search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுக்காக வி.வி., பேட் எந்திரம் விரைவில் திருப்பூர் வர இருப்பதாக அதிகாரிகள் தகவல்
    X

    கோப்புபடம்.

    பாராளுமன்ற தேர்தலுக்காக வி.வி., பேட் எந்திரம் விரைவில் திருப்பூர் வர இருப்பதாக அதிகாரிகள் தகவல்

    • 2024ல் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
    • வாக்காளர்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளித்ததை, விவி பேட் எந்திரத்தில் பார்த்து கொள்ளமுடியும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பாராளுமன்ற தேர்தலுக்காக புதிய விவி பேட் எந்திரங்களை கொள்முதல் செய்து மாநிலம் வாரியாக தேர்தல் கமிஷன் அனுப்பி வருகிறது.வரும் 2024ல் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் விவி. பேட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

    வாக்காளர்கள், தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளித்ததை, விவி பேட் எந்திரத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளமுடியும். வாக்காளர்களுக்கு நம்பகத்தன்மையை அளிக்கும் இந்த எந்திரங்கள் தேர்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது :- ஒவ்வொரு தேர்தலிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார் செய்வது முக்கியமான பணியாக உள்ளது. அதன்படி வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார் செய்யும் பணியை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது என்றனர்.

    Next Story
    ×