என் மலர்
நீங்கள் தேடியது "TN Agriculture Budget"
- புதிதாக 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்படும்.
- பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகைக்காக 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ரூ.495 கோடியில் 3.30 லட்சம் மெட்ரிக் கடன் கொள்ளளவு கொண்ட 130 நவீன சேமிப்பு தளங்கள்.
* ரூ.331 கோடியில் 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்பட உள்ளன.
* பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3,002 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் 101 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம். பனையில் குட்டை ரகத்தை உருவாக்க ஆராய்ச்சி நடைபெறுகிறது.
* விவசாயிகளுக்காக 24 சேவைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட உழவர் செயலியை இதுவரை 20 லட்சம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
* வெள்ளக்காலங்களில் நெல்மணிகள் வீணாவதை தடுக்க ரூ.495 கோடியில் 130 நவீன சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளது.
* புதிதாக 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்படும்.
* பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்க லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகைக்காக 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் அரசு மீன் பண்ணைகள் மூலம் 48 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
* அலைகள் திட்டம் மூலம் 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நுண் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
* விபத்தில் உயிரிழக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கான மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஆடு, பன்றி, கோழி வளர்ப்பு பண்ணை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
* தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 5 ஆண்டு காலத்தில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,894 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக்கலை கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை பேரிடருக்காக ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 25.36 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்.
* 150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மின்னணு சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
* புதிதாக 2 லட்சம் விவசாயிகளின் நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
* 150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மின்னணு சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
* நுண்ணீர் பாசனத்திட்டத்தை பயன்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
* 5 ஆண்டுகளில் குளிர் பதனிடும் கிடங்குகளுக்காக 27 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
* 5 ஆண்டு காலத்தில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,894 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* இ-வாடகை செயலி மூலம் 3,816 வேளாண் இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டது.
* கடந்த 5 ஆண்டுகளில் 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* உழவர் சந்தைக்கு கொண்டுவரப்படும் காய்கறிகளின் அளவு தினமும் அதிகரித்து வருகிறது.
* உழவர் சந்தைகளில் சுமார் 4 லட்சம் மக்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.
* புவிசார் குறியீட்டுக்காக 41 விலைப்பொருட்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
* ஒன்பது பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
* கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக்கலை கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.
* நாகை, சிவகங்கை, கரூரில் புதிதாக அரசு வேளாண் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
* 30 ஆயிரம் நபர்களுக்கு தேனீ வளர்ப்பு மதிப்பு கூட்டு இயந்திரங்களை இயக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
* 150 விவசாயிகள் அயல் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
* இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களை உருவாக்க தனியாரிடமிருந்து 176 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
* பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3002 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1320 வேளாண் இயந்திர வாடகை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- ஐந்தாண்டுகளில் 68 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு அரசின் வேளாண் காடுகள் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
* 496 பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* 4150 சூரிய சக்தி பம்பு செட்கள் வாங்க 83 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* 1320 வேளாண் இயந்திர வாடகை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* 10 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக மக்காச்சோள சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* மிளகாய், ஏலக்காய், சாதிக்காய் சாகுபடி 22,950 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
* 8400 ஏக்கரில் முந்திரி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ரூ.12 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* தக்காளி, வெண்டை, கத்திரிக்காய் சாகுபடி பரப்பளவை 1 லட்சம் ஏக்கரில் விரிவாக்கம் செய்ய 1.68 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* 5 ஆயிரம் புதிய பம்பு செட்கள் 7 கோடி ரூபாயில் வழங்கப்பட்டுள்ளன.
* 2021-22ம் ஆண்டு முதல் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* ஐந்தாண்டுகளில் 68 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
* கடந்த 5 ஆண்டுகளில் 80 கோடி மதிப்பிலான பனைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
* 650 மகளிர்க்கு பனை ஓலை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
* பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியின் மூலம் 1.45 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
* 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
* 2025-26ம் ஆண்டில் குறுவை பருவத்தில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
* சூரிய சக்தி பம்பு செட்டு போன்ற உயர்மதிப்பு திட்டம்- ஆதி திராவிடர் பழங்குடியினர் பிரிவு சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* ரூ.1600 கோடி மதிப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
- 2025-26-ம் ஆண்டில் 12.45 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 58 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
* உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
* உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
* கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் இயற்கை வேளாண்மை குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
* 10,588 சிறு பாசன குளம், ஊரணி, கால்வாய் தூர்வாரி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
* நெல் ஜெயராமன் திட்டத்தில் 900 மெ.டன் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
* மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 21.35 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
* 70 ஆயிரம் விவசாயிகளுக்கு நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
* 482 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு 19.51 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
* மரங்களை வெட்டி எடுத்துச்செல்லும் விதிகளை தளர்த்தும் வகையில் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.
* 2025-26-ம் ஆண்டில் 12.45 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
* கடந்த ஆண்டை விட 3 லட்சம் ஏக்கர் கூடுதலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
* வேளாண் துறையில் இளைஞர்களை தொழில் முனைவோராக்க ரூ.4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன.
* உரம் விதைகளை வழங்க ஆயிரம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பாரம்பரிய உணவுகளை காக்க 20.80 லட்சம் ஊட்டச்சத்து தளைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
* கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு.
* விவசாய தொழிலாளர்களின் பற்றாக்குறையை சரி செய்ய 77,000-க்கும் மேற்பட்ட வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு தரப்பட்டுள்ளது.
* பழம், காய்கறி பரப்பு சாகுபடியை விரிவாக்கம் செய்ய அரசு ஊக்குவிக்கிறது.
* கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கம்பு சாகுபடி பரப்பளவு 1.33 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.175 கோடி நிதி பெற்றுள்ளனர்.
* துவரை சாகுபடி விரிவாக்க இயக்கம் மூலம் ரூ.66 கோடியில் 2.55 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை.
- தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண்மைக்கு என நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தமிழ்நாடு அரசின் சிறப்புக்குரிய ஒரு திட்டமாகும்.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படக் கூடிய ஒன்று தான். இந்த நிதிநிலை அறிக்கையில் அது தொடா்பான அறிவிப்பு இல்லை என்பது உண்மை தான். ஆனால் மானியக் கோரிக்கையின் போது, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தமிழக முதலமைச்சரும், துறைச் சாா்ந்த அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையில் நியாயம் உள்ளது. அதை அரசு பரிசீலனை செய்து தள்ளுபடி செய்யும் என நம்புகிறேன்.
வேளாண் துறைக்கு மட்டு மல்ல கூட்டுறவுத்துறை, ஆவின் துறை உள்ளிட்ட 9 துறை இருக்கிறது. எல்லா வற்றிற்கும் சேர்த்து தான் 45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட் என்றாலும் கூட பல நிதி வரவு செலவு அறிக்கை, நிதி பற்றாக்குறை இருக்கதான் செய்கிறது. இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு மானிய கோரிக்கையின் போது பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், அரியலூர் மாவட்டத்தில் முந்திரி வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்க நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து வருவது தொடர் கதையாக நீடிக்கிறது. தமிழ்நாடு அரசும் தொடர்ந்து பல தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது.
மத்திய அரசு இந்த பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை. இது என்னவோ தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
மத்திய அரசு நினைத்தால் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். அந்த அளவிற்கு வலிமையுள்ள அரசாக இருக்கிறது. இலங்கை அரசோடும் இணக்கமான அரசாகவும் இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மீனவா்களின் பிரச்சனைகளில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக அணுகுவதே பிரச்சனைகள் தொடா்வதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.
தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
- தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
- 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நேற்று 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
- 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிரிட, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஆடாதொடா, நொச்சி தாவர வகைகளை நடவு செய்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:
* கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
* தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழை பயிர் சேதத்திற்கு விரைவில் 208.20 கோடி நிதி வழங்கப்படும்.
* 2023-24ம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* முதலமைச்சரின் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" 2024-25ம் ஆண்டில் இந்த திட்டம் 22 இனங்களுடன், 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.
* 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிரிட, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
* 10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண் புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்
* நிரந்தர மண்புழு உரத்தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம்.
* மண்வளம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழ் மண்வளம் இணைய தளம் வாயிலாக உரப்பரிந்துரை வழங்கப்படும்.
* 37,500 ஏக்கர் களர், அமில நிலங்களைச் சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* 5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள், 2 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.
* 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஆடாதொடா, நொச்சி தாவர வகைகளை நடவு செய்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
* 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரக விதைகள் உற்பத்தியை மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- 100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
- சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து விதைகள் மானிய விலையில் விநியோகிக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:
* சீவன் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.
* உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* விவசாயிகள் கூடுதல் லாபம் பெற 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு
* பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து, தேனீ வளர்ப்பு பயிற்சிகள் அளித்திட ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு.
* 100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2482 ஊராட்சிகளை அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த ரூ.200 கோடி நிதி.
* பயறு பெருக்குத் திட்டம், 4.75 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்திட ரூ.40.27 கோடி நிதி ஒதுக்கீடு.
* துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* எண்ணெய் வித்துப்பயிர்களின் சாகுபடியை 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவலாக்கம் செய்திட, ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.
* எள் சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் 25,000 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.
* சூரியகாந்தி சாகுபடி பரப்பு விரிவாக்கத் திட்டம் 12,500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
* வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி பரப்பு விரிவாக்கத்திட்டத்திற்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து விதைகள் மானிய விலையில் விநியோகிக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு.
* நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களில் 50,000 ஏக்கர் பரப்பிற்கு ஜிப்சம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் 15,280 கிராமங்களில் அறிமுகம்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
- விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:
* உற்பத்தி திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.
* நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பரிசளிக்க ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் விவசாயிகளுக்கு பரிசு.
* மாற்றுப்பயிர் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட ரூ.12 கோடி மானியம்.
* 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2,482 ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள் உருவாக்கிட ரூ.2.48 கோடி நிதி ஒதுக்கீடு.
* பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
* விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட பலன் தரும் பருத்தி சாகுபடிக்கு ரூ.14.20 கோடி நிதி ஒதுக்கீடு.
* விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு.
* புதிய கரும்பு ரக விதைகளை மானியத்தில் வழங்கிட ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு.
* சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் உயர்த்த ரூ.12.40 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2.22 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு.
* கன்னியாகுமரியில் 2 கோடி மதிப்பீட்டில் முல்லைப்பூங்கா அமைக்கப்படும்.
* தஞ்சாவூரில் 2 கோடி மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 கோடி மதிப்பீட்டில் செம்பருத்தி நடவு செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
- 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரியில் 2 கோடி மதிப்பீட்டில் சூரியத்தோட்டம் அமைக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 கோடி மதிப்பீட்டில் செம்பருத்தி நடவு செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
தென்காசி மாவட்டத்தில 1 கோடி மதிப்பீட்டில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்.
உதகையில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்ய ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு.
முந்திரி சாகுபடிப் பரப்பை அதிகரிக்க ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.
மூலிகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
மிளகாய்ப் பயிர் ஊக்குவிப்புத் திட்டம் ரூ.3.67 கோடி நிதி ஒதுக்கீடு.
மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட ரூ.1 கோடி ஒதுக்கீடு.
10 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நேரடி விற்பனை மையங்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி.
26,179 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு.
பவர் டில்லர்களின் மானியத் தொகை ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.32.9 கோடி நிதி ஒதுக்கீடு.
தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை கைபேசி செயலி உருவாக்க ரூ.50 லட்சம் நிதி.
புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ.28.82 கோடி நிதி ஒதுக்கீடு.
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு.
மழை நீர் சேகரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
வேளாண் இயந்திரங்களை பரவலாக்குவதற்கான தொழில்நுட்பக் கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
10 மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடமாடும் உலர்த்திகள் வாங்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு.
நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் குறித்து செயல்விளக்கம் அளிக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.
75 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்கள், 8 மஞ்சள் வேகவைக்கும் இயந்திரங்கள் அமைக்க ரூ.2.12 கோடி நிதி
பெரம்பலூரில் தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையம் ரூ.4 கோடியில் அமைக்கப்படும்.
100 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் கட்டமைப்பு வசதிகளை புதுப்பிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.
10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- இணைய வழி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்ய புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- 3 இடங்களில் வேளாண் கண்காட்சிகளை நடத்த 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:
* 100 விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* இணைய வழி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்ய புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* வேளாண் வணிக மேம்பாட்டிற்காக 770 தீவிர விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.
* பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு
* பண்ணை வழி வர்த்தகத்தை ஊக்கப்படுத்த ரூ.60 கோடி ஒதுக்கீடு.
* 100 சேமிப்பு கிடங்குகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற வழிவகை செய்யப்படும்.
* புத்தாக்க நிறுவனங்களை ஊக்கப்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
* 3 இடங்களில் வேளாண் கண்காட்சிகளை நடத்த 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை இனி விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை என பெயர் மாற்றம்.
* கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு.
* பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு.
* ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.






