search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CEC"

    • பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த தயாராக உள்ளோம்.
    • தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம் என்றார்.

    புவனேஸ்வர்:

    அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைத்து விவகாரங்களிலும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்துவது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி செயல்படுவோம்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.

    • விவி பேட் ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும்.
    • சேமிக்கப்பட்ட ரசீதுகள் 100 சதவீதம் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.

    இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது. இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வாக்கு எந்திரம் அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்தே அதன் செயல்பாட்டில் சந்தேகம் இருந்து வருகிறது. வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு விரிவாக குறிப்புகளை கொடுத்துள்ளோம்.

    எங்களுடைய பரிந்துரை எளிதானது. வாக்காளர்கள் வாக்கு அளிக்கும்போது விவிபாட் எந்திரத்தில் ஒரு ஸ்லிப் தோன்றி யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது காட்டுகிறது. ஆனால் அந்த ஸ்லிப் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும். 100 சதவீதம் இந்த ஸ்லிப்களை எண்ண வேண்டும். இது வாக்காளர்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை கொடுக்கும் இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. பல கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளோம். ஆனால் இந்தியா கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது எனவும் இந்தியா கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் விவிபேட் தொடர்பாக தங்களை சந்திக்க இந்தியா கூட்டணி குழுவுக்கு நேரம் ஒதுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இந்தியா கூட்டணியில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை தேர்தல் ஆணையத்தின் தலைவரை சந்தித்து வழங்கி, ஆலோசனை நடத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால், அவ்வாறு செய்வதில் எங்களுக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

    "இந்தியா கூடடணியின் 3 அல்லது 4 பேர் உங்களை சந்தித்து விவிபேட் குறித்து சில நிமிடங்கள் தகவல்களை பரிமாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கும்படி மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன்" என ஜெய்ராம் ரமேஷ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    30-ந்தேதியிடப்பட்டு இந்த கடினம் எழுதப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி இது தொட்ரபானை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியமானவை. தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை முடிவு செய்கிறது.
    • கட்சிகளின் சின்னம், தேர்வு அட்டவணை உள்ளிட்ட அனைத்தையும் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்கிறது.

    இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்கள் தேர்வு தொடர்பான மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்த நிலையிலும் மத்திய அரசு இந்த மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.

    இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கூறுகையில் "அரசு பில்டோசர் மூலம் ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது. அங்கே சுதந்திரம், பாரபட்சமற்ற தேர்தல் ஆணையம் இல்லை என்றால் எப்படி சுதந்திரம், பாரபட்சமற்ற தேர்தல் இருக்க முடியும்.

    நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியமானவை. தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை முடிவு செய்கிறது. கட்சிகளின் சின்னம், தேர்வு அட்டவணை உள்ளிட்ட அனைத்தையும் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்கிறது. நாங்கள் இதுகுறித்து எங்களுக்குள் ஆலோசனை நடத்தி, சட்டப்பூர்வ ஆலோசனைகள் பெறுவோம். அதன்பின் உச்சநீதிமன்றத்தில முறையீடு செய்வோம்" என்றார்.

    தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான 5 பேர் கொண்ட தேர்வு குழுவை தேர்ந்தெடுக்க மத்திய சட்ட மந்திரி தலைமையில் 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும். தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் குழுவில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதிலாக மந்திரிசபை செயலாளர் இடம் பிடிப்பார் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநிலங்களில் இவ்வருட இறுதிக்குள் சட்டசபை காலம் நிறைவடைகிறது
    • 5 மாநிலங்களிலும் மொத்தம் 16.1 கோடி வாக்காளர்கள் உள்ளனர்

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது.

    அந்த 5 மாநிலங்களில் நடைபெற வேண்டிய 2023க்கான சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பதிலிருந்து கட்டமைப்பு வசதிகளின் தேவை உள்ளிட்ட முக்கிய ஏற்பாடுகளை செய்வது வரை தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    அதே நேரம் இம்மாநிலங்களில் தேர்தலை எதிர்நோக்கியுள்ள கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன.

    தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

    இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இதனை வெளியிட்டார். தேர்தலை அமைதியாக நடத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இம்முறை சத்தீஸ்கரில் மட்டும் 2 கட்டங்களாகவும் பிற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

    5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 16.1 கோடி வாக்காளர்களில் 60.2 லட்சம் முதன்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 8.2 கோடி பேர் ஆண் வாக்காளர்கள்; 7.8 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.

    மொத்தம் 1.79 லட்சம் வாக்கு சாவடிகள் அமைய உள்ளன. இவற்றில் 1 கோடியே 1 லட்சம் வாக்குச் சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை நேரில் கண்காணிக்க "வெப் கேமிரா" (web camera) அமைக்கப்பட உள்ளது.

    மிசோரமில் நவம்பர் 7-ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். மிசோரத்தில் வருகிற 13-ந்தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும். அன்றே மனுதாக்கல் தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும்.

    சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டத்துக்கான தேர்தல் அறிக்கை வருகிற 13-ஆம்தேதியும், இரண்டாம் கட்டத்துக்கான தேர்தல் அறிகை 21-ஆம் தேதியும் வெளியிடப்படும்.

    மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17 அன்று தேர்தல் நடைபெறும். வருகிற 21-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். 30-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும்.

    ராஜஸ்தானில் நவம்பர் 23 அன்று  தேர்தல் நடைபெறும். வருகிற 30-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அன்று தொடங்கி நவம்பர் 6 வரை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம்.

    தெலுங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். நவம்பர் 3-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அன்று தொடங்கி நவம்பர் 10-ஆம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம்.

    ஐந்து மாநிலங்களிலும் டிசம்பர் 3-ஆம் தேதி, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்..

    5 மாநிலங்களிலும் உள்ள தற்போதைய சட்டசபை நிலவரம்:

    தெலுங்கானா - மொத்த இடங்கள்: 119 - ஆளும் கட்சி: பாரத் ராஷ்ட்ரிய சமிதி

    மத்திய பிரதேசம் - மொத்த இடங்கள்: 230 - ஆளும் கட்சி: பா.ஜ.க.

    சத்தீஸ்கர் - மொத்த இடங்கள்: 90 - ஆளும் கட்சி: காங்கிரஸ்

    ராஜஸ்தான் - மொத்த இடங்கள்: 200 - ஆளும் கட்சி: காங்கிரஸ்

    மிசோரம் - மொத்த இடங்கள்: 40 - ஆளும் கட்சி: மிசோ தேசிய முன்னணி

    இம்முறை ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா தீவிரமாக உள்ளது. அதே போல் மத்திய பிரதேசத்தை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.

    ஐந்து  மாநில தேர்தல்கள் முடிந்த 4 மாதங்களில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே 5 மாநில தேர்தல்கள் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக 5 மாநில தேர்தல் முடிவை நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    • வாக்காளர்களுக்கு பணம், மது, இலவசங்கள் தருவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை.
    • நேர்மையான முறையில் தேர்தலை நடத்த விரும்புவதாக தேர்தல் ஆணையம் தகவல்.

    குஜராத் மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் நிலையில், 788 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இதுவரை ரூ.750 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: 


    பணம் கடத்தப்படுவதாக பல இடங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளன.  தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது மோசமான நடைமுறையாகும், நாங்கள் அதை முற்றிலும் தடுக்கும் முயற்சியை செய்கிறோம். குஜராத்தின் அண்டை மாநில எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வருவாய் புலனாய்வு இயக்குநரகம், வருமானவரித்துறை, தீவிரவாத தடுப்புப்படை மற்றும் மாநில காவல்துறை இணைந்து இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டன.

    குஜராத்தில் கடந்த 2017 தேர்தலின் போது ரூ.27 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இந்த தேர்தலில் இதுவரை 750 கோடி ரூபாய் அளவிற்கு ரொக்க பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளது. 


    தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கையால் இந்த முறை கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. வதோதராவில் பெரிய அளவில் ஜப்தி நடக்கிறது. ரூ.450 கோடி வரை பறிமுதல் செய்யப்படும். 171 கோடி மதிப்பில் இலவசங்கள் இருந்தன. பணம், மது, போதைப்பொருள் மற்றும் இலவச பொருட்களை வாக்காளர்களுக்கு, வேட்பாளர்கள் வழங்க கூடாது என்று நாங்கள் அதிகாரிகளுக்கு தெளிவாக அறிவுறுத்தி உள்ளோம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதையே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் வென்றவர்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.
    புதுடெல்லி:

    ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    இதையடுத்து, 16வது மக்களவையை கலைக்கும் தீர்மானம் அமைச்சரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மக்களவையை கலைத்து உத்தரவிட்டார்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வென்ற எம்.பி.க்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.
    ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையத்திற்கு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். #LokSabhaElections2019 #EVMmalfunction #ChandrababuNaidu
    அமராவதி:

    மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.



    வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் 9 மணி வரை மாற்று இயந்திரம் இல்லாமல் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

    இதனையடுத்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, வரிசையில் காத்திருந்த ஏராளமான வாக்காளர்கள் திரும்பி சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் வாக்களிக்க வரமாட்டார்கள்.

    எனவே, வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #EVMmalfunction #ChandrababuNaidu
    ×