என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேமலதா"

    • அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கி 13ம் தேதி வரை பிரசாரம்.
    • ஈரோடு வடக்கில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொள்ளும் 3ம் கட்ட பிரசார பயணப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கி 13ம் தேதி கோவை வடக்கு வரை பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மேலும், 5ம் தேதி கிருஷ்ணகிரி, 6ம் தேதி தருமபுரி, 7ம் தேதி ஈரோடு நகரம், ஈரோடு வடக்கில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    8ம் தேதி ஈரோடு தெற்கு, 9ம் தேதி திருப்பூர் நகரம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு பகுதிகளிலும், 10ம் தேதி திருப்பூர் வடக்கு, 11ம் தேதி கோவை நகர், கோவை தெற்கு, 12ம் தேதி நீலகிரி, கோவை வடக்கில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • கூட்டணி குறித்து தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.
    • 2006ல் எப்படி கேப்டன் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் போனார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.

    இந்நிலையில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்," 2006ல் எப்படி கேப்டன் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் போனாரோ, அதேபோல் 2026-ல் என் அம்மா பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார்." என்றார்.

    இதற்கிடையே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்," 234 தொகுதிகளுக்கு நேரடியாக சென்று வருகிறோம். 2026 தேமுதிகவிற்கான காலம் நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் இருக்காது" என்றார்.

    • இபிஎஸ் பிரசார பயணம் குறித்து பிரேமலதா விமர்சனம்.
    • எம்பி பதவி கொடுப்பதாக கூறியே தேமுதிக- அதிமுக கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.

    சென்னை தி.நகரில் இன்று நடைபெற்ற தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    இபிஎஸ் சுற்றுபயணத்திற்கு எப்படி கூட்டம் கூடுகிறது என்று உலகத்திற்கே தெரியும்.

    எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களுக்கு காசு கொடுத்துதான் ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.

    நமது கூட்டத்திற்கு கேப்டன் மீதுள்ள அன்பால் தொண்டர்களும், மக்களும் திரண்டு வருகின்றனர்.

    எம்பி பதவி கொடுப்பதாக கூறியே தேமுதிக- அதிமுக கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதேபோலதான் தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார்.

    அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம்.

    அதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் இபிஎஸ்-ன் மாண்பு பாதிக்கப்படும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது.
    • பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    சென்னை:

    விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் பிறந்தநாள், வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதன்பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது:

    இப்போது தான் விஜய் உங்களுக்கு பெரியதாக தெரிகிறார். ஆனால், விஜய் சிறிய பையனாக இருந்ததில் இருந்தே பார்த்து வருகிறோம். என்னை பொருத்தவரையில் அவர் எனது மகன் போன்றவர். அவருக்காக 'செந்தூரபாண்டி' படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்தார். இன்று அவர் நன்றாக இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். அதற்காக அவர் விஜயகாந்த் படத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

    • உடல்நிலை பாதிப்படைந்திருந்தபோது கேப்டன் அண்ணனாக தெரியவில்லையா?
    • உலகம் அறிந்த உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் சீமான்

    த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அந்த மாநாட்டில் பேசிய விஜய், விஜயகாந்தை அண்ணன் என்று கூறி புகழ்ந்து பேசினார். விஜயகாந்தை விஜய் புகழ்ந்து பேசியதை விமர்சித்த சீமான், "விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது விஜய், அவர் கட்சிக்கு ஆதரவாக பேசவும், அவரை சந்திக்கவும் இல்லை; என் கருத்துக்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொல்லவில்லை. என் முகத்துக்கு வாக்கு செலுத்துங்கள் என்று விஜய் கூறுகிறார்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், விஜயகாந்த் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, "தலைவர் விஜய்காந்த் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது விஜய் அவரை வந்து சந்திக்கவில்லை. ஆனால், இறந்த பிறகு வந்து பார்த்தார். இது பற்றி நானே அவரிடம் நேரில் கேட்பேன், உலகம் அறிந்த உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் சீமான்" என்று தெரிவித்தார்.

    • தமிழகத்தில் சிறந்த பெண் அரசியல்வாதி என்று பிரேமலதாவை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தார்கள்.
    • பெண் ஆளுமையின் தலைமையின் கீழ் இயங்கும் கட்சி தே.மு.தி.க.

    ஜெயலலிதாவும் பிரேமலதாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் எல்.கே.சுதீஷ் பகிர்ந்ததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எல்.கே.சுதீஷ் கூறியதாவது:-

    தமிழகத்தில் சிறந்த பெண் அரசியல்வாதி என்று பிரேமலதாவை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தார்கள். அப்போது, ஜெயலலிதாவையும் பிரேமலதாவையும் ஒப்பிட்டு பேசினேன்.



    அம்மையார் ஜெயலிலதா இருக்கும் போது புரட்சித்தலைவி என்றும் சிங்கப்பெண், லயன் லேடி என்று கூறுவார்கள். இன்றைக்கு அதே இடத்தில் என்னுடைய சகோதரியும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சிங்கப்பெண்ணாக இருக்கிறார். தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்து வலிமை மிகுந்த பெண் தலைவராக இருக்கிறார் என்றால் அது பிரேமலதா தான். அதனால் தான் ஒப்பிட்டு பேசுகிறேன். பெண் ஆளுமையின் தலைமையின் கீழ் இயங்கும் கட்சி தே.மு.தி.க. நேற்றைய தினம் சிங்கத் தினம் (லயன் டே) என்பார்கள். அந்த தினத்தையொட்டி ஜெயலலிதாவையும், பிரேமலதாவையும் ஒப்பிட்டு பேசியதாக கூறினார். 

    • விஜயகாந்த் உருவப்படத்திற்கு பிரேமலதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • மாலை 4 மணி அளவில் உத்தனப்பள்ளியில் மக்களை சந்தித்து பேசுகிறார்.

    ஓசூர்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் தி.மு.க., அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி, பா.ம.க. அன்புமணி ராமதாஸ் என ஆகிய கட்சியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.

    அந்த வரிசையில், தே.மு.தி.க.வும் தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற சுற்றுபயணம் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் தின்னூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

    இதில், பொருளாளர் எல்.கே.சுதீஷ், அவைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, விஜயகாந்த் உருவப்படத்திற்கு பிரேமலதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனை முடித்து விட்டு அவர் மாலை 4 மணி அளவில் உத்தனப்பள்ளியில் மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் அவர் ராயக்கோட்டை, சூளகிரி, நெடுசாலை, வேப்பனப்பள்ளி ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் அவர் இரவு தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் தங்குகிறார். இதையடுத்து நாளை மாலை 4 மணி அளவில் பென்னாகரத்தில் மக்களை சந்தித்து பிரேமலதா பேசுகிறார். மறுநாள் மாலை 4 மணி அளவில் அவர் தருமபுரியில் மக்களை சந்தித்து பேசுகிறார்.

    பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை பிரேமலதா தொடங்கி உள்ளார்.
    • திரைப்படங்களில் விஜயகாந்த் படங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

    கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை பிரேமலதா தொடங்கி உள்ளார்.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, "எந்த ஒரு அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்த கூடாது. எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் மட்டும் தேர்தல் நேரத்தில் அவரது படத்தை பயன்படுத்தலாம். ஆனால் திரைப்படங்களில் அவரது படங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்" என்று தெரிவித்தார். 

    • திமுக அரசுக்கு மதிப்பெண் வழங்க இது என்ன தேர்வா (Exam)?.
    • நிறையும், குறையும் சமமாக உள்ளது எனச் சொல்லிட்டேன்.

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இன்று உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லை. மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற நிலைமை தமிழகத்தில் இருக்கிறது.

    இந்த ஆட்சியில் நிறையும், குறையும் உள்ளது. சாலையில் வாக்கிங் செல்ல முடிகிறதா? செயின் பறிக்கிறது... தினசரி என்ன நடக்கிறது என்பதை நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த நிலைமை மாற வேண்டும். சட்டம் ஒழுங்கை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற திருட்டுகள், கொலைகள் நடக்காது.

    ஆணவக் கொலைகள், லாக்அப் கொலைகள். விசாரணை என்று அழைத்துச் சென்று அடித்து கொல்கிறார்கள். இதெல்லாம் மனசுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இதெல்லாம் மாற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. சட்டம்- ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதை சரி செய்ய வேண்டும் என இந்த பத்திரிகையாளர்கள் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

    திமுக அரசுக்கு மதிப்பெண் வழங்க இது என்ன தேர்வா (Exam)?. நிறையும், குறையும் சமமாக உள்ளது எனச் சொல்லிட்டேன். 50-க்கு 50 வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆணவக் கொலைக்கு அடிப்படையே ஜாதிதான். எத்தனை பெரியாரும், எத்தனை பாரதியாரும் வந்து சொன்னாலும் இங்கு ஜாதி வெறி இன்னும் மறையவில்லை. அந்த ஜாதி வன்மம்தான் கொலை வரைக்கு செல்கிறது. ஒட்டுமொத்த மக்களின் மனநிலை மாறினால்தான் இது மாறும்.

    இவ்வாறு பிரேமலதாக கூறினார். 

    • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
    • ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

    தேமுதிகவும் தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை பிரேமலதா தொடங்கி உள்ளார்.

    தொடர்ந்து ஆகஸ்ட் 4ல் ஆவடி, ஆகஸ்ட் 5ல் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 6ல் வேலூர், ஆகஸ்ட் 7ல் திருப்பத்தூர், ஆகஸ்ட் 8ல் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 9ல் தருமபுரி, ஆகஸ்ட் 11ல் சேலம், ஆகஸ்ட் 13ல் கள்ளக்குறிச்சி, ஆகஸ்ட் 14ல் நாமக்கல், ஆகஸ்ட் 16ல் கரூர், ஆகஸ்ட் 17ல் பெரம்பலூர், ஆகஸ்ட் 18ல் அரியலூர், ஆகஸ்ட் 19ல் மயிலாடுதுறை, ஆகஸ்ட் 20ல் கடலூர் மற்றும் ஆகஸ்ட் 22ல் விழுப்புரம் பகுதிகளில் பிரசார பயணத்தை மேற்கொள்கிறார்.

    ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

    அதன்படி, தேமுதிக சார்பில் 'இல்லம் தேடி.. உள்ளம் நாடி..' என்ற பெயரில் பிரசார சுற்றுப் பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார்.

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் விஜய பிரபாகரனும் பிரசாரப் பயணத்தில் பங்கேற்றுள்ளார்.

    • பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள்.
    • மக்கள் நலன் சார்ந்த முகாமை முதல்வர் தொடங்கி உள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பு திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த விவரம் வருமாறு:-

    கேள்வி: பிரேமலதா, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்தனர். இது கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா? இதன் பின்னணி ஏதேனும் உள்ளதா?

    பதில்: பின்னணியும் இல்லை, முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள் அவ்வளவுதான்.

    கேள்வி: பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே?

    அவர்களுக்கு எல்லாம் அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் நம்ம ஊருக்கு வந்திருக்க மாட்டார்கள். இங்க வந்திருக்கிறார்கள் இப்போது என்ன செய்வது என்பது மிகப்பெரிய பிரச்சனை. ஏனென்றால் பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள். அந்த மாதிரி நம் ஊரில் போட முடியாது. இதை தலைவர்கள் தான் அணுக வேண்டும். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மேடையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு முகாம்களை முதல்வர் நடத்தி வருகிறார். இப்போதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது, அது முடிவதற்குள்ளேயே இன்னொரு மக்கள் நலன் சார்ந்த முகாமை முதல்வர் தொடங்கி உள்ளார். என்னால் இப்போதைக்கு அதிகமாக பேச முடியாது ஏனென்றால் எனக்கு சற்று உடல் நலம் சரியில்லை என பேசினார்.

    • விஜயகாந்த் தலைவராக இருந்த போது 3 பாராளுமன்ற தேர்தல்களை கட்சி சந்தித்தது.
    • 104 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட தே.மு.தி.க. வெற்றி பெற முடியவில்லை.

    தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா முதலமைச்சர் மு .க. ஸ்டாலினை நேரில் சந்தித்தது அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. முக்கியமாக தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்பப்படுகிறது .

    உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பிய முதலமைச்சரை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும், ஏற்கனவே விஜயகாந்த் உடல்நலம் பாதித்து இருந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். எனவே அந்த நட்பின் அடிப்படையில் இதுவும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று பிரேமலதா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த சந்திப்பின்போது தே.மு.தி.க.முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றதும், தி.மு.க. தரப்பிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அது மட்டுமல்ல ஏற்கனவே தே.மு.தி.க வை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரும் உடன் இருந்துள்ளார்கள். எனவே தான் இந்த சந்திப்பை கூட்டணிக்கான அச்சாரமாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். திடீரென்று தி.மு.க. பக்கம் பிரேமலதாவின் பார்வை திரும்பியது ஏன்? என்பது பற்றி விசாரித்த போது கட்சி நிர்வாகிகள் கூறியதாவது :-

    கடந்த 2005-ல் கட்சி தொடங்கப்பட்டு 2011-ல் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. விஜயகாந்த் தலைவராக இருந்த போது 3 பாராளுமன்ற தேர்தல்களை கட்சி சந்தித்தது. ஆனால் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.

    கட்சி ஆரம்பித்த மறு ஆண்டு அதாவது 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். பின்னர் தனித்து போட்டியிடும் முடிவை மாற்றி 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல் முறையாக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் அப்போதுதான் தே.மு.தி.க.வுக்கு கிடைத்தது

    எதிர்க்கட்சி அந்தஸ்து கூட அப்போது தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போனது அரசியல் களத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதை வைத்து அடுத்து வரும் காலம் விஜயகாந்த் காலம் தான் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு கட்சி எடுத்த முடிவுகள் கை கொடுக்காததால் 8 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி சுமார் ஒரு சதவீதம் என்ற அளவுக்கு இறங்கி விட்டது.

    2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை அமைத்து ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்டுகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. அந்த தேர்தலில் 104 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட தே.மு.தி.க. வெற்றி பெற முடியவில்லை.

    கருணாநிதி, ஜெயலலிதா, ஆகிய 2 மாபெரும் ஆளுமைகளும் சந்தித்த கடைசி தேர்தலும் அதுதான். அதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. எடுத்த முடிவு கை கொடுக்கவில்லை. 60 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் போனது.

    விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கும் இருந்தது. அப்படி இருந்தும் கட்சியை சிகரம் தொட கொண்டு செல்ல முடியவில்லை.

    இந்த நிலையில் தான் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பிரேமலதா பொதுச்செயலாளர் ஆனார். மீண்டும் கட்சியை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

    இந்த நிலையில் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். அந்தத் தேர்தலும் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் கூட்டணி ஒப்பந்தப்படி தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவி தருவதாக கூறப்பட்டது. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மோசமான தோல்வியை தழுவியது. இதையடுத்து பேசியபடி மேல் சபை எம்.பி. பதவியும் தே.மு.தி.க.வுக்கு வழங்கப்படவில்லை. அடுத்து வரும் வாய்ப்பில் உறுதியாக தரப்படும் என்று அ.தி.மு.க. உறுதி அளித்துள்ளது. இது பிரேமலதாவை அதிருப்தி அடைய வைத்தது. அவரது தம்பி எல்.கே.சுதீசை மனதில் வைத்தே எம்.பி. பதவி கேட்கப்பட்டதாகவும் அது நடக்காமல் போனது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியதாகவும் கூறுகிறார்கள்.

    எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் சொதப்பி விடக்கூடாது என்று நினைக்கிறார். எனவே தான் தேசிய ஜனநாயக கூட்டணியை இனியும் நம்பி பலனில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஐக்கியமாகி விடலாம் என்று அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் கூட்டணியில் இடம் பெற்றால் மட்டும் போதாது. நினைத்த பேரத்தை முடிக்க வேண்டும் என்றால் கட்சியின் பலத்தையும் காட்ட வேண்டியது அவசியம். எனவே கட்சி இன்னும் பலமாக தான் உள்ளது என்பதை காட்டுவதற்காக தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க.வை தொடர்ந்து பிரேமலதாவும் ரத யாத்திரை செல்ல உள்ளார். தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி கட்சிகள் அனைத்தும் உறுதியாக இருந்தாலும் மேலும் கட்சிகளை இணைத்து கூட்டணியை பலப்படுத்தி ஆட்சியை தக்க வைப்பதில் தி.மு.க. தலைமை தீவிரமாக உள்ளது. அந்த வகையில் தான் தே.மு.தி.கவையும் கூட்டணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளது. கூட்டணியில் சேர்வதற்கு பிரேமலதாவும் பெரிய அளவில் பேரம் எதையும் பேசவில்லை . மூன்றே மூன்று கோரிக்கை மட்டும் தான் அவர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதல் கோரிக்கை மேல்சபை எம்.பி பதவி ஒன்று கட்டாயம் வேண்டும். இரண்டாவதாக சட்டமன்றத் தேர்தலில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். மூன்றாவதாக தேர்தல் செலவுகளை தி.மு.க. ஏற்க வேண்டும் என்பதுதான்.

    இந்த மூன்று கோரிக்கைகளையும் தி.மு.க.வும் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் தி.மு.க.வில் கிடைக்கும் என்று பிரேமலதாவிடம் உறுதியும் அளித்துள்ளார்கள். எனவே விரைவில் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதைய சூழ்நிலையில் பிரேமலதா போடுவது தேர்தல் கணக்கு மட்டும் தான். அதேநேரம் தனது கணவர் தொடங்கி உச்ச நிலைக்கு கொண்டு சென்ற கட்சி அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கும் நிலையில் மீண்டும் தனது தலைமையில் வழி நடத்தி கட்டி காப்பதில் பிரேமலதா சாதிப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

    ×