என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode News"

    • விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர்.
    • தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே வரி அதிகரிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத ஜவுளி ரகங்கள் சலுகை விலையில் விற்பனை என விளம்பரம் செய்யப்பட்டு துணிகள் வீரப்பனை செய்யப்பட்டது.

    இந்த விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர். ஏராளமான மக்கள் குவிந்த நிலையில் தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதை ஏற்றுமதி துணிகள் என ஏமாற்றுவதாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட துணிகள் விற்பனை நிறுத்தப்பப்பட்டது. 

    • போலீசார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • மூன்று பேரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல்.

    ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதில், தந்தை நாகேந்திரன் (55) புற்றுநோயால் பாதிப்பு, தாய் சுஜிதா (45) தைராய்டு நோயால் பாதிப்பு, மகள் தான்ய லட்சுமி (20) மனநலம் பாதிப்பால் மூன்று பேரும் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், மூன்று பேரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மூன்று பேரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட தடை விதித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சேலம் வழியாக இயங்கும் சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு ,கரூர் ,சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    ஈரோடு - காவிரி பாலம் இடையே தற்போதுள்ள இரும்பு பாலத்துக்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் இயக்க வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு காவிரி பாலம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே உள்ள இரும்பு பாலத்தை அகற்றி உயர்தர காங்கிரீட் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நடைபெறுவதால் ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் லோக் மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையில் இருந்து 8.50 மணிக்கு புறப்பட்டு வழக்கமாக ஈரோடு சேலம் வழியாக செல்லும். தற்போது காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (14-ந் தேதி ) முதல் ஈரோடு, கரூர், சேலம் வழித்தடத்தில் செல்லும் எனவும் கூடுதலாக இந்த ரெயில் கரூரில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல எர்ணாகுளம்-தாத்தாங்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு, கரூர் , சேலம் வழியாக செல்லும் எனவும் கரூரில் இந்த ரெயில் நின்று செல்லும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல ஆலப்புழா தன் பாத் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் கே. எஸ் .ஆர் .பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு கரூர், சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆடுகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயி ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே விவசாய தோட்டத்தில் கட்டப்பட்டு இருக்கும் ஆடுகள், மர்ம விலங்குகள் கடித்து மர்மமான முறையில் உயிரிழந்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது. இதை கண்டித்து விவசாயிகள் ஏற்கனவே போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

    உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று மாவட்ட நிர்வாகமும் ஏற்கனவே உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கியிருந்தனர். இந்நிலையில் மீண்டும் பட்டியில் கட்டப்பட்டிருந்த 5 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஈரோடு தங்கம் நகர், நாரங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் விவசாயம் செய்து வருகிறார். ஈஸ்வரன் இவரது விவசாய தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.

    ஈஸ்வரன் தோட்டத்தில் உள்ள பட்டியை பார்த்தபோது 10 ஆடுகளில் 5 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.நள்ளிரவில் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொண்றது தெரிய வந்தது.

    இது குறித்து ஈஸ்வரன் வருவாய் துறை மற்றும் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய தோட்டத்தில் கட்டிவைக்கப்பட்டு வரும் ஆடுகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயி ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
    • பலத்த காற்றால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைபட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது.

    ஆனால் மாலை நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நம்பியூரில் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நம்பியூர் அருகே உள்ள சூரிபாளையம், நம்பியூர் சூரியம்பாளையத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வளாகத்தில் 5 மரங்கள் சாய்ந்து விழுந்தன. இரவு நேரம் மரங்கள் விழுந்ததால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.

    குறிப்பாக சூறாவளி காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஓட்டு வீடு, குடிசை வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தன. சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    குப்பிபாளையம் பகுதியில் பலத்த காற்றால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைப்பட்டு இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் இருளில் அவதி அடைந்தனர்.

    இதேபோல் நம்பியூர் அடுத்த காந்திபுரம் மேடு பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள நடுநிலைபள்ளி வளாகத்தில் உள்ள மரம் முறிந்து கழிப்பறை மீது விழுந்தது.

    இதனால் இன்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவதி அடைந்தனர். இதேபோல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    அதே சமயம் சூறாவளிக்காற்றும் வீசியது. காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஆர்.ஜி.கே. புதூரை சேர்ந்த ராசு என்பவர் தோட்டத்தில் 500 கதளி ரக வாழைகள் முறிந்து விழுந்தன. இதே போல் வட்டக்காடு கிராமத்தில் நிர்மல்குமார் என்பவர் தோட்டத்தில் 100 செவ்வாழைகள், அதே பகுதியில் குமார் என்பவர் தோட்டத்தில் 400 செவ்வாழை மரங்கள், முத்தரசன் குட்டையில் தேவராஜ் என்ற ஒரு தோட்டத்தில் 100 கதளி வாழை மரங்கள் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தன.

    அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் முடிந்து விழுந்ததால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    களம்பூர் மலைப்பகுதிகளும் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அனைத்தரை மற்றும் மாக்கம்பாளையம் வழியில் அணைக்காடு பகுதியில் சூறாவளி காற்றால் 4 மின்கம்பங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. கடம்பூர் மலை பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏற்கனவே 3 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

    இதே போல் பர்கூரின் கிழக்கு மற்றும் மேற்கு மலையில் கனமழை பெய்தது. இதில் ஓசூர், கொங்காடை, செங்குளத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓசூர் அருகே உள்ள மண் ரோடு சேரும் சகதியுமாக காட்சியளித்தது. அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் ஒன்று சேற்றில் சிக்கியது.

    அப்பகுதி மக்கள் உதவியுடன் மினி பஸ் மீட்கப்பட்டது. அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கவுந்தப்பாடி, வரட்டு பள்ளம், கொடிவேரி, பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் இருந்தது. இரவு 9 மணி முதல் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

    • சமூக வலைதளங்களில் இது குறித்து விவரங்களை பதிவிட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
    • போலீசார் பெருந்துறையில் வைக்கப்பட்டுள்ள சீரங்கன் உடலை இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூர் ஓடைப்பள்ளம் பாலம் அருகில் உள்ள நீரோடையில் கடந்த 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆணின் உடல் கிடப்பதாக பிரம்மதேசம் கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் குமார். அந்தியூர் போலீஸ்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    இறந்தது யார் எந்த ஊர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் அந்தியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

    இதனை அடுத்து சமூக வலைதளங்களில் இது குறித்து விவரங்களை பதிவிட்டு போலீசார் விசாரணையை தீவிர ப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பிச்சானூர் பகுதியைச் சேர்ந்த சீரங்கன் (48) கால்நடை வியாபாரி கடந்த 22-ந் தேதி வியாபாரத்திற்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை இவர் எப்பொழுதும் வியாபாரத்திற்கு சென்றால் 4, 5 நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில்சமூக வலைதளங்களில் பதிவிட்ட அங்க அடையாளங்களை வைத்து இறந்தவர் தனது கணவர் என்பதை அவரது மனைவி பழனியம்மாள் உறுதி செய்தார்.

    இதனை அடுத்து போலீசார் பெருந்துறையில் வைக்கப்பட்டுள்ள சீரங்கன்உடலை இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இறந்த சீரங்கனுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

    • வன உயிரினங்களை சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி மூலம் வேட்டையாடுதலால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டம், கேர்மாளம் வனச் சரகத்தில் வனச்சரக அலுவலர் தினேஷ் தலைமையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து கேர்மாளம் மலை கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கொண்டாடப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக வன உயிரினங்களை சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி மூலம் வேட்டையாடுதலால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்தால் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் நேற்று கேர்மாளம் வனச் சரகத்திற்கு உட்பட்ட கானக்கரை கிராம பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அங்குள்ள அங்கன்வாடி வளாகத்திற்கு அருகே இரண்டு நாட்டுத் துப்பாக்கிள் கிடந்துள்ளது அதை கைப்பற்றிய வனத்துறை சட்ட நடைமுறைகளின் படி கைப்பற்றிய நாட்டுத் துப்பாக்கிகள் 2-ம் ஆசனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழ்பவானி வாய்க்காலில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார்.

    ஈரோடு:

    கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன் (51). நகராட்சி தூய்மைப்பணியாளர். இவரது மனைவி மல்லிகா (49). இருவரும் கடந்த 25-ந் தேதி சொந்த ஊரானா ஈரோடு மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுவண்டிபாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர்.

    பின்னர் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் தங்கினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மல்லிகா தன் கணவரை தேடி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் உயிரிழந்த நிலையில் முருகன் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொரமடை கடத்தூர் கொரங்காட்டு தோட்டம் பாலம் அருகில் ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொரமடை கடத்தூர், கொரங்காட்டு தோட்டம், பாலம் அருகில் ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

    அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில் அவர்கள் நம்பியூரை சேர்ந்த மணிகண்டன் (24), எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்த மோகனசுந்தரம் (22), மதன்குமார் (25), கோகுல் (22), கடத்தூரை சேர்ந்த மனோஜ் (23) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 2 சேவல்கள், பணம் ரூ.950 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் சார்பில் ஏழை எளிய இந்து மக்களின் நலனுக்காக 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • விருப்பமுள்ள தகுதி வாய்ந்தவர்கள் பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    பவானி:

    தமிழக முதல்- அமைச்சரின் வழிகாட்டு தலின் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படி பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் சார்பில் ஏழை எளிய இந்து மக்களின் நலனுக்காக வரும் டிசம்பர் மாதம் 4-ந் தேதி 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    விருப்பமுள்ள தகுதி வாய்ந்தவர்கள் பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் கோவிலின் பல்வேறு பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்து அறநிலைத்துறை சார்பில் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் நடத்தி வைக்கப்படும் 5 ஜோடிகளுக்கு திருமாங்கல்யம் 2 கிராம் தங்கம் ரூ.10.000, மணமகன் ஆடை ரூ.1000, மணமகள் ஆடை ரூ. 2000, மணமகன் மற்றும் மணமகள் உடன் 20 நபர்களுக்கு விருந்து ரூ.2000, பூ மாலை ரூ.1000, பாத்திரங்கள் ரூ.3000, இதர செலவு ரூ. 1000 என ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அடையாளம் தெரியாத கார் ஒன்று ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.
    • இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்துள்ளார்.

    பவானி:

    ஈரோடு சின்னசோமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (59). தனியாருக்கு சொந்தமான சைசிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ராகுல் என்ற மகனும், கோபிகா என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ராமசாமி இரவு 8 மணிக்கு வீட்டிலிருந்து கடைக்கு சென்று வருவதாக மனைவியிடம் தெரிவித்து சென்றுள்ளார். இந்நிலையில் சேலம்-கோவை பைபாஸ் ரோடு பவானி அருகிலுள்ள நசி யனூர், ஆட்டையாம்பா ளையம் பிரிவு பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ஒன்று ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று ராமசாமியின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே ராமசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக மனைவி பிரியா சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பி ரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×