search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Husband and wife"

    • புரிதல் இருந்தால் தான் உறவு நீண்ட காலம் நீடிக்கும்.
    • புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும்.

    கணவன் மனைவி உறவில் புரிதல் இருந்தால் தான் அந்த உறவு நீண்ட காலம் அவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும். புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும். அந்த உறவில் இடைவெளி உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல் போனாலும், சிறு சிறு விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கப்படும் போதும் தான் இடைவெளி உண்டாகிறது. இதனை விளக்கும் ஒரு அருமையான கதை உங்களுக்காக...

    மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு தம்பதியரில் மனைவிக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு நாள் இந்த மனுஷனோடு சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். தன்னுடைய கணவனுக்கு தன்னுடனான வாழ்க்கை அலுப்பு தட்டி இருக்குமோ என்று ஒரு யோசனை. அதனை சோதிக்க நினைத்தாள் மனைவி. ஒருவேளை தான் விலகிப்போய்விட்டால் கணவன் எப்படி நடந்துகொள்வான் என்பதை பார்க்க ஆர்வம் கொண்டாள்.

    எனவே அன்று தன் கணவன் வீடு திரும்பும் முன்னர், ஒரு சின்ன காகிதத்தில் ஒரு குறிப்பை எழுதி அவன் பார்வையில் படும் இடத்தில் வைத்துவிட்டு கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்துகொண்டாள்.

    கணவன் வழக்கம் போல வீடு திரும்பினான். மேஜையின் மீது இருந்த குறிப்பில் உன்னுடனான வாழ்க்கை சலித்துவிட்டது. நான் உன்னை விட்டு விலகி செல்கிறேன். என்னை தேட வேண்டாம் என்று எழுதி இருந்தது. கணவன் குறிப்பை படித்துவிட்டு குறிப்பின் பின்புறத்தில் ஏதோ கிறுக்கிவிட்டு தன் செல்போனை எடுத்து பேசினான்.

    அதில் பேசும்போது, கடைசியாக அவள் போய்விட்டாள். நமக்கு இருந்த ஒரு தடையும் நீங்கிவிட்டது. நான் உன்னை சந்திக்க வருகிறேன். தயாராக இரு என்று சொல்லிக்கொண்டே கதவை பூட்டிவிட்டு வெளியேறினான்.

    உடனே அவனது மனைவி அழுதுகொண்டே கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்தவள், அவர் நம்மை தேடவில்லை, கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை என்று எண்ணிக்கொண்டு கோபத்துடன் குறிப்பின் பின்னால் அவன் என்ன எழுதினான் என்று பார்க்க அந்த குறிப்பை எடுத்து பார்த்தால்.

    அதில், ஏ! பைத்தியம் நீ கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருக்கிறதை நான் பார்த்துவிட்டேன். எனக்கு பசிக்குது, கடைக்கு போய் பிரட் வாங்கி வருகிறேன். நீ எனக்கு பிரட் ஆம்லெட் போட்டு கொடு சாப்பிடுறேன். உனக்கு ஏதாவது வேண்டும்னா, எனக்கு போன் பண்ணு. இந்த உலகத்தில் மற்றவர்களை விட நான் உன்னை தான் அதிகமாக நேசிக்கிறேன். என் அன்பு முத்தங்கள்! என்று எழுதி இருந்தான். இதைக்கண்டதும் மனைவிக்கும் ஒரே ஆனந்தம்.

    கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவை இருவருமே பராமரித்தால் மட்டுமே அது உயிர்ப்போடு நீடிக்கும். தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் ஈர்க்க உழைப்பும், அக்கறையும் தேவைப்படுகிறது. அந்த பராமரிப்பு பற்றி கணவனும் மனைவியும் யோசிக்க ஆரம்பித்தாலே நல்ல நண்பர்களாக, ஒருவருக்கொருவர் சுவாரசியமிக்க துணையாக இருக்கலாம்.

    • திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை, சன்னதி ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 72).

    இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

    இவரது மனைவி தமிழரசி (58).

    இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன், மனைவி இருவரும் திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், தனபால் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தனபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தமிழரசியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கணவன்-மனைவிக்கு அடி உதை விழுந்தது.
    • ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்்ந்தவர் சக்திவேல். இவரது உறவினர் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த அய்யப்பன். இவருக்கு ராஜபாளை யத்தை சேர்ந்த கருப்பையா என்பவரிடம் இருந்து சக்திவேல் ரூ.5லட்சம் கடன் வாங்கி கொடுத்தார்.

    ஆனால் அய்யப்பன் அசல் மற்றும் வட்டியை கொடுக்கவில்லை. இதனால் கருப்பையா, அய்யப்பன் கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கேட்டு சக்தி வேலுக்கு நெருக்கடி கொடு த்தார். இதைத் தொடர்ந்து சக்திவேலுக்கும், அய்யப்ப னுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் அர்ஜூன், மாரிமுத்து, ரஞ்சித் மேலும் சிலர் சக்திவேல் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரத்தில் அய்யப்பன் மற்றும் உடன் வந்தவர்கள் சக்திவேலை அடித்து உதைத்தனர். அதை தடுக்க வந்த அவரது மனைவி சாந்தியை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் அவர்களை விலக்கி விட முயன்ற உறவுக்கார பெண் ராமு, கார்த்திக் ஆகியோருக்கும் அடி உதை விழுந்தது. இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து ராஜபா ளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ராமு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பின்னால் வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா படுகாயம் அடைந்தனர்.

    புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் பொன்னு ச்சாமி (வயது 74). இவரது மனைவி சரோஜா (70).

    இவர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் ேரயான் நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அடுத்த மல்லியம்பட்டிக்கு உறவினர் வீட்டு விஷேசத்துக்கு வந்து கொண்டி ருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் பு.புளியம்ட்டி சத்திய மங்கலம் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரே வந்த போது பின்னால் வந்த ஒரு மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் கை, கால்களில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதை கண்ட பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக அன்னூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் பொன்னுச்சாமி வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    மேலும் சரோஜாவுக்கு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்து விட்டார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விபத்தில் இறந்த கணவன்- மனைவி ஆகிய 2 பேர் உடல்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படை க்கப்படுகிறது.

    • இசக்கியப்பனுக்கும், கொம்பையாவிற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • ஆத்திரம் அடைந்த கொம்பையாவும், பலவேசக்கண்ணும் சேர்ந்து இசக்கியப்பனை தாக்கினர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி இசக்கியப்பன் (வயது67). இவருக்கும், இவரது தம்பி கொம்பையாவிற்கும் (60) இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இசக்கியப்பன் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொம்பையாவிற்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கொம்பையாவும், அவரது மகன் பலவேசக்கண்ணும் (33) சேர்ந்து இசக்கியப்பனை தாக்கினர்.

    இதனை தடுக்க வந்த இசக்கியப்பனின் மனைவி அம்மா பொன்னுவையும் (60) தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த இசக்கியப்பன், அம்மாபொன்னு ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொம்பையா, அவரது மகன் பலவேசக்கண்ணு ஆகியோரை கைது செய்தனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள கீழக்காரங்காடு, கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலி தொழிலாளி.
    • இவருக்கும், இவரது தம்பி மாசானம் என்ற வெள்ளப்பாண்டிக்கும் (45) குடும்ப சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள கீழக்காரங்காடு, கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலி தொழிலாளி.

    இவருக்கும், இவரது தம்பி மாசானம் என்ற வெள்ளப்பாண்டிக்கும் (45) குடும்ப சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன் தினம் முருகன், அதே ஊரில் உள்ள தனது தாயார் நம்பிநாச்சியாரிடம் சென்று சொத்து குறித்து பேசினார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த போது, அவரது தம்பி வெள்ளப்பாண்டிக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த முருகனின் மனைவி பிரேமா (45) தகராறை விலக்கி விட சென்றார். அப்போது வெள்ளப்பாண்டி பிரேமாவை மண்வெட்டியால் தாக்கினார். இதையடுத்து முருகன் அவரை தடுத்தார். ஆத்திரம் அடைந்த வெள்ளப்பாண்டி முரு கனையும் மண்வெட்டியால் தலையில் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயமடைந்த முருகன், அவரது மனைவி பிரேமா ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த மோதலில் வெள்ளப்பாண்டிக்கும் காயம் ஏற்பட்டது. அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பினார். இதுபற்றி முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி, இது தொடர்பாக வெள்ளப்பாண்டியை கைது செய்தனர்.

    • வீட்டில் பணம்,நகை திருடி சென்றது தெரியவந்தது.
    • போலீசார் 2 பேரை கைது செய்து நகையை மீட்டனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பெத்தாம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (42). இவர் குன்னத்தூர் ரோட்டில் சொந்தமாக எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி ரேணுகா தேவி. இவர் தினமும் காலை 10 மணியளவில் தனது கணவருக்கு உதவியாக கடைக்கு செல்வார். மீண்டும் அவர்கள் 2 பேரும் மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு செல்வார்கள்.

    இதே போல் கடந்த மாதம் 7-ந் தேதி ரேணுகாதேவி வழக்கம் போல் காலையில் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றார். பின்னர்மீண்டும் அவர் தனது கணவருடன் மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தார்.

    அப்போது அவர் சாவி வைத்திருந்த இடத்தில் சாவியை காணவில்லை. ஆனால் வீடு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோ லாக்கரில் இருந்த 7. 25 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்க ப்பணம் ஆகியவை திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து அவர்கள் பெருந்து றை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தனிப்படை போலீசார் விஜயமங்கலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார், போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அம்பாரம்பாளையம் பகுதியை சேர்ந்த சையதர் அலி (37), அவரது மனைவி கற்பகம் (33) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் தான் எலக்ட்ரிக் கடை அதிபர் கவுரிசங்கர் வீட்டில் பணம்,நகை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:

    சையதர் அலி மற்றும் அவரது மனைவி கற்பகம் ஆகியோர் தனியாக இருக்கும் வீடு மற்றும் கடைகளை நோட்டமிட்டு பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் இவர்கள் மீது 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    சம்பவத்தன்று பெருந்துறை பகுதிக்கு வந்த இவர்கள் கவுரிசங்கர் வீட்டை நோட்டமிட்டு அவரது மனைவி சாவி வைத்து செல்வதை கண்காணித்து உள்ளனர்.

    பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் சாவியை திறந்து வீட்டிற்குள் சென்று நகை, மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    மேலும் திருடிய பணத்தில் வீட்டிற்கு தேவையான டி.வி.,பிரிட்ஜ், இருசக்கர வாகனங்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம்இருந்து 4அரை பவுன் நகையை மீட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • காளியப்பன், மனைவி பழனாள் பிணமாக கிடந்ததும் தெரிய வந்தது.
    • ரத்தத்தில் எழுதப்பட்ட பெயர்களையும் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.

    கோபி:

    கோபி செட்டிபாளையம் சிவசண்முகம் வீதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 65). இவர் பெட்டி க்கடை வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பழனாள் (52). இவர்களது மகன் ராஜன்.

    இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காளியப்பனின் மகன் ராஜன் ஈரோடு பஸ் நிலையத்தில் நிலக்கடலை வியாபாரம் செய்து வந்த போது நடந்த தகராறில் கொலை செய்யப்பட்டார்.

    இதனால் கணவன், மனைவி மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். மேலும் காளியப்பன் உடல் நிலை சரி யில்லாமல் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காளி யப்பன் வீட்டின் முன்பு இருந்த பெட்டி கடையை திறந்து வியாபாரம் செய்தார்.

    அன்று இரவு பெட்டிக்கடையை மூடி விட்டு வீட்டிற்குள் சென்றார். இதையடுத்து கடந்த 3 நாட்களாக கணவன்- மனைவி இரு வரும் வீட்டை விட்டு வெளி யே வரவில்லை.

    இந்நிலையில் காளியப்பன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முன்பக்க கதவை திறந்து மாடிக்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தனர்.

    அப்போது காளியப்பன் தூக்கில் தொங்கிய நிலை யில் பிணமாக கிடப்பதும், அவரது மனைவி பழனாள் தரையில் பிணமாக கிடந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் காளியப்பன் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது கதவை உடைத்தாலும், திறக்க முடியாத அளவிற்கு கட்டிலை வைத்து தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் போராடி அறைக்குள் சென்று பார்த்த போது கணவன்-மனைவி 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும், பழனாள் உடல் எடையை தாங்காமல் கயிறு அறுந்து கீழே விழு ந்ததும் தெரிய வந்தது.

    மேலும் அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலைக்கு முன்பு காளியப்பன் ரத்தத்தினால் சுவற்றில் சிலரின் பெயர்களை எழுதி வைத்து இருந்தார். ரத்தத்தினால் எழுதி இருந்த பெயர்கள் யாருடையது.

    கணவன்- மனைவி தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர் தங்கம் பவானி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்துள்ளனர்.

    இதை தொடர்ந்து ரத்தத்தில் எழுதப்பட்ட பெயர்களையும் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் முடிவுகள் மற்றும் போலீசாரின் விசார ணைக்கு பிறகே கணவன், மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிய வரும்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தற்கொலை செய்து கொண்ட காளியப்பன் 26- வது வார்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வராக இருந்து வந்தார்.

    • தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து கேட்ட கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
    • ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 800 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கிணங்க முதுகுளத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி டி.ராஜகுமார் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் குணசேகர பாண்டியன் அமர்வு வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் வங்கியில் வாரா கடனாக நிலுவையில் இருந்த 4 வழக்குகளில் சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 2 லட்சத்து 29 ஆயிரத்து 252 வழங்க உத்தரவிடப்பட்டது. வாகன் விபத்து இழப்பீட்டு வழக்கில் 9 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு இழப்பீட்டுத்தொகையாக ரூ. 38 லட்சத்து 55 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. சிவில் வழக்குகளில் 9 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 13 லட்சத்து 53 ஆயிரத்து 546 என அறிவிக்கப்பட்டது.

    ஒரு விவகாரத்து வழக்கு விசாரணை முடிவில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதனால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சிறு குற்ற வழக்குகளில் 21 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 800 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

    • திருப்பத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்தில் கணவன்-மனைவி உயிர் தப்பினர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் உதயஅரசன். இவர் தனது மனைவி மேனஸ்கா, 2 வயது மகன் ஆகியோருடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார். திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாயிருப்பு பகுதி அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அவரது மேனஸ்கா, அவரது இரண்டு வயது மகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு முதல் உதவி சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

    • புதியம்புத்தூர் அருகே உள்ள பச்சை பெருமாள் புரத்தை சேர்ந்தவர் செல்வ ராஜ். இவரது மனைவி சரஸ்வதி(வயது 57).
    • நிலத் தகராறு சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவுப்படி சரஸ்வதி தன் நிலத்தை சர்வேயர் மூலம் அளவீடு செய்துள்ளார்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அருகே உள்ள பச்சை பெருமாள் புரத்தை சேர்ந்தவர் செல்வ ராஜ். இவரது மனைவி சரஸ்வதி(வயது 57).

    அதே ஊரை சேர்ந்த அந்தோணிசாமி மகன்கள் ஞான ராஜ் என்ற பிரபாகரன் (48), சந்திரசேகர் (43) ஆகியோருக்கும் சரஸ்வதிக்கும் நிலத் தகராறு சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவுப்படி சரஸ்வதி தன் நிலத்தை சர்வேயர் மூலம் அளவீடு செய்துள்ளார். இதனால் ஞானராஜ் என்ற பிரபாகரன், சந்திரசேகர் ஆகியோர் சரஸ்வதி வீட்டிற்கு சென்று சரஸ்வதி, செல்வராஜ் இருவரையும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் காயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல சிந்தாமணியை சேர்ந்தவர் இசக்கி (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி.
    • சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் தூண்டுதலின் பேரில் அவரது மனைவி பார்வதி மற்றும் 3 பேர் சேர்ந்து இசக்கி அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்து சேதப்படுத்தினர்.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல சிந்தாமணியை சேர்ந்தவர் இசக்கி (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பால சுப்பிரமணியனுக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இதையடுத்து இசக்கி சர்வேயர் மூலம் இடத்தை அளந்து வேலி அமைத்துள்ளார். சம்பவத் தன்று பாலசுப்பிரமணியன் தூண்டுதலின் பேரில் அவரது மனைவி பார்வதி மற்றும் 3 பேர் சேர்ந்து இசக்கி அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்து சேதப்படுத்தினர். இதைப்பார்த்த இசக்கி தட்டிக் கேட்டார்.

    இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பார்வதி உள்பட 5 பேரும் சேர்ந்து இசக்கியை செங்கல்களாலும், கம்பாலும் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதுகுறித்து மூலைக் கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக பாலசுப்பிர மணியன், அவரது மனைவி பார்வதி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×