என் மலர்
நீங்கள் தேடியது "தங்கம் தென்னரசு"
- திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும்.
- ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்
2026-27-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து சட்டசபையில் 2 நாட்களாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சமூக நீதி அடிப்படையிலான திராவிட மாடல் அரசின் கொள்கைகள் நாட்டிற்கே வழிகாட்டுகிறது.
* பெரியார் வழியில் வந்த திராவிட மாடல் அரசு சமூகநீதியைக் காத்து நிலைநாட்டிட பாடுபட்டு வருகிறது.
* திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும்.
* சமூகநீதிக்கு பங்கம் வரும்போதெல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும்.
* மெட்ரோ ரெயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி தருவதை மத்திய பா.ஜ.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது.
* மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்.
* அந்த கொந்தளிப்பு இருக்கும்வரை தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆள்கிறார் என்றே அர்த்தம்.
* மகளிர் உரிமைத்தொகை திட்டமானது நாட்டிற்கே வழிகாட்டும் திட்டமாக உள்ளது.
* தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிருக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கி உள்ளார் முதலமைச்சர்.
* ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்
* தமிழ்நாடு பிற மாநிலங்களுடன் போட்டி போடவில்லை. வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடுகிறது.
* தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தான் தமிழ்நாடு போட்டி போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2025-26 நிதி ஆண்டில் ரூ.69 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
- மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் தாண்டி தமிழக அரசு சாதனை.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* 2025-26 நிதி ஆண்டில் ரூ.69 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
* 2026-27 நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடி நிலுவையில் உள்ளது.
* 2025-26ல் தமிழகத்தின் கடன் நிலுவைத் தொகை ரூ.9.52 லட்சம் கோடி.
* இடைக்கால பட்ஜெட்டின் படி தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் ரூ.10.62 லட்சம் கோடி.
* மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் தாண்டி தமிழக அரசு சாதனை.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை 2 மணி நேரம் 22 நிமிடங்கள் இடைவிடாமல் தாக்கல் செய்து தனது உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவு செய்தார்.
- தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.
- விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் எனும் விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் தமிழ்நாடு பெற்றுள்ளது
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* டாக்டர் கலைஞர் விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு 16,798 விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
* 4,226 விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான விளையாட்டுக் கருவிகளைத் தமிழ்நாடு வாகையர் அறக்கட்டளை வழங்கி உள்ளது.
* தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு 101 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
* மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா-இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளை நடத்திட 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நாடே வியக்கும் வண்ணம் கடந்த 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் இளையோருக்கான உலகக் கோப்பை ஆக்கி போட்டிகள் வரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சிறப்புற நடத்தப்பட்டதைப் பாராட்டும் விதமாக, இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பின் விளையாட்டு விருதை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் வென்றெடுத்துள்ளது.
* விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் எனும் விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் தமிழ்நாடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- பேரிடர் நிவாரணத்திற்கு தமிழக அரசு ரூ.9,160 கோடி செலவு செய்திருக்கிறது.
- 2026-27ல் மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3.93 லட்சம் கோடியாக இருக்கிறது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* புயல், பெரு வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறம்படக் கையாண்டது.
* ரூ.50 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் நிதி கோரிய போதிலும் ரூ.1151 கோடி மட்டுமே கொடுத்தது.
* பேரிடர் நிவாரண நிதியில் சொற்பமான நிதியைத் தான் மத்திய அரசு கொடுத்தது.
* பேரிடர் நிவாரணத்திற்காக மத்திய அரசு தமிழகத்தில் ரூ.6,013 கோடி தான் கொடுத்துள்ளது.
* பேரிடர் நிவாரணத்திற்கு தமிழக அரசு ரூ.9,160 கோடி செலவு செய்திருக்கிறது.
* இடைக்கால பட்ஜெட்டில் வறட்சி தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* முன்னுரிமை துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* வரிப் பகிர்வு பங்கை அதிகரிக்க வேண்டும் என கேட்ட போதும் 41% ஆக தொடரும் என அறிவித்தது.
* அரை நூற்றாண்டு காலம் கடந்த பிறகும் கூட நிலை மாறவில்லை.
* தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு 4.07% ஆக குறைக்கப்பட்டதால் ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* 0.44% மிகச்சிறிய அளவிலேயே நிதிப் பகிர்வு உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
* 16-ஆவது நிதிக்குழுவும் தனது கடமையில் இருந்து தவறி இருக்கிறது.
* செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது.
* ஜி.எஸ்.டி.யால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
* 2025-26 மத்திய அரசின் பட்ஜெட்டில் வரிப் பங்கு திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சுமார் ரூ.15,000 கோடி இழப்பீட்டு நிதி தர நிபந்தனை விதிக்கப்படுகின்றன.
* மத்திய அரசு பொறுப்பேற்ற திட்டங்களுக்கான நிதியை கூட விடுவிக்க மறுக்கிறார்கள்.
* ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கு ரூ.3548 கோடி, ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3112 கோடி நிலுவை.
* மத்திய அரசு தர வேண்டிய ரூ.9500 கோடி நிலுவைக் கடனில் தொடர்ந்து இருந்து வருகிறது.
* நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரிவருவாய் ரூ.2.06 லட்சம் கோடி.
* நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 11.15 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
* மத்திய அரசின் வரிப் பங்கீடு தமிழகத்திற்கு ரூ.62 ஆயிரம் கோடியாக இருக்கிறது.
* 2026-27ல் மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3.93 லட்சம் கோடியாக இருக்கிறது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- இடைக்கால பட்ஜெட்டில் வீட்டுவசதி, நகர்ப்புறத்துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* பால் பண்ணைகள் நவீனமயமாக்கலுக்காக ரூ.758 கோடி செலவிடப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.612 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் வீட்டுவசதி, நகர்ப்புறத்துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் பொதுப்பணித்துறைக்கு ரூ.1,694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு
* மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து நிதி வழங்காத நிலையிலும் ஆசிரியர், அரசு ஊழியர் நலனை காத்து வருகிறோம்.
* அரசு பணியில் இருப்பவர் விபத்தில் உயிரிழக்கும் பட்சத்தில் ரூ.1 கோடி வழங்கப்படும்.
* ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்கிறது. 5 ஆண்டுகளில் புதிதாக 43 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
* மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 23.50 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் 17318 பேர் புதிதாக காவல்துறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* போதை பொருள்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
* பள்ளி, கல்லூரிகளில் 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 41.23% பங்களிப்புடம் தமிழ்நாடு முதலிடம்.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறைக்கு ரூ.17,111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதுவரை 77 ஆயிரத்து 800 இணைய வழி வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு, 2021-22-ம் நிதி ஆண்டில் 84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடானது, 2025-26 ஆம் நிதியாண்டில் 1433 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் 23 லட்சத்து 56 ஆயிரத்து 623 நபர்களுக்கு, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் அதன் சூழ்பகுதிகள் மற்றும் மாநிலத்தின் இதர நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, இதுவரை 77 ஆயிரத்து 800 இணைய வழி வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், சென்னை மற்றும் அதன் கூழ் பகுதிகளில் 15 ஆயிரத்து 393 இணையவழி பட்டாக்களும், இதர மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 62 ஆயிரத்து 407 இணையவழி பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.
* நவீன மின்னணு நில அளவைக் கருவிகளைப் பயன்படுத்தி நிகழ்நேர இயக்கவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மறு நில அளவைப் பணி, கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் போன்ற அனைத்து சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், 35.33 லட்சம் நபர்கள் பயனடைந்து வருகின்றனர். அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும், இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5463 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
* ரூ.1000 கோடியில் அயோத்திதாசர் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* சென்னையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி, ரூ.44 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
* அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் ரூ.160 கோடியில் 385 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 29 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1,317 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் 12,931 கோவில்களில் ரூ.8100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
* 84 கோவில்களில் ரூ.425 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
* கோவிலுக்குச் சொந்தமான 8111 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 120 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
* சுற்றுலாத்துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
* அதிகம் அறியப்படாத 22 சுற்றுலா தலங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நகரம் ரூ.22 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
* மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசின் தலையாய நோக்கம்.
* மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நகரம் ரூ.22 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
* நடப்பாடிண்டில் 14.89 லட்சம் மெட்ரின் டன், 5 ஆண்டுகளில் 2.15 கோடி மெட்ரின் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கூட்டுறவு உணவு நுகர்வோர் துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 45 லட்சம் கால்நடைகளுக்கு ரூ.57 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.4,435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கூட்டுறவு வங்கிகளில் ரூ.12,359 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
* மீனவர்களின் நலனுக்கும் நல வாழ்வுக்கும் தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
* இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.20 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
* தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுக பணிகள் நடைபெற்று வருகின்றன.
* மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்படும் தொகை ரூ.8000ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- தொழில் முதலீடு ஊக்குவிப்புத் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.1791 கோடியில் கோவையில் ஜி.டி.நாயுடு பெயரில் உயர்மட்ட சாலை திறக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* கப்பல் கட்டுமானத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
* தொழில் முதலீடு ஊக்குவிப்புத் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.10.70 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் ரூ.405 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு செமி கண்டக்டர் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை பரவலான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
* கோவை மாவட்டத்தில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க நகை பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது.
* சென்னை தரமணியில் செமி கண்டக்டர் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
* இடைக்கால பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.819 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் தொழில் முதலீடு, வர்த்தகத்துறைக்கு ரூ.4882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் மின் தேவை எதிர்காலத்தில் இருமடங்காக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
* பசுமை மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் 1000 மெகாவாட் மின்கல சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் ராம்சார் தலங்கள் உள்ளன.
* கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 100 காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் ரூ.6121 கோடியில் ரூ.12,087 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 12 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 1885 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.8313 கோடியில் 4 வழித்தடமாக அகலப்படுத்தப்படுகின்றன.
* 5 ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் 3,673 பேருந்துகள் ரூ.361 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
* ரூ.1791 கோடியில் கோவையில் ஜி.டி.நாயுடு பெயரில் உயர்மட்ட சாலை திறக்கப்பட்டுள்ளது.
* புதிய சிற்றுந்து திட்டத்தின் மூலம் 6303 வழித்தடங்களில் சிற்றுந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
* மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நெடுஞ்சாலைகள் துறை, சிறுதுறைமுகங்கள் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
* 1,168 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
* சென்னையில் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே ரூ.671 கோடியில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
* புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு நில எடுப்புப் பணிகளுக்கு அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது.
- அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கடுமையான தேர்தல் போட்டி நிலவுவதால், மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
- சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.
2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கடுமையான தேர்தல் போட்டி நிலவுவதால், மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
- இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன.
- 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் எழுத்துக்கள் பொறி பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுப்பு. இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன.
'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் 'சிகை கொற்றன் - வர கண்ட' (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது.
ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகும்.
இதையொட்டி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது.
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது.
ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி. "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதோடு "உலகம் தழுவிய தமிழ்" என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு என்ற பெயரை மாநிலத்திற்குச் சூட்டி, இருமொழிக் கொள்கையால் தமிழரைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்.
- பேரறிஞரின் பாதையே, சமூகநீதியைப் பேணிக் காத்து, ஆதிக்கம் எனப்படும் பேதைமையை ஒழிக்கும், பேராயுதம்.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை ஒட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு என்ற பெயரை மாநிலத்திற்குச் சூட்டி, இருமொழிக் கொள்கையால் தமிழரைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்.
'மக்களிடம் செல். மக்களுடன் வாழ். அவர்களிடமிருந்து கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்களுக்குச் சேவை செய்! அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு' என்பது அண்ணா நமக்கு வகுத்துத் தந்த அரசியல் பாதை. பேரறிஞரின் பாதையே, சமூகநீதியைப் பேணிக் காத்து, ஆதிக்கம் எனப்படும் பேதைமையை ஒழிக்கும், பேராயுதம்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






