search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliment election"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.
    • முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

    பாட்னா:

    பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம்.

    எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது. தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களுக்காக உழைத்து வருகிறோம், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம்.

    சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளை அமைப்பது முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை மாநிலத்தில் பல பணிகளை செய்துள்ளோம். வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீகார் முதல் மந்திரி டெல்லிக்கு இன்று வருகை தந்தார்.
    • இந்தப் பயணத்தின் போது ராகுல் காந்தியை அவர் சந்தித்தார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதாதளம் சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேறியது. இந்த கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைத்தார்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அவர் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கப் போவதாகவும் அறிவித்தார். இதற்கான பணிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

    இதற்கிடையே, மணிப்பூரில் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா அபகரித்திருப்பது நிதிஷ்குமாருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என கூறிய நிதிஷ்குமார், டெல்லி சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறினார்.

    இந்நிலையில், முதல் மந்திரி நிதிஷ்குமார் 3 நாள் பயணமாக இன்று டெல்லி வருகை தந்தார். பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் சந்தித்தார். பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ரூபி மனோகரன் எம் .எல். ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஜெகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அவ்வாறு அவர் வரும்போது பணகுடி பகுதியில் உள்ள காமராஜர் சிலை, ராஜீவ் காந்தி சிலை மற்றும் மூப்பனார் சிலைகளை புதுப்பித்து திறக்க வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை பாராளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

    மற்ற கட்சிகளை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், பல கட்சிகள் தனித்தனியாகவும் களம் கண்டன.

    மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். வருகிற 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே, தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.



    டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன்,  சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்தில் பங்கேற்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை அக்கட்சியின் தேசிய தலைமை இன்று அறிவித்துள்ளது. #Congress #ParlimentElection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை கவனிக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு குழுக்களை இன்று நியமனம் செய்துள்ளது. 

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் குழுவில் ப.சிதம்பரம், மணிசங்கர் ஐயர், கே.ஆர்.ராமசாமி, குஷ்பு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 35 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் கோபண்ணா, அமெரிக்கை நாராயணன் உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.



    தேர்தல் பிரச்சார குழு தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்தக் குழுவில் ஜே.எம்.ஹாரூன்,  விஜயதரணி, அப்ஸரா ரெட்டி உள்பட 35 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தனுஷ்கோடி ஆதித்யன் உள்பட 14 பேர் இடம்பெற்றுள்ளனர்

    மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செயல் தலைவராக மோகன் குமாரமங்கலத்தை நியமனம் செய்துள்ளது. #Congress #ParlimentElection
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பாஜக தலைவர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். #BJP #TNElectionIncharge
    சென்னை:

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    தமிழகத்திலும் அ.தி.மு.க., தி.மு.க, அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் துறை வாரியாக 28 பேர் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    வானதி ஸ்ரீனிவாசன், மோகன் ராஜுலு, நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், கே.டி.ராகவன், ஏ.பி.முருகானந்தம், கரு.நாகராஜன், கனக சபாபதி, ஜி.கே.நாகராஜ் உள்பட 28 பேரை நியமனம் செய்து உத்தரவிட்டார். #BJP #TNElectionIncharge
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 74 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். #AmitShah
    லக்னோ:

    2019 பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மத்தியிலுள்ள பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள்  பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

    மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியை நிர்ணயம் செய்வதில் முக்கிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளது. 2014 தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கியது. 

    உ.பி.யில் பெரிய கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். எனவே, பா.ஜ.க.விற்கு இந்த முறை கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, உ.பி.யில் பா.ஜ.க.வின் வாக்குச்சாவடி அளவிலான பணியாளர்களிடம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அமித் ஷா, உ.பி.யில் 74 பாராளுமன்ற தொகுதிகளை பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    மாநிலத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதம் பா.ஜ.க.வுக்கு வரும் வகையில் தீவிரமாக கட்சி பணியாற்ற வேண்டும்.



    மாயாவதி பலவீனமான அரசு வேண்டும் என்கிறார்,  அது ஊழலுக்குதான் வழிவகை செய்யும். நாங்கள் வலுவான அரசை அமைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நரேந்திர மோடியால் மட்டுமே வலுவான அரசை கொடுக்க முடியும். எதிர்க்கட்சியினர் இதுபோன்ற தலைவரால் ஆட்சி செய்யப்படுவதை விரும்பவில்லை.  

    2014 தேர்தலில் உ.பி.யில் இருந்து 73 தொகுதிகள் கிடைத்ததால் மோடியால் மெஜாரிட்டி அரசு அமைக்க முடிந்தது என கூறப்பட்டது.  இப்போது மாநிலத்தில் 74 தொகுதிகளில் கட்சியை வெற்றிபெற செய்ய பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தனதாக்கிவிட்டால். மாயாவதியோ, அகிலேஷ் யாதவோ ஆட்சிக்கு வரமுடியாது.  அடுத்த 25 வருடங்களுக்கு பா.ஜ.க. தான் ஆட்சி செய்யும்.

    கடுமையான உழைப்பாளியான மோடிக்கு இந்த முறை தேடித்தரும் வெற்றி நம் அர்சியல் எதிர்களின் இதயத்துடிப்பை நிறுத்துமாறு அமைவதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். #AmitShah
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. #ParlimentElection2019 #ECI #Pollschedule
    புதுடெல்லி:

    மத்தியில் உள்ள பாஜக அரசின் ஆட்சிக்காலம் இந்த ஆண்டின் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, வரும் மே மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும். எனவே இதற்கான ஆயத்த வேலைகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
     
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றும் நோக்கில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.



    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில், பாராளுமன்ற தேர்தலுக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகளை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    பாராளுமன்ற தேர்தல் தேதிகளை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது எனவும்,  தேர்தலை 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #ECI #Pollschedule
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். #ParlimentElection #AamAadmiParty
    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மே மாதம் பாராளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில்,  வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக, அக்கட்சியை சேர்ந்த தொழிலாளர் துறை மந்திரி கோபால் ராய் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் டெல்லி மற்றும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது என தெரிவித்துள்ளார். 

    கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது நினைவிருக்கலாம். #ParlimentElection #AamAadmiParty
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print