search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliamentary elections"

    • பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். மீனவர்கள் நலன் காக்க தேசிய மீனவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.
    • ஐபிஎல் விளையாட்டும் அ.தி.மு.க.வும் ஒன்று. அ.தி.மு.க.விலும் அத்தனை அணிகள் உள்ளன.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பொன்னேரியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த உச்சி வெயிலை விட உக்கிரமான ஒன்றிய அரசை விரட்டியே ஆக வேண்டும் என்று இவ்வளவு எழுச்சியோடு கூடி இருக்கிறீர்களே... அதற்கு முதலில் நன்றி. கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் நான் இதே இடத்தில் பிரசாரத்தை மேற்கொண்டேன். அப்போது இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தீர்கள். ஆனால் இந்த முறை 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் போதாது.

    கடந்த முறை நமது எதிரிகள் ஒன்றாக சேர்ந்து வந்தார்கள். இன்று எல்லோரும் பிரிந்து நிற்கிறார்கள். எனவே குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும். நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். குறைந்த பட்சம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தால் மாதம் 2 நாள் நான் இங்கு வந்து திருவள்ளூர் தொகுதியில் தங்கி உங்களுடைய தொகுதியின் அனைத்து தேவைகளையும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றி தருவேன். நீங்கள் இதை செய்தால் எனது வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். நீங்கள் எங்கள் வேட்பாளருக்கு போடும் வாக்கு, பிரதமர் மோடியின் தலையில் வைக்கும் வேட்டு.


    தலைவர் கலைஞர் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அறிக் கையை வெளியிட்டு சொல்வார். சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்று செய்து காட்டினார். அவரது வழியில் வந்த முதல்-அமைச்சரும் சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். பொன்னேரி அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் முதல் தரமான மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும். அனைத்து குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி விரிவுபடுத்தப்படும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இந்த தொகுதியை சுற்றி உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்து தருவோம். மாதவரம் அல்லது விம்கோ நகரில் இருந்து மெட்ரோ ரெயில் சேவை மீஞ்சூர் வரை நீட்டிக்கப்படும். பாரம்பரிய மீனவ சமுகதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படு வார்கள். மீனவர்கள் நலன் காக்க தேசிய மீனவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

    இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மாயமாவதை தடுக்க தடையற்ற தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தி தரப்படும். இந்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் உங்களுக்கு கொடுத்து உள்ளார்.

    மகளிருக்கு கட்டண மில்லா பஸ் வசதி திட்டத்தை முதல்-அமைச்சர் கொடுத்தார். இங்கு வந்திருக்கும் மகளிரும் இதை பயன்படுத்துகிறீர்கள் தானே. இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் நிற பஸ்தான். இன்னும் சொல்லப்போனால் நாம், பெண்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

    அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அதை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இப்போது அவர்கள் தான் பஸ் உரிமையாளர்கள். எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். இந்த 3 வருடத்தில் 460 கோடி பயணங்களை மேற் கொண்டு இருக்கிறார்கள். இதை நகைச்சுவையாக சொல்லவில்லை. இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. இதுதான் திராவிட மாடல் அரசு. இப்போது பிங்க் பஸ்சை தாய்மார்கள் ஸ்டாலின் பஸ் என்று தான் சொல்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி யாரைப்பார்த்தாலும் முட்டி போட்டு விடுகிறார். பிரதமர் மோடியை பார்த்தால் படுத்து விடுகிறார். மனிதருக்கு முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கத்தான் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் முதுகெலும்பு இல்லாத ஒரே மனிதர் எடப்பாடி பழனிசாமிதான். மோடி பிரதமராக வரக்கூடாது என்று எங்களால் கூற முடியும். ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறுவாரா? ஐபிஎல் விளையாட்டும் அ.தி.மு.க.வும் ஒன்று. அ.தி.மு.க.விலும் அத்தனை அணிகள் உள்ளன.

    பிரதமர் மோடியின் பெயரை 29 காசு என்று மாற்றிவிட்டேன். ஏனென்றால், நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் வெறும் 29 காசு தான் தருகிறார். இனி யாரும் பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்லாதீர்கள். இனி அவரது பெயர் 29 காசு. இன்னும் ஒரு மாதம் தான் அவர் பிரதமர். அதன் பிறகு அவர் பிரதமர் கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காமராஜ் சாலை கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில், 'நான் வாக்களிப்பேன் , நிச்சயம் வாக்களிப்பேன்' என்ற வார்த்தைகள் பொறி க்கப்பட்ட ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கிருத்திகா விஜயன் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பாரிவேந்தர் தனது சொந்த நிதியிலிருந்து, பெரம்பலூர் தொகுதியில் உள்ள நூறு அரசுப் பள்ளிகளுக்கு, ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான கணினிகளை வழங்கினார்.
    • விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக, லாரிகள் மூலம் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கொடுத்தார்.

    சாதாரண ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி இன்று தமிழகத்தின் கல்வித் தந்தைகளில் ஒருவராக தன்னை உயர்த்திக் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்தியாவில் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், இந்திய ஜனநாயக கட்சியை நிறுவினார். 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட, டாக்டர் பாரிவேந்தர், மக்களின் பெரும் ஆதரவை பெற்று, பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தொடர்ந்து நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காகவும், உயரிய கொள்கைகள் கொண்டு மாணவ மாணவிகளுக்கு, உலகத் தரக் கல்வியை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, வியக்க தக்க செயல்களை செய்து வருகிறார். மக்கள் பணியாற்ற மக்களவை சென்ற டாக்டர் ப்பாரிவேந்தர், மக்களவையில் 268 முறை கேள்விகள் எழுப்பியுள்ளார். மக்களவையில் நடைபெற்ற விவாதங்களில் முப்பத்தி ஒன்பது முறை பங்கேற்றுள்ளார், இரண்டு முறை தனி நபர் மசோதா கலந்து கொண்டுள்ளார். 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, இலவச கல்வி உதவி திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், மொத்தம் ஆயிரத்தி இருநூறு மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம், கலை மற்றும் அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு, நூற்றி இருபத்தாறு கோடி ரூபாயை தமது SRM பல்கலைக்கழகம் மூலம் வழங்கினார். டாக்டர் பாரிவேந்தர் தனது சொந்த நிதியிலிருந்து, பெரம்பலூர் தொகுதியில் உள்ள நூறு அரசுப் பள்ளிகளுக்கு, ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான கணினிகளை வழங்கினார்..

    டாக்டர் பாரிவேந்தர் தமது அயராத முயற்சியால், அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் செல்லும் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், டாக்டர் பாரிவேந்தர், பிரதமர், நிதி அமைச்சர், ரயில்வே துறை அமைச்சரிடம் பல முறை கோரிக்கை விடுத்து, தற்போது புதிய ரயில் தடம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமது சொந்த நிதியிலிருந்து பெரம்பலூர் தொகுதிற்கு உட்பட்ட மூன்று கிராமங்களுக்கு, சொந்த நிதியிலிருந்து boreவெல் வசதி ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக, லாரிகள் மூலம் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கொடுத்தார்.

    டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, பெரம்பலூர், லால்குடி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில், தமது பெரம்பலூர் தொகுதிகளில் பெரம்பலூருக்கு உட்பட்ட வேலூர் கிராமத்தில் ரூபாய் பதினெட்டு லட்சம் மதிப்பிலான தார்சாலை அமைத்து கொடுத்தார். கைகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் முப்பத்தொன்பது லட்சம் மதிப்பிலான வகுப்பறையை அமைக்க, தழுதாழை மற்றும் நெய்க்குப்பை ஊராட்சியில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக, ரூபாய் இருபது லட்சம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆழ்துளைக் கிணறுடன் கூடிய, குடிநீர் தொட்டி அமைத்தல் ருபாய் இரண்டு புள்ளி ஐம்பது லட்சம், செங்குணம் ஊராட்சியில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்தல் ருபாய் மூன்று லட்சம், துணை இயக்குநர் சுகாதாரம் பெரம்பலூர் மருத்துவமனை ருபாய் நாற்பது லட்சம், பெரகம்பி முதல் கண்ணப்பாடி வரை குடிநீர், ருபாய் இருபத்தி நான்கு லட்சம், ராமசாமி மருத்துவமனை பேவர் பிளாக் ருபாய் ஏழு லட்சம், வெங்கலம் கிராமம் நியாய விலைக்கடை, ருபாய் ஒன்பது லட்சம், போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் CCTV கேமரா, ருபாய் பத்து லட்சம், வேலூர் ஊராட்சி புதுநடுவலூர் ருபாய் ஐந்து புள்ளி இருபத்தெட்டு லட்சம் உள்ளிட்ட உதவிகளை தமது தொகுதி மக்களுக்கு வழங்கினார்.


    தமது லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளனூர் அரசு நடுநிலைப்பள்ளி, ரூபாய் முப்பத்தியோரு கோடி ஐம்பத்தாறு லட்சம், CCTV கேமரா ரூபாய் மூன்று லட்சம், அன்பில் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி பேவர் பிளாக் ரூபாய் நான்கு லட்சம், புள்ளம்பாடி ஒன்றியம் வி-கண்ணனூர் ஊராட்சியில், பயணியர் நிழற்குடை அமைத்தல் ரூபாய் 6.94 லட்சம், அகலங்கநல்லூர் ஊராட்சி சமுதாயக் கூடம் ரூபாய் 44 லட்சம், கொன்னைக்குடி ஊராட்சி அங்கன்வாடி ரூபாய் 14 லட்சம், புள்ளம்பாடி, மால்வாய் அரசுப் பள்ளிக் கழிவறை ரூபாய் 7.70 லட்சம், ஒரத்தூர் சமுதாயக் கூடம் ரூபாய் 44 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். தமது துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்திரப்பட்டி, மதுராபுரி ஊராட்சி சமுதாயக்கூடம் ரூபாய் 31 லட்சம், முருகூர் நியாயவிலைக் கடை ரூபாய் 13.80 லட்சம், முருகூர் மயானக் கொட்டகை ரூபாய் 2.74 லட்சம், தொட்டியம் அரங்கூர் மேல்நிலைப்பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம், ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். தமது முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 35 லட்சம், வெங்கடாசலபுரம் மான்ய துவக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 31.56 லட்சம், சாரண சாரணியர் முகாம் கட்டிடம், முசிறி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி ரூபாய் 27 லட்சம், தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் பைத்தம்பாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டிடம், ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

    டாக்டர் பாரிவேந்தர் தொகுதிக்கு செய்த உள்கட்டமைப்புகள்

    டாக்டர் பாரிவேந்தர் தமது அயராத முயற்சியால், அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் செல்லும் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், டாக்டர் பாரிவேந்தர், பிரதமர், நிதி அமைச்சர், ரயில்வே துறை அமைச்சரிடம் பல முறை கோரிக்கை விடுத்து, தற்போது புதிய ரயில் தடம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வரலாற்று மிக்க சிறப்பு திட்டங்கள் தமது சொந்த நிதியிலிருந்து பெரம்பலூர் தொகுதிற்கு உட்பட்ட மூன்று கிராமங்களுக்கு சொந்த நிதியிலிருந்து போர்வெல் வசதி ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக லாரிகள் மூலம் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கொடுத்தார்.

    ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு செய்த பணிகள் என்ன?

    டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர், லால்குடி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தமது பெரம்பலூர் தொகுதிகளில் பெரம்பலூருக்கு உட்பட்ட வேலூர் கிராமத்தில் ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான தார்சாலை அமைத்து கொடுத்தார். கைகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 39 லட்சம் மதிப்பிலான வகுப்பறையை அமைக்க, தழுதாழை மற்றும் நெய்க்குப்பை ஊராட்சியில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக 20 லட்சம் ரூபாய், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைத்தல் ரூபாய் 2.50 லட்சம், செங்குணம் ஊராட்சியில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்தல் ரூபாய் 3 லட்சம், துணை இயக்குநர் சுகாதாரம் பெரம்பலூர் மருத்துவமனை ரூபாய் 40 லட்சம், பெரகம்பி முதல் கண்ணப்பாடி வரை குடிநீர் ரூபாய் 24 லட்சம், ராமசாமி மருத்துவமனை பேவர் பிளாக் ரூபாய் 7 லட்சம், வெங்கலம் கிராமம் நியாய விலைக்கடை ரூபாய் 9 லட்சம், போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சி.சி.டி.வி. கேமரா ரூபாய் 10 லட்சம், வேலூர் ஊராட்சி புதுநடுவலூர் ரூபாய் 5.68 லட்சம் உள்ளிட்ட உதவிகளை தமது தொகுதி மக்களுக்கு வழங்கினார்.

    தமது லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளனூர் அரசு நடுநிலைப்பள்ளி ரூபாய் 3156 லட்சம், சி.சி.டி.வி. கேமரா லால்குடி ரூபாய் 3 லட்சம், அன்பில் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி பேவர் பிளாக் ரூபாய் 4 லட்சம், புள்ளம்பாடி ஒன்றியம் வி. கண்ணனூர் ஊராட்சியில் பயணியர் நிழற்குடை அமைத்தல் ரூபாய் 6.94 லட்சம், அகலங்கநல்லூர் ஊராட்சி சமுதாயக் கூடம் ரூபாய் 44 லட்சம், கொன்னைக்குடி ஊராட்சி அங்கன்வாடி ரூபாய் 14 லட்சம், புள்ளம்பாடி, மால்வாய் அரசுப் பள்ளிக் கழிவறை ரூபாய் 7.70 லட்சம், ஒரத்தூர் சமுதாயக் கூடம் ரூபாய் 44 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

    தமது துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்திரப்பட்டி, மதுராபுரி ஊராட்சி சமுதாயக்கூடம் ரூபாய் 31 லட்சம், முருகூர் நியாயவிலைக் கடை ரூபாய் 13.80 லட்சம், முருகூர் மயானக் கொட்டகை ரூபாய் 2.74 லட்சம், தொட்டியம் அரங்கூர் மேல்நிலைப்பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.


    தமது முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 35 லட்சம், வெங்கடாசலபுரம் மான்ய துவக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 31.56 லட்சம், சாரண சாரணியர் முகாம் கட்டிடம் முசிறி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி ரூபாய் 27 லட்சம், தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பைத்தம்பாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டிடம் ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

    தமது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தண்ணீர் தொட்டி ரூபாய் 2.50 லட்சம், மண்ணச்சநல்லூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ரூபாய் 33 லட்சம், சனமங்கலம் ஊராட்சியில் சமுதாயக் கூடம் அமைத்தல் ரூபாய் 37.30 லட்சம், சிறுகுடி ஊராட்சியில் இரண்டு வகுப்பறை அமைத்தல் ரூபாய் 33.56 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

    எழுச்சி மிக்க தலைவராக டாக்டர் பாரிவேந்தர் செயல்படுவது எப்படி?

    டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. தனது சொந்த நிறுவனங்களின் மூலம், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்காக ஏராளமான பணிகளை மேற்கொண்டார். அதில் முக்கியமான திட்டங்களாக திகழ்பவை, இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அவர் 118 கோடியே 77 லட்சத்து 51 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு படிப்புகளில் 1,200 மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்துள்ளார். இதனிடையே, கொரோனா பேரிடர் கால உதவிகளை ரூபாய் 2 கோடியே ரூபாய் 22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் செய்துள்ளார். இதில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி, மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் வினியோகம், வெளியூர்களில் சிக்கியோர் மீட்பு போன்ற பணிகள் அடங்கும். மேலும், பள்ளி மற்றும் ஊர் நலனுக்காக ரூபாய் 1 கோடியே 9 லட்சம் மதிப்பில் கணினி, போர்வெல் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு பணிகளை நிறைவேற்றி உள்ளார். ஆன்மிகம் மற்றும் அறப்பணிகளுக்காக ரூபாய் 4 கோடியே 80 லட்சத்து 80 ஆயிரம் செலவு செய்துள்ளார். மொத்தம் ரூபாய் 126 கோடியே 90 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் ஏராளமான திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளார். பாரிவேந்தர் எம்.பி.யின் இத்தகைய பணிகளுக்கு தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பெரம்பலூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக டாக்டர் பாரிவேந்தர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் செய்த மக்கள் பணிகளை பாராட்டி இந்த முறையும் மக்கள் அவருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் மீண்டும் பெரம்பலூர் தொகுதி எம்பி ஆவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

    • புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.
    • அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது.

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலுக்காக மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை தேர்தல் துறை இறுதி செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருந்தது.

    இந்த 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்று இறுதி செய்துள்ளது. இதன்படி புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் புதுவை 739, மாகி 31,ஏனாம் 22, காரைக்காலில் 163 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.

    சில வாக்குச்சாவடிகளை இணைத்து ஒரே இடத்தில் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி 967 வாக்குச் சாவடிகளும் 618 இடங்களில் அமைந்துள்ளன.

    நகர பகுதியை பொருத்தவரை 534 வாக்குச்சாவடிகள் 344 இடங்களில் அமைந்துள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தவரை 427 வாக்குச்சாவடிகள் 274 இடங் களில் அமைந்துள்ளன. புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.

    அதில் புதுவையில் 180ம், காரைக்காலில் 35-ம் உள்ளன. மாகியில்7, ஏனாமில் 10 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கடந்த தேர்தல்களில் 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக தேர்தல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதன்படி புதுச்சேரி 3, ஏனாமில் 7 வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக கண்காணிக்கப்பட்ட உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    • பா.ஜ.க. சார்பில் சமூக தன்னார்வலரான மாதவி லதா என்பவரை பா‌.ஜ.க வேட்பாளராக அறிவித்துள்ளது.
    • ஐதராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் நிறுவனர் சலாவுதீன் ஒவைசி எம்.பி.யாக இருந்தார்.

    அவரது மறைவிற்குப் பிறகு தற்போது அந்த கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.

    இந்த முறை அவரை வெல்ல பா.ஜ.க. சார்பில் சமூக தன்னார்வலரான மாதவி லதா என்பவரை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலிலும் தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளது.

    ஐதராபாத் தொகுதியில் ஒவைசி மற்றும் பா.ஜ.க வேட்பாளரை விட பிரபலமான ஒருவரை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    அதன்படி பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை களமிறக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சானியா மிர்சாவிடமும் அவரது குடும்பத்தாரிடமும் காங்கிரஸ் கட்சியினர் பேசி முடிவு செய்துள்ளனர்.

    ஒருவேளை சானியா மிர்சா போட்டியிட மறுத்தால் அவரது தந்த இம்ரான் மிர்சாவை களமிறக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    கடந்த புதன்கிழமை டெல்லியில் தெலுங்கானாவில் மீதமுள்ள தொகுதி வேட்பாளர்கள் தேர்வு குறித்து மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு தரப்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விளையாட்டுத்துறையில் இருந்து அரசியல் துறைக்கு சானியா மிர்சாவை களமிறக்க முயற்சிகள் நடைபெற்று வருவதால் ஐதராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 33-வதாக நடிகர் கருணாஸ் பெயரும், 35-வது பெயராக நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,

    திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலை கமல்ஹாசன் ஈரோடு மற்றும் குமாரபாளையத்திற்கு (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். அதில்,"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க" என்று பதிவிட்டுள்ளளார்.

    • சுமார் நான்கு நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.
    • தமிழக அரசே நாங்கள் அடிமைகள் அல்ல என வாசகப் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு மேல் வசித்து வரும் பழமை வாய்ந்த கிராமம் ஆகும்.

    போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு கிராமத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் இந்நிலையில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சுமார் நான்கு,ஐந்து கிலோமீட்டர் கடந்து அருகில் உள்ள செங்குணம் கிராமத்திற்கு நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் மேலும் முதியோர்கள், கர்ப்பிணிகள், உடல்நிலை சரியில்லாமல் உள்ளவர்கள் உள்ளிட்டோர் 4,5 கிலோ மீட்டர் நடந்து சென்று வாக்களிக்க சிரமமாக உள்ளது எனவும் நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தங்கள் கிராமத்திற்கு இம்முறை வாக்குச்சாவடி மையம் அமைக்காவிட்டால் தங்கள் ஒட்டுமொத்த கிராமமே அதாவது 700 வாக்காளர்கள் கொண்ட அனைவருமே வாக்களிக்க போவதில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி சுமார் நான்கு நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.


    மேலும் தமிழக அரசே நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல உள்ளிட்ட பல்வேறு வாசகப் பதாகைகளை எழுதிவைத்து கிராமமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    எங்கள் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது.
    • கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது பா.ஜ.க. அரசு.

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் கரூர் கிருஷ்ணராயபுரம் கடைவீதி, வெங்கமேடு அண்ணாசிலை அருகில், க.பரமத்தி கடை வீதி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க. ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏமாற்றியது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும்.

    பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும். டோல்கேட் அகற்றப்படும். இந்தியா கூட்டணி ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்பதாக கூறி மோடி அரசு ஏமாற்றியுள்ளது. விவசாயிகள் கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய மோடி அரசு மறுத்துள்ளது. டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது.

    கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது பா.ஜ.க. அரசு. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜ.க. எம்.பி.க்கள் 44 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர். தேர்தல் பத்திரங்கள் மூலம் இமாலய ஊழல் நடந்துள்ளது.

    மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    • நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

    அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 33-வதாக நடிகர் கருணாஸ் பெயரும், 35-வது பெயராக நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 40 பேர் உள்ளனர். இதில் நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    த.மா.கா. பட்டியலில் ஜி.கே.வாசன், சுரேஷ், சக்தி வடிவேல், விடியல் சேகர், முனவர் பாஷா, ராஜம் எம்.பி.நாதன், ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்ட 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    பாரதிய ஜனதா பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீத்தாராமன், யோகி ஆதித்யாநாத் பெயர்களுடன் தமிழக தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், டாக்டர் ராமதாஸ், அன்புமணி, தமிழருவி மணியன், எச்.ராஜா, குஷ்பு, சரத்குமார் உள்ளிட்ட 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ், பா.ம.க. கட்சிகள் இதுவரை நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளிக்கவில்லை.

    • வேட்பாளர்களின் பெயர்களை குழப்புவதற்காக அதே பெயரில் உள்ள நபர்களை எதிர் அணியினர் தேர்தலில் போட்டியிடச் செய்வது வழக்கம்.
    • விரும்பும் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சி சின்னம் மற்றும் அவர்களது புகைப்படத்தை வைத்தே அடையாளம் காண முடியும்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. கோவை தொகுதியில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

    வழக்கமாக தேர்தலில் முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை குழப்புவதற்காக அதே பெயரில் உள்ள நபர்களை எதிர் அணியினர் தேர்தலில் போட்டியிடச் செய்வது வழக்கம். அதேபோல கோவை தொகுதியிலும் அந்த ருசிகரம் அரங்கேறி உள்ளது.

    கோவை தொகுதியில் போட்டியிடுவதற்காக மொத்தம் 59 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க. சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி உள்ளிட்டோர் போட்டியிடு வதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

    இவர்களில் தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார் பெயரில் மட்டும் ராஜ்குமார் பெயரை கொண்ட மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதேபோல சிங்கை ராமச்சந்திரன் பெயரை குழப்பும் வகையில் ராமச்சந்திரன் பெயரை கொண்ட மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை பெயரிலும் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். பாரதிய பிரஜா ஐக்கிய பார்ட்டி என்ற கட்சி பெயரில் அவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

    வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது. தொடர்ந்து நாளை மறுநாள் இறுதி வேட்பாளர் பட்டியலில் எத்தனை ராஜ்குமார், எத்தனை ராமச்சந்திரன் போட்டியிடப் போகிறார்கள் என்ற முழு விவரம் தெரியவரும்.

    போட்டி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படும் பட்சத்தில் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். அவர்கள் விரும்பும் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சி சின்னம் மற்றும் அவர்களது புகைப்படத்தை வைத்தே அடையாளம் காண முடியும்.

    • அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது.
    • வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    நெல்லை:

    ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.

    இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிடுகிறார்.

    இதனையொட்டி அவர் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அவரது பெயரை போலவே பெயர் கொண்ட மேலும் 4 பேர் நேற்று சுயேட்சைகளாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    அதன்படி புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை தவிர்த்து, கேசவபுரம் கடஞ்சிகுளத்தை சேர்ந்த பா.கிருஷ்ணசாமி, சிவகிரி விஸ்வநாதபேரி காந்தி காலனியை சேர்ந்த மூ.கிருஷ்ணசாமி, சங்கரன்கோவில் கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்த க.கிருஷ்ணசாமி, சிதம்பராபுரம் மலையன்குளம் பகுதியை சேர்ந்த வெ.கிருஷ்ணசாமி (45) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இதனால் ஒரே நாளில் கிருஷ்ணசாமி என்ற ஒரே பெயரை கொண்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    • தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது.
    • வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் மாநிலங்களில் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக நடக்கும் ஏப்ரல் 26-ந்தேதி, கேரள மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 20 மக்களவை தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெறும் எனவும், வருகிற 29, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய பொது விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி கேரள மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல் நாளான இன்று ஒரு சிலர் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர்.

    வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 5-ந்தேதி நடைபெறுகிறது. அங்கு வேட்பு மனுக்களை வாபஸ் பெற 8-ந்தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்படும்.

    வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் தேர்தல் நடத்தை வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே வேட்புமனு பெற வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

    வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை ஊதியம் பொருந்தும் என்று அறிவித்துள்ள மாநில அரசு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரும் தனியார் நிறுவ னங்கள் மற்றும்வணிக மையங்களுக்கு விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளது.

    ×