என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "parliment election"
- நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.
- முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
பாட்னா:
பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம்.
எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது. தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களுக்காக உழைத்து வருகிறோம், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம்.
சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளை அமைப்பது முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை மாநிலத்தில் பல பணிகளை செய்துள்ளோம். வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
- பீகார் முதல் மந்திரி டெல்லிக்கு இன்று வருகை தந்தார்.
- இந்தப் பயணத்தின் போது ராகுல் காந்தியை அவர் சந்தித்தார்.
புதுடெல்லி:
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதாதளம் சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேறியது. இந்த கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைத்தார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அவர் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கப் போவதாகவும் அறிவித்தார். இதற்கான பணிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, மணிப்பூரில் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா அபகரித்திருப்பது நிதிஷ்குமாருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என கூறிய நிதிஷ்குமார், டெல்லி சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறினார்.
இந்நிலையில், முதல் மந்திரி நிதிஷ்குமார் 3 நாள் பயணமாக இன்று டெல்லி வருகை தந்தார். பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் சந்தித்தார். பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
- நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
- காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ரூபி மனோகரன் எம் .எல். ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஜெகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அவ்வாறு அவர் வரும்போது பணகுடி பகுதியில் உள்ள காமராஜர் சிலை, ராஜீவ் காந்தி சிலை மற்றும் மூப்பனார் சிலைகளை புதுப்பித்து திறக்க வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை பாராளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.




