மதம் மாறி திருமணம்...கர்ப்பிணி தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன்!

ஒரு வருடத்திற்கு முன்பு தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்காகவே, கர்நாடக அரசு அண்மையில் "ஈவா நம்மவ ஈவா நம்மவ" என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது
மதம் மாறி திருமணம்...கர்ப்பிணி தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன்!
Published on

கர்நாடக மாநிலத்தில் மதம் மற்றும் சாதி மாறித் திருமணம் செய்துகொண்டதற்காக, நான்கு மாதக் கர்ப்பிணித் தங்கையை அவரது அண்ணன் கோடாரியால் வெட்டிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான மீனாட்சி. இவர் ஒரு வருடத்திற்கு முன்பு தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் பெங்களூருவில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கணவருடன் புதன்கிழமையன்று (பிப்.18) மீனாட்சி, கொப்பல் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றிற்கு வந்துள்ளார். இதையறிந்த அவரது அண்ணன் மஞ்சுநாத்(35) விழா நடக்கும் இடத்திற்கு வந்து மீனாட்சியை கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

நிகழ்வில் இருந்த விருந்தினர்கள் தலையிட்டு அந்தப் பெண்ணை மீட்டனர். இதனால் மேலும் காயங்கள் தவிர்க்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மீனாட்சியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து புகாரின் அடிப்படையில் அலவண்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியான மஞ்சுநாத்தை கைது செய்துள்ளனர்.

இது போன்ற கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்காகவே, கர்நாடக அரசு அண்மையில் "ஈவா நம்மவ ஈவா நம்மவ" என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com