என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliamentary elections"

    • பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஹூஜி தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு.
    • ஷேக் ஹசீனா மீது நடத்தப்பட்ட கிரானைட் தாக்குதல் வழக்கில் இவருக்கு மரண தண்டனை.

    வங்கதேசத்தில் கடந்த 2024 ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்ந்த பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வந்தது.

    இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை நடந்த பாராளுமன்ற தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 200க்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு பிரதான கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையலான கூட்டணி 71 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது.

    இந்த தேர்தலில், ஒரு காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று முக்கியத் தலைவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்கின்றனர்.

    இவர்களில் இருவர் தாரிக் ரஹ்மானின் பிஎன்பிகட்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்தவர்.

    பிஎன்பியை சேர்ந்த தலைவர் லுட்போஸ்மேன் பாபர். 2004-இல் ஷேக் ஹசீனா மீது நடத்தப்பட்ட கிரானைட் தாக்குதல் வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

    மேலும், 2004 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரிவினைவாதக் குழுவான உல்பாவுக்கு சிட்டகாங் வழியாக கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்த வழக்கில்ஈடுபட்டதற்காக அவருக்கு 2015 ஆம் ஆண்டு இரண்டாவது மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    ஆனால், டிசம்பர் 2024-இல் வங்கதேச உயர் நீதிமன்றம் இவரை விடுவித்தது. தற்போது நடந்த தேர்தலில் 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

    பிஎன்பியை சேர்ந்த மற்றொரு தலைவர் அப்துஸ் சலாம் பின்டு. இவரும் கிரானைட் தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்டவர்.

    இந்தியாவில் நடந்த சில குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஹூஜி தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவளித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. இவர் தற்போது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    ஜமாத் இ இஸ்லாமி கட்சியை அசாருல் இஸ்லாம், ற்போது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.

    1971 வங்கதேச விடுதலைப் போரின் போது 1,200 பேரைக் கொன்றது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுகளுக்காக 2014-இல் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு இவர் விடுவிக்கப்பட்டார்.

    இந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட தலைவர்களின் தற்போதைய வெற்றி இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே 2004 அதிகாரத்தில் இருந்தபோது, இந்தியாவின் பிரிவினைவாதக் குழுவான உல்பாவுக்கு சிட்டகாங் வழியாக கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்த வழக்கில் தற்போது பிரதமர் ஆக உள்ள தாரிக் ரஹ்மானுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போது இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
    • அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

    வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

    இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல்முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது.

    இதில் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு சமீபத்தில் நாடு திரும்பிய மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.

    இந்நிலையில் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

    சுமார் 20 ஆண்டுகள் கழித்து வங்கதேசத்தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்ளது. தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தாரிக் ரஹ்மான்:    

    வங்கதேசத்தின் சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தின் வாரிசான தாரிக் ரஹ்மான் ஒரு காலத்தில் அந்நாட்டு அரசியலில் 'டார்க் பிரின்ஸ்' என்று அழைக்கப்பட்டார்.

    தாரிக் ரஹ்மான் தந்தை ஜியாவுர் ரஹ்மான் ராணுவ அதிகாரியாக இருந்து, பின்னர் பிடிபி கட்சியை தொடங்கி 1977 இல் வங்கதேச அதிபராக பொறுப்பேற்றார். 1981 இல் அவர் சுட்டுக் கொல்லப்படும் வரை அந்த பதவியில் இருந்தார்.

    1981 இல் ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி கலீதா ஜியா வங்கதேச பிரதமராகவும் பிடிபி கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

    1991 முதல் 1996 வரையும் மற்றும் 2001 முதல் 2006 வரையும் கலீதா ஜியா பிரதமராக இருந்த காலகட்டத்தில் மகன் தாரிக் ரஹ்மான் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

    முக்கிய முடிவுகள் அனைத்தையும் அவரே எடுப்பதால்தான் நிழல் பிரதமர் என்று பொருள்படும் வகையில் அவரை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் டார்க் பிரின்ஸ் என்று அழைத்தன.

    2007 இல் ராணுவ புரட்சி ஏற்பட்டு இடைக்கால அரசு பொறுப்பேற்றபோது ஊழல், பண மோசடி மற்றும் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாரிக் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.

    17 மாதங்கள் சிறையில் இருந்த தாரிக் ரஹ்மான் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெற்று, சிகிச்சைக்காக பிரிட்டன் சென்றார்.

    பிரிட்டனிலேயே தஞ்சம் அடைந்து லண்டனில் வசித்து வந்த தாரிக் ரஹ்மான் சுமார் 20 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பரில் அவரது தாய் கலீதா ஜியா உயிரிழந்தபோது வங்கதேசம் திரும்பினார்.

    தாயின் மறைவின்பின் பிஎன்பி கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ரஹ்மான் மூன்று மாதங்களில் அக்கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளார்.

    ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இருந்தும் அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ஷேக் ஹசீனாவுக்கு பின் அமைந்த முகமது யூனுஸ் ஆட்சியின் நிச்சயமின்மைக்கு மத்தியில் தாரிக் ரஹ்மான் வங்கதேச மக்களுக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளதை தேர்தல் முடிவுகள் தெளிவாக்குகின்றன.

    ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவி, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் ஆக்குவேன், 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான வங்கதேசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை தேர்தல் பிரசாரத்தின்போது அவர் வழங்கியிருந்தார்.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தாரிக் வன்மையாகக் கண்டித்தார்.

    இதற்கிடையே 2004 அதிகாரத்தில் இருந்தபோது, இந்தியாவின் பிரிவினைவாதக் குழுவான உல்பாவுக்கு சிட்டகாங் வழியாக கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்த வழக்கில் தாரிக் ரஹ்மானுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போது இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான்.
    • வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு என்றும் இருக்கும்.

    வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

    இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல்முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது. இது வங்கதேசத்தின் 13வது பொதுத்தேர்தல் தேர்தல் ஆகும்.

    இதில் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு சமீபத்தில் நாடு திரும்பிய மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.

    இந்நிலையில் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது வங்கதேச மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

    ஜனநாயக ரீதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு என்றும் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்த புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    • பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போடாத ரோடுகளுக்கு கூட போட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.
    • தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருந்தாலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயமாக பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள்.

    மதுரை:

    மதுரையில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்க அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போடாத ரோடுகளுக்கு கூட போட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கின்றனர். தி.மு.க. என்றாலே ஊழல் என்பதை தான் மேற்கண்ட நிகழ்வுகள் காட்டுகின்றன. ஒரு கட்சி என்பது அனைத்து மதத்துக்கும் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் மதசார்பற்ற கட்சி என்று தி.மு.க. கூறிக்கொண்டு, இந்து மதத்திற்கு எதிராக பேசி வருகிறது.

    தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. எனவே பொதுமக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருந்தாலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயமாக பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள். 2023-ம் ஆண்டில் அ.ம.மு.க.வின் தேர்தல் வியூகம் வெளிப்படும். ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான், அவர்களுடன் சிலர் இருந்தனர்.

    அ.தி.மு.க. செயல்படாமல் இருப்பதற்கு மேற்கண்ட 2 பேர் மட்டும்தான் காரணம். தமிழகத்தில் அ.ம.மு.க. எதற்காக தொடங்கப்பட்டது? என்பதை மேற்கண்ட 2 பேரும் புரிய வைத்து உள்ளனர். ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். சசிகலா ஏன் மவுனமாக உள்ளார்? என்பது பற்றி, நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் பற்றி கமல்ஹாசன், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் பாராளுமன்ற தேர்தலில் முதல் வெற்றியை பெற்று விடவேண்டும் என்கிற முனைப்பில் வியூகம் அமைத்து செயலாற்றி வருகிறார்.

    இதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் தொடர்ச்சியாக கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்த அவர் கடந்த 4-ந்தேதி செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்தார்.

    இதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாநகரில் இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    அங்குள்ள தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 117 பேர் பங்கேற்றனர். செயற் குழுவை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 25 பேரும், நிர்வாக குழுவை சேர்ந்த 5 பேரும் கலந்து கொண்டனர்.

    துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மூகாம்பிகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் பற்றி கமல்ஹாசன், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    • பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது என எம்.எஸ்.ஷா தெரிவித்துள்ளார்.
    • தமிழக மக்களை வழிநடத்தி வரும் அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    மதுரை

    பாரதீய ஜனதா கட்சியின் பொருளாதர பிரிவு மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தஞ்சா வூரில் நடந்தது. இதில் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை தலைமையேற்ற பின் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பா.ஜ.க.வின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. சாதாரண மக்களும் பா.ஜ.க.வின் கொள்கை களை புரிந்து கொள்ளும் வகையில் அண்ணாமலை பேசி வருகிறார். அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பாமர மக்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகிறது. அண்ணாமலை மிக எளிய தலைவராக இருந்து மக்கள் பயன்பெறும் வகையில் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 590 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் ஒன்றி ரண்டு வாக்குறுதிகளை தவிர மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பி வருகிறது.

    தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வு குறித்தும், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அண்ணாமலை விளக்கி பேசி வருகிறார். இந்தியாவில் 3-வது முறையாகவும் மோடி பிரதமராவது உறுதியாகி உள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் செலவுகள் அதிகம் ஏற்பட்டு அரசு பணிகள் செய்வதில் தொய்வு ஏற்படு கிறது. எனவே பாராளு மன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். அதனை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துக்கள் பாரம மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    அவ்வாறு தேர்தல் நடக்கும் பட்சத்தில் இந்தியா வல்லரசாவது உறுதி. தமிழக மக்களை வழிநடத்தி வரும் அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஜீ, பொருளாதார பிரிவு துணைத்தலைவர்கள் டாக்டர்கள் தேவ்ஜில், நாகராஜன் மற்றும் வெங்கடேஷ், ராஜசேகர் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 2024ல் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
    • வாக்காளர்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளித்ததை, விவி பேட் எந்திரத்தில் பார்த்து கொள்ளமுடியும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பாராளுமன்ற தேர்தலுக்காக புதிய விவி பேட் எந்திரங்களை கொள்முதல் செய்து மாநிலம் வாரியாக தேர்தல் கமிஷன் அனுப்பி வருகிறது.வரும் 2024ல் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் விவி. பேட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

    வாக்காளர்கள், தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளித்ததை, விவி பேட் எந்திரத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளமுடியும். வாக்காளர்களுக்கு நம்பகத்தன்மையை அளிக்கும் இந்த எந்திரங்கள் தேர்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது :- ஒவ்வொரு தேர்தலிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார் செய்வது முக்கியமான பணியாக உள்ளது. அதன்படி வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார் செய்யும் பணியை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது என்றனர்.

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி.
    • வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை பலர் செய்தனர். அவையெல்லாம் முறியடித்து மிகப்பெரிய சாதனையை முதல்வர் செய்துள்ளார்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 40 நாட்கள் 70 நிகழ்ச்சிகளை மாவட்ட செயலாளர் அமைச்சர் பி. கே. சேகர் பாபு ஏற்பாடு செய்துள்ளார். மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா என்ற தலைப்பில் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழாவும் நடைபெற்று வருகிறது. அயனாவரத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி. மு.க. மகளிர் அணி சார்பில் சுதா தீனதயாளன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைச்சர் பி. கே. சேகர் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம். பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி. இந்த வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை பலர் செய்தனர். அவையெல்லாம் முறியடித்து மிகப்பெரிய சாதனையை முதல்வர் செய்துள்ளார்.

    ஜாதி, மதம், இனம் அனைத்தும் ஒன்றுபட்டு சுதந்திரம் பெற்ற நம் இந்தியா, இன்று கருத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயகம் பறிக்கப்பட்டு மக்களின் வெறுப்பு அரசியலாக ஒன்றிய அரசு ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியை மீட்டெடுக்க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பேராசிரியை சாரதா நம்பி ஆரூரான், வழக்கறிஞர் மதிவதனி, ஏ. வேதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கில் மோடியை சிக்க வைப்பதற்கு கடுமையான முயற்சிகள் நடந்தன.
    • சி.பி.ஐ. கைது செய்ததற்காக நான் போராட்டம் நடத்தவில்லை.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் பல்வேறு தலைப்புகளில் எழுந்த கேள்விகளுக்கும் விடையளித்தார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-

    ராகுல்காந்தி குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்துள்ளது. இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் மோடி என்ற பிற்படுத்தப்பட்ட இனத்தை அவமானப்படுத்தி உள்ளார். அதற்காகவே அவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்கி உள்ளது.

    2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதி பதவி தானாக காலியாகி விடும் என்று நமது நாட்டின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. இதற்காக பா.ஜ.க. தலைவர்களை ராகுல் தொடர்ந்து குறை கூறி வருகிறார்.

    அவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமானால் மீண்டும் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். அதைவிடுத்து அடம்பிடித்து கொண்டிருந்தால் எந்த பலனும் இல்லை.

    நாடு முழுவதும் பா.ஜ.க. பல்வேறு கட்சிகளுடன் தோழமையுடன் உள்ளது. 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அந்த தோழமை தொடரும் தமிழ்நாட்டில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி வலுவான நிலையில் உள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கொண்டுள்ள கூட்டணியும் தொடர்கிறது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா இருக்கிறது.

    நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு குறி வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் சொல்கிறார்கள். இப்போதுகூட ராகுல் பதவி இழப்பு விஷயத்தில் நாங்கள் அழுத்தம் கொடுத்ததாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.

    ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லாத மற்ற கட்சி தலைவர்களை அவர்கள் எந்த அளவுக்கு குறிவைத்து செயல்பட்டனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கில் மோடியை சிக்க வைப்பதற்கு கடுமையான முயற்சிகள் நடந்தன.

    சி.பி.ஐ. மூலம் எனக்கு மிக கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. மோடிக்கு இருந்த நல்ல பெயரை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு எனக்கு அந்த அழுத்தத்தை கொடுத்தனர். ஆனால் அதற்கு பணியவில்லை.

    நான் அப்போது குஜராத் மந்திரியாக இருந்ததால் என்மீதும் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை அமைப்புகள் அனைத்தையும் அந்த கால கட்டத்தில் காங்கிரஸ் மிக மிக மோசமாக, தவறாக கையாண்டது.

    காங்கிரஸ் அரசு எங்களுக்கு எதிராக ஒரு சிறு ஊழல் வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை. எனவேதான் விசாரணை அமைப்புகளை தூண்டி விட்டு எங்களை சிக்க வைக்க முயற்சி நடந்தது. கடைசியில் சி.பி.ஐ. மூலம் என்னை கைது செய்யவும் வைத்தனர்.

    என்னை கைது செய்வதற்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் சரியான விளக்கமான பதிலை சொன்னேன். ஆனால் அவர்கள் மோடி பெயரை குறிப்பிடும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் நான் உண்மையைத்தான் சொன்னேன்.

    சி.பி.ஐ. கைது செய்ததற்காக நான் போராட்டம் நடத்தவில்லை. கருப்பு சட்டை அணிந்து கொண்டு அலையவில்லை. சபை நடவடிக்கைகளை முடக்கவில்லை. கடைசியில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

    ஆனால் விசாரணை அமைப்புகளை எங்களுக்கு எதிராக தூண்டிவிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று அதே காரணத்தை சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா நிச்சயம் வெற்றிபெறும். தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    சுதந்திரப் போராட்ட வீரர் சவார்கர் பற்றி ராகுல் அவதூறாக பேசுகிறார். சுதந்திரப் போராட்ட தியாகிகளை இப்படி அவமரியாதை செய்யக்கூடாது. அவர்கள் கட்சி மூத்த தலைவர்கள் இதுபற்றி ராகுலுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    • ஆந்திராவிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
    • வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை எப்படியாவது பலப்படுத்த வேண்டும் என எண்ணுகின்றனர்.

    திருப்பதி:

    மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்து வருகிறது.

    ஆந்திராவிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்து சென்ற பிறகு அங்கு ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் பாஜக உள்ளது. ஆனால் ஆந்திராவில் ஓரளவு மட்டுமே செல்வாக்கு உள்ளதால் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யானின் ஜனசேனா கட்சியுடன் இணைந்து கடந்த தேர்தலை சந்தித்தது. பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை எப்படியாவது பலப்படுத்த வேண்டும் என எண்ணுகின்றனர்.

    இந்நிலையில் பாஜகவுடன் பிரபல திரைப்பட நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் மிகுந்த நெருக்கமாக உள்ளார். இதனால் பாஜக, ஜனசேனா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது.

    கட்சி தொடங்கிய கடந்த 10 ஆண்டுகளில் ஜனசேனா கட்சிக்கு நகர்ப்புறங்களில் அதிக செல்வாக்கு உள்ளது.

    பவன் கல்யாண் செல்லும் இடங்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    அதே நேரம் கிராமப்புறங்களில் ஓரளவு மட்டுமே செல்வாக்கு உள்ளதால் அந்தப் பகுதிகளில் கட்சியை பலப்படுத்த பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார்.

    ராயலசீமா பகுதியில் அவரது கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பவன் கல்யாண் கடும் விமர்சனம் செய்து பேசி வருகிறார்.

    பவன் கல்யாண் கட்சியால் தெலுங்கானா, ஆந்திராவில் 40 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது பா.ஜ.க. பவன் கல்யாண் கட்சி தொண்டர்களிடம் உற்சாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
    • நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்கப்படும் என அறிவிக்கும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு, ஏப். 26-

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை கீழ்பவானி வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்கால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள பல நூறு கிராமங்களுக்கு விவசாயம் மற்றும் குடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலை காங்கிரீட் கால்வாயாக மாற்ற கடந்த ஆட்சிக்காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்போது திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கடந்த 2 வருடங்களாக மீண்டும் காங்கிரீட் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், காங்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் துறை அமைச்சரிடம் பல சுற்று பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வரும் மே மாதம் 1-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினர் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் வாய்க்காலில் காங்கிரீட் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.

    வாய்க்கால் தொடங்கும் முதல் மைல் பகுதியில் இருந்து வாய்க்காலின் இருபுறமும் உள்ள புதுப்பாளையம், புங்கம்பாடி, வெள்ளியம்பாளையம்,

    வள்ளியரச்சல், சுந்தரபுரி, வெள்ளியங்காடு, ஆவாரங்காட்டு வலசு, காளி வலசு, மருதுறை, 100-வது மைலில் உள்ள சிவியார்பாளையம்,

    திட்டுப்பாறை, சின்னக்கவுண்டன் வலசு, சிக்காம்பாளையம், பரஞ்சேர்வழி கிராமம், நத்தக்காட்டு வலசு மற்றும் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் காங்கிரீட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்கப்படும் என அறிவிக்கும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
    • வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வின் கடலூர் மாநகர திருப்பாதிரிப்புலியூர் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் பகுதி செயலாளர் கெமிக்கல் மாதவன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சேவல்குமார், மாநில மீனவர் அணி இணை செயலாளர் தங்கமணி, ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், முன்னாள் நகரமன்ற தலைவர் சி.கே. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க.வின் மூத்த முன்னோடி களின் துணையோடு திருப்பாதிரிப்புலியூர் பகுதி சார்பில் 12,500 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், பூத்கமிட்டி அமைத்தல், வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோ சிக்கப்பட்டது.  இதில் மாவட்ட துணை செயலாளர்கள் தெய்வ.பக்கிரி, மணி மேகலை தஷ்ணா,வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், தலைமை கழக பேச்சாளர் புலிசை ஆர்.சந்திரஹாசன், பகுதி நிர்வாகிகள் வெங்கடேசன், நாகராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய லாளா் ஏ.ஆர்.சி.நாகராஜன் நன்றி கூறினாா்.

    ×