search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant woman"

    • பலியானவர்களில் கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர்.
    • குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள்.

    இந்த நிலையில் காசாவின் ரபா நகரில் நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    இதில் 22 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர். உயிரிழந்த கர்ப்பிணியான சப்ரீன் அல்-சகானி 30 வார கால கர்ப்பமாக இருந்தார். அவரது வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர். பின்னர் அந்த பெண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

    குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது. 1.4 கிலோ எடையுள்ள குழந்தை, அவசரகால பிரிவில் பிரசவிக்கப்பட்டு உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. குழந்தை மூன்று முதல் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். சகானியின் மகள் மலக், தனது புதிய சகோதரிக்கு அரபு மொழியில் ரூஹ் என்று பெயரிட விரும்பினாள் என்று அவரது உறவினர் ரமி அல்-ஷேக் தெரிவித்தார்.

    • சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றுள்ளார்.
    • காருக்குள் உடல் அழுகியநிலையில் இரண்டு சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஆண்டோனியோ நகரை சேர்ந்தவர் சவானா நிக்கோல் சோடோ (வயது 18). அதே பகுதியை சேர்ந்த இசைக்கலைஞரான மேத்யூ குரேரா (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிவீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது தனது தாயுடன் சவானா போனில் பேசி வந்துள்ளார்.

    இதனிடையே சவானா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான சவானாவுக்கு இந்த மாத இறுதியில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் தேதி குறித்திருந்தனர்.

    இந்தநிலையில் சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றுள்ளார். அதன்பின்பு இருவரும் வீடு திரும்பவில்லை.

    பதறிபோன அவர்களுடைய பெற்றோர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம் காதல்ஜோடியை வலை வீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சாலையில் கார் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அந்த கார், மாயமான குரேரா பெயரில் பதிவாகி இருந்தது தெரிந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த காரை சோதித்தனர். அப்போது காருக்குள் உடல் அழுகியநிலையில் இரண்டு சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.

    விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் சவானா மற்றும் அவருடைய காதலன் குரேரா என தெரிந்தது. உடல்கள் அழுகியநிலையில் இருந்ததால் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பதை போலீசாரால் உறுதியாக கூற முடியவில்லை.

    உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாயமான இளம் காதல்ஜோடி இறந்தநிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பவித்ரா கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி புகார் கொடுத்தார்.
    • உடல் நலம் பாதிக்கப்பட்ட பவித்ரா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூரை சேர்ந்தவர் மோகன்ராஜ். சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர் தனது வீட்டருகே வசிக்கும் பி.எஸ்சி மயக்கவியல் படித்துள்ள பவித்ரா என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

    இவர்களது காதலுக்கு பவித்ரா வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த மே மாதம் அவரை காஞ்சிபுரம் அழைத்து சென்று மோகன்ராஜ் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் மோகன்ராஜ் தனது சகோதரி சவுமியாவுக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 2 மாதம் முன்பு சொந்த ஊரான வேலகவுண்டனூருக்கு வந்தார். அதன்பின்னர் மனைவி பவித்ராவை அவர் தொடர்பு கொள்ளவில்லை.

    இதையடுத்து கணவரை தேடி 3 மாத கர்ப்பணியான பவித்ரா வேலாக்கவுண்டனூரில் உள்ள மோகன்ராஜின் வீட்டுக்கு வந்தார். அப்போது மோகன்ராஜின் பெற்றோர் முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் சேர்ந்து பவித்ராவை அவரது கணவரை பார்க்க அனுமதிக்காமல் விரட்டி அனுப்பினார்கள்.

    இதையடுத்து தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பவித்ரா கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் ஒரு மாதமாக விசாரித்தும் மோகன்ராஜை கண்டுபிடிக்கவில்லை. மேலும் பவித்ராவை கணவர் வீட்டிற்குள் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் மறைத்து வைத்துள்ள தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி முதல் மோகன்ராஜின் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதனிடையே வீட்டை பூட்டிவிட்டு வெளியேறிய மோகன்ராஜ் குடும்பத்தினர் அவர்களது உறவினர்களை அனுப்பி பவித்ராவை அச்சுறுத்தி கடுமையாக தாக்கினர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பவித்ரா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    சிகிச்சை முடிந்து திரும்பிய அவர் மீண்டும் மோகன்ராஜ் வீட்டு முன்பாக அமர்ந்து தொடர்ந்து 35-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்.

    கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். 

    • மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    உடுமலை,

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அமராவதி மற்றும் உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பாக எரிசினம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மாவடப்பு, காட்டுப்பட்டி, குளிப்பட்டி, குருமலை ஆகிய மலைவாழ் குடியிருப்புகளில் சுகாதார முகாம் நடைபெற்றது.

    டாக்டர்.பூபதி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டு 109 நபர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • கடந்த 23-ந் தேதி முதல் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • தனது கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என போலீசாருக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூரை சேர்ந்தவர் மோகன்ராஜ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரும், வேலகவுண்டனூர் பகுதியை சேர்ந்த பி.எஸ்.சி. மயக்கவியல் படித்துள்ள பவித்ரா என்பவரும் கடந்த 10 ஆண்டாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த மே 5-ந் தேதியன்று பவித்ராவை அழைத்து சென்ற மோகன்ராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் இருவரும் கடந்த 5 மாதமாக சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில் மோகன்ராஜ் தனது சகோதரிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் மனைவி பவித்ராவுடன் எந்த தொடர்பும் இல்லாமல் போனது.

    இதனால் 3 மாத கர்ப்பிணியான பவித்ரா வேலாக்கவுண்டனுாரில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது மோகன்ராஜின் பெற்றோர் முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் அவரை பார்க்கவிடாமல் பவித்ராவை தடுத்து விரட்டியுள்ளனர்.

    இதையடுத்து மறைத்து வைத்துள்ள தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி கடந்த 23-ந் தேதி முதல் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். வெயில், மழை என எதற்கும் அஞ்சாமல் 9-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

    மேலும் தனது கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என போலீசாருக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • கர்ப்பிணி பெண் வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்துகொண்டு அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்து கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அதிகாலை நேரத்தில் அவர் தூங்கிக்கொண்டிருந்தார்.

    அப்போது அவரது வீட்டுக்கு ஷியாம் குமார் (வயது29) என்ற வாலிபர் வந்துள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பின் பிரிவு தலைவரான இவர், கர்ப்பிணி பெண் வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்துகொண்டு அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.

    பின்பு அந்த பெண்ணை கர்ப்பிணி என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு அவரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து அந்த பெண், போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து வாலிபர் ஷியாம் குமார் மீதுபுலிகேசு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரை இன்ஸ்பெக்டர் அஜீப் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    நாகாலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் தும்பா பகுதியில் ஒரு ஒட்டலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிந்த அவரை, மோட்டார் சைக்கிளில் வந்த அனீஷ்(25) என்ற வாலிபர் மானபங்கம் செய்ய முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதையடுத்து அந்த பெண்ணை கீழே தள்ளி தாக்கிவிட்டு வாலிபர் தப்பினார்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்து கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணிடம் நடுரோட்டில் அத்துமீற முயன்ற அனீசை கைது செய்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யோகா பயிற்சியாளரான சுதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
    • நிறைமாத கர்ப்பத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை படைக்க ஆசைப்பட்டேன்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 36). யோகா பயிற்சியாளரான சுதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். யோகா கற்றுக்கொண்ட போதிலும் சிறு வயது முதலே சிலம்பம் மீது பற்றுக்கொண்ட அவர் அதில் சாதனை படைக்க விரும்பினார்.

    தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை 1 மணி நேரம் நிறைமாத கர்ப்பிணியான சுதா இடைவிடாது சிலம்பம் சுற்றி அசத்தினார். இவரது இச்சாதனை நோபல் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.

    இதுகுறித்து சுதா கூறுகையில், 'கடந்த 3 ஆண்டுகளாக சிலம்பம் கற்றுக்கொண்டேன். எனக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி பிரசவத்திற்கான தேதி கொடுத்தனர். நிறைமாத கர்ப்பத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை படைக்க ஆசைப்பட்டேன். இதற்கு பயிற்சியாளர் பரசுராம், கணவர் வல்லபன் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

    இதையடுத்து 1 மணி நேரம் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள்வாள், மான்கொம்பு ஆகியவற்றை சுழற்றினேன். இந்த சாதனை நோபல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது' என்றார்.

    • கிராமப்புறங்களில் தடுப்பூசி போடுவது குறித்து இன்னமும் விழிப்புணர்வு இல்லாமலேயே இருந்து வருகிறது.
    • குழந்தைகளுக்கு போலியோ உள்ளிட்ட நோய்கள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போடுவது அவசியம்.

    நெல்லை:

    கடுமையான நோய்களுக்கு குழந்தைகள் உள்ளாகி விடாமல் இருப்பதற்காக தமிழகத்தில் கால அட்டவணைகளின் படி குழந்தை களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இத்தகைய தடுப்பூசிகள் போடப்படுவதன் காரண மாக அவர்களுக்கு தட்டம்மை, போலியோ உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதை தடுக்க லாம்.

    இதற்காக தமிழக அரசு, பிறந்தது முதல் 5 வயது வரையிலான குழந்தை களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போட்டு வருகிறது. எனினும் கிராமப்புறங்களில் தடுப்பூசி போடுவது குறித்து இன்னமும் விழிப்புணர்வு இல்லாமலேயே இருந்து வருகிறது.

    கிராமப்புற மகளுக்கு தடுப்பூசியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் வாரந்தோறும் புதன்கிழமை சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு பணியில் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனாலும் பணிச்சுமை காரணமாக அந்தந்த பகுதிக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதா? என்ற விவரத்தை செவிலியர்கள் சரியாக கணக்கிடாமல் விட்டு விடு கின்றனர்.

    இதனை ஈடு கட்டும் வகையில் நேற்று முதல் வருகிற 12-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

    அதன்படி நெல்லை மாவட்டத்திலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

    இது குறித்து நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    குழந்தைகளுக்கு போலியோ உள்ளிட்ட நோய்கள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போடுவது அவசியம். வழக்கமாக தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், பல்வேறு காரணங்களால் விடுபட்டவர்களுக்கு தற்போது தமிழக அரசு ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

    மாவட்டத்தில் அதாவது மாநகராட்சி நகர் புறம் மற்றும் கிராமப்புறங்களை சேர்த்து இதுவரை 3,222 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பது கணக்கிடப்பட்டுள்ளது.

    இதே போல் 500 கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடப்படாமல் இருக்கிறது. அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக நாள் ஒன்றுக்கு 200 முதல் 225 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சராசரியாக ஒரு வாரத்தில் 6 நாட்களில் 1200 முகாம்கள் அமைக்கப்பட்டு விடுபட்டவர்கள் அனை வருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனை கிராமப்புற கர்ப்பிணிகள், குழந்தைகள் அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது அந்தந்த பகுதி சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்களின் கடமை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்டவரிடம் போட்டோவை காண்பித்து, அதன்மூலம் கைது நடவடிக்கை
    • கொள்ளையில் ஈடுபட்ட பெண் ஒரு கர்ப்பிணி என, பாதிக்கப்பட்டவர் குறிப்பிடவில்லை என்பதால் சிக்கல் ஏற்பட்டது

    அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள நகரம் டெட்ராய்ட்.

    கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி, இப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் சேர்ந்து தனது காரில் ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கு அப்பெண் பலருடன் பேசினார்.

    பிறகு அப்பெண்ணும் ஆணும் வேறொரு இடத்திற்கும் சென்றுள்ளனர். அந்த இடத்திற்கு அந்த பெண்ணுடன் பெட்ரோல் நிலையத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் வந்தனர். அங்கு அவர்களும், அப்பெண்ணும், அந்த ஆணை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரிடமிருந்த பொருட்களையும், பணத்தையும் கொள்ளையடித்தனர்.

    இதனையடுத்து அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

    இதற்கிடையே அந்த நபரின் செல்போன், அந்த பெட்ரோல் நிலையத்தில் 2 நாட்களுக்கு பிறகு ஒப்படைக்கப்பட்டது.

    இந்த வழக்கை லஷான்ஷியா ஆலிவர் (LaShauntia Oliver) எனும் அதிகாரி விசாரித்தார்.

    பெட்ரோல் நிலையத்தில் செல்போனை ஒப்படைத்தது ஒரு பெண் என கண்டறிந்த ஆலிவர், அந்த பெண்ணை கண்டறிய பாதிக்கப்பட்ட நபரிடம், பல பெண்களின் புகைப்படங்களை காண்பித்தார். அதில் அந்த ஆண் ஒரு பெண்ணை அடையாளம் காட்டினார்.

    இதனையடுத்து பிப்ரவரி 16 அன்று, 2 குழந்தைகளுக்கு தாயான போர்ச்சா வுட்ரஃப் (32 வயது)  என்ற ஒரு கர்ப்பிணியை அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், போர்ச்சா சுமார் ரூ.82 லட்சம் ($1,00,000) ஜாமினில் வெளியே வந்தார்.

    இந்த நடவடிக்கையினால் அவருக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும்படி நேர்ந்தது.

    பிறகு மார்ச் 6-ல் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

    எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட ஆண், தன்னிடம் கொள்ளையடித்த பெண் ஒரு கர்ப்பிணி என குறிப்பிட்டதாக காவல்துறை அறிக்கையில் இல்லை. எனவே தான் தவறாக கைது செய்யப்பட்டதை உணர்த்த இதுவே போதுமானது என்பதால் அந்த புலனாய்வு அதிகாரி மற்றும் காவல்துறை மீது போர்ச்சா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    "இது மிகவும் கவலைக்குரியது" என இது குறித்து டெட்ராய்ட் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

    ஆனால், புலனாய்வு அதிகாரி ஆலிவர், இது பற்றி கருத்து எதுவும் கூறவில்லை.

    வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்வதற்கு பதிலாக அவர் பெயர் கொண்ட ஒரு அப்பாவி பெண்ணை போலீசார் கைது செய்ததும், நீண்ட அலைக்கழிப்பிற்கு பிறகு நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டதும் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • ஆபரேஷன் மூலம் செவ்வந்தியின் கர்ப்பபை அகற்றப்பட்டது.
    • அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர் புறநகர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமோகன். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மனைவி செவ்வந்தி (வயது 25) தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் செவ்வந்தி 2-வதாக கர்ப்பமானார். அவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரை செங்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து செவ்வந்தியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

    அப்போது செவ்வந்திக்கு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டது. இதனையடுத்து அவரது கர்ப்பபையை நீக்க ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர்.

    இதனால் ஆபரேஷன் மூலம் செவ்வந்தியின் கர்ப்பபை அகற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி செவ்வந்தி பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை கண்டித்து இன்று காலை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர் புறநகர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது . போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது செவ்வந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டதும் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம் என தெரிவித்தோம் ஆனால் அவர்கள் ஆபரேஷன் மூலம் சரி செய்து விடலாம் என கூறினர். ஆபரேசனுக்கு பிறகும் செவ்வந்தி பலியாகியுள்ளார்.

    திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் 3-வதாக கர்ப்பிணி ஒருவர் பலியாகி உள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கூறினர்.

    அவர்களிடம் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் திருவண்ணாமலையில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிவகாமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • டோலி கட்டி தூக்கி செல்ல சிவகாமி மறுத்தார்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை. கர்ப்பிணி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மலையில் இருந்து டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் கர்ப்பிணி ஒருவர் மலையில் இருந்து நடந்தே ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை பெற்று ஆபத்திலிருந்து தப்பியுள்ளார்.

    அணைக்கட்டு அருகே உள்ள ஜார்த்தான்கொல்லை ஊராட்சி, முத்தன் குடிசை மலை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது26), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி (22). தம்பதியினருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    சிவகாமி மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உறவினர்கள் சிவகாமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

    போதுமான சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் மூலம் அவரை அழைத்துச் செல்ல முடியாத சூழல் நிலவியது. டோலி கட்டி தூக்கி செல்ல சிவகாமி மறுத்தார்.

    முத்தன்குடிசை கிராமத்தில் இருந்து ஆஸ்பத்திரி செல்ல வேண்டுமென்றால் சுமார் 30 கிலோமீட்டர் உள்ள ஒடுகத்தூர், 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நம்மியம்பட்டு அல்லது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுக்கம்பாறைக்கு தான் செல்ல வேண்டும்.

    என்ன செய்வது என தெரியாமல் திணறிய நேரத்தில், சிவகாமியை முத்தன் குடிசை கிராமத்தில் இருந்து நடைபயணமாக ஆஸ்பத்திரி செல்ல அழைத்து வந்தனர்.

    கர்ப்பிணி பெண் பிரசவ வலியோடு நடந்தார். தெள்ளை மலை கிராமம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே கணியம்பாடி அடுத்த துத்திக்காட்டிற்கு வந்தார்.

    பின்னர் அங்கிருந்து சிவகாமியை அவரது உறவினர்கள், ஆட்டோ மூலம் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதிர்ஷ்டவசமாக தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

    சாலை வசதி மட்டும் இருந்திருந்தால் இது போன்ற ஆபத்தான சூழல் உருவாகி இருக்காது.

    எங்களது நீண்ட கால சிரமத்தை போக்கும் வகையில் சாலை வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
     
    சேலம்:

    சேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்தவர் பாபு என்ற டாக் பாபு. இவரது மனைவி சங்கீதா (வயது 30). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் வெண்பா என்ற பெண் குழந்தை உள்ளது.

    மேலும் சங்கீதா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் பாபு மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமலூர் போலீசார் செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

    இதற்கிடையே சங்கீதாவின் தந்தை மாதையனையும் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு என அழைத்துச் சென்றுள்ளனர் .ஆனால் அவர் குறித்து விசாரித்தபோது அவர் தற்போது எங்கு உள்ளார் என்ற விவரத்தை போலீசார் கூற மறுத்துவிட்டனர்.

    இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சங்கீதா தனது குழந்தையுடன் சேலம் கலெக்டர்  அலுவலகத்திற்கு வந்தார். 

     திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.   அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு போலீஸ் நிலையத்தை வைத்து விசாரணைநடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

    ×