search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "polling stations"

    • டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • வாக்குசாவடியில் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தொகுதி தேர்தலின் போது மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    இதனால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த வாக்காளர்கள் தங்களது பெயர்களை நீக்கப்பட்டதை கண்டித்தும், தங்களை வாக்களிக்க அனுமதி வழங்க கோரியும் மகாதான தெரு டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க. வேட்பாளர், பா.ம.க.வினர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதனை அடுத்து கூடுதல் கலெக்டர் சபீர் ஆலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுரேகா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை மறியலில் ஈடுப்பட்டதாக பா.ம.க. மாவட்ட தலைவர் பழனிச்சாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • வெயிலில் இருந்து வாக்காளர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சாமியானா பந்தல்களும் அமைக்கப்படுகின்றன.
    • 16 ஆயிரத்து 500 பணியாளர்களும் வாக்குப் பதிவுக்கு தேவையான பணிகளை தங்களுக்குள்ளேயே பிரித்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த பணிகளை தேர்தல் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகிறார்கள்.

    சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 16 சட்ட மன்ற தொகுதிகள் வருகின் றன. இந்த தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தேர்தலுக்காக 3,719 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 600 பதற்றமான சாவடிகள் உள்ளன. சென்னையில் தேர்தல் பணிகளை கண்காணிக்க 299 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ள 16 ஆயிரத்து 500 பணியாளர்களும் வாக்குப் பதிவுக்கு தேவையான பணிகளை தங்களுக்குள்ளேயே பிரித்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.

    வாக்குப்பதிவு நடை பெறும் மையங்களில் போதிய மின் விளக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கூட வகுப்பறைகளே வாக்குப்பதிவு மையங்களாக மாறும் நிலையில் அங்கு ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள விளக்குகளோடு சேர்த்து கூடுதல் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டு போட வரும் வாக்காளர்களின் தாகத்தை தணிக்க தேவையான குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.

    தற்போது கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வெயிலில் இருந்து வாக்காளர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சாமியானா பந்தல்களும் அமைக்கப்படுகின்றன.

    மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி ஓட்டு போடுவதற்கு வசதி யாக சாய்வு தளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. சக்கர நாற்காலி களில் வரும் வாக்காளர்கள் எளிதாக அதில் ஏறி வாக்குச் சாவடி மையத்துக்குள் சென்று ஓட்டு போடுவதற்கு உரிய நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தேர்தலுக்கு முந்தைய நாளில் இருந்தே பாதுகாப்பு தொடர்பான பணிகளை போலீசாருடன் இணைந்து அனைத்து தேர்தல் அலுவலர்களும் மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் நாளில் வாக்குப் பதிவு மையங்களில் வாக் காளர்கள் அடையாள அட்டையுடன் இருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் வெளியாட்களை அனுமதிக்கவே கூடாது என்றும் தேர்தல் அலுவலர் களிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் நாள் அன்று இது தொடர்பாக வாக்குப்பதிவு மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற் பாடுகளை போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசி முன்கூட்டியே முடி வெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதற்றமான சாவடிகளில் கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்னும் சில தினங்களில் கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

    பதற்றமான சாவடிகளில் துணை ராணுவ படையினை கூடுதலாக மையத்தின் வளாகத்துக்குள்ளும் வெளியேயும் பணி அமர்த்த வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்படி பாராளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை திட்டமிட்டு அதில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்ள உயர் போலீஸ் அதிகாரிகளும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    • புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.
    • அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது.

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலுக்காக மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை தேர்தல் துறை இறுதி செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருந்தது.

    இந்த 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்று இறுதி செய்துள்ளது. இதன்படி புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் புதுவை 739, மாகி 31,ஏனாம் 22, காரைக்காலில் 163 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.

    சில வாக்குச்சாவடிகளை இணைத்து ஒரே இடத்தில் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி 967 வாக்குச் சாவடிகளும் 618 இடங்களில் அமைந்துள்ளன.

    நகர பகுதியை பொருத்தவரை 534 வாக்குச்சாவடிகள் 344 இடங்களில் அமைந்துள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தவரை 427 வாக்குச்சாவடிகள் 274 இடங் களில் அமைந்துள்ளன. புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.

    அதில் புதுவையில் 180ம், காரைக்காலில் 35-ம் உள்ளன. மாகியில்7, ஏனாமில் 10 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கடந்த தேர்தல்களில் 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக தேர்தல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதன்படி புதுச்சேரி 3, ஏனாமில் 7 வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக கண்காணிக்கப்பட்ட உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    • ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையு டன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் தொடங்கியது.

    ஈரோடு:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில் ஆதார் எண்ணை வாக்கா ளர் அடையாள அட்டையு டன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியானது வாக்காளர் பட்டியலினை 100 சதவிகிதம் சரி செய் வதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

    இப்பணியினை விரைந்து முடிக்கவும் பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் தொடங்கியது. ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் வாக்கு சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் பொதுமக்கள் சென்று 6-பி படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர். காலை முதலே ஆர்வத்துடன் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

    • மறுசீரமைக்கப்பட்ட வாக்குசாவடிகளின் பட்டியலை ராமநாதபுரம் கலெக்டர் வெளியிட்டார்.
    • வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மறு சீரமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் பட்டியலை வெளியிட்டார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் 303 வாக்குச் வாக்குச்சாவடிகளும், திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச் வாக்குச்சாவடிகளும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 336 வாக்குச் வாக்குச்சாவடிகளும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 385 வாக்குச் வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1370 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    நேற்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

    1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரிக்கவும், வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம், இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.

    மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வரப்பெறும் கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய முறையில் பரிசீலனை செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் ராமநாதபுரம் கோட்டாட்சியர் சேக்மன்சூர், வட்டாட்சியர்கள் கார்த்திகேயன் (தேர்தல்), முருகேசன (ராமநாதபுரம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டதால், மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BoothCapturing #TripuraWest
    புதுடெல்லி:

    மேற்கு திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதியில் கடந்த மாதம் 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 81 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவின்போது பல்வேறு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கள்ள ஓட்டு போட்டதாகவும், பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விசாரித்து, அறிக்கை பெற்றது. அதில், திரிபுரா மேற்கு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 26 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.



    இதையடுத்து, இந்த 168 வாக்குச்சாவடிகளிலும் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வரும் 12-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BoothCapturing #TripuraWest
    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொருத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. #ElectionCommission #HighCourt
    சென்னை:

    சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் பாக்யராஜ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. அதனால், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய, வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் பொருத்த வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வசதிகளை வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்படவில்லை.

    தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில், ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் வாக்கு சரிபார்க்கும் எந்திரம் நிறுவப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பொருத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை சரியான பதில் அளிக்கவில்லை.

    கோவா சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பயன்படுத்திய நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பொருத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஒப்புகை சீட்டு எந்திரத்தை பொருத்தும் நடைமுறையை படிப்படியாக மேற்கொள்ளவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த 2017-ம் ஆண்டு அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அதில், விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் இந்த எந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
    கோவை மாவட்டத்தில் 3,070 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
    கோவை:

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 3,070 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில், விடுபட்ட வாக்காளர்கள் குறிப்பாக 18 முதல் 21 வயதுடைய வாக்காளர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    மேலும், இந்த முகாமில், வாக்காளர் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், நீக்கம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, முகவரி திருத்தம் செய்ய படிவம் 8, ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்கள் கொடுத்தனர்.

    கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலு வலர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்களும் பணியாற்றினார்கள். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகாம் நடைபெற்றது. இந்த பணிகளை கண்காணிக்க 10 துணை தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். முகாம்கள் நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதே போல கோவை சாய்பாபா காலனி ராமலிங்க செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை அம்மன்அர்ச்சுனன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது பப்பாயா ராஜேஷ், பாலமுரளி, கமலகண்ணன், ஆர்.கே.ராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    இது குறித்து வாக்குச்சாவடி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கடந்த முறை 2 ஆயிரத்து 892 வாக்குச்சாவடிகள் தான் அமைக்கப்பட்டுருந்தன. தற்போது 178 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 3,070 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம்கள் நடத்தப்பட்டன. 1.1.2019-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி, கல்லூரி மாற்று சான்றிதழ் ஆகியவற்றை வாக்காளர் சேர்ப்பதற்கான படிவம்-6 உடன் இணைத்து கொடுக்க வேண்டும்.

    இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவில்லை என்று கூறி பலர் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 25 வயது வரை இருந்தால் அவர்கள் இந்த முகாம்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தல் மண்டல அலுவ லகத்தை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். நேற்று நடந்த முகாமில் கூட்டம் அவ்வளவாக இல்லை. மேலும் வருகிற 23-ந் தேதி, அடுத்த மாதம்(அக்டோபர்) 7 மற்றும் 14-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அப்போது பலரும் விண்ணப்பம் அளிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×