என் மலர்
நீங்கள் தேடியது "Minister MRK PanneerSelvam"
- தினந்தோறும் தன்னை பற்றி செய்தி வர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
- நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுத்திருக்கிறது.
நெல் கொள்முதலில் எதிர்க்கட்சிகள் தற்போது அரசியல் செய்கின்றனர் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திமுக அரசை தூற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றனர். தினந்தோறும் தன்னை பற்றி செய்தி வர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுத்திருக்கிறது. நெல் ஈரப்பத அளவை உயர்த்த மறுத்துவிட்டு வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார்.
ஆக்கப்பூர்வமான வேலையை செய்யாமல் தூற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பெண்கள் பலியான சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பலியானவர்கள் குடும்பத்திற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா. இன்று காலை அசோதை மற்றும் ஜெயா ஆகியோர் வீட்டில் இருந்து வந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இன்று காலை திடீரென்று அசோதை வீட்டின் மேற்கூரை இடிந்து பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர் மீது மேற்கூரை விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அசோதை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயா பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார் .
இத்தகவல் அறிந்த வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிந்த வீட்டினை பார்வையிட்டார். மேலும் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அப்பகுதி முழுவதும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் உதவிகள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது தி.மு.க.ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன், தாசில்தார் மகேஷ் ஆகியோர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பெண்கள் பலியான சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
- விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் நிறைவு நாளான நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராஜன் கிஸ்சி சாகர் தலைமையில் நடைபெறுகிறது. இதன் தொடக்க நாளில் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கேரளா வேளாண்மை துறை அமைச்சர் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், செல்வராஜ் எம்.பி. மற்றும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அத்தகைய போராட்டம் நடக்காத அளவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். வேளாண் துறைக்கு தனிபட்ஜெட் அறிவித்தார். பயிர்க்காப்பீடு திட்டம், நெல் கொள்முதல் ஊக்கத்தொகை தந்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தந்து விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார். கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகளை செய்து தந்துள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை முதல்-அமைச்சர் உருவாக்கி கொடுத்துள்ளார். அதனால் தான் தமிழகத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
- 1991-ம் ஆண்டில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தற்போது வரை 70 ஆயிரம் மாணவர்கள் படித்து வெளியே வந்துள்ளனர்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, தனியார் வேளாண் கல்லூரி அமைக்க அனுமதி அளிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா? என்று சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 1991-ம் ஆண்டில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது வரை 70 ஆயிரம் மாணவர்கள் படித்து வெளியே வந்துள்ளனர். ஆண்டுக்கு 4 ஆயிரம் பேர் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக பதில் அளித்தார்.
- இயற்கை மேலாண்மை பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
- நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
இயற்கை மேலாண்மை பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
உழவர்களுக்காக இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக ரூ.8,186 கோடி ஒதுக்கீடு
வேளாண் துறைக்கு இந்த ஆண்டு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு
பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூ.10,346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன.
நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை சுமார் 1 மணி நேரம் 41 நிமிடங்களில் தாக்கல் செய்தார்.
- பருத்தி சாகுபடி திட்டம் 2021-2022-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 2025-2026-ம் ஆண்டில் 35 லட்சம் ஏக்கரிலான பயிர்களை காப்பீடு செய்யும் வகையில், ரூ.841 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாட்டில் பருத்தியின் தேவை அதிகரித்துள்ளதால் பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க பருத்தி சாகுபடி திட்டம் 2021-2022-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-2026-ம் ஆண்டிலும் "பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்" ரூ.12 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இயற்கைச் சீற்றங்களால் விளையும் பயிர் சேதங்களினால் ஏற்படும் வருவாய் இழப்புகளில் இருந்து பாதுகாத்து, உழவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2025-2026-ம் ஆண்டில் 35 லட்சம் ஏக்கரிலான பயிர்களை காப்பீடு செய்யும் வகையில், ரூ.841 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல் ஈரப்பதத்தை அளவிட 2500 டிஜிட்டல் கருவிகள் வழங்கப்படும்.
- மீனவர் மற்றும் மீன் வளர்ப்போருக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும்.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகம் அமைக்க ரூ.6.16 கோடி நிதி ஒதுக்கீடு.
* வரும் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,427 கோடி நிதி ஒதுக்கீடு.
* பாசனத்திற்கு கடைமடை வரை நீர் செல்ல ரூ.120 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* 2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரின் டன் கொண்ட நெல் சேமிப்பு மையம் அமைக்கப்படும்.
* நெல் ஈரப்பதத்தை அளவிட 2500 டிஜிட்டல் கருவிகள் வழங்கப்படும்.
* மண்புழு உரம் தயாரிக்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* நெல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு ரூ.525 கோடி நிதி ஒதுக்கீடு.
* உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உணவு மானியத்திற்கு ரூ.12,500 கோடி நிதி ஒதுக்கீடு.
* கால்நடை இனப்பெருக்க திறனை மேம்படுத்த ரூ.5.25 கோடி ஒதுக்கீடு.
* 5 ஆயிரம் பேருக்கு சிறிய அளவிலான பால் பண்ணைகள் அமைக்க கடன் வழங்கப்படும்.
* மீன் குஞ்சு உற்பத்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
* மீனவர் மற்றும் மீன் வளர்ப்போருக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.3000 கோடி அளவிற்கு குறுகிய கால கடன்கள் வழங்கப்படும்.
- வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* கூட்டுறவு பயிர் கடனுக்கு ரூ.17000 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர ரூ.8 கோடி ஒதுக்கீடு
* இணைய வர்த்தகம் மூலம் உழவர் சந்தை காய்கறிகள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற வேளாண் பட்ஜெட்டில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.
* புவிசார் குறியீட்டுடன் கூடிய பொருட்களின் சந்தை தேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.20 கோடியில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.
* வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
* 500 பேரை தேர்ந்தெடுத்து ரூ.50 லட்சம் செலவில் ஏற்றுமதியை ஊக்குவிக்க பயிற்சி அளிக்கப்படும்.
* ரூ.3000 கோடி அளவிற்கு குறுகிய கால கடன்கள் வழங்கப்படும்.
* புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி ஒதுக்கப்படும்.
* உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திறந்தவெளி பாசன கிணறுகளுக்கு சுற்றுசுவர் கட்ட மானியம் அளிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.
- 300 கிராமப்புற இளைஞர்களுக்கு இயந்திரங்களை கையாள பயிற்சி வழங்கப்படும்.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* சி, டி பிரிவு வாய்கால்களை தூர்வார ரூ.13.80 கோடி நிதி ஒதுக்கீடு.
* சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
* சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மின் மோட்டார் பம்பு செட்டுகள் ரூ.15000 வரை மானியமாக வழங்கப்படும்.
* நீர் பற்றாக்குறையை போக்க ரூ.2.75 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* வேளாண் பணிகளில் இயந்திரமயமாக்கலை கொண்டு வர உழவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படும். இதற்காக ரூ.3.55 கோடி ஒதுக்கீடு.
* காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு, வடிநிலப்பகுதிகளிலும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளிலும் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* திறந்தவெளி பாசன கிணறுகளுக்கு சுற்றுசுவர் கட்ட மானியம் அளிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* 300 கிராமபுற இளைஞர்களுக்கு இயந்திரங்களை கையாள பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* வேளாண் பொருட்களை பதப்படுத்த, மதிப்பு கூட்டுதலுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.215.80 கோடி நிதி ஒதுக்கீடு.
- எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக ரூ.108 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு.
* சுவை தாளிப்பு பயிர்களுக்கான சிறப்பு திட்டத்திற்காக ரூ.11.47 கோடி நிதி ஒதுக்கீடு
* பலா மேம்பாட்டு இயக்கத்திற்காக ரூ.3.75 லட்சம் நிதி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
* புதிய பலா சாகுபடி உள்ளிட்ட திட்ட கூறுகளை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
* வெண்ணை பழ உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.69 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.215.80 கோடி நிதி ஒதுக்கீடு.
* சிறிய வகை வேளாண் கருவிகளுக்கான மானியம் ரூ.1.75 லட்சமாக உயர்வு
* சிறுகுறு உழவர்கள் பயனடையும் வகையில் மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படும்.
* சிறுகுறு உழவர்கள் வேளாண் கருவிகள் வாங்க 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.
* வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மூலம் குறைந்த வாடகையில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக ரூ.108 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நறுமண ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
- சீமை கருவேலங்களை அகற்றி மிளகாய் சாகுபடிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* ஊட்டச்சத்து வேளாண் இயக்கத்திற்கு ரூ.297 கோடி ஒதுக்கீடு.
* தென்னை உற்பத்தியை அதிகரிக்க வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.95 கோடி ஒதுக்கீடு.
* காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
* பழச்செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
* பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
* மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.8.59 கோடி நிதி ஒதுக்கீடு.
* உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.
* வெங்காய சேமிப்பு கூடங்கள் அமைக்க மானியம் வழங்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.
* நறுமண ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
* மல்லிகை உற்பத்தியை அதிகரிக்க ரூ.1.6 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* சீமை கருவேலங்களை அகற்றி மிளகாய் சாகுபடிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு.
* முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.10 கோடியில் முந்திரி வாரியம் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
- பயிர்க்கடன் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
* நவீன வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து செயல்படுவோருக்கு முதல் பரிசு ரூ.2.5 லட்சம் வழங்கப்படும்.
* இயற்கை வேளாண் பொருளை பூமாலை வணிகவளாகம் உள்ளிட்ட அரசு சந்தைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 63 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.22 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
* 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
* இயற்கை சீற்றத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிற்காக பயிர் காப்பீடு திட்டம்.
* இடுபொருட்களை ஒரே இடத்தில் பெற கூட்டுறவு வேளாண் சங்கங்களில் விநியோகம்.
* 35 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு காப்பீடு வசதி செய்ய ரூ.841 கோடி நிதி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும்.
* பருத்தியின் உற்பத்தியை அதிகரிக்க பருத்தி உற்பத்தி பெருக்குத் திட்டத்திற்கு ரூ.12.21 கோடி ஒதுக்கீடு.
* கரும்பு டன் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* கரும்புக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகை ரூ.215-ல் இருந்து ரூ.349-ஆக உயர்த்தப்படும்.
* 75 சதவீத மானிய விலையில் காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
* ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் செயல்படுத்தப்படும்.
* 5000 ஏக்கரில் தென்னை மறுநடவு மற்றும் புத்தாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.10.63 கோடி நிதி ஒதுக்கீடு.
* பயிர்க்கடன் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
* புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க 5 காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






