத்தின் பவள விழா நிறைவும் தீர்மானத்தில் சொன்னபடி மிகச்சிறப்பாக நடைபெற வேண்டும்.

    கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவிலேயே முதன்முத லாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம்! அந்த வரலாற்றை எழுதியது நாம்தான்.

    கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் ஆனபிறகும் ஆட்சியில் இருக்கும் இயக்கமும் நம்முடையதுதான். அப்படிப்பட்ட தருணத்தில்-கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் இந்த இயக்கத்தில், நானும் நீங்களும் பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் இருக்கி றோம் என்பது நமக்கெல்லாம் கிடைத்த மிகப்பெரிய பெருமை.

    75 ஆண்டுகள் கடந்து விட்ட இந்த இயக்கத்தின் தேவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கிறது. ஆலமரமாக இந்த இயக்கம் வேரூன்றி நிற்கிறது என்றால், அதற்கு காரணம், இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு, கோடிக்க ணக்கானவர்களின் உழைப்பும் தியாகமும் உர மாக்கப்பட்டிருக்கிறது. அதன் பயனைத்தான் இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம்.

    அதேமாதிரி, இந்த இயக்கத்தை அடுத்த டுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையும் நம்முடைய கைகளில் இருக்கிறது. அதற்கான உழைப்பை வழங்க உங்களை நீங்கள் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    சென்னை ராயப்பேட்டையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 11ம் தேதி நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. #ADMK #EdappadiPalaniswami #OPaneerselvam
    சென்னை:

    அதிமுக தலைமையகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டையில் நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.



    இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. #ADMK #EdappadiPalaniswami #OPaneerselvam
    சென்னையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. #ADMK
    சென்னை:

    சென்னையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வரும் நிலையில் வருகிற 22-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. நூற்றாண்டு நிறைவு விழா வருகிற 30-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்த விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது.

    அ.தி.மு.க. அமைச்சர்களில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சி பதவிகளை வைத்துள்ளதால் அந்த பதவிகளை பிரித்து பதவி இல்லாத முக்கிய நிர்வாகிகளுக்கு வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    கடந்த வாரம் அ.தி.மு.க.வில் பல்வேறு நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் இன்னும் ஏராளமான எம்.பி., எம்.எல். ஏ.க்கள் கட்சி பொறுப்பு இல்லாமல் உள்ளதாகவும் அப்படிப்பட்ட நிர்வாகிகளுக்கும் கட்சி பொறுப்பு வழங்குவது குறித்து கூட்டத்தில் வாய்ப்பு கிடைத்தால் பேசுவோம் என்று மாவட்டச் செயலாளர் ஒருவர் தெரிவித்தார்.

    கட்சியில் மாவட்டச் செயலாளர்களுக்கும் அடிமட்ட தொண்டர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் அ.தி.மு.க. விழாக்களும் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு போதிய கூட்டம் வருவதில்லை என்ற குறைபாடு தற்போது மேலோங்கி உள்ளது.

    இதை சரிசெய்வதற்கான வழிவகை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட கூடும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இவர்களுடன் தலைமை கழக நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
    ×