என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Central Government"
- இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் விமானங்களுக்கு மிரட்டல் வந்தது.
- ஒரு வாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 200 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட முக்கிய இந்திய விமான நிறுவனங்கள் வெடிகுண்டு மிரட்டல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல்களுக்கு துணை போவதாக பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் மீது மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. எக்ஸ் தளத்தில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் யூசர் ஐடி மற்றும் டொமைன் தொடர்பான தகவல்களை போலீஸ் கோரியுள்ளது.
ஆனால் தளத்தில் தனிநபர் உரிமைகள் காரணமாக அந்த தகவல்களைத் தர மறுத்துள்ளது எக்ஸ். இந்த தளத்தின் வாயிலாகவே பல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. குறிப்பாக @adamlanza111, @psychotichuman and @schizobomer777 ஆகிய மூன்று ஐடிகள் இதில் தொடர்பு கொண்டுள்ளதை போலீஸ் கண்டறிந்துள்ளது. ஆனால் அந்த ஐடிகளை குறித்து மேலதிக தகவல்களை எக்ஸ் தர மறுக்கும் சூழலில்தான் மத்திய அரசு இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் விமான நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சமூக வலைதள பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த குற்றச்சாட்டை அரசு தெரிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் இந்த போக்கு குற்றத்துக்கு உடந்தையாகக் கருதப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
- இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
- பெற்றோர்கள் தாய், தந்தை என இருவரும் உயிருடன் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 75 சதவீதம் வரை வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவரது மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்கள் இறந்து இருந்தால் தகுதி இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.
இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே 2-வது மனைவியும் குடும்ப ஓய்வூதியம் உரிமை கோரும் போது பிரச்சனை ஏற்படுகிறது.
இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதே போல் ஒவ்வொரு வழக்குகளிலும் ஒவ்வொரு விதமான தீர்ப்புகள் வருகின்றன. முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் மனைவியை திருமணம் செய்யக்கூடாது என்று திருமணச் சட்டம் சொல்கிறது. இதே சட்டத்தை மத்திய அரசின் ஓய்வூதிய விதிகள் 2021-ம் ஆண்டும் உறுதி செய்கிறது. இந்த நிலையில் ஓய்வூதிய துறை அனைத்து மத்திய அரசு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 மனைவிகள் இருந்தால், இரண்டாம் திருமணம் சட்டபூர்வமானதா? என்று சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை செய்ய வேண்டும். அதில் ஒவ்வொரு வழக்கும் தனிப்பட்ட அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இரண்டாம் திருமணத்தின் சட்டப்பூர்வ நிலை தீர்மானிக்கப்பட்ட பிறகே ஓய்வூதியம் வழங்குவது முடிவு செய்யப்படும்.
இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறும்போது, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது 2-வது திருமணம் எப்படி சட்டப்பூர்வமானதாக இருக்கும். இது ஏற்கனவே உள்ள குடும்ப ஓய்வூதிய சட்டத்தின் விதிகளை மீறுவது போல் உள்ளது. முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அவருக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்வது முற்றிலும் குற்றம். எனவே இந்த விவகாரத்தில் 2-ம் திருமணத்தை சட்டப்பூர்வமானதா என அலசி ஆராய்வது தேவையற்ற செய்ய செயல் என்றனர்.
தற்போது மத்திய அரசு ஊழியரின் இறுதி சம்பளத்தின் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். தற்போது குறைந்தபட்சமாக ரூ.3,500-ம், அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் வரையும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. இது ஊழியர்கள் 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 50 சதவீதம் வரை அதிகரிக்கும்.
பெற்றோர்கள் தாய், தந்தை என இருவரும் உயிருடன் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 75 சதவீதம் வரை வழங்கப்படும். பெற்றோரில் ஒருவர் மட்டும் உயிருடன் இருந்தால் 60 சதவீதம் வரை வழங்கப்படும். ஊழியர்கள் பணி நேரத்தில் இறந்தால், 10 ஆண்டுகள் 50 சதவீதம் இறுதி சம்பளத்துடன் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு பின்னர் அது 30 சதவீதம் குறைக்கப்படும்.
- அமெரிக்காவிலிருந்து அதில் நவீன 31 பிரிடேட்டர் டிரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.
- இந்திய கடற்படைக்கான மூலோபாய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சர் சபைக் குழு (சிசிஎஸ்) ஆந்திர மாநிலம் நாகயலங்காவில் புதிய ஏவுகணை சோதனை மையம் நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக தந்திரோபாய ஏவுகணை அமைப்புகளை சோதிக்க முடியும்.
கீழ் மற்றும் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகள், எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் பிற திட்டங்களின் சோதனைக்கு இந்த மையம் துணைபுரியும்.
ஆந்திராவில் புதிதாக அமைய உள்ள ஏவுகணை மையத்தில் மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள், மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய தொட்டி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள், டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள், விமான ஏவுகணை அமைப்புகள், செங்குத்தாக ஏவப்படும் குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனையிடப்பட உள்ளன.
கடந்த வாரம் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆயுதப்படைகளுக்கான பல முக்கிய முன்மொழிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து அதில் நவீன 31 பிரிடேட்டர் டிரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் 2 அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்களை முழுமையாக தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது இந்திய கடற்படைக்கான மூலோபாய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும். விண்வெளி அடிப்படையிலான திறன்களுடன் இந்திய படைகளுக்கு சாலைகள் அமைப்பதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
- உத்தரபிரதேசத்துக்கு 94 லட்சத்து 50 ஆயிரத்து 268 மில்லியன் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது.
- உணவு தானியம் அதிகம் பெற்ற பட்டியலில் பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சென்னை:
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த கடந்த 2020-ம் ஆண்டின்போது மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு, 'பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா' என்ற உணவு பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி, கோதுமை உள்பட உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2023-24-ம் ஆண்டில் இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 4 கோடியே 95 லட்சத்து 45 ஆயிரத்து 597 மில்லியன் டன் உணவு தானியம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதில், நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு 94 லட்சத்து 50 ஆயிரத்து 268 மில்லியன் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. உணவு தானியம் அதிகம் பெற்ற பட்டியலில் பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில் இந்த காலக்கட்டத்தில் 23 லட்சத்து 36 ஆயிரத்து 649 மில்லியன் டன் உணவு தானியம் பெற்றுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை விளாசியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒடிஷா மாநிலம் பாலாஷோரில் நடந்த ரெயில் விபத்து போலவே கவரைப்பேட்டையில் விபத்து நடந்துள்ளது. ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The Mysuru-Darbhanga train accident mirrors the horrific Balasore accident—a passenger train colliding with a stationary goods train. Despite many lives lost in numerous accidents, no lessons are learned. Accountability starts at the top. How many more families must be… https://t.co/ggCGlgCXOE
— Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2024
- அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 31,962 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
- கேரளாவிற்கு 3,430 கோடி ரூபாய், ஆந்திராவிற்கு 7,211 கோடி ரூபாய், தெலுங்கானாவிற்கு 3,745 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு 7,268 கோடி ரூபாயை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ. 1,78,173 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 31,962 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பீகாருக்கு 17,921 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மத்திய பிரதேசத்திற்கு 13,987 கோடி ரூபாய், மேற்கு வங்கத்திற்கு 13,404 கோடி ரூபாய், மகாராஷ்டிராவிற்கு 11,255 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
கேரளாவிற்கு 3,430 கோடி ரூபாய், ஆந்திராவிற்கு 7,211 கோடி ரூபாய், தெலுங்கானாவிற்கு 3,745 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
அக்டோபர் மாதம் வழங்கக்கூடிய தவணையுடன் கூடுதல் தவணையாக 89,086.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- சுருக்கு மடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோவுடன் நடந்து கொள்ளக்கூடாது.
- சுருக்குமடி வலை பயன்படுத்தும் விவகாரத்தில் ஆட்சேபனை எதுவும் இல்லை என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது.
புதுடெல்லி:
தமிழ்நாட்டில் மீன்பிடிக்க சுருக்கு மடி வலையை பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடலில் 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என்று கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து முந்தைய உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சுருக்கு மடி வலைக்கு மத்திய அரசு தடை விதிக்காத நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி தமிழக கடல் எல்லையில் மீன்பிடிக்க கூடுதல் கால வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கோரியும் மீனவர்கள் அமைப்பு சார்பில் புதிய இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபஸ்-எஸ்-ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த சுருக்கு மடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோவுடன் நடந்து கொள்ளக்கூடாது. மீனவர்களின் கோரிக்கைகளை செவி மடுக்க வேண்டும்.
மேலும், சுருக்குமடி வலை பயன்படுத்தும் விவகாரத்தில் ஆட்சேபனை எதுவும் இல்லை என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இருப்பினும் இந்த இடைக்கால மனுவுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு மீதான இறுதி விசாரணையை வருகிற பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
- பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் - வரும் அக்டோபர் 7 - 11 வரையிலான காலகட்டத்தில் ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்ஷ்த் பாரத் போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மிக ஆபத்தான மாணவர் விரோத போக்காகும். இந்த முடிவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.
இதுபோன்ற தலையீடுகளை மாநில அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும், ஆசிரியர், மாணவர்களும் இதுபோன்ற முயற்சிகளை எதிர்க்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
- இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
- கணவன்- மனைவி உறவில் தனிநபர் ஒப்புதல் இருந்ததா என்பதை கண்டறிவது கடினமான காரியம்.
மனைவியை கணவன் பலவந்தத்தின்மூலம் பாலியல் வன்புணர்வு [Marital rape] செய்வதை குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மனைவியின் அனுமதியின்றி கட்டாயப்படுத்தி கணவன் உறவு வைத்துக்கொள்வதை பாலியல் பலாத்காரமாக கருத வேண்டும் எனக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவேறு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கபட்டன.
இதனால் இந்த பிரச்சனை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், மனைவியின் அனுமதியை மீற செயல்பட கணவனுக்கு உரிமை இல்லை என்றாலும் அதை பாலியல் பலாத்காரமாக வரையறுப்பது மிகவும் கடுமையானது. மாறி வரும் சமூக சூழ்நிலையில் இதை அனுமதித்தால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கணவன்- மனைவி உறவில் தனிநபர் ஒப்புதல் இருந்ததா என்பதை கண்டறிவது கடினமான காரியம். எனவே கணவன் மனைவியை பலவந்தப்படுத்தி உறவு கொள்வதை பாலியல் பலாத்காரமாக அறுதியிட்டு தண்டனை வழங்குவது சமூக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.
- இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் இந்தியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.
இதனால் நேற்றைய தினம் இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்குத் தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஈரான் மீது எந்நேரமும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் இந்தியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் ஈரானுக்கு அத்தியாவசிய பயணம் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஈரானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படியும் அரசு வலியுறுத்தியுள்ளது.
Travel advisory for Indian nationals regarding Iran:https://t.co/FhUhy3fA5k pic.twitter.com/tPFJXl6tQy
— Randhir Jaiswal (@MEAIndia) October 2, 2024
- பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா ஆகும்.
- மாநில விவகாரங்களை கையாளும் இந்த மசோதாவும் 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும்.
புதுடெல்லி:
பாராளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த ராம்நாத் கோவிந்த் கமிட்டி அளித்த அறிக்கைக்கு மத்திய மந்திரி சபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அத்துடன் இந்த குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த சுமார் 18 அரசியல் சாசன திருத்தங்களை மேற்கொள்ள இந்த கமிட்டி பரிந்துரைத்து இருந்தது.
எனவே இதற்காக 3 மசோதாக்களை பாராளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் அரசியல் சாசனத்தை திருத்த வகை செய்யும் 2 மசோக்களும் அடங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதில் முதலாவது திருத்த மசோதாவானது, பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா ஆகும்.
இந்த மசோதா மூலம் அரசியல் சாசனப்பிரிவு 82 ஏ-ல் திருத்தம் (மக்களவை, சட்டசபைகளின் பதவிக்காலத்தை ஒன்றாக முடித்தல் மற்றும் தேதி) செய்யப்படும். மேலும் அரசியல் சட்டப்பிரிவு 83 (2)-லும் இதன் மூலம் திருத்தம் (மக்களவை பதவிக்காலம் மற்றும் கலைப்பு) மேற்கொள்ளப்படும்.
இதைப்போல சட்டசபைகளைக் கலைப்பது மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற சொற்களைச் சேர்ப்பதற்காக சட்டப்பிரிவு 327-ஐ திருத்துவது தொடர்பான விதிகளும் இதில் உள்ளன.
இவ்வளவு திருத்தங்களை மேற்கொள்ள வகை செய்யும் இந்த முதலாவது திருத்த மசோதாவுக்கு 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும்.
2-வது திருத்த மசோதா வாக்காளர் பட்டியல் தொடர்பானது ஆகும். அதாவது உள்ளாட்சி தேர்தல்களுக்காக மாநில தேர்தல் ஆணையங்களுடன் கலந்தாலோசித்து தேர்தல் கமிஷனால் பொது வாக்காளர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக அரசியலமைப்பு விதிகளை திருத்த வழிவகை செய்கிறது.
இந்த திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுடன், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் உருவாக்கும்.
மாநில விவகாரங்களை கையாளும் இந்த மசோதாவும் 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
3-வது மசோதா சாதாரணமானது ஆகும். இது சட்டசபை கொண்ட புதுச்சேரி, டெல்லி, காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களை கையாளும் சட்ட வழிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகிறது.
இது வழக்கமான மசோதா என்பதால் மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை.
இவ்வாறு 3 மசோதாக்களின் தயாரிப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த அமைப்பின் உத்தரவுப்படி எந்த ஒரு சமூக வலைதள பதிவையும் கணக்கையும் நீக்க முடியும்
- இதற்கு எதிராக பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா உள்ளிட்டோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த வருடம் [2023] தகவல் தொழில்நுட்ப [ஐடி] சட்டத்தில் கொண்டுவந்த திருத்தும் செல்லாது என்று மும்பை உய்ரநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசின் செயல்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் போலியான மற்றும் தவறான வகையில் பதிவிடப்படும் தகவல்களை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழுவை அந்த சட்டத்திருத்தத்தின்படி மத்திய அரசு அமைத்திருந்தது.
இந்த அமைப்பின் உத்தரவுப்படி எந்த ஒரு சமூக வலைதள பதிவையும் கணக்கையும் நீக்க முடியும். ஆனால் இது அரசை விமர்சிக்கும் எந்த ஒரு கருத்தையும் நீக்க முடியும் என்ற அதிகாரத்தை நிறுவுவதாக அமைத்துள்ளதால் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளது என்ற குற்றச்சாட்டை எழுந்தது. எனவே இதற்கு எதிராக பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா உள்ளிட்டோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்கள் மீது இன்று நடந்த விசாரணையில், இந்தத் திருத்தங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்றும், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 [சமத்துவத்திற்கான உரிமை] மற்றும் பிரிவு 19 [பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்], பிரிவு 19(1) (g) [சுதந்திரம் மற்றும் தொழில் உரிமை] ஆகியவற்றை மீறும் வகையிலும், 'போலியான' மற்றும் 'தவறான' என்பதை இதன்மூலம் நிர்ணயிக்க முடியும் என்பது பற்றிய தெளிவான விளக்கம் இல்லாததாகவும் உள்ளது என்று தெரிவித்த மும்பை உயர்நீதிமன்றம் மத்திய அரசு அமைத்த தகவல் சரி பார்ப்பு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்