search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "religion"

    • பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை.
    • யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது ராகுல் காந்தி அசாமில் நடைபயணம் மேற்கொண்டார்.

    அசாமை தொடர்ந்து ராகுல் காந்தி தனது யாத்திரையை அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மதம் மற்றும் மொழியின் பெயரால் பாஜக தங்களுக்குள் சண்டையிட மக்களைத் தூண்டுகிறது. நாட்டை பிரிக்கிறது. பாஜக ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறதே தவிர, மிகவும் கஷ்டப்படும் மக்களின் நலனுக்காக அல்ல.

    மறுபுறம், காங்கிரஸ் மக்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுகிறது. ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கி மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிவடையும் 6,713 கிமீ நீளமுள்ள யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

    நாங்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை வழங்கினோம். ஏழைகளின் பிரச்சினைகளை எழுப்பவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகவும் எங்கள் கட்சி எப்போதும் தயாராக உள்ளது.

    பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை. அவர்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் எழுப்பவில்லை. யாத்திரையின் போது, காலை முதல் மாலை வரை பல மணிநேரம் பயணித்து, மக்களின் வலி மற்றும் துன்பங்களை கேட்கும் இடங்களில் நின்றுகொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மதுரையில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட குழு உறுப்பினர் ஷாஜகான் நன்றி கூறினார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி இஸ்மாயில்புரம் 12-வது தெரு வள்ளியம்மை அரங்கத்தில் நடந்தது.

    மாவட்ட குழு உறுப்பினர் சாம்பசிவம் தலைமை தாஙகினார்.மாவட்டத் துணைத் தலைவர் எகியா, மாவட்ட குழு உறுப்பினர் மாயழகு முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் வரவேற்றார்.

    மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாவட்ட தலைவர் அலா வுதீன், அருட்தந்தையர்கள மரியநாதன், லாரன்ஸ், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கணேசன், தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, கவுன்சிலர்கள் செய்யது அபுதாஹிர், தமிழ்ச்செல்வி காளிமுத்து, குமரவேல்.

    மாவட்ட செயலாளர் கணேச ஒமூர்த்தி, பொரு ளாளர் ஜான்சன், துணை செயலாளர் போனிபேஸ், தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் உஸ்மான் அலி, முஸ்லிம் ஜமாத் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சேக் அப்துல்காதர், செயலாளர் முகமது முஸ்தபா, துணைச் செயலாளர் காஜா மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட செயலாளர் இக்பால் பாட்சா, ஆகியோர் பேசினர்.

    மாவட்ட குழு உறுப்பினர்கள் சாந்தாரா, அப்துல் அஜீஸ், பிரபாகரன், அப்துல் குத்தூஸ், கிளை செயலாளர் புலி சேகர், துணை செயலாளர் அமிர்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் ஷாஜகான் நன்றி கூறினார்.

    • இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆலயப் பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
    • வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முழுமையான வெற்றியைப் பெறும்.

    உடன்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சாதனை விளக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பரமன்குறிச்சி பஜாரில் நடந்தது.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலர் இளங்கோ தலைமை தாங்கினார்.

    தி.மு.க.வை சேர்ந்த மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெசிபொன்ராணி, முன்னாள் எம்.ஏல். ஏ. டேவிட்செல்வின், ஒன்றிய அவைத் தலைவர் ஷேக் முகம்மது, உடன்குடி நகர செயலர் மால்ராஜேஷ், உடன்குடி பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    இந்தியாவின் மற்ற மாநிலங்களில்மதவாத அரசியலில் ஈடுபட்டது போல் தமிழகத்திலும் பா.ஜ.க.முயற்சி செய்கிறது.தமிழகத்தில் அக்கட்சியின் மதவாதம் வெற்றிபெறாது. தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம், திருப்பணிகள், தேரோட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.கோவில் பூசாரிகள், பணியாளர்கள் என அனைவருக்கும் பல்வேறு சலுகைகள், ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் அறநிலைய துறை சார்பில் மாதந்தோறும் திருவிளக்கு பூஜை நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.முதல்-அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் சீரிய நடவடிக்கைகளால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆலயப் பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இதனால் மதவாத அரசியலில் ஈடுபட நினைத்த பா.ஜ.க.வின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முழுமையான வெற்றியைப் பெறும்.மக்கள் விரோத நடவடிக்கைகளை செயல்படுத்தும் பா.ஜ.க அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் சரத்பாலா, செந்தூர் பாலகிருஷ்ணன், ஒன்றிய துணைசெயலர்கள் மகராஜன், இந்திரா, வழக்கறிஞர் சாத்ராக், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ராமஜெயம், அலாவுதீன், கிருஷ்ணகுமார், ஒன்றிய பொருளாளர் பாலகணேசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ், பரமன்குறிச்சி கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பூங்குமார், புரோஸ்கான், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராமலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாகமாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ் வரவேற்றார். வட்டன்விளை கிளை செயலர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    எந்த மதத்தையும் புண்படுத்தி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன அவசியம்? என்று அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கரூர்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலார் டி.டி.வி. தினகரன் அரவக்குறிச்சி புங்கம்பாடி பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு எல்லா தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என பயம் வந்து விட்டது. துரோகம் என்றைக்கும் வென்றதாக வரலாறு கிடையாது. 18 தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என்ற பயத்தில் எனது ஆதரவாளர்களான 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பியுள்ளனர். அதற்கு நீதிமன்றம் தடைவிதித்து விட்டது.

    நடிகர் கமலஹாசன் தேவையில்லாமல் சினிமா வசனம் போல இங்கு பேசியுள்ளார். ஒரு பரபரப்பை உண்டாக்குவதற்காக அவர் பேசியிருக்கிறார். கமல் விஸ்வரூபம் என்ற ஒரு படம் எடுத்தார். பின்னர் அந்த படம் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து நாட்டை விட்டே போய் விடுவேன் என கமலஹாசன் தெரிவித்தார்.

    இஸ்லாமியர்களுக்கு எதிராக படம் எடுத்ததாக சந்தேகம் வந்ததால், அந்த படத்தை விளக்க வேண்டியது படத் தயாரிப்பாளர்களின் கடமை. நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அதனை சரி செய்ய ஜெயலலிதா கூறினார். இதனால் ஜெயலலிதா மீது அவருக்கு கோபம்.

    எந்த மதத்தையும் புண்படுத்தி பேச வேண்டிய அவசியம் என்ன? இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மதம் பற்றி எதுக்கு பேசவேண்டும். யாரோ ஒருத்தர் கொலைகாரர் என்றால் அதற்காக மதத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றதை யாருமே எற்றுக் கொள்ளமாட்டோம். அவர் என்ன மதம் என்று பார்த்துக் கொண்டிருப்போமா?

    இந்திராகாந்தியை ஒரு சீக்கியர் கொன்றார். ஆனால் மன்மோகன்சிங்கை பிரதமராக்கினார் சோனியாகாந்தி. கோட்சே எந்த மதம் என்றே நமக்கு தெரியவில்லை. அந்த பெயர் ரஷ்யன் பெயர் போல உள்ளது. அந்த கோட்சேவை இந்து பயங்கரவாதி என பேசியிருக்கிறார். இது தேவையா? காந்தியடிகளை கோட்சே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதில் மதம் எங்கிருந்து வந்தது.

    தமிழக அரசு சினிமாவை போல ஏதோ செய்துவிடும் என அவரே (கமலஹாசன்) பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்றார். கமலஹாசனின் நாக்கை வெட்டுவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார். இது தவறில்லையா?

    துரோகத்தை பற்றி நான் பேசினால் வழக்கு போடுவோம் என்கின்றனர். நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் பார்த்துக்கொள்ளலாம். வருகிற 23-ந்தேதிக்கு பின்னர் நீங்கள் வழக்குபோட இருக்கிறீர்களா? என்று பார்ப்போம். உங்கள் மீதும் வழக்குவராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    நம்மகூட இருந்து ஓடிப் போன செந்தில் பாலாஜி என்னை அரவக்குறிச்சிக்கு அழைத்து வந்து மக்களுக்காக உண்ணாவிரம் இருக்க வைத்தார். இப்போது பா.ஜ.க.வின் சி. டீம் என அவர் பேசுகிறார். அவருக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தினை புகட்ட வேண்டும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு பா.ஜ.க., சந்திரசேகரராவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுடன் தி.மு.க. பேசிய உண்மையை தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இலங்கையில் நடைபெற்ற கொடூரத் தாக்குதல்களை எந்த மதமும் போதிக்கவில்லை என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #vaiko #srilankablasts

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இலங்கையில் நடைபெற்ற கொடூரத் தாக்குதல்கள், மனித நேயம் மனம் கொண்டோரைப் பதைபதைக்கச் செய்து இருக்கின்றது.

    359 பேர்களைப் பலி வாங்கி இருக்கின்ற இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்று இருக்கின்ற ஐ.எஸ் அமைப்பு, நியூசிலாந்து நாட்டில் மசூதி மீது நடைபெற்ற தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றது.

    யாரோ ஒரு இனவெறியன் செய்த தவறுக்காக, எந்தக் குற்றமும் செய்யாத பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது உற்றார், உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் நெஞ்சைப் பிளக்கின்றன.

    நியூசிலாந்து தாக்குதலை யாரும் ஆதரிக்கவில்லை. உலகமே கண்டித்து இருக்கின்றது. பழிக்குப் பழி என்ற கருத்தை எந்த மதமும் போதிக்கவில்லை. அனைத்து மதங்களும், அன்பையும், அறத்தையுமே வலியுறுத்துகின்றன.


    உலக அரங்கில் மாறி வருகின்ற அரசியல் சூழ் நிலைகள் கவலை அளிக்கின்றன. மனித உரிமைகளை வலியுறுத்துகின்ற ஐரோப்பாவின் பல நாடுகளில், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில், வெள்ளை இனவெறியை வளர்க்கும் வலதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்து இருக்கின்றன. அங்கேயும் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகி இருக்கின்றன.

    ஐ.எஸ். போன்ற வன்முறை இயக்கங்கள், இந்தியாவிலும் தாக்குதல் நடத்துகின்ற சூழல் உருவாகி இருக்கின்றது.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய பெருந் தகைகளின் வழிகாட்டுதலில், திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட தமிழகத்திலும், சாதி மத வெறிப் பேச்சுகள் பெருகி வருகின்றன. சமூக வலைதளங்களிலும் இத்தகைய கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது.

    சாதி, மத மோதல்களால் பாதிக்கப்படுவோர் அப்பாவிப் பொதுமக்கள்தான். வேற்றுமைகளை மறந்து, எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை என்ற உணர்வோடு, மனித நேயம் வளர்ப்போம்.

    இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.  #vaiko #srilankablasts

    மதம் மாற மனைவி வற்புறுத்தியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    மதுரை:

    திருமங்கலம் அருகில் உள்ள தங்கலச்சேரியை சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது 29). இவருக்கு கர்நாடகாவை சேர்ந்த முறுக்கு வியாபாரி புதுராஜா மகள் ஜெயாவுடன் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் ஜெயா நீங்கள் உடனடியாக மதம் மாற வேண்டும் என்று கணவரிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனாலும் ஜெயபாண்டி மறுத்து விட்டார். இதையடுத்து ஜெயா நகை, பணத்தை எடுத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெய பாண்டி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஒத்தக்கடை அருகில் உள்ள யானைமலை குவாரியை சேர்ந்தவர் மூர்த்தி (35). இவரது மனைவி மகேஸ்வரி (31). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே மகேஸ்வரி ஒத்தக்கடை போலீசில் மூர்த்தி மீது புகார் கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசில் ஆஜரான மூர்த்தி மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்து வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த மூர்த்தி வி‌ஷம் குடித்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகள் மதத்தை பயன்படுத்துவதை தடுக்க உத்தர விடகோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #SupremCourt #Religion
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு வக்கீலும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான அஸ்வினி உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காக மதத்தை தவறாக பயன்படுத்துகின்றன. இதேபோல் வேட்பாளர்களும் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் மதசார்பின்மை, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதிக்கப்படுகிறது. மேலும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாக நடைபெறுவதையும் இது பாதிக்கிறது.

    இது தொடர்பான திருத்த மசோதா கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 1996-ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்த மசோதா காலாவதியாகி விட்டது. ஆனால் அதன்பிறகு அந்த மசோதாவை கொண்டு வர தேர்தல் கமிஷன் யோசனை தெரிவித்த போதிலும், அரசாங்கத்தின் தரப்பில் அதுதொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

    எனவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், வேட்பாளர்களும் மதத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.  #SupremCourt #Religion #Tamilnews
    ×