என் மலர்

    நீங்கள் தேடியது "demonstration"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய இணை அமைச்சரை உடனடியாக பதிவு நீக்கம் செய்ய வேண்டும்

    தஞ்சாவூர்:

    உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியரில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்த மத்திய பா.ஜ.க இணை அமைச்சர் அஜய் மிஸ்ராடெனியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை ரெயிலடியில் இன்று

    அனைத்து தொழிற்சங்க ங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொ.மு.ச மாவட்ட செயலாளர் சேவியர், ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யு மாநில செயலாளர் ஜெயபால், ஐ.என்.டி.யூ.சி மாவட்ட தலைவர் ரவி, ஏ .ஐ .சி. சி .டி .யூ மாவட்ட செயலாளர் ராஜன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் 9 பேரை காரை ஏற்றி கொலை செய்த மத்திய இணை அமைச்சரை உடனடியாக பதிவு நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கருப்பு கொடிகளை காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பலர் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர்.

    இதில் தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொறி யாளர் பழனி ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், மாவட்ட தலைவர்கள் ராமச்சந்திரன் , செந்தில்குமார், மாவட்ட செயலாளர் பாஸ்கர், நிர்வாகி சுரேஷ், ஜனநாயக விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருணாச்சலம் , மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி ராமசாமி, தொமுச விவசாய அணி நிர்வாகிகள் கோவிந்தராஜ், சைவராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், தொமுச மாவட்ட தலைவர் செல்வராஜ், ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் செல்வராஜ் ,அனைத்து சங்க நிர்வாகிகள் பாஸ்டின், கிருஷ்ணமூர்த்தி, குமரேசன், பாரி, நீல நாராயணன், விஜயகுமார், ராஜேந்திரன், கோவிந்தராஜன், துரை.மதிவாணன், அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மா.லெ) தஞ்சை மாவட்ட மாநகர செயலாளர் எஸ்.எம். ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்யப் பட்டதன் நினைவு நாளை கருப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. சார்பில் கருணாநிதி, சி.ஐ.டி.யு. சார்பில் லெனின், எச்.எம்.எஸ். சார்பில் பாதர் வெள்ளை, ஐ.என்.டி.யு.சி. சார்பில் ராஜசேகரன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேது, எம்.எல்.எப். சார்பில் மகபூப்ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விவசாயிகள் படுகொலைக்கு காரண மானவர் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி யதை திரும்பப்பெற வேண் டும், அனைத்து தொழிலா ளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளம் ரூ.26 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கம்பு மற்றும் உளுந்து செயல்விளக்கத் திடல் அமைக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
    • சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் வட்டாரத்தில் மானியத்திட்டத்தில் கம்பு மற்றும் உளுந்து செயல்விளக்கத் திடல் அமைக்க வேளாண்மைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆரோக்கியமான உணவு வகைகளில் சிறுதானியங்களுக்கு முதலிடம் உண்டு. நமது முன்னோர்கள் காலத்தில் பிரதான உணவாக, தினசரி பயன்பாட்டில் இருந்த சிறுதானியங்கள் தற்போது சிறப்பு உணவாக, எப்போதாவது பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. எனவே மீண்டும் சிறுதானிய பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அத்துடன் நடப்பு ஆண்டை மத்திய அரசு சிறுதானிய ஆண்டாக அறிவித்து, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அந்தவகையில் மடத்துக்குளம் வட்டாரத்தில் 100 ஏக்கரில் கம்பு மற்றும் 65 ஏக்கரில் உளுந்து செயல்விளக்கத் திடல் அமைக்க மானியம் வழங்கப்படவுள்ளது.

    இது குறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    மடத்துக்குளம் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தில் 100 ஏக்கரில் கம்பு செயல்விளக்கத் திடல் அமைக்க ஏக்கருக்கு ரூ. 2400 மானியம் வழங்கப்படவுள்ளது. மேலும் 65 ஏக்கரில் உளுந்து செயல் விளக்கத்திடல் அமைக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ. 1740 மானியமாக வழங்கப்படவுள்ளது.இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இதுதவிர விவசாயிகள் பயன்பெறும் வகையில் உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள், விதைகள் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.அந்தவகையில் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலக சேமிப்புக் கிடங்கில் உயர் விளைச்சல் ரகங்களைச் சேர்ந்த 4 டன் உளுந்து, 12 டன் நெல் விதைகள் இருப்பு உள்ளது. இதுதவிர பாரம்பரிய ரகமான தூயமல்லி நெல் விதை 280 கிலோ மற்றும் சோளம் 97 கிலோ இருப்பு உள்ளது. இதனை பெற்று விவசாயிகள் பயனடையலாம்.

    இவ்வாறு வேளாண்மைத்துறையினர் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் இணைந்து

    2022-23 ம் ஆண்டிற்கான சம்பா சாகுபடிக்கு காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயி களுக்கும் பயிர் இழப்பீடு வழங்காததை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட த்திற்கு பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார்.விவசாய சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், சுந்தரவடிவேல், கண்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமலிங்கம் மற்றும் விவசாயிகள் கலந்து கொ ண்டு கண்டன கோஷங்களை முழங்கினர். பாதிக்கப்பட்ட அனை வருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,

    பயிர் காப்பீடு என்கிற பெயரில் விவசாயிகளை வஞ்சிக்கும் நிறுவனங்களை தவிர்த்து, ஏற்கனவே இருநததுபோல் அரசு காப்பீட்டு நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்

    பெரம்பலூர்,

    தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தங்க ரத்தினவேல் தலைமை தாங்கினார். கட்சியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும் இதனை கண்டிக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு மத்திய மாநில அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சியில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 5-க்கு உட்பட்ட இடங்களில், அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசும், தாம்பரம் மாநகராட்சியும் தவறியதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுச் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதால், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன.

    இங்குள்ள அம்மா உணவகத்தில், 1500-க்கும் மேற்பட்ட மக்கள் உணவருந்தி பயன்பெற்று வந்த நிலையில் தற்போது, தரமற்ற உணவு வகைகளை தயார் செய்வதால் மிகவும் குறைவான மக்களே உணவருந்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-5-ல் நிலவி வரும் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சனை, தெரு விளக்குகள் எரியாமை, பாதாள சாக்கடைத் திட்டம் சரிவர முடிக்காதது, குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்யாதது, ஏரிகளில் கழிவு நீர் கலப்பது முதலானவற்றை சரிசெய்யத் தவறிய தி.மு.க. அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை யும் கண்டித்தும், அம்மா உணவகங்களில் வழங்கப் படும் உணவுகளின் தரத்தைக் குறைத்து, இத்திட்டத்திற்கு மூடுவிழா காணத் துடிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், தாம்பரம் கிழக்கு, மாடம்பாக்கம் ஆகிய பகுதிக் கழகங்கள் ஒன்றிணைந்து, வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், தாம்பரம் கிழக்கு, வால்மீகி தெருஏரிக்கரை தெரு சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகி களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொது மக்களும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் புதிய பஸ் நிலையத்தை கடலூரின் மையப்பகுதியில் அமைக்க வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் மாயவேல், முனுசாமி, ராஜேந்திரன், கல்யாண குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பொது செயலாளர் தேவநாதன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி, திருமார்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

    தலைவர் பாலு பச்சையப்பன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டமை ப்பின் சிறப்பு தலைவர் மருதவாணன் பேசினார். இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜசேகரன், பன்னீர்செல்வம், செல்வகணபதி, கோமதிநாயகம், கோபால், பாஸ்கர், காசிநாதன், தில்லைநாயகம், வீராசாமி நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ரமணி நன்றி கூறினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார்.

    சேலம்:

    தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார். இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான ஜெகதீசபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ராசா அம்மையப்பன், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ ரத்னா அல்லி முத்து, மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை, நாடாளுமன்ற பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், கொள்கை பரப்புச் செயலாளர் நல்லான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    அப்போது கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். வீரபாண்டி தொகுதி துணைத் தலைவர் எருமாபாளையம் சுரேஷ் மேற்கு தொகுதி செயலாளர் மணிகண்டன், தெற்கு தொகுதி செயலாளர் ஜனார்த்தனன், வடக்கு தொகுதி செயலாளர் பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரிய விபத்துக்களில் இருந்து மக்களை மீட்பது எப்படி?
    • தீ விபத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நெடுஞ்சா லை துறை மற்றும் வட்டார மோட்டார் வாகன போக்குவரத்து துறை சார்பில் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு முதலுதவி செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் பாலசுப்பி ரமணியன் தலைமை தாங்கினார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், நெடுஞ்சாலைதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் இந்திரன், உதவி காவல் ஆய்வாளர் முகிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு அலுவலர் ஜூலியஸ் தூய மணி வரவேற்று பேசினார். வெல்ஸ்பன் நிறுவனத்தின் மூத்த மேலாளர் கோபிராஜ் மற்றும் பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

    முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் கிருபாகரன் தலைமையில், ரெட் கிராஸ் தலைமை பயிற்சியாளர் பெஞ்ஜமின் முதல் உதவி குறித்து செயல்முறை விளக்கத்தை பொது மக்களுக்கு செய்துகா ன்பித்தனர். விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு, மரணம் தருவாயில் காப்பாற்றுவது, பெரிய விபத்துக்கள் இருந்து மீட்பது, தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, பின்னர் சிகிச்சை முறை அளிப்பது குறித்தும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலுதவியை செயல்முறை விளக்கத்தை கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் டிரைவிங் சென்டர் கார்த்தி ஒருங்கிணைத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆர்ப்பாட்டத்தில் கடம்பாகுளத்தை முழுமையாக தூர்வாரிட கோரி கோஷங்கள் எழுப்பபட்டது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு ஆழ்வார்திருநகரி ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பூலான் தலைமை தாங்கினார்.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆழ்வார்திருநகரி ஒன்றியம் விவசாயிகள் சங்கம் சார்பில் தென்திருப்பேரை மெயின்ரோடு கால்நடை மருத்துவமனை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கடம்பாகுளத்தை முழுமையாக தூர்வாரிடவும், கடம்பா குளத்தில் தற்போது நடைபெற்று வரும் மராமத்து பணிகளை மழைக் காலத்திற்கு முன்பே விரைந்து தரத்தோடு நிறைவு செய்திடவும் மாவட்ட வருவாய் நிர்வாகத்தை கண்டித்தும், பொதுப்பணி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஆழ்வார்திருநகரி ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பூலான் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் புவிராஜ், மாவட்ட தலைவர் ராகவன், மாவட்ட பொருளாளர் நம்பிராஜன், மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், ஆழ்வை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் ராமையா, கடம்பாகுள பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் உத்திரம், மாவட்ட துணை த்தலைவர் கணபதி, ஆழ்வை ஒன்றிய பொருளாளர் புலிராஜ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் செல்வ ராஜ், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஆழ்வை ஒன்றிய துணைத் தலைவர் ஆல்பர்ட் ஆசீர்வாதம், ஆழ்வை ஒன்றிய இணை செயலாளர் செந்தூர்பாண்டி, ஆழ்வை ஒன்றிய இணை செயலாளர் வீரமணி, ஆழ்வை ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுக நயினார், மாவட்ட குழு உறுப்பினர் மணி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin