search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishermens"

    • மழை வெள்ளத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவது நீங்கள்தான்.
    • தற்போது திராவிட மாடல் அரசு 2 இடங்களில் பாராட்டு விழாவை நடத்தி மீனவர்களை கவுரவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு மீனவளத்துறை சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மீனவ மக்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் இன்று பாராட்டு விழா நடக்கிறது.

    அதில் எனக்கு கூடுதல் பெருமை கூடுதல் மகிழ்ச்சி மழை வெள்ள நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு படகுகளை எடுத்துச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் நீங்கள். வெள்ள நேரத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், மேயரும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மக்களை போய் சந்தித்தோம்.

    யாரும் வீட்டில் போய் ஒளியவில்லை. எல்லோரும் களத்தில் மக்களோடு மக்களாக நின்றோம். மீட்பு பணியில் நீங்கள் எங்களுக்கு துணை நிற்பீர்கள் என்ற தைரியத்தில் மக்களிடம் போய் நின்றோம்.

    மீனவர்கள் நலன் மீது அரசுக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு. மீனவர்களுக்கும் தி.மு.க. அரசு மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை இருக்கிறது.

    மழை வெள்ளத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவது நீங்கள்தான்.


    2015-ல் இதே போல் மிகப்பெரிய வெள்ளம் வந்தது. அப்போதும் மீனவ நண்பர்கள்தான் களத்தில் இறங்கி மக்களை காப்பாற்றினீர்கள்.

    தற்போது திராவிட மாடல் அரசு 2 இடங்களில் பாராட்டு விழாவை நடத்தி மீனவர்களை கவுரவித்துள்ளது. எனவே மீனவ மக்களிடம் எனக்கு பிடித்தது நேர்மையும், துணிச்சலும் தான். எதற்கும் கவலைப்படமாட்டீர்கள். யாருக்கும் பயப்படமாட்டீர்கள்.

    உங்களை நம்பி வந்தால் அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் நம்பி வந்தவர்களுக்கு தோளோடு தோள் நின்று காப்பாற்றுபவர்கள் தான் நீங்கள்.

    இன்று மிகமிக முக்கியமான நாள். மதுரையில் ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்து உள்ளார். அந்த துறைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால் அந்த விழாவுக்கு செல்லாமல் இன்று உங்கள் விழாவில் பங்கேற்றுள்ளார்.

    அந்த அளவுக்கு இது முக்கியமான நிகழ்ச்சி என்பதை நீங்கள் உணர வேண்டும். மீனவர்களை பாராட்டுகிற நிகழ்ச்சியில் ஏன் ஜல்லிக்கட்டு பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் உள்ளது.

    2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்தது. அப்போது மாணவர்கள் இளைஞர்கள் தெருவில் இறங்கி கடற்கரையில் போராடினார்கள். குறிப்பாக கடந்த 25 வருடத்தில் இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய போராட்டம் நடந்தது என்றால் அது ஜல்லிக்கட்டு போராட்டம்தான்.

    அப்போது இருந்த ஆட்சியாளர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது மாணவர்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக இருந்தது மீனவர்கள்தான்.

    ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடினார்கள். ஆனால் அந்த மாணவர்களுக்காக இந்த மீனவ நண்பர்கள் போராடினீர்கள். அதுதான் உங்களது மனித நேயம்.

    கடந்த 2½ ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்களை மீனவர்களுக்கு அரசு நிறைவேற்றி உள்ளது. இனிவரும் காலங்களிலும் பல்வேறு திட்டங்களை உங்களது கோரிக்கைகளை முதலமைச்சர் நிச்சயம் செய்து தருவார்.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் யார் உண்மையான கடவுள், யார் உண்மையான இறைவன் என்றால் இன்னொரு உயிரை காப்பாற்றுகிறவன் தான் உண்மையான இறைவன். அப்படி பார்த்தால் நீங்கள் கடவுளுக்கு சமம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், புயல் மழையின் போது மீனவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது உண்மையில் சிறப்பு வாய்ந்தது. மீனவர்களின் பணியை பாராட்டி 1200 மீனவர்களுக்கு சான்றிதழ் நிவாரணப் பொருட்கள் வழங்கி கவுரவித்துள்ளோம் என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, கலாநிதி எம்.பி., மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள், த.வேலு, ஐடீரீம் மூர்த்தி, எஸ்.எஸ். பாலாஜி கலந்து கொண்டனர்.

    • கடற்கரையில் வாகனங்கள் செல்வதற்கு வழிப்பாதை சரிவர இல்லாமல் இருந்து வந்தது.
    • சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான் தனது சொந்த செலவில் பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்தார்.

    நெல்லை:

    கூடங்குளம் அருகே இடிந்தகரை மீனவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும் போது கடற்கரையில் வாகனங்கள் செல்வதற்கு வழிப்பாதை சரிவர இல்லாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக படகுகளில் இருந்து தரையில் நிற்கும் வாகனங்களுக்கு மீன்களை எடுத்துச்செல்ல மீனவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர உதவிடுமாறு மீனவர்கள் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியான விஜயாபதி ஏ.ஆர்.ரகுமானிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனையின்பேரில் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு விஜயாபதி ரகுமான் தனது சொந்த செலவில் கடற்கரையில் சாலை வசதி அமைக்க ஏற்பாடு செய்தார். இடிந்தகரையில் தரையில் இருந்து கடல் வரையிலும் சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு தனது சொந்த செலவில் பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்தார். அந்த பணிகளை நேற்று அவர் ஆய்வு செய்தார். அப்போது மீனவர் பிரதிநிதிகள் இடிந்தகரை வெனிஸ்லாஸ், ரமேஷ், ராமு, செல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 11-ந்தேதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் கீழவைப்பார் கிராமத்தை சேர்ந்த ஜெனிபர், ஆரோக்கியம், எக்லிண்டன், திருமூர்த்தி ஆகியோர் கடந்த 11-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக படகு விபத்துக்குள்ளாகியது. பின்னர் அவர்கள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மீனவர்களை, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதி உதவி மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மாதவடியான், ஒன்றிய மீனவர் அணி துணை அமைப்பாளர் ராஜ், கிளைச் செயலாளர்கள் சூசைபூபாலராயர், ரீகன், வில்லியம் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தில் மீனவர்களுக்கு என்ன வேண்டும் என அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • மீனவர்களின் வாழ்விடங்களும் வாழ்வாதார இடங்களும் பறிபோகும் நிலை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தில் மீனவர்களுக்கு என்ன வேண்டும் என அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுவை அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூட்டத்துக்கு பின்னர் அனைத்து மீனவ சங்க நிர்வாகிகள் சந்திரன், ஆறுமுகம், ராஜ்குமரன், மாசிலாமணி, பெரியாண்டி, குமார், தேவநாதன், செல்வகுமாரி மற்றும் வீரமணி ஆகியோர் கூட்டம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசாங்கம் கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தின் மூலமாக கடலிலும் கடற்கரையிலும் பல திட்டங்களுக்கு இடம் பிடிக்க முயற்சிக்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்விடங்களும் வாழ்வாதார இடங்களும் பறிபோகும் நிலை உள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப் பட்ட திட்டங்களினால், கடற்கரை கிராமங்களில் இடப்பற்றாக் குறை ஏற்பட்டு எதிர்கால மீனவர்களின் வாழ்வு கேள்விக் குரியாகியிருக்கிறது.

    எனவே மீனவர்களுக்கு கடலும் மிச்சம் இருக்கிற கடற்கரையும் அப்படியே வேண்டும், அதில் ஒரு பிடி மண்ணைக் கூட அரசாங்கமோ தனியாரோ எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த மண்ணும் கடலும் அவர்களுடைய அடுத்த தலைமுறைகளுக்கு வேண்டும். எனவே தற்போது வெளியிடப் போகும் கடற்கரை ஒழுங்கு முறை திட்டத்தில், கடலில் இருந்து ஆயிரம் மீட்டர் தூரத்திற்குள் உள்ள அத்தனை நிலப் பரப்பும் மீனவர்கள் வாழ்விடங்களுக்கும், தொழில் செய்வதற்கும் மட்டுமே ஒதுக்கப் படவேண்டும். கடல் முழுக்க மீன் பிடி தொழிலுக்கு மட்டுமே பயன் படுத்தப் பட வேண்டும். இந்த இடங்களில் எந்த ஓரு அரசு மற்றும் தனியார், வர்த்தக அல்லது சுற்றுலாத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

    வெளியிட இருக்கும் கடற்கரை ஒழுங்கு முறை திட்ட நகலை எளிய தமிழில் அச்சிட்டு வெளியிட வேண்டும். அதில் எல்லா கிராமங்களின் பெயரையும் தொழிற் செய்யும் இடங்களையும் பதிவு செய்ய வேண்டும். மீத முள்ள இடங்களையும் மீனவர்களின் எதிகால தேவைக்கு என்றே குறியிட்டு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் மாயமான 9 மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நீர்மூழ்கி வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மீனவ அமைப்புகள் வலியுறுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கொச்சி, முனம்பம் மீன்பிடி துறைமுகத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த மீனவர்கள் உள்பட 14 பேர் யேசுபாலன் என்பவரது படகில் முனம்பம் துறைமுகத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் மீன்பிடி படகு மீது மோதியது. இதில் ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், சகாயராஜ் ஆகிய 3 மீனவர்கள் பலியானார்கள். 2 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

    பலியான மீனவர்களின் உடல்கள் உடனடியாக சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அரசு அதிகாரிகள் மீனவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

    மேலும் கடலில் மூழ்கி மாயமான 9 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடலில் மாயமான 9 மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி மீனவ அமைப்பினர் கூறும்போது, படகு மீது கப்பல் மோதிய நேரத்தில் மீனவர்கள் 9 பேரும் படகின் அடித்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இதனால் கப்பல் மோதியதும் படகின் அடித்தளத்தில் இருந்த 9 பேரும் கடலுக்கு அடியில் ஆழமான பகுதிக்கு சென்றிருக்கலாம். இவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நீர்மூழ்கி வீரர்களால் மட்டுமே முடியும். எனவே அரசு நீர்மூழ்கி வீரர்களை விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக அனுப்பி தேடுதல் வேட்டையை முடுக்கி விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீன்பிடி படகு மீது மோதிய கப்பல் மத்திய அரசுக்கு சொந்தமான சரக்கு கப்பல் என்று கூறப்படுகிறது. நேற்று மங்களாபுரம் துறைமுகப் பகுதியில் சந்தேகப்படும் கப்பல் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கப்பல் மோதி படகு உடைந்த விபத்தில் பலியான 3 மீனவ குடும்பத்தினருக்கும் அரசு ரூ.10 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசில் வேலை வழங்க வேண்டும். இதுபோல காயமடைந்தவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வெடிகளை வெடிக்கச் செய்து மீன் பிடித்ததை படம் பிடித்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரது பைபர் படகில் முத்துராஜா (வயது 24), செல்வம் (19), பூவரசன் (24), காளதாஸ் (18) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.

    அப்போது புதுக்குடியைச் சேர்ந்த ராஜ்குமரன் என்ற பெயர் கொண்ட பைபர் படகில் இருந்த சிலர் கடலில் வெடிகுண்டு வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அதனை முத்துக்கிருஷ்ணன் படகில் 4 பேரும் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனால் வெடி வைத்து மீன் பிடிப்பதை போலீசிடம் காட்டிவிடுவார்கள் என புதுக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் வேகமாக வந்து நம்புதாளை மீனவர்கள் படகில் மோதி அவர்கள் வைத்திருந்த மொபைல் போன்களை கடலில் வீசி 4 மீனவர்களையும் கல், கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

    மேலும் தகாத வார்த்தைகளை பேசியும் வெடிகுண்டு வீசி படகை தகர்த்து விடுவோம் என மிரட்டிச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர் காசி வழக்குப்பதிவு செய்து வெடிவைத்து மீன் பிடித்ததோடு, மீனவர்களை தாக்கிய புதுக்குடி மீனவர்களை தேடி வருகிறார்.
    பட்டினப்பாக்கத்தில் கடல்சீற்றம் காரணமாக கடற்கரையோர பகுதிகளில் சுமார் 25 வீடுகள் இடிந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    மீனவர்கள் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 2 வாரங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் வீடுகள் இடிந்து வருகிறது.

    கடல் சீற்றம் தொடர்வதால் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. கடல்நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை காவு வாங்கியுள்ளது.

    காலை மற்றும் இரவு நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் வீடுகளில் வசிப்பவர்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக மீனவர் ஒருவர் கூறும்போது, கடல் சீற்றத்தால் ஆண்டுதோறும் வீடுகளை இழந்து பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். இதனை தடுப்பதற்காக தூண்டில் வளைவுகளை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை என்றும் கூறினார்.

    எனவே பட்டினப்பாக்கம் பகுதியில் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேதாரண்யம் கடற்கரையில் அமைக்க இருக்கும் உரக்கிடங்கிற்கு எதிராக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் ரூ.3 கோடியே 44 லட்சம் செலவில் உரக்கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான விழா சமீபத்தில் நடந்தது. இங்கு உரக்கிடங்கு அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று வேதாரண்யம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இப்பணி தொடர்ந்து நடந்ததால் உரக்கிடங்கு அமைக்கும் திட்டத்தை நிறுத்த உடனே கோரி வேதாரண்யம் பகுதியில் வசிக்கும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் விசை படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பைபர் படகில் சென்று மீன் பிடித்து வந்தனர். இதனால் மீன்களே கிடைத்து வந்தது. இந்த நிலையில் இன்று பைபர் படகில் சென்றும் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் உரக்கிடங்கு திட்டத்தை நிறுத்தும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
    ×