தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்

1991-ம் ஆண்டில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை 70 ஆயிரம் மாணவர்கள் படித்து வெளியே வந்துள்ளனர்.
தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்
Published on

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, தனியார் வேளாண் கல்லூரி அமைக்க அனுமதி அளிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா? என்று சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 1991-ம் ஆண்டில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வரை 70 ஆயிரம் மாணவர்கள் படித்து வெளியே வந்துள்ளனர். ஆண்டுக்கு 4 ஆயிரம் பேர் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com