என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய பட்ஜெட் 2026"
- பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
- சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும்.
2026-27 நிதியாண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.
இந்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார். மேலும் பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.
எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்தது.
தற்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1060 புள்ளிகள் சரிந்து 81,506 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 389 புள்ளிகள் சரிந்து 25,029 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
- 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து.
- மைக்ரோவேவ் ஓவன்களுக்கு சுங்க வரியில் விலக்கு அளிக்கப்படும்.
புதுடெல்லி:
2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* பயணிகள் விமான உறுதிபாகங்களுக்கான இறக்குமதி வரி இனி இல்லை.
* கலால் மற்றும் சுங்க வரி விதிப்பு நடைமுறை எளிமையாக்கப்படும்.
* கலால் வரியை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக நீக்கம்.
* 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து.
* மைக்ரோவேவ் ஓவன்களுக்கு சுங்க வரியில் விலக்கு அளிக்கப்படும்.
* காலணி தயாரிப்புக்கான மூலப்பொருட்களை வரியில்லாமல் இறக்குமதி செய்ய சலுகைகள் வழங்கப்படும்.
- வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.
- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களுக்கான வரி குறைக்கப்படும்.
புதுடெல்லி:
2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வரி குறித்து இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும்.
* வருமான வரி சார்ந்த தரவுகளை மறைத்தால் 100% அபராதம் விதிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு
* வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் நடவடிக்கை கிடையாது.
* வருமான வரி கணக்கு, மறு ஆய்வுக்கு பிறகும் ரிட்டர்ன் தொடர்பாக மறுமுறை விண்ணப்பிக்கலாம்.
* வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.
* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களுக்கான வரி குறைக்கப்படும்.
* மோட்டார் வாகன விபத்தில் கிடைக்கும் இழப்பீட்டிற்கு வரி கிடையாது.
* குறைந்த அளவில் வரி செலுத்துவோருக்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
* சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரித் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்.
- சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.
- சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும்.
2026-27 நிதியாண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.
இந்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
குறிப்பாக மருத்துவ துறை குறித்து பல அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் உயிரி மருத்துவ துறையில் ரூ.10,000 கோடி முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் 5 முக்கிய இடங்களை மையமாக கொண்டு மருத்துவ சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய பயோ பார்மா சக்தி திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, கால்நடை மருத்துவத்தை மேம்படுத்த, புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 2 தேசிய மனநல சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். வறுமையில் உள்ள மக்களுக்கான சிகிச்சை வசதிகள் 50% அதிகரிக்கப்படும். புதிதாக 1000 மருத்துவ பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும், கார் விபத்துக்கு இழப்பீடுகளுக்கு வரி தளர்வு அளிக்கப்படும்.
ஆயுர்வேதத் துறை விரிவுபடுத்தப்படும். மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் அமைக்கப்படும், ஜாம்நகரில் உள்ள WHO பாரம்பரிய மருத்துவ மையம் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மருத்துவ படிப்பு கல்வி கடனுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- 3 தேசிய ஆயுர்வேதா மருத்துவமனைகள் புதிதாக அமைக்கப்படும்.
- ஆயுர்வேத மருந்து உற்பத்தி, ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
புதுடெல்லி:
2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பின்வருமாறு:-
* பெண் கல்வியை ஊக்குவிக்க நாடு முழுவதும் மாவட்டந்தோறும் பெண்கள் விடுதிகள் அமைக்கப்படும்.
* இந்தியாவில் பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஷி என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
* 5 பல்கலைக்கழக நகரங்கள் அமைக்கப்படும்.
* கால்நடை கல்வி நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
* 15 ஆயிரம் இடைநிலை பள்ளிகளில் கற்பனை திறன் சார்ந்த பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
* இந்தியாவில் டிசைனர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால் அதை சரி செய்ய புதிய வடிவமைப்பு துறைக்கான மையம் அமைக்கப்படும்.
* 3 தேசிய ஆயுர்வேதா மருத்துவமனைகள் புதிதாக அமைக்கப்படும்.
* ஆயுர்வேத மருந்து உற்பத்தி, ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள், பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.
* ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும்.
* ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பழவேற்காடு ஏரியில் பறவைகளை கண்காணிப்பதற்காக 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள்.
* உத்தரகாண்ட், இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் மலை ரெயில் சேவை மேம்படுத்தப்படும்.
* முக்கிய நகரங்களில் தலா ரூ.5000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.
- பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
- வங்கித்துறை சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
2026-27 நிதியாண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.
இந்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
எலக்ட்ரானிஸ் துறையில் ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ. 40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரி மருத்துவத் திட்டத்தை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்கள் துறை வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மெகா ஜவுளி பூங்காக்கங்கள் அமைக்கப்படும். உலக அளவில் ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கு புதிய திட்டங்கள் இதில் அடங்கும்.
குறு நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.2000 கோடி நிதியில் திட்டம், கன்டெய்னர்களை உற்பத்தி செய்ய ரூ. 10,000 கோடியில் 5 ஆண்டு திட்டம், முக்கிய நகரங்களில் தலா ரூ.5000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலம் அமைக்கப்படும், நகராட்சி பண பத்திரம் வெளியிட்டு நிதி திரட்ட ரூ.100 கோடியில் திட்டம், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை 2047க்குள் 12 சதவீதமாக உயர்த்த திட்டம் உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து மாநிலங்களுடன் இணைந்து 3 பிரத்யேக கெமிக்கல் பூங்காக்கள், செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.0 திட்டம், அரிய வகை கனிமங்களை உற்பத்தி செய்ய வழித்தடம் திட்டம், விளையாட்டு சாதனங்களை உற்பத்தி செய்ய பிரத்யேக திட்டம், பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க 200 பிரத்யேக பூங்காக்கள் , வங்கித்துறை சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- வளர்ச்சியின் பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்து இருக்கிறோம்.
- ஜிஎஸ்டி சீர்திருத்தம், லேபர் கோட் சீர்திருத்தம் என பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியவதாவது:-
* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது.
* இளைஞர் சக்தியை முன்னிறுத்தி 2026- 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
* வளர்ச்சியின் பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்து இருக்கிறோம்.
* 3 முக்கிய கடமைகளின் அடிப்படையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் 350 சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.
* அனைவருக்குமான வளர்ச்சி, நிலையான பொருளாதாரம், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஆகிய மூன்றும் முக்கிய கடமை.
* மிக முக்கியமாக ஜிஎஸ்டி சீர்திருத்தம், லேபர் கோட் சீர்திருத்தம் என பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
- இது மோடி அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலத்தில் இரண்டாவது பட்ஜெட்டாகும்.
- இந்த சுருக்கமான உரை சுதந்திர இந்தியாவில் இதுவரை நிகழ்த்தப்பட்ட மிகக் குறுகிய பட்ஜெட் உரையாக உள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 நிதியாண்டிற்கான தனது ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இது மோடி அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலத்தில் இரண்டாவது பட்ஜெட்டாகும். விவசாயிகள், பெண்கள், வரி செலுத்துவோர் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி உள்ளனர்.
மக்களவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் அதன்மீது உரையாற்ற உள்ளார். இந்நிலையில் நாட்டில் இதுவரை மிக குறைந்த நேரம் நிகழ்த்தப்பட்ட பட்ஜெட் உரை குறித்த சுவாரஸ்ய தகவல் கவனம் பெற்றுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் 1977 ஆம் ஆண்டு மிகக் குறுகிய பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் 800 வார்த்தைகளைக் கொண்ட இடைக்கால பட்ஜெட்டை வழங்கினார். இந்த சுருக்கமான உரை சுதந்திர இந்தியாவில் இதுவரை நிகழ்த்தப்பட்ட மிகக் குறுகிய பட்ஜெட் உரையாக உள்ளது.
மறுபுறம், மிக நீண்ட உரை நிர்மலா சீதாராமனால் நடத்தப்பட்டது. பிப்ரவரி 1, 2020 அன்று அவர் 2:40 மணி நேர உரையை நிகழ்த்தினார்.
- சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.
- தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
2026-27 நிதியாண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.
இந்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் அதன் மீது உரையாற்றி வருகிறார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போது கையால் நெய்யப்பட்ட புடவைகளை அணிவதை பராம்பரியமாக கடைப்பிடித்து வருகிறார்.
- காஞ்சிபுரம் புடவைகள் இந்தியாவில் மிகவும் பிரபலமான கைத்தறிகளில் ஒன்றாகும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மேலும் ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலக்கட்டங்களில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்களை (9 முறை) தாக்கல் செய்தவர் என்ற சாதனையை நிர்மலா சீதாராமன் தற்போது எட்டுகிறார்.
இதனிடையே, தமிழ்நாட்டை சேர்ந்தவரான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போது கையால் நெய்யப்பட்ட புடவைகளை அணிவதை பராம்பரியமாக கடைப்பிடித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று 2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலுக்காக நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் இருந்து கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுச்சேலையை அணிந்து உள்ளார்.
பளபளப்பான பட்டு மற்றும் சிக்கலான கைவினைக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் புடவைகள் இந்தியாவில் மிகவும் பிரபலமான கைத்தறிகளில் ஒன்றாகும்.

2019-ம் ஆண்டு தனது முதல் பட்ஜெட் தாக்கலின் போது கைத்தறி புடவையை அணிந்து இருந்தார்.

2020ம் ஆண்டு பட்டு சேலை

2021-ம் ஆண்டு போச்சப்பள்ளி புடவை

2022-ம் ஆண்டு ஒடிசாவின் போம்காய் புடவை.

2023-ம் ஆண்டு கர்நாடகாவின் இல்கல்

2024-ம் ஆண்டு மங்களகிரி பட்டு

2024-ம் ஆண்டு இடைக்கால அமர்வுக்கு காந்தா எம்பிராய்டரி கொண்ட பட்டு சேலை

2025-ம் ஆண்டு பத்மஸ்ரீவிருது பெற்ற துலாரி தேவி பரிசளித்த தந்தம் கொண்ட மதுபானி கையால் வரைந்த புடவையை அவர் அணிந்திருந்தார்.
- தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
- மதுரை எய்ம்ஸ் போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
Union Budget 2026: வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?
* விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி
* கோவை, மதுரை மெட்ரோ ரெயில்,
* தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி,
* புதிய ரெயில்வே திட்டங்கள்,
* நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.
இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை எய்ம்ஸ் போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம் என்று கூறியுள்ளார்.
+3
- ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
- இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பட்ஜெட் 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இது 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 2017-ம் ஆண்டு இந்த தினத்தை பிப்ரவரி 1-ந் தேதி என மத்திய அரசு மாற்றியது.
அதன்படி அடுத்த நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் இயங்காது. ஆனால் இந்த பட்ஜெட்டுக்காக இன்றைய தினம் பாராளுமன்றம் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படுகிற பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.






