search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suicide"

    • யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேசிய தொழில் நுட்ப கல்வி மையம் (என்.ஐ.டி) செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த யோகீஸ்வர்நாத் என்பவர் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    அவர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் மாணவர் யோகீஸ்வர்நாத் விடுதியின் சி-பிளாக்கின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாணவர் யோகீஸ்வர்நாத் மாடியில் இருந்து குதித்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை. பாடங்கள் தொடர்பாக மன அழுத்தம் ஏறபட்டதன் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய தொழில் நுட்ப கல்வி மையத்தின் விடுதியில் 7-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயபிரிய குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் ரங்கசாமி லே அவுட்டை சேர்ந்தவர் ஜெயராமன்.

    இவரது இளைய மகன் விஜயபிரியகுமார் (வயது 47) இவர் பல் மருத்துவ படிப்பு 3ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது மன நோயால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கடந்த 9 ஆண்டுகளாக அரியாங்குப்பம் மணவெளியில் உள்ள மனநல மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

    அவரை அவரது உறவினர்கள் அவ்வப்போது சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதியம் விஜயபிரிய குமாரின் சித்தப்பா ராமகிருஷ்ணன் மனநல மையம் சென்று அவரை பார்த்து பேசிவிட்டு வந்தார்.

    அவர் வந்து சென்ற சிறிது நேரத்தில் விஜயபிரிய குமார் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் 2-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனே கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயபிரிய குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
    • மும்பை சிறப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ்தாபன் தற்கொலை.

    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரான சல்மான் கான் வீடு மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி அன்று அதிகாலை ஐந்து மணியளவில் இவரது வீட்டு முன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர்.

    சத்தம் கேட்டு உடனடியாக வீட்டில் இருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

    இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

    இந்த விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களை மும்பை குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அனுஜ் தாபன் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதாக மும்பை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், விசாரணைக்காக மும்பை சிறப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ்தாபன் தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அவர், கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அனுஜ் தாபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    • புகாரின் பேரில் பணிப்பெண் லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • பணிப்பெண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் கடந்த மாதம் தங்க நகைகள் திருடுபோனது.

    இதையடுத்து, மனைவிக்கு தந்த தங்க பரிசு பொருட்கள் காணாமல் போனதாக மாம்பலம் காவல் நிலையத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்திருந்தார்.

    புகாரின் பேரில் பணிப்பெண் லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது, நகைகளை திருடவில்லை என பணிப்பெண் சொன்னதாகவும், விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், மன உளைச்சலில் இருந்து பணிப்பெண் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதைகண்ட அவரது குடும்பத்தினர், பணிப்பெண்ணை உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் கோமங்கலம் அடுத்துள்ள கூலநாய்க்கன்பட்டி.

    இந்தநிலையில் இன்று காலை கருப்புச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மன உளைச்சல் காரணமாக கருப்புச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜன்னல் வழியாக போலீசார் பார்த்தபோது பாலகுமார் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் பாலகுமார் (வயது 38). இவர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சனிக்கிழமை பாதுகாப்பு பணி முடிந்து கோவை கணபதி மாநகரில் உள்ள வீட்டிற்கு திரும்பினார்.

    இந்த நிலையில் அவரது பெற்றோர் பாலகுமாரை போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் பாலகுமார் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலகுமாரனின் பெற்றோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் கணபதி மாநகரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக போலீசார் பார்த்தபோது பாலகுமார் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனே அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பாலகுமாருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கோவையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று லண்டனில் உள்ள ஓட்டலின் கிளைக்கு பணியாற்ற சென்று விட்டார்.

    பாலகுமார் 2 குழந்தைகளையும் தனது பெற்றோர் பராமரிப்பில் விட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளிநாட்டில் உள்ள தனது மனைவியிடம் பாலகுமார் போனில் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மீண்டும் கணவர் பாலகுமாரை லண்டனில் இருந்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால் இதுகுறித்து பாலகுமாரின் பெற்றோருக்கு அவர் தகவல் தெரிவித்து வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார். அதன்பிறகே பாலகுமார் தற்கொலை செய்த விவரம் தெரியவந்தது.

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    • சாரலப்பள்ளியில் உள்ள ஜெயிலில் முகமது ஷேக் என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார்.
    • ஜெயில் வார்டன் முகமது ஷேக்குக்கு ஜெயில் டாக்டரிடம் சிகிச்சை அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சாரலப்பள்ளியில் உள்ள ஜெயிலில் முகமது ஷேக் (வயது 32) என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனை அறிந்த ஜெயில் வார்டன் முகமது ஷேக்குக்கு ஜெயில் டாக்டரிடம் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் வயிற்று வலி குறையவில்லை.

    இதையடுத்து முகமது ஷேக்கை ஐதராபாத்தில் உள்ள காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் முகமது ஷேக் வயிற்றை டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.

    இதில் முகமது ஷேக்கின் வயிற்றில் ஆணிகள் இருப்பது தெரியவந்தது. இரப்பை குடல் துறை தலைவர் டாக்டர் ஷ்ரவன் குமார் தலைமையிலான டாக்டர்கள் முகமது ஷேக் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் 45 நிமிடங்களில் 5 அங்குலம் நீளமுள்ள 9 ஆணிகளை அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து கைதியிடம் விசாரித்த போது அவர் தற்கொலை செய்துவதற்காக ஆணிகளை விழுங்கியதாக தெரிவித்தார்.

    • கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சூரியன்பேட்டை சேர்ந்தவர் கந்தன். (வயது 48). இவருக்கு ரமாவள்ளி (வயது 40 ) என்ற மனைவி இருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கந்தனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை கந்தனுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. இதனால் கந்தனின் மனைவி ரமாவள்ளி கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் உடனடியாக ரமா வள்ளியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் இன்று அதிகாலை ரமாவள்ளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • தட்சிணாமூர்த்தி தனது வீட்டு தேவைக்காக கடன் வாங்கியிருந்ததாகவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
    • மன உளைச்சலில் இருந்த வரலட்சுமி தனது தாயாரிடம் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு, மகன், மகளுடன் கோவைக்கு வந்துள்ளார்.

    கோவை:

    சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 50). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி வரலட்சுமி (45). இவர்களுக்கு யுவராஜ் (16)என்ற மகனும், ஜனனி (15) என்ற மகளும் இருந்தனர். வரலட்சுமி தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் யுவராஜ் 11-ம் வகுப்பும், ஜனனி 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    தட்சிணாமூர்த்தி தனது வீட்டு தேவைக்காக கடன் வாங்கியிருந்ததாகவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில், கடந்த 28-ந் தேதி தட்சிணாமூர்த்தி தனது மனைவியிடம் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு வரலட்சுமி துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    கணவர் மாயமானதில் இருந்தே வரலட்சுமியும், அவரது குழந்தைகளும் கடும் மன உளைச்சலில் இருந்தனர். அவர்களுக்கு வரலட்சுமியின் தாயார் தாராபாய் ஆறுதல் கூறி வந்தார்.

    கடந்த 29-ந் தேதி வரலட்சுமி, தனது தாயாரிடம் வீட்டிலேயே இருந்தால் மிகவும் மன உளைச்சலாக உள்ளது. அதனால் நானும், குழந்தைகளும் சிங்கபெருமாள் கோவிலுக்கு சென்று வருகிறோம் என தெரிவித்தார். அவரும் போய்விட்டு வாருங்கள் என அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து வரலட்சுமி, தனது மகன் யுவராஜ், மகள் ஜனனி ஆகியோருடன் கோவிலுக்கு சென்றார். அன்றைய தினம் முழுவதையும் அங்கேயே இருந்தார். மதியத்திற்கு பிறகு அவரது தாயார் போன் செய்து ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என கேட்டார். அதற்கு வரலட்சுமி தான் கோவிலில் தங்கி விட்டு மறுநாள் வருகிறேன் என தெரிவித்தார்.

    இரவு தாராபாய் தனது மகளை செல்போனில் அழைத்தார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பதறிபோன அவர் உடனே தனது உறவினர்களுடன் கோவிலுக்கு சென்று தேடி பார்த்தார். அங்கு அவர்கள் இல்லை. எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் தாராபாய் சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வரலட்சுமி மற்றும் அவரது மகன், மகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கோவை நஞ்சுண்டாபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகே 3 பேர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் டி.எஸ்.பி. யாஸ்மின், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் உடல்களை பார்வையிட்டு, அவர்கள் யார் என்பதை அறிய அங்கு ஏதாவது கிடக்கிறதா? என தேடி பார்த்தனர்.

    அப்போது செல்போன் மற்றும் சில பொருட்கள் இருந்தன. அதனை வைத்து விசாரித்த போது, இறந்து கிடந்தது மாயமான வரலட்சுமி, அவரது மகன் யுவராஜ், மகள் ஜனனி என்பது தெரியவந்தது.

    மன உளைச்சலில் இருந்த வரலட்சுமி தனது தாயாரிடம் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு, மகன், மகளுடன் கோவைக்கு வந்துள்ளார்.

    கோவைக்கு வந்த அவர்கள் பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். கணவர் மாயமானதாலும், கடன் தொல்லை அதிகரித்ததாலும் இனி இந்த உலகில் வாழ்வதை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என வரலட்சுமி முடிவெடுத்துள்ளார். அதன்படி கோவை நஞ்சுண்டாபுரம் ரெயில்வே மேம்பாலம் பகுதிக்கு தனது குழந்தைகளுடன் வரலட்சுமி சென்றார்.

    அந்த வழியாக கேரள மாநிலம் சொர்னூர் நோக்கி ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து வரலட்சுமி, தனது குழந்தைகளுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • நாகலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    தென்காசி பண்பொழியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் நாகலெட்சுமி (வயது18).

    இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இதனால் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கி இருந்து நாகலெட்சுமி படித்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நாகலெட்சுமி, விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை அந்த அறையில் தங்கியிருந்த சக தோழிகள் இன்று காலை எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் கல்லூரி விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக கல்லூரிக்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் தலைமையிலான போலீசார், நாகலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சமீபத்தில் செமஸ்டர் தேர்வு முடிவு வெளியான நிலையில் அதில் நாகலெட்சுமி சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதனால் தேர்ச்சி பெறாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பெற்றோர் தினமும் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் சிவசண்முகம். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருடைய மனைவி கெஜலட்சுமி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஹரிகரசுதன் (14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஹரிகரசுதன் அயோத்தி யாப்பட்டணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே ஹரிகரசுதனுக்கு பள்ளிக்கு போக விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் தினமும் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றும் ஹரிகரசுதன் தனது பெற்றோரிடம் பள்ளிக்கு போகமாட்டேன் என கூறி அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி காலையில் பள்ளி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதனால் மனமுடைந்த ஹரிகரசுதன் மாலையில் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டிற்குள் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கல்லூரியில் பயிலும் அவரது சகோதரி மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது தம்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி உடனே தனது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ஒரே நாளில் மகளும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாப்புக்குட்டி (வயது 41), பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு ஐஸ்வர்யா (19), இந்துமதி (13) என்ற 2 மகள்களும், அருண்குமார் (10) என்ற மகனும் உள்ளனர். இதில் இந்துமதி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பாலமுருகன் வேலைக்கு சென்று விட ஐஸ்வர்யா, அருண் குமாரும் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டனர்.

    பள்ளிக்கு செல்லாமல் இந்துமதி மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பாப்புக்குட்டி கண்டித்துள்ளார். இதனால் இந்துமதி விரக்தி அடைந்துள்ளார்.

    சிறிது நேரத்திற்கு பின் பாப்புக்குட்டி வெளியே சென்று விட்டார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த இந்துமதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த பாப்பு குட்டி மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தான் கண்டித்ததால் மகள் விபரீத முடிவை எடுத்து விட்டதாக நினைத்து பாப்புக்குட்டி கலங்கினார். மகள் சாவுக்கு காரணமாகி விட்டோமே என நினைத்து மனம் வருந்திய பாப்புக்குட்டி தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது நான் இனிமேல் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.

    பின்னர் மகள் அருகிலேயே பாப்புக்குட்டியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மனைவி கூறியதை கேட்டு பதட்டம் அடைந்தார். மேலும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து மனைவியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர்கள் யாரும் செல்போனை எடுக்காததால் பாலமுருகன் அவசரம், அவசரமாக வீட்டிற்கு வந்தார்.

    அப்போது மகளும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய், மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் மகளும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×