search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Budget"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
    • கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

    சென்னை:

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அன்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3-ம் நாள் நிகழ்வு இன்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, தங்கவேலு, பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    பின்னர், காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

    இதற்கிடையே கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

    அப்போது, பட்டப்பகலில் கொடூரமாக கொலை நடந்துள்ளது. இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆணவக்கொலையில் சம்மந்தப்பட்டவர் அவதானப்பட்டி அதிமுக கிளைச்செயலாளர் என்பது தெரிய வந்துள்ளது. சமூக நீதி காக்கும் மண்ணாக உள்ள தமிழ்நாட்டில், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை பேணிக்காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

    கொலை செய்த பெண்ணின் தந்தையை அதிமுக கிளை செயலாளர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதால் சட்டசபையில் அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
    • சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

    தமிழக சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    இந்த நிகழ்வை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21-ந்தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில் சொத்துகளை பாதுகாப்பதற்கு அரசு தீவிர முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
    • நடப்பாண்டில், 574 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டன.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    கோவில் சொத்துகளை பாதுகாப்பதற்கு அரசு தீவிர முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, 4,491 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4,236 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. கோவில் நிலங்களின் புவிசார் ஒருங்கிணைப்புகளை பதிவு செய்யவும், நில வளங்கள் பற்றிய தரவுத்தளத்தை தயாரிப்பதற்கும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 1,08,000 ஏக்கரில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

    நடப்பாண்டில், 574 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டன. திருச்செந்தூர் கோவிலில் 305 கோடி ரூபாயிலும், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் 166 கோடி ரூபாயிலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 146 கோடி ரூபாய் செலவிலும் பெருந்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    வரும் நிதியாண்டில் 400 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் 485 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
    • கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,500 பணியாளர்கள் தங்கும் வசதிகளுடன் தொழிலாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால் ஏறத்தாழ 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    மேலும், கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,500 பணியாளர்கள் தங்கும் வசதிகளுடன் தொழிலாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும். இதனால், பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் இம்மதிப்பீடுகளில் தொழில் துறைக்கு 3,268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது.
    • இரண்டு புதிய தொழிற்சாலைகள் ராணிப்பேட்டையிலும், கள்ளக்குறிச்சியிலும் அமைக்கப்படவுள்ளன.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்த அரசு முனைப்பாக அரசு உள்ளது.

    வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது.

    இத்தொழிற்சாலைகள் ஏற்கனவே செய்யாறு, பர்கூர் ஆகிய இடங்களில் செயல்பாட்டில் உள்ளன. திண்டிவனத்தில் 5,400 பெண்களுக்கும், பெரம்பலூரில் 31,600 பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் தரக்கூடிய இரண்டு தொழிற்சாலைகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் இரண்டு புதிய தொழிற்சாலைகள் ராணிப்பேட்டையிலும், கள்ளக்குறிச்சியிலும் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 54 அரசு பல்தொழில் நுட்ப கல்லூரிகள் ரூ.2283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்.
    • சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

    சென்னை:

    அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். நடப்பு நிதியாண்டில் மருத்துவத் துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் சி.எம்.டி.ஏ. மூலம் சென்னையில் அமைக்கப்படும்.

    பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.25 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    நடப்பு கல்வியாண்டில் உயர் கல்வித்துறைக்கு ரூ.6967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    26 தொழில்நுட்ப கல்லூரிகள், 55 கலைக் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்காக ரூ.100 கோடியில் விடுதிகள் அமைக்கப்படும். வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்படும்.

    நடப்பு நிதியாண்டில் ஆதி திராவிடர் நலத் துறைக்கு ரூ.3513 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிரை வண்ணார் நல வாரியத்துக்கு புத்துயிர் அளிக்க ரூ.10 கோடி அளிக்கப்படும்.

    நகர்ப்புற ஊரக பகுதிகளில் ஆதிதிராவிடர் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 15 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் செயல் படுத்தப்படும்.

    54 அரசு பல்தொழில் நுட்ப கல்லூரிகள் ரூ.2283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும். சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

    711 தொழிற்சாலைகளில் உள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களும் பயன் அடைவார்கள்.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 11.82 லட்சம் நோயாளிகளுக்கு 993 கோடி ரூபாய் மதிப்பிலான உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உள்ளன.

    கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும். 1020 கோடி ரூபாய் செலவில் மதுரை, கோயம்புத்தூர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களிலுள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்டு வரும் புதிய உயர் மருத்துவக் கட்டிடங்களும் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

    திருச்சிராப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் உயர் மருத்துவ சிகிச்சைத் தேவைகளை நிறைவு செய்து வரும் மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில், 110 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்தது.
    • தி.மு.க. அரசின் 3-வது பட்ஜெட் மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட்‌.

    சென்னை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு தொகுதியில் வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல அடைத்து வைத்து சித்திரவதை செய்து அச்சுறுத்தினர். இப்படி வாக்காளர்களை வாக்களிக்க செய்தது. மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்து உள்ளது.

    பால் விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய்

    வழக்குகள் போடப்படுகிறது. இதுபோன்ற மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தோம்.

    பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. எதிர்க்கட்சியினரின் குரல் வளையை திமுக அரசு நசுக்குகிறது.

    நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்கு விவசாயிகளிடம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு அனுமதி பெறாதது கண்டிக்கத்தக்கது.

    அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்காமல் தி.மு.க. அரசு ஏமாற்றி இருக்கிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 23 மாதங்களில், 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில் திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். ஆனால், அதற்கான நிதியை வழங்கவில்லை.

    பத்திரப்பதிவு , சாலை வரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை மூலமாக அரசுக்கு வரிவருவாய் உயர்த்து இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், திமுக அரசு அதை செய்யவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்களை அறிவித்தோம், அதற்கான நிதியையும் ஒதுக்கினோம். கொரோனா காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் வருவாய் குறைந்தது. கொரோனா தொற்றை குறைப்பதற்காக பல்வேறு வழிகளில் செலவு செய்தோம். ஆனால், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து, வரி வருவாய் அதிகரித்து, செலவு குறைந்தது. ஆனாலும், நிதி பற்றாக்குறை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து இருக்கிறது. அடிக்கடி பாலியல் வன்கொடுமை நடக்கிறது. ஒரே நாளில் 13 கொலை நடந்து இருக்கிறது.

    பள்ளி, கல்லூரியில் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது.

    இப்போது, ஆட்சிக்கு வந்தபிறகு அந்தர்பல்டி அடித்து, தகுதியின் அடிப்படையில் தான் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இது ஏமாற்றும் வேலை. இந்த திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கி இருப்பதன் மூலம், சுமார் ஒரு கோடி பெண்களுக்கு வழங்க முடியும் என்று நினைக்கிறேன்.

    தி.மு.க. அரசின் 3-வது பட்ஜெட் மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட். மின்மினி பூச்சி, மக்களுக்கு வெளிச்சம் தராது. கானல் நீர், மக்களின் தாகத்தை தீர்க்காது. அதேபோல் தான் தி.மு.க. அரசின் பட்ஜெட் வெற்று அறிவிப்பாக உள்ளது. இதன்மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிராம பகுதிகளில் 10 ஆயிரம் குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
    • ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்டம் ரூ.7145 கோடியில் செயல்படுத்தப்படும்.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    கட்டிட வரைபடம் மற்றும் மனை வரைபட அனுமதியை இணைய வழியில் பெற இணையதளம் உருவாக்கப்படும்.

    தெருநாய்களுக்கான இன விருத்தி கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்காக 5,145 கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கிராம பகுதிகளில் 10 ஆயிரம் குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்டம் ரூ.7145 கோடியில் செயல்படுத்தப்படும்.

    கோவையில் செம்மொழி பூங்கா ரூ.172 கோடியில் நிறுவப்படும். ஈரோடு அந்தியூரில் 80567 ஹெக்டேர் பரப்பில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்.

    விழுப்புரம் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவை-அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
    • மதுரையில் ரூ.8500 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டப்பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் 119 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதன் முதல் வழித்தடமாக, பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை-அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

    மதுரையில் ரூ.8500 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பூங்காவை நிறுவி, தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் கலைஞர்.
    • ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பூங்காவை நிறுவி, தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் கலைஞர். இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில் 7 மாவட்டங்களில் நியோ-டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதன் நீட்சியாக ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.