அரசியல்வாதிகள் மதத்தில் தலையிடக்கூடாது - சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி

நாங்கள் துறவிகள், அரசியல் விவகாரங்களை நாங்கள் பேசக்கூடாது.மதத்தில் தலையிடுவதை அரசியல்வாதிகள் நிறுத்தினால், அரசியலில் தலையிடுவதை நானும் நிறுத்துவேன்
அரசியல்வாதிகள் மதத்தில் தலையிடக்கூடாது - சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி
Published on

கேதார்நாத் கோவிலில் 228 கிலோ தங்கம் காணாமல் போனதாக உத்தராகண்டில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சிவபுராணத்தில் 12 ஜோதிர்லிங்க தலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. அதில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன. இமயமலையில் கேதார்நாத் கோவில் இருக்கும் போது டெல்லியில் எப்படி கேதார்நாத் கோவிலை கட்டமுடியும். இதற்கு பின்னர் அரசியல் காரணங்கள் உள்ளது. அரசியல்வாதிகள் நமது மத வழிபாட்டு தலங்களுக்கும் நுழைய பார்க்கிறார்கள்.

கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களில் தங்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. இதில் 228 கிலோ தங்கத் தகடு காணாமல் போனதாக எழுந்துள்ள புகார் குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இப்போது டெல்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்ட திட்டம் போடுகிறார்கள். இன்னொரு மோசடி நடக்கவிடாமல், நாம் இவர்களை தடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத விவகாரங்களில் அரசியல் தலைவர்கள் தலையிடுவது குறித்து பேசிய அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, "நாங்கள் துறவிகள், அரசியல் விவகாரங்களை நாங்கள் பேசக்கூடாது என்பது முற்றிலும் சரியானது. ஆனால் அதே சமயம் அரசியல்வாதிகள் கூட மதத்தில் தலையிடக்கூடாது. அரசியல்வாதிகளே, மதத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள். மதத்தில் தலையிடுவதை நீங்கள் நிறுத்தினால், அரசியலில் தலையிடுவதை நானும் நிறுத்துவேன்" என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com