என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக சட்டசபை"
- 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த மாதம் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
- மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. நாளை வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடரந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மாதம் 14ஆம் தேதி தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.
மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதமும், மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் எனவும் சபாநாயகர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி நாளான இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி பிரதிநிதித்துவம் சட்ட முன்வடிவு, கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டன. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
- வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும்போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.
- வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும்போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் பிணையில் வெளிவர முடியாத சிறைத்தண்டனை.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 26ஆம் தேதி கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க இந்த மசோதா வழி வகை செய்கிறது.
மேலும், வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும்போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும் போன்றவை மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
இந்த மசோதாவின்படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்.
- 18 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பினர்களில் ஒருவராக நியமிப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதலமைச்சரால் 18.11.2023 அன்று சட்டசபையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந்தேதியன்று பிறப்பித்த தீர்ப்பின்படி, அந்த மசோதாக்களுக்கு 18.11.2023 அன்றே ஒப்புதல் பெறப்பட்டதாக கருதப்படுகிறது.
அந்த பல்கலைக்கழக சட்டங்கள் மூலம் 18 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், மாற்றுத்திறன் அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்கிற மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம்-2016-ன் (மத்திய சட்டம்) 3-ம் பிரிவின்படி, பல்கலைக்கழகங்களின் அதிகார அமைப்புகளில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவதற்கு, காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான தகுதியின்மையை நீக்குவதற்கு, சில பல்கலைக்கழகச் சட்டங்களில் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும் அவர்கள் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியின்மையை நீக்க முடிவு செய்து உள்ளது.
மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பினர்களில் ஒருவராக நியமிப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா இன்று அவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
- சட்டசபையில் முன்வரிசையில் 6-ம் நம்பர் இருக்கையில் பொன்முடி அமர்ந்து வந்தார்.
- செந்தில் பாலாஜிக்கு 3-வது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு சட்டசபையில் 2-வது வரிசையில் கடைசிக்கு முந்தைய இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் முன்வரிசையில் 6-ம் நம்பர் இருக்கையில் பொன்முடி அமர்ந்து வந்தார். தற்போது அந்த இருக்கை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியை இழந்த பொன்முடிக்கு சட்டசபையில் மூன்றாவது வரிசையில் கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கும் 3-வது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தி.மு.க. அரசின் பார்ட் 2 பெயிலிர் தான்.
- ஊர்ந்து என்பதற்கு பதிலாக தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளுங்கள்.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்திருக்கிற உயரம் இந்தியாவே காணாதது.
மேலே பாம்பு கீழே நரிகள் குதித்தால் அகழி ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு மறுபக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
தமிழ்நாடு, தமிழர்கள், மாநில உரிமைக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading.... அதில் இன்னும் சாதனைகள் படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும் என்று கூறினார்.
இதையடுத்து, பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், அ.தி.மு.க. அரசு ஊர்ந்து சென்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததை ஏற்க முடியாது. தி.மு.க. அரசின் பார்ட் 2 பெயிலிர் தான் என கூறினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், ஊர்ந்து என்பதற்கு பதிலாக தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளுங்கள். யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, உறுத்தினால் சொல்லுங்கள் நீக்க சொல்லுவோம். அன் பார்லிமென்ட் சொல்லி மட்டுமே அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியும் என்றார்.
இதனை தொடர்ந்து ஊர்ந்து, தவழ்ந்து என்று முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
- நீலகிரி மாவட்டம் உதகையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு கட்டப்படும்.
- விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மண்டலம் தொடங்கப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் இன்று காவல் துறை மானிய கோரிக்கை மீது பேசுகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
கோவை மாவட்டம் நீலாம்பூரில் புதிதாக போலீஸ் நிலையம் ரூ. 4.88 கோடி செவில் உருவாக்கப்படும்.
கீழடியில் புதிதாக போலீஸ் நிலையம் ரூ.2.83 கோடியில் உருவாக்கப்படும்.
சேரன்மாதேவி உட்கோட்டத்தில் உள்ள மேலச்செவலில் புதிதாக போலீஸ் நிலையம் ரூ.4.88 கோடி செலவில் உருவாக்கப்படும்.
பொங்கலூரில் புதிதாக காவல் நிலையம் ரூ.2.83 கோடி செலவில் உருவாக்கப்படும்.
திருவண்ணாமலை கோவிலுக்கு என புதிதாக போலீஸ் நிலையம் ரூ.2.83 கோடி செலவில் உருவாக்கப்படும்.
குழித்துறையில் புதிதாக இருப்புப்பாதை காவல் நிலையம் ரூ.2.15 கோடி செலவில் உருவாக்கப்படும்.
மதுரை மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சிந்தாமணியில் புதிதாக காவல் நிலையம் ரூ.6.57 கோடியில் உருவாக்கப்படும்.
மதுரை மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மாடக்குளத்தில் புதிதாக போலீஸ் நிலையம் ரூ.6.57 கோடி செலவில் உருவாக்கப்படும்.
திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை, பெரம்பூரில் உள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் தலா ரூ.7.50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
ரூ.72.30 லட்சம் செலவில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் புதிதாக போலீஸ் உட்கோட்டம் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகர காவல், அரும்பாக்கம் சரகத்தில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் ரூ.2.68 கோடி செலவில் அமைக்கப்படும்.
சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக திட்டமிட்ட குற்றப்பிரிவு ரூ.13 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஒன்று ரூ.8 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவின் இணையவழி குற்றப் பிரிவில், தேவையான பணியிடங்களுடன் சமூக ஊடக நுண்ணறிவுப் பிரிவு ஒன்று புதிதாக ரூ.63 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத் தில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு என புதிய அலகு ஒன்று ரூ. 1.95 கோடி செலவில் உருவாக்கப்படும்.
செங்குன்றம் மாவட்ட போக்குவரத்து காவல் பிரிவு புதிதாக ரூ.59 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகரில் உள்ள விருகம்பாககம் காவல் நிலையத்திற்கு ரூ.6.46 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
ஆவடி மாநகரில் சட்டம்-ஒழுங்கு குற்றப்பிரிவு மற்றும் துணை ஆணையாளர் அலவலகங்களுக்கு என ஒருங்கிணைந்த புதிய காவல் நிலைய கட்டிடம் ரூ.7.71 கோடி செலவில் கட்டப்படும்.
மொத்தம் 321 குடியிருப்புகள் ரூ.143.16 கோடி செலவில் கட்டப்படும்.
காவலர் தங்குமிடம் வசதி இல்லாத அல்லது குறைவாக உள்ள 20 மாவட்ட, மாநகரங்களில் ஆயுதப்படை காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்காக 50 படுக்கை வசதிகள் கொண்ட காவலர் தங்கும் இடங்கள் ரூ.30 கோடி செலவில் கட்டப்படும்.
நுண்ணறிவுப் பிரிவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்கு கோவை மாநக ரத்தில் ரூ.5.98 கோடி செலவில் அலுவலக கட்டிடம் கட்டப்படும்.
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மாநகரங்களின் (சென்னை பெருநகரம் தவிர) பயன்பாட்டிற்கு என 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் ரூ. 12 கோடி செலவில் வாங்கப்படும்.
சென்னைப் பெருநகரில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய, காவல் துறையில் உள்ள பாதுகாப்புப் பிரிவின் பயன்பாட்டிற்கு என வெடிகுண்டுகளை கண்டு பிடித்து செயலிழக்கச் செய்யும் கருவிகள் ரூ.3.99 கோடி செலவில் வாங்கப்படும்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் அண்ணா பதக்கங்களின் எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்தப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூ.1.08 கோடி ஆகும்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் 3000-ல் இருந்து 4000 ஆக உயர்த்தப்படுவதுடன், மாதாந்திர பதக்கப்படி ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூ.4.80 கோடி ஆகும்.
தடய அறிவியல் துறையின் குற்ற நிகழ்விடப் பார்வையிடல் விசாரணை முறையை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, 50 நடமாடும் தடய அறிவியல் வாகனங்களும் அவற்றிற்கு தேவையான மனிதவளம், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றிற்கு என ரூ.38.25 கோடி வழங்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் அருணாசலேஸ்வரர் கோவில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, வேலூர் மாவட்டம் பள்ளிக் கொண்டா, விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம், கரூர் மாவட்டம் குளித்தலை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஆகிய 7 இடங்களில் புதிதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் ரூ.16.80 கோடி செலவில் அமைக்கப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் திருச்சியை தலைமை இடமாக கொண்ட மத்திய மண்டலத்தை 2 ஆக பிரித்து விழுப்புரத்தை தலைமை இடமாக கொண்டு ஒரு புதிய மண்டலம் ரூ.1.04 கோடி செலவில் உருவாக்கப்படும்.
தலா 25 தீயணைப் போர்களைக் கொண்ட 2 கமாண்டோ படைகளை உருவாக்குவதற்கு என அவர்களுக்கு பயிற்சி மற்றும் சிறப்பு உபகரணங்கள் ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும்.
- சுயாட்சி கனவை நனவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு வரலாறு படைக்கும்.
சென்னை:
சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழ்நாடு படைத்த சாதனைகளை கூறினார். மேலும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை உறுதி செய்யப்படும். உதகை, தருமபுரியில் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும். விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தீயணைப்பு மண்டலம் உருவாக்கம் என பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சி கனவை நனவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக 5-வது ஆண்டாக அடி எடுத்து வைக்கும் இந்த வேளையில், இந்த மன்றத்தில் நின்று உறுதியோடு சொல்கிறேன் எனது பயணம்.... தமிழ்நாடு, தமிழர்கள், மாநில உரிமைக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading.... அதில் இன்னும் சாதனைகள் படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும். வாழ்க தமிழ்... வெல்க தமிழ்நாடு... என்றார்.
- 'காலனி' என்ற சொல்லை நீக்க வேண்டும் என வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்து இருந்தார்.
- ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* 'காலனி' என்ற சொல் வசைச்சொல்லாக மாறி இருப்பதால் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்.
* ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்.
'காலனி' என்ற சொல்லை நீக்க வேண்டும் என வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஆதி குடிகளை இழிவுபடுத்தும் 'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- சட்டம் ஒழுங்கு சீர்குலைய இது மணிப்பூரும் அல்ல, காஷ்மீரும் அல்ல.
- காவலர் நாள் கொண்டாடப்படும் தினத்தில் சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்.
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* பல்வேறு தடைகளையும் தாண்டிதான் திராவிட மாடல் ஆட்சி சாதித்து வருகிறது.
* சட்டம் ஒழுங்கு சீர்குலைய இது மணிப்பூரும் அல்ல, காஷ்மீரும் அல்ல.
* தமிழ்நாட்டின் அமைதிக்கு காவல்துறைதான் காரணம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
* குற்றச்சம்பவங்களுக்கு உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதால் அமைதி நிலவுகிறது.
* குடியிருப்புகளை சுற்றி சந்தேக நடமாட்டம் இருந்தால் போலீசுக்கு தகவல் கூறுங்கள்.
* ஆண்டுதோறும் செப்.6-ந்தேதி காவலர் நாள் கொண்டாடப்படும்.
* காவலர் நாள் கொண்டாடப்படும் தினத்தில் சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்.
* அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் காவலர்களுக்கு மருத்து பரிசோதனை செய்துகொள்ள வழிவகை செய்யப்படும்.
* காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது, ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
* குற்றம் நடந்த உடன் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள்.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு.
* தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் இதை கூறி உள்ளது.
* இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
* இது சாதாரண சாதனை அல்ல கடும் உழைப்பால் விளைந்த சாதனை.
* இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-வது முறையும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும்.
* திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்திருக்கிற உயரம் இந்தியாவே காணாதது.
* மேலே பாம்பு கீழே நரிகள் குதித்தால் அகழி ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு மறுபக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம்.
* இது தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை
* என் 60 ஆண்டுகால பொதுவாழ்வு குறித்து ஸ்டாலின் என்றால் 'உழைப்பு உழைப்பு உழைப்பு' என கலைஞர் முன்னதாக கூறியிருந்தார்.
* கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் 'சாதனை சாதனை சாதனை' என கூறியிருப்பார்.
* கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.
* கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள்.
* கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
* கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத நிலை உள்ளது. உயர் கல்வியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது.
* நிதி ஆயோக் வெளியிட்ட வளர்ச்சி இலக்க குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
* தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்போர் 1.43 சதவீதம் மட்டுமே.
* இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்.
- மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தெரிவிக்கிறார்.
- மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் புதிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்திருந்தார்.
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் (15-ந்தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந்தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார். இதன் மீது சட்டசபையில் ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள். அவ்வப்போது குறுக்கிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இந்த மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தெரிவிக்கிறார். அப்போது காவல் துறை தீயணைப்பு துறைக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.
சட்டசபைக் கூட்டத் தொடரில் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார்.
அதே போல் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் புதிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்திருந்தார்.
இதே போல் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முத்துசாமி, மூர்த்தி கோவி. செழியன் ஆகியோரும் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனர். கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்கான மசோதாவும் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மசோதாக்கள் அனைத்தும் நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. அத்துடன் சட்டசபைக் கூட்டம் நாளை முடிவடைகிறது.
- துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி.
- தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளது. 3,643 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொள்ளை, கொலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டக்கூடாது.
* அ.தி.மு.க. ஆட்சியின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி.
* அவமான ஆட்சிக்கும், துயரமான ஆட்சிக்கும் அ.தி.மு.க. ஆட்சியே சாட்சி.
* துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி.
* இந்த ஆட்சியை பற்றி குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை.
* தமிழ்நாட்டை புலம்ப வைத்ததுதான் அ.தி.மு.க. ஆட்சியுடைய சாதனை
* தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளது. 3,643 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
* ஏ மற்றும் ஏ பிளஸ் ரவுடிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* தி.மு.க. ஆட்சி குறித்து பேச அ.தி.மு.க.விற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.