என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி"
- டெல்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
- உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன
தேசிய தலைநகர் முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நோடல் அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் (DoE) அறிவுறுத்தியுள்ளது.
பயிற்சியைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சமர்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விலங்கு நல ஆர்வலர்கள், மற்றும் விலங்குகள் நலன் துறையைச் சார்ந்தவர்களுக்கு இந்தப் பணியை ஒதுக்காமல் தங்களுக்கு ஒதுக்குவது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கல்வி சாராத பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்துவது மாணவர்களின் கல்வியை பாதித்து, ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் தெருநாய் கணக்கெடுப்புக்கு ஆசிரியர்களை நியமிக்கும் இதே போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நாய் கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆனந்த் விகார் பகுதியில் 457க்கு மேல் தாண்டி அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
- டெல்லியில் இன்று காலை மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது.
தலைநகர் டெல்லியில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் 'அபாயகரமான' (Hazardous) நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று மாசு, தற்போது கடும் பனிமூட்டம் மற்றும் குறைவான காற்று வேகம் காரணமாக மீண்டும் அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நச்சுப்புகை அதிகரித்த நிலையில் காற்றின் தரக்குறியீடு (AQ) 459 என்ற மிக மோசமான அளவு பதிவானது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
டெல்லியிலிருந்து சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் ரத்தானதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
மேலும், டெல்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கான ரெயில் சேவை கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
- மாசுபாட்டை அதிகரிப்பதற்கு நாம் ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம்.
- டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன
டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தாலே தனக்கு நோய்தொற்று ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் உதய் மஹூர்கரின் 'My Idea of Nation First: Redefining Unalloyed Nationalism' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நிதின் கட்கரி, "என்னால் இரண்டு நாட்கள்கூட டெல்லியில் தங்கமுடிவதில்லை. உடனே நோய்தொற்று ஏற்படுகிறது. டெல்லியில் ஏன் எல்லா இடங்களிலும் இவ்வளவு மாசுபாடு உள்ளது? நான் போக்குவரத்து துறை அமைச்சர். இந்த மாசுபாட்டிற்கு 40% காரணம் நாங்கள்தான். பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களே காரணம்.
புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும், மாசுபாட்டை அதிகரிப்பதற்கும் நாம் ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம். இது என்ன தேசியவாதம்? நம்மால் ஒரு மாற்று இந்தியாவை உருவாக்க முடியாதா? மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளைக் கொண்டு ஒரு ஆத்மநிர்பர் பாரதத்தை (சுயசார்பு இந்தியா) உருவாக்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பாஜக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் நிதின் கட்கரியின் இந்த கருத்து கவனம்பெற்றுள்ளது. நிதின் கட்கரியின் இந்த கருத்துதொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி, இம்ரான் மசூத்,
"கட்கரிக்கு குறைந்தபட்சம் காற்று மாசு அதிகரிப்பை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தது. நீங்கள் எல்லா தீர்வுகளையும் வழங்கும்போது, தயவுசெய்து இதற்கும் ஒரு தீர்வை பரிந்துரையுங்கள். மாசுபாட்டிற்கு வாகனங்கள் மட்டுமே காரணம் என்று நான் நினைக்கவில்லை. டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன" என தெரிவித்துள்ளார்.
- ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
- இந்தி கற்கவில்லை என்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என பாஜக கவுன்சிலர் மிரட்டினார்.
டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில், உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அவர் அதற்கு பதிலளிக்காததால், நான் சொல்வதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை? ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார். மேலும் மற்றொருவரிடம் (பூங்கா காவலாளியா என்பது சரியாக தெரியவில்லை) நான் உங்களுக்குச் சொல்கிறேன், பூங்கா இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். இல்லையெனில் ஏதேனும் குற்றச் செயல் நடந்தால், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்,.
இந்த வீடியோ வைரலாக ரேணு சவுத்ரிக்கு பெரும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து வீடியோ தொடர்பாக விளக்கமளித்த அவர், பூங்காவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் தொடர்பாக தனக்குப் பலமுறை புகார் வந்தது. அதனால்தான் தான் பூங்காவிற்கு வருகை தந்தேன். ஆனால், யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இல்லை. தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, பாஜக மேலிடத்தின் வற்புறுத்தலின் பேரில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார்.
- இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்
- தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்
டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில், உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அவர் அதற்கு பதிலளிக்காததால், நான் சொல்வதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை? ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார். மேலும் மற்றொருவரிடம் (பூங்கா காவலாளியா என்பது சரியாக தெரியவில்லை) நான் உங்களுக்குச் சொல்கிறேன், பூங்கா இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். இல்லையெனில் ஏதேனும் குற்றச் செயல் நடந்தால், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்,.
இந்த வீடியோ வைரலாக ரேணு சவுத்ரிக்கு பெரும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து வீடியோ தொடர்பாக விளக்கமளித்த அவர், பூங்காவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் தொடர்பாக தனக்குப் பலமுறை புகார் வந்தது. அதனால்தான் தான் பூங்காவிற்கு வருகை தந்தேன். ஆனால், யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இல்லை. தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்" என தெரிவித்துள்ளார்.
- சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக, 370-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தனர்.
- 215 குடும்பங்கள் மட்டுமே மாற்று இடத்திற்கு தகுதியானவர்கள் என அரசு அறிவித்தது.
டெல்லியில் தமிழர்கள் குடும்பங்களாய் வாழ்ந்து வந்த மதராஸி கேம்ப் இடிப்பு சம்பவத்தை தமிழ் மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் இருந்து குடிபெயர்ந்த 350 தமிழ் குடும்பங்கள் நடுத்தெருவில் தள்ளப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்தது.
ஆம்.. மதராஸி கேம்ப் இடிப்பு என்பது அங்கு பல தசாப்தங்களாக வசித்து வந்த தமிழ் வம்சாவளி மக்களின் வாழ்வாதாரத்தைப் கடுமையாக பாதித்தது.
தெற்கு டெல்லியின் ஜாங்புரா (Jangpura) பகுதியில், 'பாரபுல்லா' வடிகால் அருகே இந்த மதராஸி கேம்ப் அமைந்திருந்தது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக, 370-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தனர். இவர்கள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்பவர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் அப்பகுதியில் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம், பாரபுல்லா வடிகால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த குடியிருப்புகள் வடிகால் பாதையை அடைப்பதாகவும், இதனால் பருவமழைக் காலங்களில் அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் காரணம் கூறப்பட்டது.
மழைநீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக, வடிகால் ஓரங்களில் உள்ள கட்டுமானங்களை அகற்ற வேண்டியது அவசியம் என பொதுப்பணித்துறை (PWD) வாதிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, கடந்த ஜூன் 1ம் தேதி அன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிப்புப் பணி தொடங்கியது.
50-60 ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வந்த மக்கள், தங்கள் உடமைகளைச் சேகரிக்கக் கூட போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், எதையும் கண்டுக்கொள்ளாமல், வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

இதைதொடர்ந்து, இடிக்கப்பட்ட 370 குடும்பங்களில், 215 குடும்பங்கள் மட்டுமே மாற்று இடத்திற்கு தகுதியானவர்கள் என அரசு அறிவித்தது. அவர்களுக்கு டெல்லியின் ஓரத்தில் உள்ள நரேலா (Narela) பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.
மதராஸி கேம்பிலிருந்து நரேலா சுமார் 40 - 50 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால் மக்களின் வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி ஆகியவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.
ஒதுக்கப்பட்ட வீடுகளில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்றும், அந்த வீடுகள் வசிக்கத் தகுதியற்ற நிலையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹8,000 நிதியுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க உத்தரவிட்டார்.

டெல்லியில் உள்ள தமிழக அரசின் பிரதிநிதிகள் மற்றும் டெல்லி தமிழ் சங்கத்தினர் மூலம் இந்த உதவிகள் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்தன. அங்குள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, டெல்லி மாநகராட்சிப் பள்ளிகளில் தடையின்றி சேர்க்கை பெறவும் தமிழக அரசு வலியுறுத்தியது.
இதற்கிடையே, செப்டம்பர் 2024 முதல் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மாற்று இடங்களை வழங்காதது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், 370 குடும்பங்களில் 215 குடும்பங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியம் கூறியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், விடுபட்ட தகுதியான குடும்பங்களையும் மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரும்பாலான குடும்பங்கள் நரேலாவிற்கு மாற்றப்பட்டாலும், தகுதியற்றவர்கள் என நிராகரிக்கப்பட்ட பல குடும்பங்கள் இப்போதும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
- இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- தங்கள் ஊழியரின் இத்தகைய நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானி ஒருவர் பயணியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் அங்கித் திவான் என்பவர், ஸைப்ஸ் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு, தனது 7 வயது மகள், 4 மாத கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஊழியர்கள் என்ட்ரி வழியாக வரிசையில் புகுந்து முன்னால் செல்ல முயன்ற ஏர் இந்தியா விமானி வீரேந்தர் என்பவரை அங்கித் திவான் கடிந்துகொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த விமானி வீரேந்தர், இது ஊழியர்கள் என்ட்ரி என்றும், திவானை படிப்பறிவு இல்லையா என்று திட்டியுள்ளார். அதோடு அவரை தாக்கியும் உள்ளார்.
இந்தத் தாக்குதலில் அங்கித் திவானின் முகத்தில் ரத்தம் வழிந்தது.முகம் முழுவதும் ரத்தக் கறையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை அங்கித் திவான் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டாம் என அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் ஊழியரின் இத்தகைய நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
- "இன்னும் எவ்வளவு நாள் ஆம் ஆத்மியையே குறைக்கூறி கொண்டு இருப்பீர்கள்?
- டெல்லி ஒரு gas chamber-ஆக மாறி உள்ளது
டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வரும்நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் நிலைமை சீரடையும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஒரு gas chamber-ஆக மாறியிருக்கும்போது பிரதமர் மௌளம் காத்து வருவதாக குற்றம் சாட்டினார். மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜக இந்த விவகாரத்தில் போதுமான அக்கறை காட்டவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் மாசுபாடு குறித்த பொது விவாதத்திற்கு தானும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் தயாராக இருப்பதாகவும், பாஜக தனது அமைச்சர்களை அனுப்பவேண்டும் எனவும் சவால் விடுத்தார்.
"இன்னும் எவ்வளவு நாள் ஆம் ஆத்மியையே குறைக்கூறி கொண்டு இருப்பீர்கள்?" என்று கேட்ட அவர், ஆம் ஆத்மி அரசின் கீழ் பஞ்சாபில் பராலி எரிப்பு 90 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் ஆம் ஆத்மி ஆட்சியின் போது டெல்லி இவ்வளவு கடுமையான மாசுபாட்டைக் கண்டதில்லை என்றும், தனது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பாஜகவின் கவனம் AQI புள்ளிவிவரங்களை நிர்வகிப்பதில்தான் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் காற்று மாசு தொடர்பாக பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால்,
'ஓமனில் பிரதமர், ஜெர்மனியில் எதிர்க்கட்சித் தலைவர், மாசில் தேசத்தின் தலைநகர்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
- டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக இன்று முதல் BS-6 தரமற்ற இயந்திர வாகனங்கள் வியாழக்கிழமை முதல் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, மாசு கட்டுப்பாட்டு (PUC) சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் நிரப்ப கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வந்தது.
இந்த முடிவு டெல்லியின் எல்லை நகரங்களான குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் மற்றும் நொய்டாவிலிருந்து தினமும் பயணிக்கும் சுமார் 12 லட்சம் வாகனங்களை நேரடியாகப் பாதிக்கும்.
இந்த விதிகளை கண்டிப்பாக செயல்படுத்த 126 சோதனைச் சாவடிகளில் 580 காவல்துறையினரையும் 37 அமலாக்கக் குழுக்களையும் அரசாங்கம் நியமித்துள்ளது.
பெட்ரோல் பம்புகளில் PUC விதியைக் கண்காணிக்க போக்குவரத்து, நகராட்சி மற்றும் உணவுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குளிர்காலத்தில் டெல்லியின் மாசுபாட்டிற்கு வாகனங்கள் 25 சதவீதம் வரை பங்களிப்பதாக ஆய்வுகள் காட்டியுள்ளதை அடுத்து, அரசாங்கம் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது.
இதற்கிடையே டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 சதவீத அலுவலகத்தில் ஊழியர்களுடன் பணிபுரிய நிறுவனங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
டெல்லி காற்று மாசு பிரச்சினை குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெறும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளிப்பார்.
- டெல்லியில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
- இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, சாலைகளில் தெளிவாகத் தெரியாத நிலை உள்ளது. மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அங்கு ஒரு கிரிக்கெட் போட்டியும் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பந்து வீச்சாளர் முகம் கூட சரியாக தெரியாத நிலையில் பந்தை வீச அதை பேட்டர் விளாசுகிறார். அதில் கீப்பர் மற்றும் பேட்டர் மட்டுமே தெளிவாக தெரிகிறார்கள். மற்றபடி மறுமுனையில் உள்ள பேட்டர் , பந்து வீச்சாளர், நடுவர் ஆகியோர் ஓர் அளவு தெரிந்த நிலையில் சுற்றி யார் எங்கே உள்ளார்கள் என்பதே தெரியவில்லை.
இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் காதலுக்கு கண்ணில்லை என்றால் பரவாயில்லை கிரிக்கெட் விளையாட கண் வேண்டுமே. அதில் பந்து வருவது கூட சரியாக தெரியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இவர்கள்தான் உண்மையான கிரிக்கெட் லவ்வர்ஸ் எனவும் மற்றும் சிலர் என்னதான் பனி மூட்டத்தில் கிரிக்கெட்டில் விளையாடினாலும் பாதுகாப்பு முக்கியம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
- விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 131 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட மாநிலங்களில் பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுவதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று 19 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் நாடு முழுவதும் நிலவிய மோசமான வானிலை காரணமாக இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்களில் சேவை ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து புறப்படும் 4 விமான சேவை, 7 வருகை விமான சேவை ரத்து செய்யப்பட்டன.
கொல்கத்தா, ஜெய்ப்பூர், காசியாபாத் நகரங்களுக்கான புறப்பாடு, வருகை விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- வட மாநில நகரங்கள் காற்று மாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- தேசிய பாதுகாப்பு வரம்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, 2025 ஆம் ஆண்டிலும் இந்தியாவில் காற்று மாசு ஒரு பெரிய சவாலாகவே இருந்துள்ளது. குறிப்பாக, PM 2.5 போன்ற நுண் மாசுத் துகள்களின் அளவு உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல் அளவை விடப் பல மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதில் இந்தியாவில் குறிப்பாக வட மாநில நகரங்கள் காற்று மாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மிகவும் மாசுபட்ட நகரங்கள்:
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அசாம்-மேகாலயா எல்லையில் உள்ள பைர்னிஹாட் இந்தியாவில் மிக அதிக காற்று மாசுபாடு அளவைப் பதிவு செய்து, மிகவும் மாசுபட்ட நகரமாக முதலிடத்தில் இருந்தது. இதன் சராசரி PM 2.5 செறிவு தேசிய பாதுகாப்பு வரம்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.
டெல்லி: இந்தியாவின் தலைநகரான டெல்லி தொடர்ந்து மிக மோசமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. குறிப்பாகக் குளிர்கால மாதங்களில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) இங்கு காற்றின் தரக் குறியீடு (AQI) 400 புள்ளிகளைத் தாண்டி 'அபாயகரமான' (Severe) நிலையை எட்டியது.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது காற்று மாசுக்கு முக்கிய காரணமாக அமைகிறது
பிற முக்கிய நகரங்கள்: கிரேட்டர் நொய்டா, குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் போன்ற தேசிய தலைநகரப் பகுதிகள் (NCR) மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும் அதிக மாசுபாடு கொண்ட பட்டியலில் இடம்பிடித்தன.
ஆண்டு முழுவதும் நீடிக்கும் பிரச்சினை: காற்று மாசுபாடு என்பது குளிர்காலப் பிரச்சினை மட்டுமல்ல; பருவமழை மற்றும் கோடை காலங்களிலும் பல மாவட்டங்களில் (சுமார் 60% மாவட்டங்கள்) PM 2.5 அளவு தேசிய சுற்றுப்புற காற்று தரத் தரங்களை (NAAQS) மீறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்கள்
தொழில்துறை மற்றும் கட்டுமானம்: பைர்னிஹாட் போன்ற நகரங்களில் தொழில்துறை அலகுகளின் அதிக செறிவு மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் தீவிரமான கட்டுமான நடவடிக்கைகள் பிரதான காரணங்களாக உள்ளன.
வாகன உமிழ்வுகள்: வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, குறிப்பாக டெல்லியில், காற்று மாசுபாட்டைத் தொடர்ந்து அதிகரிக்கிறது.
விவசாயக் கழிவுகளை எரித்தல்: குளிர்காலங்களில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது (சாகுபடி கழிவுகள் எரித்தல்) டெல்லி மற்றும் வட இந்திய நகரங்களில் காற்று மாசு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.
புவியியல் மற்றும் காலநிலை காரணிகள்: குளிர்காலத்தில் காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை குறைவது, மாசுபடுத்திகள் நிலப்பரப்பிற்கு அருகில் சிக்கி மேகமூட்டத்தை உருவாக்குகிறது.

காற்று மாசுக்கு மற்றொரு முக்கிய காரணம் தொழிற்சாலைகள்
சுகாதார விளைவுகள்: காற்று மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகள் மற்றும் முன்கூட்டிய உயிரிழப்புகள் ஆகியவை குறிப்பிடத்தக்க தாக்கங்களாக உள்ளன.
பொருளாதார இழப்பு: காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுகாதாரச் செலவுகள் மற்றும் மனித உழைப்பு இழப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் (GDP) பாதிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள்
இந்திய அரசு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது:
தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (NCAP): இந்தத் திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டுக்குள் PM 2.5 மற்றும் PM 10 அளவுகளில் 40% குறைப்பைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 131 நகரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காற்றின் தர மேலாண்மை ஆணையம்: தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் (NCR) மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது.
கட்ட நடவடிக்கை திட்டம் (GRAP): டெல்லி போன்ற நகரங்களில் காற்றுத் தரம் மிகவும் மோசமடையும் போது, கட்டுமானம், வாகனங்கள் மற்றும் தொழில்துறை செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்ட நடவடிக்கைத் திட்டங்கள் (Phase III & IV) செயல்படுத்தப்படுகின்றன.
2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியா மாசுபாடு சவாலைத் தீர்ப்பதில் கணிசமான முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளது.






