என் மலர்

    நீங்கள் தேடியது "union budget"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அப்பள சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • விவசாய துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்குவது மகிழ்ச்சி தருகிறது.

    மதுரை

    தமிழ்நாடு அப்பளம், வடகம் மோர் வத்தல் சங்க தலைவர் திருமுருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக எந்த திட்டமும் இல்லை. தேசிய சாலை போக்குவரத்து திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம். அதில் பரமக்குடி-ராமேசுவரம் சாலையை சேர்க்க வேண்டும். உழவன் நல நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.11.40 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம். விவசாய துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்குவது மகிழ்ச்சி தருகிறது.

    ஒரே நாடு ஒரே வரி அதுவும் 5 சதவீத வரியே என்ற திட்டம் அறிவிக்கப்படவில்லை. தேசிய வணிகர்நல வாரியம் இன்று வரை செயல்முறைக்கு வரவில்லை. வணிகர்களுக்கான ஓய்வூதியம் அறிவிப்போடு நின்று விட்டது. தேசிய அளவில் வருவாய் ஈட்டித் தரும் அப்பள வணிகர்களின் வாழ்வாதாரம், குடும்ப நலனைக் காக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
    • ரெயில்வே போக்கு வரத்து மேம்பாட்டுக்கென ரூ. 2.40 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்திய தனி நபர் வருமான வரி வரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவை யில்லை என்ற அறி விப்பு பாராட்டத்தக்கது.

    நாடெங்கும் 157 நர்சிங் கல்லூரிகள் நிறுவ உத் தேசித்துள்ளதும், விவசாய தொழில் முனை வோரை ஊக்குவிக்க தனி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதும், மீன் வளத்துறையை மேம்படுத்த ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே போக்கு வரத்து மேம்பாட்டுக்கென ரூ. 2.40 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதும், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.79,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதும் பாராட்ட தகுந்த அம்சங்கள். மின்சார வாகனங்களுக்கு பொருத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி குறைப்பை வரவேற்கிறோம்.

    மிகப்பழைய அரசு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாக னங்க ளுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு, உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்த 50 புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது சிறப்பான அம்சம்.

    இப்படி பல நல்ல அம்சங்களை கொண்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சேது கால்வாய் திட்டம் பற்றி ஒரு வரி கூட இல்லாதது தான் ஏமாற்றம் அளிக்கிறது. பொதுவாக இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓபிஎஸ்ஸின் மகன் எம்.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு
    • நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் தம்பிதுரைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓபிஎஸ்ஸின் மகன் எம்.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடிய விஷயங்கள், அவையை அமைதியாக நடத்துவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவும் ஓ.பி.ரவிந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் தம்பிதுரைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மோடி தலைமையிலான புதிய அரசு தனது முதல் பட்ஜெட்டை ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையில் புதிய மந்திரி சபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

    17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும். கூட்டத் தொடரின் முதல்நாளான ஜூன் 17-ம் தேதி புதிய எம்பிக்கள் பதவியேற்கிறார்கள். ஜூன் 19-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஜூன் 20-ம் தேதி பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.

    ஜூலை 4-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×