search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "repolling"

    திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டதால், மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BoothCapturing #TripuraWest
    புதுடெல்லி:

    மேற்கு திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதியில் கடந்த மாதம் 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 81 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவின்போது பல்வேறு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கள்ள ஓட்டு போட்டதாகவும், பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விசாரித்து, அறிக்கை பெற்றது. அதில், திரிபுரா மேற்கு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 26 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.



    இதையடுத்து, இந்த 168 வாக்குச்சாவடிகளிலும் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வரும் 12-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BoothCapturing #TripuraWest
    ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையத்திற்கு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். #LokSabhaElections2019 #EVMmalfunction #ChandrababuNaidu
    அமராவதி:

    மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.



    வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் 9 மணி வரை மாற்று இயந்திரம் இல்லாமல் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

    இதனையடுத்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, வரிசையில் காத்திருந்த ஏராளமான வாக்காளர்கள் திரும்பி சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் வாக்களிக்க வரமாட்டார்கள்.

    எனவே, வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #EVMmalfunction #ChandrababuNaidu
    உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 73 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #kairanabypoll
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா தொகுதி எம்.பி ஹுகும் சிங் சமீபத்தில் உயிரிழந்தார். இதனை அடுத்து, கைரானா உள்ளிட்ட காலியாக இருந்த 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேலும், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று மேற்கண்ட அனைத்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. கைரானா மற்றும் நூர்ப்பூர் தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து கைரானா தொகுதியில் 73 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு அனுமதி கிடைத்தால் நாளை 73 வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #kairanabypoll
    ×