என் மலர்
நீங்கள் தேடியது "slum dwellers"
- வங்கதேசத்தவரைக் கண்டறியும் இயந்திரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என்று போலீசார் கூறினர்.
- அவர்கள் கையில் போனை வைத்துக்கொண்டு என் மைத்துனரின் முதுகில் தேய்த்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் அம்மாநில போலீசார் சிலர் அதிரடியாக நுழைந்து அங்கு யாராவது வங்கதேசத்தவர் சட்டவிரோதமாக வசிக்கிறீர்களா? என சோதனையிட்டனர்.
இதன்போது ஒரு போலீஸ், அங்கு வசிக்கும் ஒருவரின் முதுகை தனது செல்போனில் ஸ்கேன் செய்து போல தேய்த்து நீ வங்கதேசத்தை சேர்த்தவன் என இதில் காட்டுகிறது என கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவில், போலீஸ்காரர், அந்த நபரின் முதுகில் மொபைல் போனை வைத்து, சூப்பர் மார்க்கெட் பார்கோடு ஸ்கேனர் போல தேய்க்கிறார். அந்த நபர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விலாசம் இதன் மூலம் தெரிந்துவிடும் என்று அவர் கூறுவது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்த பாதிக்கப்பட்ட நபரின் உறவினர் ரோஷ்னி இன்று, செய்தியாளர்களிடம் பேசுகையில், டிசம்பர் 23 அன்று உள்ளூர் காவல் நிலைய அதிகாரி (SHO) தலைமையிலான போலீசார் எங்கள் பகுதிக்கு வந்தனர்.
எங்களிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டனர். நாங்களும் ஆவணங்களைக் காட்டினோம்.
வங்கதேசத்தவரைக் கண்டறியும் இயந்திரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என்று போலீசார் எங்களிடம் கிண்டலாகக் கூறினர்.
ஆனால் உண்மையில் அங்கே எந்த இயந்திரமும் இல்லை. அவர்கள் கையில் போனை வைத்துக்கொண்டு என் மைத்துனரின் முதுகில் தேய்த்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவரா என்பது தெரிந்துவிடும் என்று கூறினர்.
நாங்கள் 1986 முதல் இங்கே வசிக்கிறோம். எங்கள் பூர்வீகம் பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் ஆகும். அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு போலீசார் அங்கிருந்து சென்றனர்" என்று தெரிவித்தார்.
போலீசாரின் இந்த செய்கை, மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து உண்மையையே வரவழைக்கவே இவ்வாறு செய்ததாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் தனது செயலுக்கு நியாயம் கூறியுள்ளார்.
- மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.
- மலைவாழ் மக்கள் நலன் கருதி உடனடியாக சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரி
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 18க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை பெற உடுமலை நகர் பகுதிக்குத்தான் வர வேண்டும்.
இந்நிலையில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த மலைகிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கர்ப்பிணிப்பெண்கள், பாம்பு கடித்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி அழைத்து செல்லும் அவல நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் குருமலை மலைவாழ்கிராமத்தில் வசித்துவந்த முருகன் என்பவருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டியே நோயாளிகளை தூக்கி செல்கின்றனர்.
திருமூர்த்திமலை முதல் குருமலை வரை 6 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்தால் 110 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியது இல்லை. அரை மணி நேரம் முதல் 1மணி நேரத்தில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்று விடலாம். எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி உடனடியாக சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






