என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband and wife"

    • தனது முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் தோள்பட்டையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார்.
    • தனது கணவரின் மது மற்றும் போதைப்பொருள் பழக்கம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் மறைக்கப்பட்டன.

    கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் உடைய பேரன் மீது வரதட்சணை கொடுமை புகார் சுமத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த தாவர் சந்த் கெலாட் உடைய பேரன் தேவேந்திர கெலாட் கடந்த 2018 இல் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார்.

    திவ்யா அளித்த புகாரில், தனது மாமனார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் வரதட்சணை கோரியதாகவும், தன்னை மீண்டும் மீண்டும் உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ளார். பணம் கொண்டுவரவில்லை என்றால் உணவு கிடையாது என கூறி சித்திரவதை செய்ததாக கூறியுள்ளார். 

    கடந்த 2025, ஜனவரி 26 அன்று மதுபோதையில் இருந்த தனது கணவர் தன்னைத் தாக்கி, வீட்டின் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகவும், இதனால் தனது முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் தோள்பட்டையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறியுள்ளார்.

    திருமணத்திற்கு முன்பே, தனது கணவரின் மது மற்றும் போதைப்பொருள் பழக்கம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் உள்ளிட்ட பல முக்கியமான தகவல்கள் தன்னிடம் மறைக்கப்பட்டதாக திவ்யா தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது மகளை பார்க்க விடாமல் தன்னை தடுப்பதாகவும் திவ்யா குற்றம்சாட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் மத்திய பிரதேச போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதேந்திரா கெலாட், "யாராலும் எவர் மீதும் குற்றச்சாட்டுகளை வைக்க முடியும்" என்று கூறி, விரைவில் உண்மைகளை தெளிவுபடுத்துவதாக தெரிவித்தார். 

    • ராஜஸ்தான் அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித் பணிபுரிந்து வருகிறார்.
    • கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

    2014 பேட்ச் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஷிஷ் மற்றும் பாரதி தீட்சித் இருவரும் அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    தற்போது ராஜஸ்தான் அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் திருமணம் செய்து கொண்டதிலிருந்து தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தனது கணவர் ஆஷிஷ் துன்புறுத்துவதாக பாரதி தீட்சித் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    சமீப காலமாக துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்றும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாரதி தனது புகாரில் தெரிவித்துள்ளார். பல குற்றவாளிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த மாதம், ஆஷிஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை கடத்திச் சென்று பல மணி நேரம் சிறைபிடித்து வைத்திருந்ததாகவும், விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

    புகாரை ஏற்று ஜெய்ப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • 1.5 வயதுடைய பாத்திமா என்ற குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.
    • அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார்.

    கர்நாடகாவில் தாய் தனது 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பேட்டபுரா பகுதியை சேர்ந்தவர் அபியா பானு (25 வயது). இவரது கணவர் சயது முசவீர் பெங்களூரில் உள்ள ஒரு மாலில் பணிபுரிகிறார்.

    இவர்களுக்கு 1.5 வயதுடைய பாத்திமா என்ற குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.

    மூத்த மகள் பாத்திமா பிறந்த நிலையில் 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் பானு மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் கணவன்-மனைவி இடையேயும் இதுதொடர்பாக சச்சரவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை 2 பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தாய் பானு, அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார்.

    மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.  

    • ஒரு வருடம் எல்லாம் நன்றாக இருந்தாலும், அதன் பிறகு முகேஷின் நடத்தை மாறியது.
    • தீஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    உத்தரப்பிரதேசத்தில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கணவன் வீட்டு மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

     ஜான்சியில் ராணிப்பூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த தீஜா (26 வயது) 2022 ஆம் ஆண்டு முகேஷ் அஹிர்வாரை  திருணம் செய்தார்.

    திருமணத்திற்குப் பிறகு ஒரு வருடம் எல்லாம் நன்றாக இருந்தாலும், அதன் பிறகு முகேஷின் நடத்தை மாறியது.

    அவர் வீட்டை விட்டு அதிகம் விலகி இருந்த முகேஷ் செல்லும்போதெல்லாம் தீஜாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

    இந்த வரிசையில் நீண்ட நாள் கழித்து நேற்று முன் தினம், முகேஷ் வீட்டிற்கு வந்து தீஜாவை தாக்கி, கட்டாய உடலுறவு கொண்டுள்ளார்.

    நேற்று, மீண்டும் உடலுறவு கொள்ள முயன்றபோது தீஜா கடுமையாக எதிர்வினை ஆற்றினார். இதனால் கோபமடைந்த முகேஷ் தீஜாவை அவர்கள் வசிக்கும் இரண்டு மாடி கட்டிட வீட்டின் மாடிக்கு மாடிக்கு தூக்கிச் சென்று அங்கிருந்து கீழே போட்டுள்ளார்.

    தீஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தனர்.

    கணவர் மீது தீஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • என் கணவரிடம் எனக்கு உதவுமாறு கேட்டேன்.
    • பள்ளியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாததற்காக கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக இந்திய வம்சாவளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

    வட கரோலினாவின் பாக்ஸ்ஹேவன் டிரைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியை சந்திரபிரபா சிங் (44) தனது கணவர் அரவிந்த் சிங் உடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த அக்டோபர் 12 அன்று, வீட்டை சுத்தம் செய்யாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்திரபிரபா தனது கணவர் அரவிந்த் சிங்கைக் கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டு அரவிந்த் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார் சந்திரபிரபாவை கைது செய்தனர். போலீசாரிடம் சந்திரபிரபா கூறுகையில், "காலை உணவு தயாரிக்கும் போது என் கணவரிடம் எனக்கு உதவுமாறு கேட்டேன்.

    அவர் வீட்டை சுத்தம் செய்யாததால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் கையில் கத்தியுடன் திரும்பியபோது, தற்செயலாக என் கணவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டது" என்று கூறினார்.

    இருப்பினும், அரவிந்த் சிங் தனது மனைவி வேண்டுமென்றே தன்னை குத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போது சந்திரபிரபா ஜாமீனில் வெளிவந்துள்ளார். பள்ளியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.  

    • திருமணம் 14 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது
    • நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளது.

    டெல்லியில் வழக்கறிஞர் ஒருவருக்கும் குரூப்-ஏ இந்திய ரயில்வே அதிகாரியாக பணியாற்றும் பெண்ணுக்கும் கடந்த 2010 இல் நடந்த திருமணம் 14 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது.

    தனது மனைவி தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறி கணவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் மனைவி அதை மறுத்தார்.

    இதை விசாரித்த குடும்ப நீதிமன்றம், கணவரின் வாதங்களுடன் உடன்பட்டு விவாகரத்து வழங்கியது. இருப்பினும், நிரந்தர ஜீவனாம்சம் கோரிய மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

    விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள மனைவி ரூ. 50 லட்சம் கோரியதும் தெரியவந்த நிலையில் இதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், "உண்மையிலேயே நிதி உதவி தேவைப்படுபவர்கள் மட்டுமே பராமரிப்பு கோர வேண்டும். இந்த வழக்கில், மேல்முறையீட்டாளர் (மனைவி) நிதி ரீதியாக நிலையானவர்.

    அவர்கள் குறுகிய காலம் தான் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.  

    • கிருத்திகாவின் சகோதரியும் மருத்துவருமான நிகிதா எம். ரெட்டி மரணத்திற்கான காரணத்தைக் குறித்து ஆராய தொடங்கினார்.
    • கிருத்திகாவின் மரணத்திற்குப் பிறகு மிகவும் துயரத்துடன் காணப்பட்ட மகேந்திரா, அடிக்கடி மனைவியின் குடும்பத்தினரைச் சந்தித்து வந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தவர்    மகேந்திர ரெட்டி (31). இவருக்கும் தோல் நோய் நிபுணரான டாக்டர் கிருத்திகா ரெட்டி (28)க்கும் கடந்த வருடம் மே மாதம் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கிருத்திகா தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். கணவர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    முதலில் இது சாதாரண மரணம் என்று கருதப்பட்ட நிலையில், கிருத்திகாவின் சகோதரியும் மருத்துவருமான நிகிதா ரெட்டி மரணத்திற்கான காரணத்தைக் குறித்து ஆராய்ந்தபோதுதான் கொடூரக் கொலை வெளிச்சத்துக்கு வந்தது.

    கிருத்திகாவிற்கு நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகள் இருந்து வந்தது, திருமணத்திற்கு முன்பு இதை மனைவி வீட்டினர் தன்னிடம் மறைத்துவிட்டதாக மகேந்திரா மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    மேலும் பெங்களூரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்க மகேந்திரா கிருத்திகாவின் குடும்பத்தினரிடம் பெரும் தொகையைக் கேட்டுள்ளார். ஆனால் கிருத்திகாவின் குடும்பத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில்தான் பல மாதங்கள் திட்டமிட்டு, மிகவும் சாமர்த்தியமாக மனைவியை மகேந்திரா கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

    கிருத்திகாவின் இரைப்பை குடல் பிரச்சினைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மகேந்திரா அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன் வழங்கும் மயக்க மருந்தான Propofol என்ற அனஸ்தீசியாவை அதிக அளவில் வழங்கி உள்ளார். கிருத்திகா மயக்கமடைவதற்கு முந்திய நாள் இரவும் அவருக்கு ஹெவி டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

    கிருத்திகா உயிரிழந்தது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு, பிரேதப் பரிசோதனை தேவையில்லை என்று கூறி, மனைவியின் உடலைத் தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல மகேந்திரா வற்புறுத்தியுள்ளார்.

    ஆனால், கிருத்திகாவின் சகோதரி நிகிதாவின் வேண்டுகோளின் பேரில் போலிஸ் அசாதாரண மரணம் என வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து கிருத்திகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியான பரிசோதனை அறிக்கையில், அறுவை சிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அதிக அளவில் உடலில் செலுத்தப்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று உறுதியானது.

    கிருத்திகாவின் மரணத்திற்குப் பிறகு மிகவும் துயரத்துடன் காணப்பட்ட மகேந்திரா, அடிக்கடி மனைவியின் குடும்பத்தினரைச் சந்தித்து வந்ததால் யாருக்கும் அவர் மீது எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது வெளியான பரிசோதனை அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    டாக்டர் மகேந்திரா தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஒன்பது நாட்களுக்குப் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.    

    • இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது.
    • ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து எரித்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் கணவர் மற்றும் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் .

    மைன்புரி மாவட்டத்தின் கோபால்பூர் கிராமத்தில் ரஜினி குமாரி என்ற அந்த 21 பெண் கணவர் சச்சின் உடன் வசித்து வந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. ரஜினி அண்மையில் கர்ப்பமாகி உள்ளார்.

    ரஜினியை கணவர் சச்சினும் அவரது உறவினர்களும் ரூ.5 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

    இதை நிறைவேற்றத்தால், அவர்கள் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) ராஜனியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் ரஜினி உயிரிழந்தார்.

    பின்னர், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து எரித்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ராஜனியின் தாயார் சுனிதா தேவி சனிக்கிழமை அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதற்கிடையே தாயார் சுனிதா தேவி அளித்த குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சச்சின், அவரது சகோதரர்கள் பிரான்ஷு மற்றும் சஹ்பாக், உறவினர்களான ராம்நாத், திவ்யா மற்றும் டினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.    

    • மனைவி காஜல் தேவியுடன் மகாவீர் யாதவ் வசித்து வந்தார்.
    • இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

    ஜார்கண்ட்டில் செல்போன் தர கணவனை மனைவி கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள மிஹிஜாம் பகுதியில் மனைவி காஜல் தேவியுடன் மகாவீர் யாதவ் (40) வசித்து வந்தார். பல ஆண்டுக்கான திருமண வாழ்வில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சச்சரவுகள் இருந்து வந்துள்ளது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, காஜல் தேவி தனது கணவரிடம் செல்போனும், செலவு செய்ய பணமும் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளார்.

    இதற்கு மகாவீர் மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த காஜல் தேவி, கத்தியால் தனது கணவரை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மகாவீர் யாதவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குற்றவாளியான காஜல் தேவி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

    • மைத்துனி சூடான பாத்திரத்தை எடுத்து எனது வலது காலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினாள்.
    • நான் கத்தினால், என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.

    குஜராத்தில் நடத்தியில் சந்தேகப்பட்டு கணவன் வீட்டாரால் பெண் ஒருவர் கொடூரமான சித்ரவதைக்கு ஆளான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மெஹ்சானா மாவட்டத்தில் விஜப்பூர் பகுதியில் உள்ள கெரிடா கிராமத்தில் கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் பாதிக்கப்பட்ட 28 வயதான பெண் வசித்து வந்தார்.

    விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், தனது மைத்துனி தனது நடத்தையில் சந்தேகித்து, தொடர்ந்து தன்னை இழிவாகப் பேசி துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த 16 ஆம் தேதி, "மைத்துனியும் அவரது சகோதரர்களும் இணைந்து, தனது கற்பை பரிசோதிக்க தனது கையை பாத்திரத்தில் கொதிக்கும் எண்ணெய்யில் வைக்க கட்டப்படுத்தினர். நான் மறுத்ததால் என்னை அடித்து, எனது கை கொதிக்கும் எண்ணெயில் படும்படி அடுப்பை நோக்கித் தள்ளினார்கள்.

    தனது அலறல் கேட்டும் சித்திரவதையை நிறுத்தாமல், மைத்துனி சூடான பாத்திரத்தை எடுத்து எனது வலது காலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினாள். நான் கத்தினால், என்னைக் கொன்றுவிடுவதாக அவள் மிரட்டினாள்" என்று தெரிவித்துள்ளார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்று, அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பெண்ணின் புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) இந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
    • ஹோம்ஸ்டேயில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு காணாமல் போனது.

    நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    மேகாலயவின் சோஹ்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 790 பக்க குற்றப்பத்திரிகையை SIT சமர்ப்பித்தது.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) இந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

    இருப்பினும், சோனம் ஏற்கனவே தங்கள் குடும்பத்தின் தளபாடங்கள் தொழிலில் கணக்காளராக பணிபுரியும் ராஜ் குஷ்வாஹாவை காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்த இந்த ஜோடி, மே 23 அன்று ஒரு ஹோம்ஸ்டேயில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு காணாமல் போனது.

    ஜூன் 2 ஆம் தேதி ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

    அதுவரை தலைமறைவாக இருந்த சோனம், ஜூன் 8 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் போலீசில் சரணடைந்தார். அவருக்கு உதவிய நண்பர்களை போலீசார் முன்னதாக கைது செய்தனர்.

    ஜூன் 11 ஆம் தேதி, விசாரணையில் சோனம் தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். 

    • தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மம்தா தனது மகளுடன் தனியா வாடகை அறையில் வசித்து வந்தார்.
    • ஸ்டுடியோவில் புகைப்படம் எடுக்க வீட்டை விட்டு வெளியில் வந்த மம்தாவை கணவர் விஸ்வகர்மா பின்தொடர்ந்து சென்றார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில் கணவர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக் கொன்றார்.

    கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இறந்தவர் கஜ்னியைச் சேர்ந்த மம்தா சவுகான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கணவர் விஸ்வகர்மா சவுகானை போலீசார் கைது செய்துள்ளனர்.

    குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    இந்த தம்பதியினர் ஒன்றரை வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு 13 வயது மகள் உள்ளார். கணவன்-மனைவி இவருக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மம்தா தனது மகளுடன் தனியா வாடகை அறையில் வசித்து வந்தார். 

    இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று, ஸ்டுடியோவில் புகைப்படம் எடுக்க வீட்டை விட்டு வெளியில் வந்த மம்தாவை கணவர் விஸ்வகர்மா பின்தொடர்ந்து சென்றார்.

    மம்தா ஸ்டுடியோவுக்குள் சென்று வெளியே வந்ததும் அவரை வழிமறித்து விஸ்வகர்மா வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் அவர் தனது கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மம்தாவை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினார். அங்கிருந்தவர்கள் மம்தாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. 

    ×