என் மலர்
நீங்கள் தேடியது "sanitation worker"
- தூய்மைப் பணியாளர் அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் அடித்து விரட்டினார்.
- இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அடையாறு மேம்பாலத்தில் 50 வயது மதிக்க தக்க பெண் தூய்மைப் பணியாளிடம் இளைஞர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனை கண்டு கோவமடைந்த பெண் தூய்மைப் பணியாளர் அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் அடித்து விரட்டினார். இதனையடுத்து அந்த இளைஞர் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடினார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரம் விசாரணை நடத்திய போலீசார், ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா (25) என்பவரை கைது செய்துள்ளனர்
- உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
- சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
சென்னை கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலையில் வேலைக்கு சென்ற வரலட்சுமி சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
மின்சாரம் பாய்ந்து பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்து ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
மேலும், வரலட்சுமியின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
பலியான வரலட்சுமி பணியாற்றிய தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் அவரது கணவருக்கும் பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வரலட்சுமியின் கணவர் ரவி உடல்நலம் குன்றியிருப்பதால் அவருக்கான முழு மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
- வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலையில் வேலைக்கு சென்ற வரலட்சுமி சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு, மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம்
- தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது
இந்நிலையில், மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
- தூய்மைப் பணியாளர்களுக்கு 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது
- முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேரணி சென்றனர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது
இந்நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், " ஓர் உண்மையான சமூக மனிதன் தொழிலாளிகள் பக்கமே நிற்பான்; நானும் தூய்மைப் பணியாளர்கள் பக்கமே நிற்கிறேன்
சராசரி மனிதர்களால் சாத்தியப்படாத தூய்மைப் பணியை நுரையீரலைப் பணயம்வைத்து ஈடேற்றுகிற ஈடற்ற தியாகிகள் அவர்கள். அவர்கள் எதிர்பார்ப்பது கருணையை அல்ல; உரிமையை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை ஆறு அம்சத் திட்டத்தால் அவர்களின் வாழ்வுக்கு வளம்சேர்க்கவே கருதுகிறது.
தூய்மைப் பணியாளர்கள் விரைவில் வேலைக்குத்திரும்ப வேண்டும்;கோரிக்கைகள் காலப்போக்கில் கனிந்தே தீரும்
இது தொழிலாளிகள் உலகம் அவர்கள் நலம் சமுதாய நலம். அனைவர்க்கும் விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேரணி சென்றனர்.
- தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உணவு பரிமாறினார்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர். பேரணி முடிவில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு, மாநகர மேயர் பிரியா ஆகியோர் உணவு பரிமாறினர்.
இதனையடுத்து தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தேன். நேற்று நமது அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள்:
* தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு
* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
* தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி
* தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
* தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
* பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி
* தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்
- தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கப்படும்
- தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர்.
பேரணி முடிவில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு, மாநகர மேயர் பிரியா ஆகியோர் உணவு பரிமாறினர்.
தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள்:
* தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு
* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
* தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி
* தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
* தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
* பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி
* தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்
- தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கப்படும்
- தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,
* தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு
* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
* தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி
* தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
* தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
* பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி
* தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்
முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்!
இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு!" என்று தெரிவித்துள்ளார்.
- கீழ்பவானி வாய்க்காலில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார்.
- அப்போது அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார்.
ஈரோடு:
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன் (51). நகராட்சி தூய்மைப்பணியாளர். இவரது மனைவி மல்லிகா (49). இருவரும் கடந்த 25-ந் தேதி சொந்த ஊரானா ஈரோடு மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுவண்டிபாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர்.
பின்னர் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் தங்கினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மல்லிகா தன் கணவரை தேடி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் உயிரிழந்த நிலையில் முருகன் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் தி.மு.க. கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
- தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூர் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பேரூராட்சி பஸ் நிறுத்தம் கால்நடை மருத்துவமனை அருகில் ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் தி.மு.க. கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பேரூராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் முன்னிலையில் பேரூ ராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்த், நகர செயலாளர் முத்துவீரப் பெருமாள், மாவட்ட பிரதிநிதி செங்கோட்டை யன், ஒன்றிய பிரதிநிதி சமுத்திரராஜ், அவைத்தலைவர் சுப்பையா, துணை தலைவர் அமிர்தவள்ளி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், சீதாலட்சுமி, மாரி யம்மாள், வார்டு செயலாளர்கள் ஆர்த்திகுமார், கண்ணன், ராகவன், சுடலையாண்டி, சீனிவாசன், ஞானப்பிரகாசம், பொன்ராஜ், முருகன், அன்பு துரை, ரவிக்குமார், ராஜேந்தி ரன், மேகநாதன், முத்துமாலை, செல்வராஜ், செல்லையா, சுவிசேஷ முத்து, தங்கராஜ், முத்துகிருஷ்ணன், சுப்பிர மணியன், சுப்பையா, ஜெயகோபால், மனுவேல், மோசஸ் மற்றும் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஒரு குடியிருப்புக்கு மொத்த மதிப்பு தொகை ரூ.13.04 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி பரப்பளவில் கழிவறை, படுக்கையறை, சமையலறை ஆகிய வசதி யுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளை சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்காக கடந்த 1996-ம் ஆண்டு கட்டப்பட்டு இருந்த 366 குடியிருப்புகள் பழுதடைந்து விட்டது.
அடிக்கல் நாட்டு விழா
இந்த காரணத்தினால் அவை சமீபத்தில் முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த இடத்தில் புதிதாக மீண்டும் 408 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு அழைப்பா ளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
ரூ.53.19 கோடி நிதி
இந்த குடியிருப்புக்கு ரூ.53.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. ஒரு குடியிருப்புக்கு மொத்த மதிப்பு தொகை ரூ.13.04 லட்சம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு மானியமாக ரூ.1.50 லட்சம், மாநில அரசின் மானியமாக ரூ.7 லட்சமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வசித்த 365 பயனாளிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் பயனாளி பங்களிப்பு தொகையாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடியிருக்கும் 400 சதுர அடி பரப்பளவில் கழிவறை, படுக்கையறை, சமையலறை ஆகிய வசதி யுடன் கூடிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வெளி யேறும் கழிவுநீர் மாநக ராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை வசதியுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்கும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., பாளை தொகுதி எம்.எல்.ஏ அப்துல் வகாப், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜு, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், இந்திராணி, நிர்வாக பொறியாளர் சாந்தி, உதவி நிர்வாக பொறியாளர் மாடசாமி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொரு ளாளர் சித்திக், ஒன்றிய செய லாளர்கள் ஜோசப் பெல்சி, ராஜன், மாவட்ட கவுன்சி லர் கனகராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது சபாநாயகர் அப்பாவுவிடம், சென்னையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகர் தகுதியை மீறி பேசி உள்ளதாக கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, சட்டமன்றத்தில் விதிப்படி யும், சட்டப்படியும் மட்டுமே அவை நடவடிக்கைகள் நடந்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பாகவோ, பேரவை விதிகளுக்கு புறம்பாகவோ எந்த நடவடிக்கையும் சட்டமன்றத்தில் நடை பெறவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டமன்றத்திற்கு வராத காரணத்தினால் அவருக்கு இது குறித்து தெரியவில்லை என்று கூறினார்.
- லாரி அந்த வழியாக வந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
- விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவான்மியூர் ஆர்.டி.ஒ. அலுவலம் அருகே கிழக்கு கடற்கரை சாலை சிக்னல் சந்திப்பில் சிவகாமி என்ற தூய்மை பணியாளர் பணி செய்து வந்தார். அப்போது அங்கு வந்த கார் மோதியதில் அவர் தூக்கிவீசப்பட்டார். அவர் மீது சரக்கு லாரி ஒன்று ஏறி இறங்கியது. மேலும் லாரி அந்த வழியாக வந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சிக்கிய சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் சிவகாமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தை தெரிவித்தார். இதோடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.






