என் மலர்
நீங்கள் தேடியது "Thirumavalavan MP"
- பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை.
- தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண்மைக்கு என நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தமிழ்நாடு அரசின் சிறப்புக்குரிய ஒரு திட்டமாகும்.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படக் கூடிய ஒன்று தான். இந்த நிதிநிலை அறிக்கையில் அது தொடா்பான அறிவிப்பு இல்லை என்பது உண்மை தான். ஆனால் மானியக் கோரிக்கையின் போது, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தமிழக முதலமைச்சரும், துறைச் சாா்ந்த அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையில் நியாயம் உள்ளது. அதை அரசு பரிசீலனை செய்து தள்ளுபடி செய்யும் என நம்புகிறேன்.
வேளாண் துறைக்கு மட்டு மல்ல கூட்டுறவுத்துறை, ஆவின் துறை உள்ளிட்ட 9 துறை இருக்கிறது. எல்லா வற்றிற்கும் சேர்த்து தான் 45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட் என்றாலும் கூட பல நிதி வரவு செலவு அறிக்கை, நிதி பற்றாக்குறை இருக்கதான் செய்கிறது. இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு மானிய கோரிக்கையின் போது பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், அரியலூர் மாவட்டத்தில் முந்திரி வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்க நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து வருவது தொடர் கதையாக நீடிக்கிறது. தமிழ்நாடு அரசும் தொடர்ந்து பல தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது.
மத்திய அரசு இந்த பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை. இது என்னவோ தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
மத்திய அரசு நினைத்தால் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். அந்த அளவிற்கு வலிமையுள்ள அரசாக இருக்கிறது. இலங்கை அரசோடும் இணக்கமான அரசாகவும் இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மீனவா்களின் பிரச்சனைகளில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக அணுகுவதே பிரச்சனைகள் தொடா்வதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
நெல்லை:
நாங்குநேரியில் சக மாணவர்களால் தாக்கப் பட்டு படுகாயம் அடைந்த மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த சம்பவத்தை கண்டித்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நெல்லை வண்ணார் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் களக்காடு சுந்தர் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் முத்து வளவன், எம்.சி. சேகர், அருள் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் காளிதாஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சுகந்தி, மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கி ணைப்பாளர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி.
- மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ள மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு தொடர்பாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி. 2014-ல் மக்கள் நல கூட்டணியில் பயணித்த போது மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தினோம்.
கள்ளக்குறிச்சியில் 69 பேர் உயிரிழந்தனர். தி.மு.க.வை மிரட்ட மாநாட்டு நடத்துவதாக சிலர் கூறுகிறார்கள். அப்போதுதான் தி.மு.க.விடம் அதிக சீட்டு பேரம் பேச முடியும் என பேசுகிறார்கள். சிலர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என பேசுகிறார்கள்.
மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம். மாநாடு நடத்த வேண்டும் என எனக்கு சொல்லிக்கொடுத்தது மக்கள். தேர்தல் நேரத்தில் மட்டுமே அது குறித்து சிந்திப்பேன். எனக்கு இப்போது தேர்தல் கணக்கு இல்லை.
தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கூட்டணி, சீட்டு குறித்து சிந்திப்பேன். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அரசியல் கட்சி. மற்ற நேரங்களில் இது அம்பேத்கர் கட்சி, பெரியார் கட்சி.
மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடுள்ள காந்தி பிறந்தநாளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்கிறது.
பெண்களை மாநாட்டுக்கு அதிகம் அழைத்து வர வேண்டும். லட்சக்கணக்கான பெண்கள் கலந்துக்கொள்ள வேண்டும். மது ஒழிப்பு பெண்களின் குரலாக இருக்க வேண்டும். இது கட்சியின் மாநாடு அல்ல அனைவருக்குமான பொது கோரிக்கை யாரும் பங்கேற்கலாம் என கூறினேன்.
மதுவை ஒழிப்போம் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க., இடசாரிகள், வி.சி.க.வுக்கு முழுமையான உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய பிரச்சினை.
காவிரி விவகாரத்தில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என பேசுகிறோம். அது போல் மது ஒழிப்பை எல்லோரும் ஒரே குரலில் பேச வேண்டும். மது குடிக்கும் இடத்தில் எப்படி சாதி இல்லையோ, அப்படியே மது ஒழிக்கவும் சாதி வேண்டாம்.
பா.ம.க., பா.ஜ.கவுடன் அணி சேர முடியாது. பா.ஜ.க.கட்சியில் பல நண்பர்கள் உள்ளனர். பா.ம.க. மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.
வெளிப்படையாக தி.மு.க.வுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். மதுவிலக்கு தொடர்பாக தேசிய கொள்கையை வரையறை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. மதுவிலக்கு தொடர்பாக அரசியலமைப்பு சில வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.
47-வது உறுப்பில் மதுவிலக்கு கொள்கையை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. அதன் அடிப்படையில் கோரிக்கை வைக்கிறோம்.
ஒரு தேசிய கொள்கையை வரையறுக்கு மத்திய அரசைதி.மு.க. வலியுறுத்த வேண்டும். இந்த கொள்கையை விடுதலை சிறுத்வதைகள் வலியுறுத்துகிறது. எல்லா ஆட்சி காலத்திலும் மதுவிலக்கு கொள்கை பேசப்பட்டது.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாக உள்ளனர் .அதற்கு காரணம் மது. இதுவரை அரசியல் விழிப்புணர்வு மாநாட்டை நடத்தினோம். ஆனால் இந்த மாநாடு ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கும் மாநாடு.
தி.மு.க.கூட்டணியில் இருப்பதால் முதல்வரிடம் மனு கொடுக்கலாமே என கேட்கிறார்கள். ஆனால் இது மக்களே ஒன்று சேர்ந்து கேட்கவேண்டிய கோரிக்கை .
அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், சகோதரிகள் நீல நிறபுடவையும் சிகப்பு நிற ஜாக்கெட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க. எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு ஆகும்.
- சீமான் தமிழர், திராவிடர் என்று பாகுபடுத்தி சொல்வது சரியான விவாதம் இல்லை.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி உஞ்சிய விடுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளராக இருந்த உஞ்சைஅரசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் எதிர்பார்பாகவும், வேட்கையாகவும் இருக்கலாம். அவரின் வேட்கை தணிய வேண்டும்.
கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பிரச்சனையின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறலாம். ஆனால் விரிசல் ஏற்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதை வி.சி.க. வழிமொழிகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடம் என்ற ஒன்று இல்லை என்று கூறியிருப்பது குறித்து பலமுறை விளக்கம் அளித்திருக்கிறோம்.
திராவிடர் வேறு தமிழர் வேறு என்பது போல ஒரு விவாதத்தை கூர்மைப்படுத்துவது சங்பரிவார்களுக்கு துணை போவதாக அமையும்.
இதை தமிழக கவர்னர் ஆர்.என். ரவியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் விரும்புகிறார்கள். இதை பா.ஜனதா அரசியலாக்கி வருகிறது. அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கு துணை போகிற வகையில் சீமான் போன்றவர்களின் விவாதங்கள் அமைந்திருக்கிறது.
தி.மு.க. எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு ஆகும். ஆரியம் என்பதற்கான நேர் எதிரான கருத்தியலை கொண்டது திராவிடம் ஆகும். இதன் அடிப்படையில் தான் திராவிட அரசியலை கையாளுகிறோம். ஆனால், சீமான் தேசிய இனத்தின் அடிப்படையில் தமிழர், திராவிடர் என்று பாகுபடுத்தி சொல்வது சரியான விவாதம் இல்லை.
தி.மு.க.வை எதிர்க்கிறோம் என்ற அடிப்படையில் ஒட்டு மொத்த திராவிட அடையாளத்தையும் எதிர்ப்பது சரியானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
- சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
- கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிகாலையில் வந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதுடன் தேவஸ்தான ஊழியர்கள் பிரசாதங்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து போகர் சன்னதி, புலிப்பானி ஆசிரமம் ஆகியவற்றுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்பு தனியார் விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது உதவியாளருடன் சென்று விட்டார்.
- தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
- தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விக்கிரவாண்டியில் விஜய் பேசியது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம்:
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 10-க்கும் மேற்பட்ட உயிர்களும், ஏராளமான கால்நடைகளும், விவசாய பயிர்களும் அழிந்துள்ளன.
இதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அண்டை மாநிலமான புதுச்சேரியில் ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.
ஆகவே தமிழ்நாடு அரசும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார். இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் ராணுவம் போல போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க என்னை ஒரு மாதத்திற்கு முன்பாகவே அழைத்திருந்தார்கள்.
இருந்தபோதிலும் நான் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளேன். புத்தக வெளியீட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
விக்கிரவாண்டியில் விஜய் பேசியது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் சாயம் பூசியதால் சிக்கல் எழுந்தது.
நானும் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றால் அரசியல் சாயம் பூசப்படும். விஜய் மட்டும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கட்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். விஜய்க்கும் எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை, முரண்பாடும் இல்லை.
ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக பேசி வருவது அவரது தனிப்பட்ட கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்சியின் நடைமுறைக்கு இணங்கி செயல்படுவது முக்கியம்.
- அமைப்புக்கு இணங்கி செயல்பட வேண்டியது அவசியமானது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆதவ் அர்ஜுனா நல்ல நோக்கத்தில் தான் கட்சியில் வந்து இணைந்தார். பல அரசியல் கட்சிகளில் தொடர்பு இருந்தாலும் தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டு இருக்க முடியும்.
ஆனாலும் கூட தலித் மக்களின் உணர்வுகளுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி கட்சியின் மாநாட்டில் இணைத்துக் கொண்டார்.
அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் நியாயமான கோபங்கள், மக்கள் நலன் கருதி நான் வெளியிடும் கருத்துகள், பாதிப்புக்குரிய இடைவெளி ஏற்படுவதாக இருக்கிறது. அதற்கு நான் இடம் கொடுக்க விரும்பவில்லை. எனவே விலகுகிறேன் என கூறியிருக்கிறார்.
இடை நீக்கம் செய்யப்பட்ட பிறகு பொது வெளியில் கருத்து சொல்வது வழக்கம் இல்லை. தலைமை அல்லது அதற்குரிய ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் அவர் விளக்கம் அளிக்கலாம்.
அந்த விளக்கம் ஏற்கப்பட்டு நடவடிக்கை தேவையில்லை என தலைமையோ ஒழுங்கு நடவடிக்கையோ கருதினால் மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட வாய்ப்பு வழங்கப்படும்.
இடை நீக்கம் செய்யப்பட்ட அன்றே வெளியிட்ட அறிக்கை இடை நீக்கம் குறித்து சொன்ன கருத்து கட்சிக்கு எதிராக தலைமைக்கு எதிராக தான் இருந்தது.
விளக்கம் அவருடைய பார்வையில் சரியாக இருந்தாலும் கூட ஒரு கட்சியின் நடைமுறைக்கு ஏற்புடைதாக இல்லை. ஒரு கட்சிக்கு வருபவர் அந்த கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
நமக்கு எல்லாம் தெரியும் என்றாலும் கூட பேசுவது சரி தான் என்றாலும் கூட மக்களுக்காக தான் செயல்படுகிறோம் என்றாலும் கூட கட்சி ஒரு கட்டுபாட்டை விதிக்கிறது. அந்த கட்டுபாட்டிற்குள் இருந்து இயங்க வேண்டும். அதற்கு இணங்குவது தான் முக்கியமானது.
ஒரு கட்சிக்கு வந்து விட்டால் எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் கட்சிக்கு கட்டுபடுவது முக்கியமானது. கட்சியின் நடைமுறைக்கு இணங்கி செயல்படுவது முக்கியம். கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம். குரல் நியாயமானதாக இருக்கலாம்.
அந்த குரல் கட்சியின் வழியாக ஒலிக்க வேண்டும். கட்சியின் நலன்களுக்கு இணங்கி செயல்பட வேண்டும். அதை அவரிடம் பலமுறை சுட்டிக் காட்டி இருக்கிறோம். கட்சியில் இருந்து விலகும் முடிவை அவருக்கு சரி என்ற வகையில் எடுத்துள்ளார்.
கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதோ கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதோ நம்முடைய நோக்கம் இல்லை. நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும் என்பதற்காக தான் இடைநீக்கம் நடவடிக்கை ஆகும்.
ஆதவ் அர்ஜுனா பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார். தலித், பழங்குடி மக்களுக்காக போராட வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் அவசரம் கூடாது. அமைப்புக்கு இணங்கி செயல்பட வேண்டியது அவசியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும்.
- யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.
மதுரை:
மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகள், கலைஞர் நூற்றாண்டு செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை 13 லட்சத்து 59 ஆயிரத்து 996 பேர் பயன்படுத்தி உள்ளனர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
மதுரை கோரிப்பா ளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள்ளாக முடிவடையும். தற்போது 25 சதவிகித பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது.
மதுரை அப்போலோ உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும். இப்பாலப் பணிகள் 32 சதவீதம் முடிவடைந்துள்ளது.
ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும், சாலையில் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு, தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் மேம்பாலங்கள் கட்டப்படுகிறது.
2001-ம் ஆண்டு முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பழகி வருகிறேன். எதிர்முகாமில் இருந்த காலத்தில் திருமாவளவன் என்னுடன் சகோதரத்துடன் பழகக் கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை.
எனக்கும், தி.மு.க.வுக்கும், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் அறிவார்ந்தவர். யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் அமர வேண்டும்.
- சாதிக்கொடுமை என்ன என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நாலுமூலைக்கிணறு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டு பேசியதாவது:-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. தேர்தல் வரப்போகிறது என்றால் என்ன பொருள்? 2026 தேர்தலில், ஆட்சியிலே அதிகாரத்திலேயே பங்கு பெறக்கூடிய இடத்தில் விடுதலை சிறுத்தைகள் வலிமை பெற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் அமர வேண்டும். திருமாவளவன் முதலமைச்சராக வர வேண்டும். இதுதான் நமது கனவு. தலைவர் ஒருநாள் நிச்சயம் முதலமைச்சராக வருவார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
1990-ம் ஆண்டு தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றும் போது இந்த கொடி விரைவில் கோட்டையில் பறக்கும் என்றார். இப்போது நாம் கோட்டைக்கு நமது கொடி கட்டி தான் செல்கிறோம். கோட்டைக்குள் கொடி கட்டிக் கொண்டு செல்லும் இயக்கமாக நமது இயக்கத்தை மாற்றியுள்ளார் நமது தலைவர்.
ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் நமது கனவு என அம்பேத்கர் கூறியுள்ளார். அனைவரையும் இணைத்துச் செல்ல வேண்டும். சாதிக்கொடுமை என்ன என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.
இன்று புதிதாக கட்சி ஆரம்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்க வேண்டும். அதை மனப்பாடம் செய்து விட்டு ஓட்டு கேட்பது போல் நின்று விட்டு சென்று விடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உடுமலையில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
- பாய், தலையணை, நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கப்பட்டது.
உடுமலை :
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்எம்.பி.யின் மணிவிழா பிறந்தநாளையொட்டி உடுமலையில் மாணவர்களுக்கு பாய், தலையணை ,நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள், மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன்முன்னிலை வகித்தார்.கிருத்துவ சமூக நீதி பேரவையின் மாநில துணைச்செயலாளர் டேவிட் பால்,துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு மையம் மாநில துணைச்செயலாளர் விடுதலை மணி, கிருத்துவ சமூக நீதி பேரவையின் மாவட்ட அமைப்பாளர் இம்மானுவேல், அருண்குமார், கடத்தூர் முகாம் செயலாளர் சிவராமன்,கணியூர் முகாம் பொருளாளர் தங்கவேல் கலந்து கொண்டனர். முடிவில் விடுதி காப்பாளர் முருகேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.






