search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Kumar"

    • கடந்த இரு ஆண்டுகளில் நடத்திய 11 மாநில சட்டசபை தேர்தல்களில் 3,400 கோடி ரூபாய் பறிமுதல் செய்தோம்.
    • போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகம், சத்தீஸ்கர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, இமாசல பிரதேசம், குஜராத் மற்றும் திரிபுரா ஆகிய 11 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தி உள்ளோம்.

    கடந்த இரு ஆண்டுகளில் 11 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்தியுள்ளோம். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 3,400 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம்.

    சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யலாம். போலி செய்தி பரப்பக் கூடாது. போலியான தகவல்கள் செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்கக் கூடாது. தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும். முதல் கட்டமாக தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

    மேலும் 4 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்களை ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா இங்கே. 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி உள்ளோம். நல்லாட்சி மற்றும் துறைகள் முழுவதும் சேவை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் மக்களிடம் செல்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.
    • வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலுடன் 4 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்களை ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

    ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்க மொபைல் ஆப் உள்ளது.
    • ஒருதலைப்பட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தமிழகம் வந்த அதிகாரிகள் குழு சென்னையில் 2 நாட்களாக ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    *2 நாட்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம்.

    * வாக்காளர்கள் முழுமையாக வாக்களிக்க வேண்டும்.

    * அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

    * நேர்மையாக தேர்தல் நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளோம்.

    * பணப்பட்டுவாடாவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், அதை பொறுத்துக்கொள்ளவும் மாட்டோம்.

    * தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.19 கோடி. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஆண்கள் - 3.04 கோடி, பெண்கள் - 3.15 கோடி, மூன்றாம் பாலினம் - 8,294 வாக்காளர்கள் உள்ளனர்.

    * தமிழகத்தில் புதிய வாக்காளர் 9.18 லட்சம் பேர் உள்ளனர்.

    * வாக்கு சாவடியில் 66% வெப் காஸ்டிங் செய்யப்படும்.

    * வாக்குச்சாவடி மையங்களில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தப்படும்.

    * வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்க மொபைல் ஆப் உள்ளது. சி-விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். சி-விஜில் செயலி மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஜனநாயக முறையில் வெளிப்படையாக தேர்தலை நடத்த ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    * எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

    * 17 மாவட்டங்களில் உள்ள 145 எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். விமான நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    * பணப்பட்டுவாடா, மது விநியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஒருதலைப்பட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

    * தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    * ஒரு வங்கி கணக்கில் இருந்து பலருக்கு பணம் பட்டுவாடா செய்தால் அதை கண்காணிக்கும் வசதி உள்ளது.

    * அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு கடந்த முறை வழங்கிய சின்னமே, இந்த முறையும் வழங்கப்படும் என உறுதி அளிக்க முடியாது.

    * EVM கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    * எந்த புதிய முறையும் பாராளுமன்ற தேர்தலில் கொண்டு வரவில்லை. பழைய முறை தான், ஆனால் நவீன தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்கிறோம்.

    * சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படும் என்று கூறினார்.

    • பெரும்பாலான கட்சி தலைவர்கள் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
    • எந்திரத்தை பயன்படுத்துவதால் வாக்குகள் பதிவாகும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அட்டவணை மார்ச் 2-ம் வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாடு முழுவதும் 7 அல்லது 8 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாநில வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் அதிகாரிகள் குழு தமிழகம் வந்துள்ளது. அந்த குழுவில் தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதிஷ் வியாஷ், துணை ஆணையர்கள் அஜய் பாது, மனோஜ்குமார் சாகுல், முதன்மை செயலாளர் மல்லிக் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

    நேற்று அவர்கள் ஆலோசனையை தொடங்கினார்கள். முதல்கட்டமாக தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்து கருத்துக்கள் கேட்டனர். மொத்தம் 8 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    பெரும்பாலான கட்சி தலைவர்கள் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஓட்டுப்பதிவின்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., பா.ஜ.க. பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.

    அதேசமயத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரம் (விவிபேட்) பயன்படுத்த தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எந்திரத்தை பயன்படுத்துவதால் வாக்குகள் பதிவாகும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

    நேற்று பிற்பகல் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். தமிழகத்தில் ஓட்டுப்பதிவின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் முதல் நாள் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.

    இன்று (சனிக்கிழமை) 2-ம் நாள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.யுடன் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் தலைமையிலான குழு இன்று ஆலோசனை நடத்தியது.

    காலை 9 முதல் 11 மணி வரை, தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்தந்த மாநிலங்களில் பாராளுமன்ற தோ்தலுக்காக செய்யப்பட்டுள்ள முக்கிய ஏற்பாடுகள் குறித்த விவரங்களை காட்சிப்பட விளக்கங்களின் வாயிலாக தலைமைத் தோ்தல் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

    இதைத் தொடா்ந்து, வருமான வரி புலனாய்வுப் பிரிவு, அமலாக்கத்துறை, மத்திய ரிசா்வ் போலீஸ் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த தலைவா்கள், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

    • பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளில் துணை ராணுவப் படையை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்கள்.
    • அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்ப துரை கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்துக்கு எதிரே உள்ள 'டிரைடண்ட்' நட்சத்திர ஓட்டலில் தங்கிய இந்திய தேர்தல் கமிஷனர்கள் இன்று காலையில் அதே ஓட்டலில் தேர்தல் தொடர்பாக ஆய்வு கூட்டத்தை நடத்தினார்கள்.

    முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

    ஒவ்வொரு கட்சியிலும் 2 பேர் சென்று தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்து அதை மனுவாகவும் கொடுத்தனர்.

    முக்கியமான கோரிக்கையாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவில் தில்லு முல்லு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

    பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளில் துணை ராணுவப் படையை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்கள்.

    இன்றைய இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.

    அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்ப துரை கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் டி.ஜி.பி. பாலச்சந்திரன் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் வக்கீல் பிரிவு தலைவர் சந்திர மோகன், ஆம் ஆத்மி கட்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, ஸ்டெல்லா மேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஆறுமுக நயினார், சம்பத், தேசிய மக்கள் கட்சி யில் மாநில தலைவர் சீனிவாசன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் 2 பேர் வீதம் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து தங்களது கருத்துக்களை கோரிக்கை மனுவாக வழங்கினார்கள்.

    ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் 9 நிமிட நேரம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பகல் 11.39 மணி வரை நடந்தது.

    ஒவ்வொரு அரசியல் கட்சி பிரதிநிதிகள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அங்கு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு இந்திய தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் மீண்டும் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளது என்பதை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் விவரங்கள், மின்னணு எந்திரங்கள் கையிருப்பு, பதட்டமான வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நாளையும் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் தங்கியிருந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    நாளை காலையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் கலந்தாலோசனை நடத்துகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேற்கொண்டு வருகிறார்.
    • நட்சத்திர ஓட்டலில் தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

    இதற்கான தேர்தல் தேதி அனேகமாக மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேற்கொண்டு வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

    அந்த வகையில் தமிழ் நாட்டில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்யவும், அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு அறியவும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அவருடன் தேர்தல் கமிஷனர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் கமிஷனர்கள் தர்மேந்திர சர்மா, நிதிஷ் வியாஸ், துணை தேர்தல் கமிஷனர்கள் அஜய் பாது, மனோஜ்குமார் சாகு, முதன்மை செயலாளர் மலேய்மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் நாராயணன், அனுஜ் சந்தக் ஆகியோரும் சென்னை வந்தனர்.

    சென்னை விமான நிலையத்துக்கு எதிரே உள்ள 'டிரைடண்ட்' நட்சத்திர ஓட்டலில் தங்கிய இந்திய தேர்தல் கமிஷனர்கள் இன்று காலையில் அதே ஓட்டலில் தேர்தல் தொடர்பாக ஆய்வு கூட்டத்தை நடத்தினார்கள்.

    முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

    ஒவ்வொரு கட்சியிலும் 2 பேர் சென்று தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்து அதை மனுவாகவும் கொடுத்தனர்.

    முக்கியமான கோரிக்கையாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவில் தில்லுமுல்லு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

    பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளில் துணை ராணுவப்படையை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்கள்.

    இன்றைய இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.

    அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்பதுரை கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் டி.ஜி.பி. பாலச்சந்திரன் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் வக்கீல் பிரிவு தலைவர் சந்திரமோகன், ஆம் ஆத்மி கட்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, ஸ்டெல்லா மேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஆறுமுக நயினார், சம்பத், தேசிய மக்கள் கட்சியில் மாநில தலைவர் சீனிவாசன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் 2 பேர் வீதம் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து தங்களது கருத்துக்களை கோரிக்கை மனுவாக வழங்கினார்கள்.

    ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் 9 நிமிட நேரம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பகல் 11.39 மணி வரை நடந்தது.

    ஒவ்வொரு அரசியல் கட்சி பிரதிநிதிகள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அங்கு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு இந்திய தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் மீண்டும் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளது என்பதை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆய்வு மேற்வார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் விவரங்கள், மின்னணு எந்திரங்கள் கையிருப்பு, பதட்டமான வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.

    இதைத் தொடர்ந்து நாளையும் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் தங்கியிருந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    • பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வருகிறார்.
    • நாளை அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கருத்து கேட்கிறார்.

    சென்னை:

    இந்தியாவில் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

    இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று சென்னை வருகிறார்.

    நாளை காலை 11.30 மணிக்கு அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கருத்து கேட்கிறார். மதியம் 1 மணி வரை இந்த கருத்து கேட்பு நடைபெறுகிறது.

    மதியம் 2 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு 8 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும்.

    மறுநாள் (24-ந் தேதி) தென் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார். அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை, தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார். மதியத்துக்கு பிறகு தலைமைச் செயலாளர் டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவரிக்கிறார்.

    அதன் பிறகு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

    • பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த தயாராக உள்ளோம்.
    • தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம் என்றார்.

    புவனேஸ்வர்:

    அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைத்து விவகாரங்களிலும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்துவது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி செயல்படுவோம்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டில் இதுவரை ஒரே கட்டமாகத்தான் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர்களிடமும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு தற்போது தேர்தல் ஆணையத்தில் தயார் நிலையில் உள்ளது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்துக்கும் கடந்த வாரம் தேர்தல் ஆணையர்கள் வந்து வாக்காளர் பட்டியலை சரி பார்த்தனர். மேலும் பாராளுமன்ற தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எவ்வளவு தேவைப்படுகிறது என்கிற விவரங்களையும் கேட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக வரும் அவர் வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னையில் தங்கி இருக்கிறார். அப்போது அவர், உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கருத்து கேட்க உள்ளார். அவர்களிடம் கருத்து கேட்டு தேர்தல் தேதியை முடிவு செய்ய உள்ளார்.

    தமிழ்நாட்டில் இதுவரை ஒரே கட்டமாகத்தான் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் வருகிற பாராளுமன்ற தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்தலாமா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கருத்து கேட்கிறார்.

    மேலும் தேர்தல் சம்பந்தமான பணிகள் குறித்தும் அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் எத்தனை உள்ளன? துணை ராணுவப்படை பாதுகாப்பு எவ்வளவு தேவைப்படும்? பாதுகாப்பு பணிக்கு வெளிமாநில போலீசார் எவ்வளவு தேவை என்பது போன்ற விவரங்களையும் கேட்டறிகிறார். மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்துகிறார்.

    மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடமும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்துக்கு எவ்வளவு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகிறது? இப்போது கைவசம் எவ்வளவு மின்னணு எந்திரங்கள் உள்ளது? இன்னும் எவ்வளவு மின்னணு எந்திரங்கள் தேவைப்படும் என்கிற விவரங்களையும் கேட்டு விரிவான அறிக்கையாக பெறுகிறார். இதே போல் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர்களிடமும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

    ஏற்கெனவே மேற்கு வங்காளம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வருகிற 23-ந்தேதி தமிழ்நாட்டுக்கு வந்து பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ள இருப்பது முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    மேலும் சில மாநிலங்களுக்கும் அவர் சென்று பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகு அவர் பாராளுமன்ற தேர்தல் தேதியை அறிவிப்பார்.

    • வாக்காளர்களுக்கு பணம், மது, இலவசங்கள் தருவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை.
    • நேர்மையான முறையில் தேர்தலை நடத்த விரும்புவதாக தேர்தல் ஆணையம் தகவல்.

    குஜராத் மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் நிலையில், 788 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இதுவரை ரூ.750 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: 


    பணம் கடத்தப்படுவதாக பல இடங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளன.  தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது மோசமான நடைமுறையாகும், நாங்கள் அதை முற்றிலும் தடுக்கும் முயற்சியை செய்கிறோம். குஜராத்தின் அண்டை மாநில எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வருவாய் புலனாய்வு இயக்குநரகம், வருமானவரித்துறை, தீவிரவாத தடுப்புப்படை மற்றும் மாநில காவல்துறை இணைந்து இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டன.

    குஜராத்தில் கடந்த 2017 தேர்தலின் போது ரூ.27 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இந்த தேர்தலில் இதுவரை 750 கோடி ரூபாய் அளவிற்கு ரொக்க பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளது. 


    தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கையால் இந்த முறை கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. வதோதராவில் பெரிய அளவில் ஜப்தி நடக்கிறது. ரூ.450 கோடி வரை பறிமுதல் செய்யப்படும். 171 கோடி மதிப்பில் இலவசங்கள் இருந்தன. பணம், மது, போதைப்பொருள் மற்றும் இலவச பொருட்களை வாக்காளர்களுக்கு, வேட்பாளர்கள் வழங்க கூடாது என்று நாங்கள் அதிகாரிகளுக்கு தெளிவாக அறிவுறுத்தி உள்ளோம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதையே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்திற்கு எதிராக நிதி ஆயோக் துணைத் தலைவர் பேசியது தேர்தல் விதிமீறல் என தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #NitiAayog #RajivKumar
    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி அளிப்பு திட்டத்தின்கீழ் (நியாய்) மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி கொடுத்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இந்த திட்டம் இடம்பெற்றிருந்தது.

    இந்த திட்டத்தை மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் விமர்சனம் செய்தார். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று கூறிய அவர், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நிலாவை தருவேன் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளிக்கும் என்றும் டுவிட்டர் மூலம் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

    காங்கிரசால் முன்மொழியப்பட்ட இந்த வருமான உத்தரவாத திட்டம் பொருளாதார சோதனை, நிதி ஒழுங்குமுறை சோதனை மற்றும் நிறைவேற்று சோதனையில் தோல்வி அடைந்த திட்டம் என்றும், இதனை செயல்படுத்தினால் நிதி கட்டமைப்பு சீர்குலையும் என்றும் குறிப்பிடிருந்தார்.

    அரசு அதிகாரி இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜீவ் குமாரிடம், தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. அதன்பேரில் தேர்தல் ஆணையத்திற்கு ராஜீவ் குமார் விளக்க கடிதம் அனுப்பினார். அதில், பொருளாதார வல்லுநர் என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்ததாகவும், அரசு அமைப்பின் சார்பில் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.



    ஆனால், அவரது விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்ததுடன் அவரது கருத்துக்கு கடும் அதிருப்தியையும் தெரிவித்தது. இதுதொடர்பாக அவருக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “தாங்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. அரசு அதிகாரிகள் பாரபட்சமற்றவர்களாக இருக்கவேண்டும். தாங்கள் கூறிய கருத்து தேர்தல் விதிகளை மீறிய செயல் ஆகும். எதிர்காலத்தில் இதுபோன்று பேசாமல் எச்சரிக்கையுடன் கருத்து தெரிவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.” என கூறியுள்ளது. #LokSabhaElections2019 #NitiAayog #RajivKumar
     
    ×