என் மலர்

    நீங்கள் தேடியது "Suicide"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவக்குமார் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் கொங்கு நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவர் அந்த பகுதியில் வெல்டிங் ஓர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார்.

    இவருக்கு சுலோச்சனா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.இந்தநிலையில் சிவக்குமார் தொழில் தேவைக்காகவும், மகனை படிக்க வைப்பதற்காகவும் ரூ.15 லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். மேலும் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிவக்குமார் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராகவன் கடந்த 21-ந் தேதி தனது மனைவியிடம் தற்கொலை செய்யப்போகிறேன் என கூறி விட்டு வெளியே சென்றார்.
    • ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் பெரியார் நகரை சேர்ந்தவர் ராகவன் (வயது 61). தேயிலை தோட்ட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    ராகவன் அடிக்கடி வீட்டில் உள்ளவர்களிடம் தற்கொலை செய்ய போகிறேன் என கூறி விட்டு வெளியே செல்வார். பின்னர் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார்.

    இதே போல ராகவன் கடந்த 21-ந் தேதி தனது மனைவியிடம் தற்கொலை செய்யப்போகிறேன் என கூறி விட்டு வெளியே சென்றார். பின்னர் உருளிக்கல் சுடுகாட்டு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெளியே சென்ற கணவர் 2 நாட்களை கடந்தும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் ராகவனை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் தொழிலாளியின் மகன் மாயமான தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராகவனை தேடி வந்தனர்.

    அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றவர்கள் ஆண் ஒருவர் அழுகிய நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடப்பதை பார்த்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து ஷேக்கல்முடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது தேயிலை தோட்ட தொழிலாளி ராகவன் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நோய் பாதிப்பால் டிரைவர்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சுந்தர்ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது62). இவருக்கு மதுபழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முத்துராஜ் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி(23), டிரைவர். இவருக்கு மதுபழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. நோய் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருவங்காடு,

    குன்னூர் வண்ணாரபே ட்டையை சேர்ந்தவர் ராஜன்(61). இவர் கடந்த 5 வருடங்களாக தனது மனைவியை பிரிந்து மகன் வீட்டில் வசித்து வந்தார். மனைவியை பிரிந்ததால் மிகவும் மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராஜன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடனை கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு கொடுக்க தொடங்கி உள்ளனர்.
    • தொழில் நஷ்டத்தால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வடவள்ளி:

    கோவை விளாங்குறிச்சி, எஸ்.ஆர். அவென்யூவை சேர்ந்தவர் வித்யா சங்கர் (வயது 44). தொழில் அதிபர்.

    இவருக்கு திருமணம் ஆகி பிந்து என்ற மனைவியும், 15 வயதில் ராகவ் என்ற மகனும் உள்ளனர்.

    வித்யா சங்கர் திருப்பூரில் சொந்தமாக நூல் தயாரித்து விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். வித்யா சங்கர் தனது தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்காவும், தொழிலுக்காகவும், வங்கி மற்றும் தனக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து கடன் வாங்கி இருந்தார். மொத்தமாக ரூ.42 கோடி வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    வாங்கிய கடனுக்கு மாதம் தவறாமல் குறிப்பிட்ட நாட்களிலும் பணத்தையும் செலுத்தி வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவருக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே கடனை கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு கொடுக்க தொடங்கி உள்ளனர்.

    தினமும் போன் போட்டு தொந்தரவு செய்ததால் வித்யா சங்கர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று வழக்கம் போல் வீட்டில் இருந்து தனது காரில் கம்பெனிக்கு புறப்பட்டார்.

    ஆனால் அவர் திருப்பூருக்கு செல்லாமல் நேராக தொண்டாமுத்தூர் குள்ளாகவுண்டன்புதூர் பகுதிக்கு சென்று தனது காரை நிறுத்தினார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொந்தரவு கொடுத்து வந்ததாலும் மன உளைச்சலில் இருந்த வித்யா சங்கர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

    இதையடுத்து அவர், ஆன்லைனில் விஷம் ஆர்டர் செய்து வாங்கினார். பின்னர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    இந்த நிலையில் காலையில் இருந்து மாலை வரை அந்த பகுதியிலேயே கார் நின்றதாலும், போன் அடித்தும் யாரும் எடுக்காததாலும் அந்த பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனடியாக அவர்கள் சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் காருக்குள் ஏறி பார்த்த போது, அங்கு வித்யாசங்கர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து வித்யா சங்கரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    போலீசார், வித்யா சங்கரின் காரில் இருந்த லேப்-டாப், டைரி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, சோதனையிட்டனர். அப்போது டைரியில் வித்யா சங்கர் தான் யாரிடம் எல்லாம் இருந்து கடன் பெற்றுள்ளேன் என்பது குறித்தும், அந்த நபர்களின் பெயர்களையும் விரிவாக எழுதியிருந்தார்.

    அந்த தகவல்களை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் நஷ்டத்தால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணமாகாத விரக்தியில் மது பழக்கத்துக்கு அடிமையானர்
    • ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 43). மாற்றுத்திறனாளியான இவர் அந்த பகுதியில் உள்ள டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    கனகராஜ் திருமணத்துக்காக பல இடங்களில் பெண் பார்த்தார். ஆனால் அவர் மாற்றுத்திறனாளி என்பதால் எந்த பெண்ணும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் மது பழக்கத்துக்கு அடிமையானர்.

    சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டில் தனியாக இருந்த அவர் திருமணமாகாத விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருதுநகர் மாவட்டத்தில் பெண், வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் வீரார்பட்டி பகுதியை சேர்ந்தவர் கன்னிதாய்(45). இவர் வீட்டுக்கு தெரியாமல் கடன் வாங்கி உள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோட்டூர் மலைப்பட்டி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தின் பின்புறம் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் பார்த்தசாரதி கொடுத்த புகாரின்பேரில் அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லபாண்டி(33). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்கு றைவு ஏற்பட் டது. மருத்து வம் பார்த்தும் குணமாக வில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி தங்கபாண்டி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெயிண்டர் தற்கொலை
    • திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பெயிண்டர் தற்கொலை




    திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராமர் . இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 35). பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (29) என்ற பெண்ணுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்படிபுதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடந்தி வருகிறார்கள்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பசுபதி ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
    • நேற்று காலை பசுபதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் பசுபதி. (வயது 55). இவர் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பசுபதி தற்போது குடும்பத்துடன் கீழ சுரண்டை பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் பசுபதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சந்துரு தென்காசியில் உள்ள அவரது தாத்தா வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • சமையலறையில் சிறுவன் சந்துரு தூக்கு போட்ட நிலையில் கிடந்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வடக்கு ரத வீதியில் வசித்து வரும் முருகன் என்பவரது மகன் சந்துரு (வயது 17). இவர் கடையநல்லூர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுவனு க்கு சரியாக படிப்பு வராததால் பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்து கொண்டு மாற்று சான்றிதழ் வாங்கி தருமாறு வீட்டில் கேட்டு சண்டை போட்டுள்ளார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு மேல் பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்த நிலையில், தென்காசியில் உள்ள அவரது தாத்தா சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து இருந்து வந்துள்ளார். சிறுவனும், அவரது தாத்தா சுப்பிரமணியனும் (69) வீட்டில் இருந்துள்ளனர். அப்போது தாத்தா சாப்பாடு வாங்க சென்றுள்ளார்.

    சாப்பாடு வாங்கி விட்டு வந்து பார்த்தபோது சிறுவன் சந்துரு அந்த வீட்டின் சமையலறையில் சேலையால் தூக்கு போட்ட நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித் ததில் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரி வித்து ள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin